சனி, 29 ஜூன், 2024

GENERAL TALKS - இனிமேல் என்ன பண்ணவேண்டும் என்று யோசிப்போம்


 இங்கே நிறைய பிரச்சனைகள் இருக்கு , நாம் முன்னேறனும் என்று ஒரு ஒரு எட்டாக எடுத்து வைக்கும்போதும் விஷம் தடவிய கத்தியை காலில் நறுக்கென்று குத்துகிறார், பாம்புகளையும் தேள்களையும் கொண்டு கடிக்க வைக்கிறார் , சிங்கங்களையும் புலிகளையும் கொண்டு நம்மை பயமுறுத்த வைக்கிறார். இது எல்லாமே இந்த பிரபஞ்சத்தின் சக்தியாளராக இருப்பவர் செய்யும்போது நாம் கடைசிவரைக்கும் கோபப்படாமல் ஒரு பாவமும் அறியாத பூச்சியாக வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்றுதான் சக்தியாளர் ஆசைப்படுகிறார். இது கண்டிப்பாக ஒரு போரை தொடுக்க வேண்டிய நேரம். சக்தியாளரிடம் இருந்து சக்திகளை பறித்துக்கொள்ள வேண்டிய நேரம் இதுதான். இப்படியே சென்றுக்கொண்டு இருந்தால் இந்த உலகத்தின் அனைத்து உயிர்களையும் சுடுகாடாக மாற்றி சடலங்களை சாப்பிடும் ஜீவராசியாக மாறிய இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட சக்தியாளர் நம்மை அனைவரையும் கொன்றுவிடுவார். நமக்கென்று சப்போர்ட்டாக யாருமே இருக்க மாட்டார்கள். நமக்கு சப்போர்ட் பண்ணினால் அவர்களுடைய உயிருக்கும் ஆபத்து என்பதால் நமக்கு ஆதரவு கொடுக்க முன்வந்தவர்களை காப்பாற்ற அவர்களை வெறுப்பது போல நடிக்க ஆரம்பித்துவிடுகின்றோம். இது எல்லாமே தவறானது. இனிமேல் பொறுமையாக இருந்து ஒரு மயிரை கூட அடைய முடியாது. சரிபண்ண முடியாத அளவுக்கு பிரச்சனைகள் செல்வதால் இனிமேல் நாம்தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த முடிவு இறுதியானதாகவும் இருக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...