Friday, June 14, 2024

MUSIC TALKS - IDHALODU IDHAL SERTHU UYIRODU UYIR KORTHU VAAZHAVAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து வாழவா ?
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா

கண்ணாளனே கண்ணாளனே உன் கண்ணிலே என்னை கண்டேன்
கண் மூடினால் கண் மூடினால் அந்நேரமும் உன்னை கண்டேன்
ஒரு விரல் என்னை தொடுகையில் உயிர் நிறைகிறேன் அழகா
மறு விரல் வந்து தொடுகையில் விட்டு விலகுதல் அழகா ?
உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா

இதே சுகம் இதே சுகம் எந்நாளுமே கண்டால் என்ன ?
இந்நேரமே இந்நேரமே என் ஜீவனும் போனால் என்ன ?
முத்தத்திலே பல வகை உண்டு ! இன்று சொல்லட்டுமா கணக்கு 
இப்படியே என்னை கட்டி கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு
அச்சப்பட வேண்டாம் பெண்மையே 
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து வாழவா ?



1 comment:

  1. 𝐊𝐚𝐝𝐚𝐭𝐡𝐭𝐡𝐚𝐥 𝐌𝐚𝐧𝐧𝐚𝐧June 17, 2024 at 12:41 AM

    நெய் வாழை போட்டு வெச்சேன் வெச்சேன் வா மாமா

    இலை மேல உன்னை வச்சி வச்சி தின்னலாமா

    வாசம் பார்க்க வாசம் பார்க்க மேயாதே

    நேரம் பார்த்து நெஞ்சு மேல சாயாதே

    பட்டா போட்ட இடம் நீதான்டி !

    பங்கு கேட்கப் போறேன் நான்தான்டி !

    x

    குல்கண்டு குட்டிப்போட்டு தந்த பூ நீயா

    கல்கண்டு கட்டில்போட்டு செஞ்ச தீனியா

    உப்புப்போட்டு ஊற வச்ச மாம்பிஞ்சு

    எச்ச பண்ணிப் பிச்சித்தாறேன் நான் வந்து

    மஞ்சப்பூசி மச்சம் மறைச்சேனே

    உன்னைப் பார்த்து வெக்கம் தொலைச்சேனே

    ReplyDelete

MUSIC TALKS - VIDALA PULLA NESATHTHUKKU SEVATHTHA PULLAI PAASATHTHUKKU AZHAGAR MALAI KAATHTHU VANDHU THOOTHU SOLLADHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ? விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழக...