Thursday, November 30, 2023

GENERAL TALKS - பொறுமையே பெருமை - #PATIENCE MAKES A TASK PERFECT

 இன்னைக்கு இருக்கும் ஜெனரேஷனிடம் முக்கியமாக விட்டுப்போவது பொறுமை , ஒரு விஷயத்தை பண்ணணும்னா அங்கே பொறுமை ரொம்ப முக்கியம் , இதுவே அவசரமாக பண்ணினால் அந்த விஷயத்தில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை கடைசி வரைக்கும் தெரிந்துகொள்ளாமலே இருந்துவிடுவோம். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் , அது எல்லாமே உங்களால் செய்ய முடிந்தால்தான் அது வாழ்க்கை , இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. பொதுவாக இந்த ஜெனரேஷன் ரொம்ப போட்டி மனப்பான்மை நிறைந்தது. வேகமாக வேலைகளை செய்யாமல் நிதானமான முறையில் செய்தால் வாழ்க்கை ரொம்ப கடினமாக மாறிவிடும் என்று ஒரு நிலைப்பாடு இருக்கிறது. பெரிய நிறுவனங்களில் சுயநலம் பிடித்த அதிகாரிகள் அவர்களுக்கு வேலை பார்க்கும் பணியாளர்களை எல்லாம் கடைசி வரைக்குமே எதுவுமே தெரியாதவர்களாகவே இருக்க வேண்டும் என்றும் அந்த பணியாளர்கள் எதுவுமே கற்றுக்கொள்ள கூடாது என்பதிலும் ரொம்ப கவனமாக இருப்பார்கள். தனக்கு கீழே வலை பார்ப்பவர்கள் தன்னை விடவும் பெரிய பொசிஷன்னில் இருக்க கூடாது என்பதை கவனமாக வைத்து இருப்பார்கள். சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷ் அவர்களின் வெபினார் பார்க்கும்போது வேலை பார்க்கும் கம்பெனியில் வேலை பார்ப்பவர் கடைசி வரைக்கும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்றும் எப்போதுமே யார் மேலும் கெட்ட எண்ணங்கள் இல்லாமல் இருந்தால்தான் ஒரு சேர கம்பெனியை மேலே கொண்டுபோக முடியும் என்றும் சொல்லப்பட்டு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதனால்தான் பொறுமையாக யோசித்து வேலை செய்யுங்கள் , இப்படி வேலை பார்ப்பதன் மூலமாக அவசர அவசரமாக வேலை பார்க்கும்பொது நடக்கும் சொதப்பல்களையும் தடுமாற்றங்களையும் நன்றாகவே தடுக்கலாம்.  

CINEMA TALKS - MURAN 2011 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


இயக்குனர் சேரன் அவர்களிடம் இருந்து ஒரு வித்தியாசமான மாறுபட்ட படைப்புதான் இந்த படம் , பிரசன்னா எப்போதுமே கியூட்டான காதல் ஹீரோவாக இருந்தாலும் இந்த படத்தில் கொஞ்சம் அவுட் ஆஃப் பாக்ஸ் சென்று ஒரு ஸ்மார்ட்டான வில்லனாக களம் இறங்குகிறார். முரண் ஒரு பக்காவான க்ரைம் டிராமா ! உங்களுக்கு இன்டர்நேஷனல் லெவல்லில் ஒரு சஸ்ப்பென்ஸ் நிறைந்த ஆச்சரியப்படுத்தும் க்ரைம் டிராமாவை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த படம் உங்களுக்கு ரொம்ப சிறப்பான ஆப்ஷன். இப்போது கதைக்கு வருவோம் ! நந்தா ஒரு கிட்டார் மியூசிக் எக்ஸ்ப்பர்ட்டாக திரைத்துறை வாழ்க்கையில் வெற்றி அடைய கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார் , அவருடைய மனைவி அவருக்கு சப்போர்ட் பண்ணுவதே இல்லை , ஒரு ஒரு நாளும் நரக வேதனைக்குள் இருக்கும்போது ஆறுதலாக ஒரு காதல்கதை அவருடைய வாழ்க்கையில் சென்றுக்கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இவரை புதிதாக சந்திக்கும் அர்ஜூன் அவருடைய அப்பா எப்படி மிகவும் மோசமாக நடந்துகொண்டு அவருடைய காதலியின் இறப்புக்கு காரணமானார் என்று இன்னொரு கஷ்டமான கதையை சொல்லிவிட்டு பின்னால் விடைபெற்று பிரிந்துவிடுகிறார்கள். எப்போது அர்ஜூன் ஒரு விபத்து போல செட் பண்ணி நந்தாவின் மனைவியை தீர்த்துக்கட்டிவிடுகிறார் , நந்தாவை பயமுறுத்தி அர்ஜூன் அவருடைய வாழ்க்கையில் பிரச்சனையாக இருக்கும் அப்பாவை காலி பண்ண வேண்டும் என்று நந்தவை மிரட்டுகிறார். இப்படி ஒரு பரபரப்பான ஆபத்தில் மாட்டிக்கொண்ட நந்தா எப்படி வெளியே வருகிறார் என்பதை ரொம்ப ரொம்ப ஸ்வாரஸ்யம் நிறைந்த திரைக்கதையாக சொல்லி இருக்கும் இந்த படம் 2011 ல் வெளிவந்தது. 

CINEMA TALKS - KANNA LADDU THINNA AASAIYA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



ஒரு கதாநாயகி , மூன்று பேர் கதாநாயகர்களாக இருக்கும் ஒரு முக்கோண காதல் கதை, இவர்களில் யாருக்கு காதல் சக்ஸஸ் ஆகும் என்று ஒரு கலகலப்பான பின்னணியுடன் இன்று போய் நாளை வா படத்தை மொத்தமாக இன்ஸ்பிரேஷன் பண்ணி எடுக்கப்பட்ட ஒரு படம் இந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா ? , இந்த படத்தில் சேது ராமன் , சந்தானம் ,மற்றும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாஸ் என்று மூன்று பேரும் கியூட்டாக ரொமான்ஸ்க்காக அலைந்து கதாநாயகியின் வீட்டில் இருப்பவர்களை இம்ப்ரேஸ் பண்ண செய்யும் எக்கச்சக்கமான செயல்கள் எல்லாமே படத்துக்கு நிறைய கலகலப்பான காட்சிகளை கொடுக்கிறது. பாக்யராஜ் அவர்களின் இன்று போய் நாளை வா படத்தின் நிறைய காட்சிகளை அப்படியே எடுத்து இருக்கும்போது போன படக்குழுவிடம் எந்த விஷயமும் கலந்து ஆலோசனை பண்ணாமல் எடுத்த படம் என்பதால் படம் பின்னால் பெரிய பிரச்சனைகளை சந்தித்தாலும் ரிலீஸ் ஆன பாயிண்ட் ஆஃப் வியூவில் ரொம்ப பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து சந்தானம் பின்னாட்களில் ஹீரோவாக நடிக்க நிறைய ஆப்ஷன்ஸ்களை கொடுத்து வைத்து இருந்தது இந்த படம்தான். இந்த படத்தில் நடித்த எல்லோருக்குமே அவர்களுடைய கரியரில் இந்த படம் ரொம்ப முக்கியமான படமாக இருந்து இருக்கும். சாங்க்ஸ் எல்லாமே வாலி அவர்களின் பாடல் வரிகளில் எஸ். தமன் ஒரு சூப்பர் ஹிட் சவுண்ட் டிராக் ஆல்பம் அந்த வெளியீடு நாட்களின் பாயிண்ட் ஆஃப் வியூவில் கொடுத்துவிட்டதால் போட்டியே இல்லாமல் ஜெயித்துவிட்டது. மொத்ததில் இந்த படமும் ஒரு பெஸ்ட் காமெடி என்டர்டைன்மெண்ட்தான். ஒரு நல்ல கதைக்கு பெர்ஃபேக்ட்டாக மூன்று காதநாயகர்கள் செலெகட் பண்ணினாலும் நடிப்பு என்ற விஷயத்தில் எல்லோருமே அவர்களுடய பெஸ்ட்டை கொடுத்து இருப்பதால் சின்ன சின்ன சொதப்பல்கள் இருந்தாலும் படம் ரொம்ப நன்றாகவே இருக்கிறது. இந்த படம் , இந்த படத்துக்கு பின்னால் வாலிப ராஜா படம் என்று சேதுராமன் அவர்களை நம்ம தமிழ் சினிமா ரொம்பவே மிஸ் பண்ணுகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷ் அவர்கள் இந்த படத்தில் பிரமாதமான நகைச்சுவை திறன் கொடுத்துள்ளதால் இங்கே அவர் நடிக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ரொம்பவுமே ரசிக்கும்படியாக இருக்கிறது. சந்தானம் சாதனை செல்வராக வெற்றி அடைகிறார். பவர்ஸ்டார் மிகவும் கியூட்டான பேர்ஃபார்மன்ஸ் கொடுத்து இருக்கிறார். மொத்ததில் நல்ல படம். 

GENERAL TALKS - இனிமேல் வாங்க வேண்டிய பொருட்களை கூட இப்போதே பிளான் போட வேண்டும் !

 பொதுவாக ஒரு சில பேர் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால் கடந்த காலம் நன்றாக இல்லை. இந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டே வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனைகளை பண்ணாமல் விட்டுவிடுவார்கள், இந்த உலகத்திலேயே அக்சப்ட் பண்ணிக்கொள்ள ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம் என்ன தெரியுமா ? கடந்த காலத்தை நம்மால் மாற்றவே முடியாது என்பதுதான். ஒரு நாள் ஒரு நடுத்தர வயது குடும்பத்தலைவர் அவருடைய சம்பளம் வந்ததும் ATM ல இருந்து பணத்தை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கொண்டு பைக்கில் செல்லும்போது ஒரு 500 ரூபாய் நோட்டு தவறுதலாக ரோட்டில் விழுந்துவிடுகிறது. இப்போது அவருடைய பட்ஜெட்டில் 500 ரூபாய் நஷ்டம் ஆவது என்னவோ உண்மைதான் ஆனால் அதையே நினைத்து ஏங்கிக்கொண்டு இருப்பதானாலோ அல்லது பணத்தை காப்பாற்ற முடியவில்லை என்று அவமானப்பட்டாலோ அதனால் என்னதான் பிரயோஜனம் சொல்லுங்கள் ? அந்த குடும்பத்தலைவர் இப்போது நடப்பு நிகழ்காலத்தையும் பின்வரும் எதிர்காலத்தையும் மட்டுமே யோசித்தால்தான் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்ற முடியும். இப்போது இன்னொரு விஷயத்துக்கு வருவோம். ஒரு விஷயம் நம்மை விட்டு சென்றுவிடும் என்று காலத்தில் விதிக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக நம்மை விட்டு சென்றுவிடும். இதனை கடவுளே நினைத்தாலுமே தடுக்க முடியாது. மனிதனுடைய வாழ்க்கையில் மனிதன் எப்போது பொருளாதார நிறைவை அடைகிறானோ அப்போதுதான் மன நிறைவை அடைய முடியும். இன்னைக்கு தேதிக்கு சம்பளம் வாங்கும் ஆட்கள் , தொழில் பண்ணுபவர்கள் , விவசாயம் பண்ணுபவர்கள் எல்லோருக்குமே கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிரிகள்தான். இங்கே உங்க வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருந்தால் "காசு பணத்தை சேர்த்து வைப்பதில் என்ன சார் இருக்கு ?" என்று கேள்வி கேட்கலாம் , ஆனால் எதிரிகள் எல்லோருக்குமே இருக்கிரார்கள், உங்களுடைய பணத்தையும் , பொருட்களையும் , உடல்நலத்தையும் சேதப்படுத்த எல்லோருமே பின்னணியில் இருந்துகொண்டு வேலைப்பார்த்துக்கொண்டு இருக்கும் இந்த மாதிரியான கால கட்டங்களில் நாம் கவனமாக இருப்பதுதான் நமக்கு நல்லது. கடந்த காலத்தை யோசிக்கவே வேண்டாம் என்று சொல்லும் அதே நேரம் எதிர்காலத்துக்கான பிளான்களை போடுங்கள் , உன்னுடைய திட்டம் என்ன என்று கேட்டால் நான் சொல்வது என்னவென்றால் "சிறப்பான வீடு , சூரிய ஒளி மின்சாரம் , வீட்டையே ஆபீஸ் போல மாற்ற கொஞ்சம் கம்ப்யூட்டர்கள், நிறைய டிஜிட்டல் சொத்துக்கள் , கொஞ்சம் கணக்கு காட்டும் பொருள் சொத்துக்கள் , அதிக பாதுகாப்பு , எலெக்ட்ரிக்கல் ஸ்கூட்டர் , பெட்ரோல் பைக் , மாதம் மாதம் தாராளமான பணம், இயற்கையான உணவுகள் , கொஞ்சமாக நிலம் , சிறப்பான கம்யூனிக்கேஷன் " அப்படின்னு உங்களுடைய வாழ்க்கைக்காக ஒரு தரமான திட்டத்தை போட்டு வைத்து இந்த பொருட்கள் இருந்தால் மட்டும்தான் முன்னேற முடியும் என்ற அடிப்படையான முன்னேற்ற திட்டத்தை போட்டுக்கொள்ளுங்கள், கார் என்றால் ரேனால்ட் க்விட் 1.0 , பைக் என்றால் ஹீரோ ஸ்பெலென்ட்டர் , முடிந்தால் ஒரு டி.வி.எஸ், மேலும் ஒரு ஆம்பெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் , லேப்டாப் என்றால் இன்டெல் அல்லது ஏ.எம்.டி உடன் தரமான ஹார்ட் வேர் என்று , ஒரே கூரை வீடு மேல் போர்ஷன் என்று இல்லை என்றாலும் பரவாயில்லை, இன்டர்நெட் கனெக்ஷன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோரேஜ்க்கு கணக்கு இல்லாமல் ஆப்ஷன்ஸ் இருப்பதால் பொழுதுபோக்கு தவிர்த்து டிவி என்று தனியாக செலவு பண்ண அவசியம் இல்லை. இந்த மாதிரி நான் வாங்க வேண்டிய பொருட்களை நான் செலேக்ஷன் பணனித்தான் வைத்து இருக்கிறேன். இது எல்லாமே அடைவது என்னுடைய டெஸ்டினேஷன் , இது எதுவுமே என்னுடைய வாழ்க்கையில் நிஜத்தில் நடத்திவிட முடியுமா என்றால் வாய்ப்புகள் குறைவுதான் ஆனால் முயற்சிகளை பண்ணிக்கொண்டு இருக்கிறேன். இந்த வாழ்க்கை என்ற விளையாட்டை நோ-நான்ஸன்ஸ்ஸாக விளையாட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்களுடைய பொருட்களை நீங்கள் இன்னுமே அதிகப்படுத்த வேண்டுமே தவிரத்து இருப்பதை இழந்து நிற்க கூடாது. கடைசியாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இந்த உலகத்தில் காசு பணம் முக்கியம் இல்லை , பொருட்களை சேகரிப்பது முக்கியம் இல்லை என்று எல்லாம் கதை விடுவார்கள். நம்பாதீர்கள். இவைகள்தான் முக்கியம். கவனமான முறையில் செலவு பண்ணுவதும் ஒரு கலைதான் ஆனால் நிறைய பேருக்கு இந்த கலை கொடுத்து வைக்கவில்லை. இந்த தோல்வியடைந்த கூட்டத்தில் நீங்கள் சேர்ந்துவிடாதீர்கள். இணைப்பில் ஆன்ஸர் இன் பிராக்ரஸ் சேனல்லை இணைத்துள்ளேன். ரொம்ப பயனுள்ள யூட்யூப் சேனல். கண்டிப்பாக சப்ஸ்க்ரைப் பண்ணிவிடுங்கள் !

GENERAL TALKS - யோசிக்கணும் , எல்லமே யோசிக்கணும் - THINK FIRST ! PLAN EVERYTHING !

 உங்களிடம் ஒரு இன்பினிட்டி அளவுக்கு பணம் இருந்தால் என்ன பண்ணுவதாக உங்களுக்கு திட்டம் இருக்கிறது ? குறிப்பாக இப்படி ஒரு நடக்காத சூழ்நிலையையும் நடந்ததாக நினைத்து அஸம்ஷன் பண்ணிவிட்டு அடுத்து என்ன பண்ணவேண்டும் என்று முடிவு எடுப்பதும் ஒரு வகையில் விஷுவல்லைஷேஸன் தான். இது இந்த விஷயத்தில் மட்டும்தான் என்று இல்லை. மெட்டமார்ஃபேஸிஸ் போல ஒரு நாள் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் உங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் என்ன பண்ணுவீர்கள் ? அடிப்படையில் நன்றாக யோசித்து அடுத்து அடுத்த வேலையை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி யோசிக்காமல் போனால் எதிரப்பாராமல் நிறைய தப்புகள் நடந்துவிடும். இங்கே யாருமே நிபந்தனைகள் அற்ற உண்மையான அன்பை கொடுப்பது இல்லை. அப்படி இருக்கும்போது இன்னைக்கு உங்களுடைய நாள் எப்படி இருக்கிறதோ அதே போலத்தான் நாளைக்குமே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால் மெடிக்கல் செலவுகளை எடுத்துக்கொள்ளலாம். உங்களுடைய மற்றும் உங்களை சார்ந்தவர்களின் மருத்துவ செலவுகளுக்கு எப்போதுமே உங்களுடைய சம்பாதியத்தில் இருந்து கொடுத்து உதவினால்தான் நன்றாக இருக்கும். இந்த உதவியை உங்களால் செய்ய முடியவில்லை என்றால் உங்களின் சொந்த இல்லத்தில் கூட உங்களுக்கு மதிப்பு இருக்காது. இப்படி எல்லா வகையான அன்பும் பொருட்களின் அடிப்படையில் மட்டுமே சென்றுக்கொண்டு இருந்தால் எப்படித்தான் ஒரு அன்பை எப்போதுமே எதையுமே எதிர்பார்க்காமல் ஒரு கொடுக்கல் வாங்கல் இல்லாமல் இருக்கும் நிபந்தனைகள் இல்லாத அன்பு என்று சொல்ல முடியும். இந்த மாதிரி விஷயங்களில்தான் அஸம்ஷன்கள் கைகளை கொடுக்கிறது. நம்மிடம் சரியான அஸம்ஷன் இருக்கும்பட்சத்தில் நம்முடைய மூளை நடக்கப்போகும் சம்பவங்களுக்கு தயாரானதாக இருக்கும். இங்கே நான் மனது அளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைப்பது இல்லை என்று சொல்பவர்கள் அடிப்படையில் விஷுவல்லாக நடக்கப்போகும் சம்பவம் எந்த எந்த வகையில் முடிவுகளை கொடுக்கும் என்று யோசிக்கவும் வேண்டுமென்றே மறுத்துவிடுகிறார்கள். வாழ்க்கையின் முக்கியமான ஒரு திறனை பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். உண்மையான வாழ்க்கையில் ஒரு செயல் நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் , இல்லையென்றால் நடக்கப்போகிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் நம்முடைய அறிவை பயன்படுத்தி எவ்வளவு நுணுக்கமாக உடைத்து ஆராய்ச்சி பண்ண முடியுமோ அந்த அளவுக்கு நிறைய ஆராய்ச்சி பண்ண வேண்டும் , அடுத்து இந்த செயல்தான் நடக்கும் என்று கணிப்பு பண்ண வேண்டும்! இயந்திரங்களுக்கு அறிவை கொடுத்து உயிர் இருக்கும் ஜீவன்களாக நடமாடவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கும் இந்த காலங்களில் யோசிக்கும் திறன் கூட இல்லாமல் இந்த நாளை போலவே அடுத்த நாளும் போகவேண்டும் என்று யோசிப்பவர்கள் நலமாக வாழவே முடியாது, தொடர்ந்து எல்லைகள் இல்லாமல் முன்னேறிக்கொண்டு இருக்க வேண்டும் !

Monday, November 27, 2023

CINEMA TALKS - BETWEEN TWO FERNS - THE MOVIE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


நான் இந்த மாதிரி ஒரு நகைச்சுவையான திரைப்படம் பார்த்ததே இல்லை. இந்த படம் ஜேக் காலிபியானாக்கிஸ் பொதுவாகவே டார்க் ஹியூமர் என்றால் வேற லெவல்லில் பண்ணுவாரு. இது அவருடைய சொந்தமான காமெடி ஷோ என்பதால் நிறைய நடிப்பு மற்றும் இசைத்துறை செலிப்ரேட்டிகளை நன்றாக கலாய்த்து வைத்து இருக்கிறார். பிட்வீன் டூ ஃபேர்ன்ஸ் என்பது ஒரு ரியாலிட்டி இன்டர்வியூ ஷோ. இந்த ஷோவில் வரும் கெஸ்ட்களை ஆன் ஸ்கிரீன்னில் சரியாக வைத்து கலாய்த்துக்கொண்டு இருப்பார் நம்ம ஜேக் காலிபியானாக்கிஸ் இதேபோல ஒரு முறை மேத்தியூ மெக்கானுவேவை கலாய்த்துக்கொண்டு இருக்கும்போது ஸ்டுடியோவுக்குள் தண்ணீர் கொட்டியதால் இன்டர்வியூவுக்குள் இருந்த இந்த இரண்டு பேரும் எப்படியோ தப்பித்து வெளியே வந்துவிடுகின்றனர். டெலிவிஷன் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் இப்போது ஜேக்குக்கு வெறும் பத்தே நாட்களில் அமெரிக்கா முழுவதும் பயணம் பண்ணி எப்படியாவது கட்டாயப்படுத்தி 10 மீடியா நட்சத்திரங்களின் இன்டர்வியூக்களை எடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள் . இந்த பத்து நாளும் இவரும் இவருடைய குழுவில் இருப்பவர்களும் பண்ணும் கலகலப்பான காமெடி கலாட்டாக்கள்தான் இந்த பிட்வீன் டூ ஃபேர்ன்ஸ் திரைப்படம். செம்ம காமெடியாக இருக்கும். கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள். 

GENERAL TALKS - இந்த உலகத்தில் மாற்றம் அடையாத இரண்டு விஷயங்கள் !

 பொதுவாக ஒரு விஷயத்தை ஆப்ரோச் பண்ணுவதில் இரண்டு விதமான கான்செப்ட் இருக்கிறது. முதல் விஷயம் , அந்த விஷயத்தை பாசிட்டிவ் ஆக அப்ரோச் பண்ணுவது. இந்த பாஸிட்டிவ் அப்ரோச் ரொம்பவுமே கடினமானது. உங்களிடம் போதுமான பணம் இருந்தால்தான் உங்களால் இந்த அப்ரோச்சை உங்கள் லைப்-ல பயன்படுத்த முடியும். இந்த விஷயம் பின்னதாக எக்ஸ்ப்ளைய்ன் பண்ணுகிறேன், இப்போது முதலாவது எக்ஸாம்பில் - இதுக்கு எதிர்ப்பதமாக விளையாடும் நெகட்டிவ் அப்ரோச்சை விளையாடிக்கொண்டு இருப்பவர்கள் எல்லோருமே எப்போதுமே பாசிட்டிவ் அப்ரோச்சை கொண்டு வர வேண்டும் என்று போராடுவார்கள். காரணம் என்னவென்றால் நெகட்டிவ்வாக விளையாடுபவர்களை யாருக்குமே பிடிக்காது. வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் கருப்பு வெள்ளை என்று இரு அணிகள். கருப்பு அணிதான் நெகட்டிவ்வில் விளையாடும் அணி, டேமன்ஸ் - இவர்கள் நெகட்டிவ்வாக பிரச்சனைகளை முடிப்பதில் சிறப்பானவர்கள். பிரச்சனைகள் வந்தால் ஒரு ஒரு முடிவையும் நெகட்டிவ்வாக எடுத்து அந்த பாயிண்ட் ஆஃப் வியூவில் யோசித்து வெற்றி அடைபவர்கள். இவர்களுடைய ஃபோகஸ் என்பது குறைவான மைனஸ் முதல் ஜீரோவில் முடித்தால் கூட நிறைவு என்றுதான் இருக்கும். இவர்களால் பாசிட்டிவ் லைன்னை தொட முடியாது. அப்படி தொடுவது அரிதானது. பாசிட்டிவ் லைன்னில் கொஞ்சம் நாட்கள் இருந்து சிஸ்டம்மை பாசிட்டிவ் சேனல்க்கு மாற்ற வேண்டும் என்று முயற்சிகளை எல்லாம் பண்ணுவார்கள் ஆனால் முன்னதாக குறிப்பிட்டது போல அவர்களிடம் பணம் இருக்காது. 6 இலக்க அளவுள்ள தொகை என்று ஒரு பெரிய தொகை இவர்களிடம் இருந்தால்தான் கொஞ்சம் நாட்களுக்காவது நெகட்டிவ் லைன்னில் இருந்து பாசிட்டிவ் லைன்னில் பயணிக்க முடியும். இவர்கள் பொதுவாக தோல்வி அடைபவர்களின் பக்கம் இருப்பார்கள். மெஜாரிட்டி சப்போர்ட் இருந்தாலும் சிஸ்டம் உறுதி மற்றும் பண வலிமை கொஞ்சமாக இருக்கும். இருந்தாலும் நெகட்டிவ் லைன்னில் இருந்து சண்டை போட்டால் நிறைய பிரச்சனைகளை சந்திப்பதோடு மட்டுமே இல்லாமல் கஷ்டப்பட்டு ஒரு ஒரு சின்ன பிரச்சனைகளையும் அவர்களுடைய வாழ்க்கையில் சரிபண்ண வேண்டியது இருக்கும். இப்போது இதனுடைய இன்னொரு பக்கத்தை பார்க்கலாம். இரண்டாவது எக்ஸ்ஸாம்பில் - பாசிட்டிவ் அப்ரோச் - பாசிட்டிவ் அப்ரோச்சில் இருப்பவர்களுக்குக்கு எப்போதுமே அந்த அப்ரோச்சில் இருப்பவர்கள் எல்லோருமே சப்போர்ட் பண்ணுவார்கள். எண்ணிக்கையில் குறைவு என்ற மைனாரிட்டி என்றாலும் பணபலம் படைபலம் ரொம்ப அதிகமாக இருப்பதால் பாசிட்டிவ் அப்ரோச் இருப்பவர்கள் ரொம்ப கவனமான வெற்றியாளராக தொடர்ந்து ஜெயித்துக்கொண்டு இருப்பார்கள். வாழ்க்கை சதுரங்கத்தில் வெள்ளை அணியில் பாசிட்டிவ்வில் விளையாடும் அணிதான் இந்த அணி - ஏஞ்சேல்ஸ் - பணம் எப்போதுமே இருப்பதால் தேவைப்பட்ட பொருட்கள் எல்லாமே வாங்க முடியும். ஒரு பைக் வேண்டுமா ? வாங்கிவிடாலம் , ஒரு கார் வேண்டுமா ? வாங்கிவிடலாம் காமிரா வேண்டுமா வாங்கிவிடலாம் ? உயர் திறன் ஃபோன் ! - கவலையே வேண்டாம் ! கம்ப்யூட்டர் - பக்காவாக வாங்கிவிடலாம் , சொந்த வீடு - இன்னும் நம்பிக்கை இல்லையா ? சொந்த நிலம் - உங்களுக்காக மட்டுமே ! என்று எல்லா இடங்களிலும் பணத்தின் சந்தோஷத்தில் ரொம்ப ரொம்ப சந்தோஷ கடல் வாழ்க்கையை வாழும் இந்த பாசிட்டிவ்வில் விளையாடுபவர்கள் , தொட்டது எல்லாமே வெற்றிதான் , எல்லோருக்குமே இவர்களை பிடிக்கும் , இவர்கள் பேஸ் பாசிட்டிவ் வேல்யூவில் இருந்து அதிகபட்ச பாசிட்டிவ் வேல்யூவில் கேம் விளையாடுவார்கள். பூச்சியத்துக்கு செல்ல எல்லாம் வாய்ப்பு இல்லை. இந்த இரண்டு அப்ரோச்சும் சரிக்கு சமம். இதுதான் சரியான அப்ரோச் , இதுதான் தவறான அப்ரோச் என்று இரண்டையுமே பிரிக்க முடியாது, இங்கே இரண்டுக்கும் நடுவே இருக்கும் நியூட்ரல் என்று எதுவுமே கிடையாது. ஒரு குழந்தை பிறந்ததும் அது வளரும் இடம் மற்றும் அதனிடம் இருக்கும் பொருட்களை பொறுத்து நெகட்டிவ் அல்லது பாசிட்டிவ் கோடுகளை தேர்ந்தெடுக்கிறது. நெகட்டிவ் கோடுகளில் இருக்கும் ஆபத்து என்னவென்றால் நெகட்டிவ்வாக செயல்பட்டதன் கர்மாவின் பாரம் ரொம்ப அதிகமாக இருக்கும். நெகட்டிவ்வை தொட்டவர்கள் வாழ்க்கையில் ஒரு தப்பு பண்ணினாலும் வாழ்க்கையில் ஒரு மோசமான கெமிக்கல் ரியாக்ஸன் நடந்து அவர்களுடைய நிறைய பாயிண்ட்களை குறைத்துவிடும் , அதுவே பொசிட்டிவ்வில் இருப்பவர்களுக்கு பணம் இருப்பதால் பாயிண்ட்ஸ் தாராளம். இவர்கள் பாசிட்டிவ்வில் இருப்பதால் கேம் தொடங்கும்போதே வெற்றியாளராக இருப்பார்கள். இவர்கள் செய்ய வேண்டியது எல்லாமே கேம் முடியும் வரைக்கும் காத்திருந்து இவர்களின் பாயிண்ட் பேக்கேஜ்களை அக்கவுண்ட்டில் சேர்த்துக்கொள்வது மட்டும்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? பாசிட்டிவ்வில் இருப்பவர்களுக்கு பெரும்பாலான பிரச்சனைகள் இல்லை என்றாலும் நெகட்டிவ்வில் இருப்பவர்கள் போதுமான அறிவுத்திறன் கொண்டு பாசிட்டிவ்வில் இருப்பவர்களை மொத்தமாக தெரிந்து வைத்து இருப்பார்கள் (நெகட்டிவ்வில் விளையாடுபவர்களுக்கு எப்படியாவது பாசிட்டிவ்வில் விளையாட வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருக்கும், இது எப்படி சொல்லலாம் என்றால் தெருவில் ஆடும் கிரிக்கெட்டுக்கும் , ஸ்டேடியம் புரஃபஷனல் மேட்ச்சுக்கும் இருக்கும் வேறுபாடுகளை போன்றது) , கர்மா விளைவுகளின் தாக்கம் நெகட்டிவ்வில் இருப்பவர்களை பாதிக்கிறது, ஆனால் பாசிட்டிவ்வில் இருப்பவர்களை அது எதுவுமே பண்ணுவதே இல்லை. இதுவுமே ரொம்ப ஸ்டிரேஞ்ச் ஆன விஷயம்தான். கர்மா எதனால் பாசிட்டிவ்வில் விளையாடுபவர்களிடன் இடங்களில் கரைந்தே போய்விடுகிறது ஆனால் நெகட்டிவ்வில் இருப்பவர்களுக்கு கொடூர பாரமாக இருந்து அவர்களுடைய வாழ்க்கையை இப்படி பண்ணுகிறது என்று தெரியவில்லை. இந்த விஷயத்தை பற்றி மட்டுமே பேசினால் நிறைய பேசிக்கொண்டு போகலாம் , இன்னும் சொல்லப்போனால் பெரிய புத்தகமே எழுதலாம். நெகட்டிவ்வில் இருப்பவர்கள் மிகவுமே கவனமாக இருக்க வேண்டும், நெகட்டிவ் இரத்ததை கொடுத்து மரணத்தோடு விளையாடும் விளையாட்டு. நெகட்டிவ்வில் இருப்பவர்கள் ரொம்ப ரொம்ப அதிகமான கவனத்தில் இருக்க வேண்டும். ஆனால் பாசிட்டிவ் அப்படிப்பட்டது அல்ல. பாசிட்டிவ் ஒரு பாதுகாப்பு நிறைந்த குறைகள் ஒரு துளியும் இல்லாத சந்தோஷ பயணம். பாசிட்டிவ்ல கவலை இல்லை , சிரமம் இல்லை , இது ஒரு பிரபஞ்ச அதிசயமான அதிர்ஷ்டம் என்றுதான் நான் சொல்லுவேன். 

GENERAL TALKS - CLIMATE CHANGE - என்னுடைய கருத்து !

 இந்த உலகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களிலும் ஒரு மெக்கானிக்கல் பேலன்ஸ் இருக்கிறது ஆனால் அந்த பேலன்ஸ் உடைந்து போனால் என்ன ஆகும் ? அதுதான் கிளைமேட் சேஞ்ச் என்ற இந்த ப்ராப்ளம். இந்த பிரச்சனையை நிரந்தரமான முறையில் சரிபண்ண முடியுமா ? அதுக்கு நிறைய பணம் தேவை , இன்னும் கொஞ்சம் சயின்ஸ் தேவை ! உண்மையை சொல்லப்போனால் இந்த பிரச்சனையை அடிப்படையில் இருந்து சரிபண்ண வேண்டும் என்றால் அதிகமாக முயற்சிகளை பண்ண வேண்டும் , அரசாங்க அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் உதவி பண்ணினால் மட்டும்தான் இந்த பிரச்சனையை சரிபண்ண முடியும் , பல வருடங்கள் இந்த பிரச்சனைக்காக தேவைப்படும். இல்லைன்னா பண்ணிய கிளைமேட் சேஞ்ச் நம்ம செய்த செயல்களின் கர்மா (கர்ம பலன்) என்ற அளவில் இன்பினிட்டி என்ற அளவுக்கு பாவக்கணக்கு எழுதிவிடும். நாம் எத்தனை புண்ணியம் பண்ணினாலும் பூமிக்கு நாம் பண்ணிய பாவத்தை நம்மால் மன்னிக்கவே முடியாது. கிளைமேட் சேஞ்ச்சை தடுக்க வேண்டும் என்று ஒரு முயற்சியை எடுத்தால் அதனை இன்னைக்கே எடுக்க வேண்டும், இந்த நொடியே எடுக்க வேண்டும், ஒரு நொடி தாமத்திப்பதும் வேஸ்ட் ஆனது. நான் இந்த வார்த்தைகளை மோட்டிவேஷன்க்காக சொல்லவில்லை. ஒரு செகண்ட் , வெறும் ஒரு செகண்ட்டில் உலக அளவில் குறைந்தது 1000 கிலோ கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆவது மக்களால் பூமியில் போடப்பட்டு இருக்கும். நாளைய நாள் என்பது ஒரு பொய்யான விஷயம். இன்னைக்கு இருக்கும் நாள்தான் நிரந்தரமானது. அதனால் கிளைமேட் சேஞ்ச்சை பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்றால் இன்னைக்கே எடுக்க வேண்டும். இங்கே எல்லோருமே கிளைமேட் சேஞ்ச் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கிறது என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம். இன்னமும் கிளைமேட் மாறும் பிரச்சனைகள் எல்லாமே நம்ம கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகத்தான் கற்பனை பண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உங்களுக்கு உண்மை தெரியுமா ? வானிலை மாற்றம் இப்போதே அதனுடைய அதிகபட்ச மோசமான நிலையில் உள்ளது. புயலால் வீடுகள் பாதிக்கப்படுகிறது. பருவ மழை இல்லாமல் விவசாயம் மற்றும் தானிய உற்பத்தி குறைகிறது. இப்படி விவசாயமே அடி வாங்கினால் சாப்பாட்டின் தயாரிப்பு விலை ரொம்பவே அதிகமாக மாறிவிடும். பெரிய கம்பெனிகள் இலாபம் அடைந்து நன்றாக இருக்கிறது ஆனால் சின்ன கம்பெனிகள் மற்றும் பொது மக்கள் கடங்களில் விழுந்து நஷ்டம் அடைவார்கள். பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆவார்கள். ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆவார்கள். வானிலை என்பது ஒரு மிகப்பெரிய நெகட்டிவ் இம்பாக்டை இந்த உலகத்தில் உருவாக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த ஒரு விஷயம். இருக்கும் உலகத்தையே அழித்துக்கொண்டு இருந்தால் வாழ்க்கையில் சந்தோஷமே இருக்காது. நம்ம எதிர்காலம் அழிவை நோக்கி பயணிக்கிறது. வயதான காலத்தில் சந்தோஷமாக இருந்துவிட முடியுமா ? எல்லோருமே எல்லோர் மேலும் வெறுப்பில் இருப்பார்கள் காரணம் என்னவென்றால் உலகம் மொத்தமும் கடுமையான உணவு பஞ்சம் தண்ணீர் பஞ்சம் வந்துவிடும். உணவும் தண்ணீரும் கொடூரமான விலைக்கு விற்கப்படும். சாப்பாடு இல்லாதவர்கள் எதையுமே சாப்பிட முடியாமல் சாப்பாட்டை கொள்ளை அடிக்கும் நிலைக்கு இந்த உலகம் மாறிவிடும். இந்த நேரத்தில் இந்த டெக்ஸ்ட்டை யாராவது படித்தால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள். இது ஒரு பெரிய பிரச்சனை ! 

TAGS : TAM,IL REVIEW , TAMIL ANALYSIS , TAMIL CINEMA , HOLLYWOOD CINEMA TAMIL DUBBED , TAMIL MOVIES , FILM GEEK , TECH , RANDOM TAMIL , GENERAL TAMIL , TAMIL TALKIES , SIMPLE TAMIL , TAMIL BLOG , TAMIL WEBSITE , TAMIL SONGS , VALAIPOO , TAMIL OLD MOVIES , BEST TAMIL , NICE TAMIL , TAMIL SEARCH ENGINE , TAMIL CONTENT , SUPPORT TAMIL , TAMIL VAAZHGA , TAMIL VIBES , TAMILAN VIBES , BEST OF TAMIL SONGS , ISAIMINI , ISAI TAMIL , TAMIL ARTICLE , KATTURAI , VINVELI , ULAGAM , YOSANAI

RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 008 - TAMIL MAGAZINE

 இந்த உலகத்தில் இருக்கும் எல்லா நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டையும் எடுத்துவிட்டால்தான் என்ன ? அடிப்படையில் இது அவ்வளவாக வேலை செய்யாத யோசனை என்று சொல்லப்படுகிறது. காரணம் என்னவென்றால் நிபந்தனைகள் இல்லாத விளையாட்டு கடைசியில் புஜபல பராக்கிரமத்தை காட்டும் சண்டையாக மட்டும்தான் மாறிப்போகும். காலத்துக்கு என்று ஒரு அட்வாண்டேஜ் இருக்கிறது, அது ஒரு அதிர்ஷ்டம் போன்றது. எல்லா நேரங்களிலும் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு சப்போர்ட் பண்ணாது. நம்ம வாழ்க்கையில் வெற்றியும் அடையனும். தோல்வியும் அடையனும் ஆனால் இந்த இரண்டு விஷயங்களும் தலைக்கு உள்ளே போகக்கூடாது. ஒரு சில குறிப்பிட்ட சம்பவங்கள் நடக்கும்போது உயிரை கொடுத்து போராடினாலும் வெற்றி அடைய முடியாது ஆனால் போதுமான சயின்ஸ் அண்ட் டெக்னோலஜி இருந்தால் கண்டிப்பாக வெற்றியை அடைந்துவிடலாம். இதனால்தான் பொருள் சேர்க்காமல் வெறும் அன்பு மட்டுமே சேர்த்து வாழ்வது பயன் இல்லாதது. நான் நிறைய நேரங்களில் ஒரு நிறுவனத்தை தொடங்க நிறைய வேலைகளை செய்து பணம் சம்பாதிக்க முயற்சி பண்ணி காலத்தால் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறேன். நான் முன்னதாக சொன்னது போல காலத்தின் அட்வாண்டேஜ் எனக்கு உதவி பண்ணவில்லை. காலத்தின் அட்வாண்டேஜ் என்பது ஒரு சில நேரங்களில் கடவுள் செயலாகவோ இல்லையென்றால் விதியின் செயலாகவோ ஒரு அட்வாண்டேஜ் நமக்கு கிடைக்கும். அந்த காலத்தில் மட்டும் நாம் செய்யும் வேலைகள் எல்லாமே ஒரு இனம் புரியாத அதிர்ஷ்டமாக ரொம்ப வெற்றிகரமாக முடியும். இங்கே என்னுடைய இலட்சியம் மற்றும் கனவுகள் ரொம்பவுமே பெரியது. ஆயிரக்கணக்காக பக்கங்களில் எழுதிவைத்த என்னுடைய கான்செப்ட்களை ஒரு புத்தகமாக பப்ளிஷ் பண்ண நிறைய நாட்கள் முயற்சி பண்ணி இருக்கிறேன் ஆனால் கடைசியில் வலைப்பூவில் பதிவு பண்ணவேண்டிய நிலையில் இருக்கிறேன். இப்படியே பேச்சு மாற வேண்டாம் நாம் கான்செப்ட்க்குள் சென்றுவிடுவோம். காலத்தின் அட்வாண்டேஜ் / ஒரு தனியார் நிறுவனம் - ஒரு நிறுவனம் என்பது அந்த நிறுவனத்தின் லேபர்களின் கடைசி கட்ட உழைப்பு வரைக்கும் கொடுத்தால்தான் வெற்றியை அடைய முடியும் என்ற அவசியம் இல்லை. ஆனால் லேபர்கள் என்று வரும்போது டேடிகேஷன் அதாவது அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். இங்கே எல்லோருமே வொர்க்கை சரியாக பண்ண வேண்டும் மேலும் எடுக்கக்கூடிய ஒரு ஒரு முடிவும் ரொம்ப அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும். போதுமான அறிவுப்பூர்வமான கான்செப்ட்கள் இல்லை என்றால் நாம் காப்பாத்த வேண்டும் என்று ஒரு விஷயத்தை நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. இந்த உலகம் எப்படிப்பட்டது என்றால் உங்களை உண்மையாகவும் ஆசைகள் இல்லாதவராகவும் இருக்க வைக்கும் ஆனால் அப்படி இருந்தால் உங்களுக்கு கடைசி வரைக்குமே எதுவுமே கிடைக்காது. உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு என்று சக்திகளை உள்ள விஷயங்களை நீங்கள் இழந்துவிட்டால் மறுபடியும் அந்த சக்திகளை பெறுவது உங்களால் முடியாதது என்பதால் பயிற்சிகளை பண்ணி உங்களுக்கு தேவையான பொருட்களை சம்பாதித்துக்கொள்ளும் அளவுக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள். பணம் விஷயத்தில் யாரையுமே நீங்கள் நம்ப வேண்டாம். பார்ட்யூன் ஃபேவர்ஸ் ஃபூல்ஸ் என்று ஒரு வாக்கியம் இருக்கிறது. பணம் என்னைக்குமே அந்த பணத்துக்கு தகுதி இல்லாதவர்களிடம்தான் அதிகமாக கொட்டிக்கிடக்கும். பொதுவாக பணம் விஷயத்தில் யாரையும் நம்பவே கூடாது. இங்கே நியாயமாக இன்வெஸ்ட்மேன்ட்டை கைகளுக்குள் போட்டுக்கொண்டு நான் பணத்தை எதிர்பார்த்த இடத்தில் முட்டாள்தனமாக முடிவு எடுப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த பணம் நியாயமாக என்னுடைய வங்கிக்கணக்கில் சேர்ந்து இருக்க வேண்டிய பணம் ஆனால் நான் இந்த பணத்தை பற்றி எத்தனை முறை படித்து படித்து குழந்தைக்கு சொன்னது போல சொல்லி புரியவைத்தாலும் கடைசியில் ரொம்பவுமே சுயநலமாக அவர்களே வைத்துக்கொள்ள வேண்டும் என்று முட்டாள் அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை மொத்தமாக அள்ளிவிட்டார்கள். அதாவது ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டுக்கு அவர்களால் அந்த பணத்தை பயன்படுத்த முடியாது ஆனால் உடல்நலத்தையும் மனநலத்தையும் கெடுத்துக்கொண்டு பின்னாட்களில் நிறைய முட்டாள்தனமான செலவுகளுக்கு வந்து அந்த பணத்தை பயன்படுத்தலாம். இதுதான் இங்கே இவர்களுடைய திட்டம். இத்தனை விஷயங்களையும் கேட்கப்போனால் பணத்தின்  சக்தியை வைத்து தொழில் தொடங்கி வீடு வாசல் என்று நன்றாக இருக்க அவர்களுக்கு ஆசை இல்லை. பணம் வெறும் பயன்படுத்தப்படாத சமையல் பொருட்கள் போல காலாவதி ஆகவேண்டும் என்றாலும் பரவாயில்லை ஆனால் இன்னொருவருக்கு பிரயோஜனமாக இருக்க கூடாது என்று ஒரு மனநிலையில் இவர்கள் இருக்கிறார்கள். இப்படி வாழ்ந்துகொண்டு இருந்தால் கடவுள்தான் இவர்களுக்கு சொல்ல வரும் விஷயத்தை புரிய வைக்க வேண்டும். நம்பிக்கை இருப்பவன் கோடலியை வைத்து மரங்களை நடுகிறான். நம்பிக்கை இல்லாதவன் அதே கோடாலியை வைத்து அவனுக்கான சவக்குழியை தோண்டிக்கொள்கிறான். 

GENERAL TALKS - உணவும் உடல்நலமும் ! - BE CAREFUL ON EATING PROCESS

 நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து பணம் சம்பாதித்தாலும் சரி , இல்லையென்றால் வீடியோ கேம்கள் விளையாடி அவைகளை ஸ்ட்ரீம் பண்ணி பணம் சம்பாதித்தாலும் சரி , உங்கள் உடல் நலத்துக்கு அக்கறையோடு எப்போது சாப்பிட்டு இருக்கிறீர்கள். இங்கே எனக்கு தெரிந்து நிஜ வாழ்க்கையில் உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு வேலையில் கவனம் செலுத்துபவர்கள் இருக்கிறார்கள். அடிப்படையில் இது ஒரு தப்பான டேஸிஷன். சரியான முடிவு எடுப்பவர்கள் உடல் நலத்தில் அக்கறை வைத்து வேளாவேளைக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு சிறப்பாக இருக்கிறார்கள்.  நன்றாக சாப்பிடுபவர்கள் மட்டும்தான் வெற்றியை அடைகிறார்கள். அதுவுமே தரமான உணவை சாப்பிட வேண்டும். உணவுடைய சத்துக்கள் மற்றும் இரசாயன கலப்பு இம்பாக்ட் என்பது தனியாக இன்னொரு பெரிய கான்செப்ட் அதை நான் இன்னொரு போஸ்ட்டில் சொல்கிறேன். தரமான உணவை சாப்பிட வேண்டும் தரமற்ற ஃபேன்ஸி உணவுகளை சாப்பிட கூடாது என்ற கான்செப்ட் ஒன்றும் இந்த காலத்து கான்செப்ட் இல்லையே. காலகாலமாக இருக்கும் கான்சேப்ட் தானே அதில் என்ன புதுமை என்றால் இந்த காலத்தில் பதப்படுத்தப்பட்ட நச்சு உணவுகள் இருக்கிறது. இவைகளை நாம் உடலுக்குள் சேர்த்துக்கொண்டால் ஃபேன் வோடவில்லை என்று காப்பர் காயில்லில் தேங்காய் எண்ணையை விட்ட கதைதான் நடக்கும். உடம்பு பழுது ஆகிவிடும். இந்த உலகத்தில் நம்ம உடம்பு மட்டும்தான் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காத ஒரு அருமையான மெஷின் . அதனால் காசு இருக்கிறது என்பதற்காக கண்டதை வாங்கி சாப்பிட வேண்டாம். அப்படியே இயற்கை உணவு என்றாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். இயற்கை உணவு என்ன பண்ணப்போகிறது என்று கேட்டால் ஒரு உதாரணத்துக்கு வேகவைத்த உருளைக்கிழங்குகளை உப்பு அதிகமாக போட்டு ஒரு கால் கிலோ சாப்பிட்டு பாருங்கள். உங்கள் பெருங்குடல் உப்பிப்போவதால் கார்பன் டை ஆக்ஸைட் வாயுக்களை உருளைக்கிழங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதனால் இயற்கை உணவும் ஒரு அளவுக்குதான் சாப்பிட வேண்டும். கேரட்டை பச்சையாக சாப்பிட கூடாது. காரணம் என்னவென்றால் கேரட் ஒரு கிழங்கு வகை தாவரம். பச்சையாக சாப்பிடும்போது மண்ணுக்கடியில் புதைந்து இருந்த காரணத்தால் கேரட்டில் வேர் வகை பாக்டீரியாக்கள் இருப்பதால் இவைகள் உடல்நலத்துக்கு ஆபத்தானது. இன்னும் நிறைய டிப்ஸ் இருக்கிறது. RO குடிநீர் பயன்படுத்தாமல் சாதாரண குடிநீர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் கணிசமான கிடைக்கும் மேலும் ஜின்க் , கால்சியம், மெக்னிஷியம் போன்ற மினரல்ஸ் சத்துக்களும் நம்முடைய உடலுக்கு கிடைக்கும். உங்களுடைய உடலுக்கு தேவையான சத்துள்ள உணவுகளுக்கும் உடல் நலத்துக்கு தேவையான பொருட்கள் இருக்கும் உணவுகளுக்கும் மட்டுமே முக்கியம் கொடுக்க வேண்டும். உணவு என்பது என்னைக்குமே விளையாட்டான விஷயம் இல்லை மக்களே. அது உங்களுடைய உடலை பழுதுபார்த்துக்கொள்ள உள்ளுறுப்புகளுக்கு நீங்கள் கொடுக்கப்போகும் சக்தி. உங்களுடைய வயிற்றுக்குள் என்ன போகிறது என்பதில் நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும் !

RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 008 - TAMIL MAGAZINE

 


காலத்தின் அட்வாண்டேஜ் - நம்ம செய்ய வேண்டிய செயல்களுக்கான சரியான காலகட்டம் வரும்போது போதுமான பணம் இருப்பவர்களால் மட்டும்தான் அட்வாண்டேஜ்ஜை பயன்படுத்த முடியும், உங்களுக்கு தமிழ் வலைப்பூக்களின் பொற்காலம் பற்றி தெரியுமா ? பொதுவாக இன்டர்நெட் எல்லாம் ஃபோன்களில் பயன்படுத்த முடியும் என்ற வசதிகள் உலகம் முழுக்க இருக்கும் ஃபோன்களில் வந்த காலம் 2007 ம் வருடத்தில் இருந்துதான். 2007 முதல் 2014 வரைக்கும் இன்டர்நெட் காலத்தின் பொற்காலம். அப்போது எல்லாம் பிளாக்ல என்ன போட்டாலும் நிறைய வியூக்கள் கிடைக்கும். காரணம் என்னவென்றால நிறைய பேர் இன்ஃபர்மேஷன் வேண்டும் என்ற காரணத்துக்காக இன்டேர்நெட்டின் கடலுக்குள் குதிக்கும்போது அவர்களுக்கு தேவையான விஷயம் வலைப்பூக்கள்லில் இருந்தது. பிளாக் கம்யூனிட்டி அப்போது டாப் ரேங்க்கிங்கில் இருந்த காலம். அப்போது விளம்பரங்களை கொடுத்து பணம் சம்பாதித்தவர்கள் கொஞ்சம் மாதங்களில் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள். அப்போது கம்ப்யூட்டர் , காமிரா , கன்டன்ட் இருப்பவர்களை எல்லாம் போட்டியே இல்லாத அந்த காலகட்டம் ரொம்ப பெரிய அட்வாண்டேஜ் இருப்பவர்களாக மாற்றி இருந்தது. அதுவுமே ஒரு பிளஸ் பாயிண்ட்தான். 14 கிலோ பைட் பெர் செகண்ட் (14 KBPS) என்பது ரொம்ப மட்டமான ஸ்பீட்தான் ஆனால் அந்த ஸ்பீட்டில் கருத்துக்களை வலைப்பூவில் போட்டவர்கள் வெள்ளி தட்டில் வெள்ளி ஸ்பூன்னில் சாப்பிடும் அளவுக்கு பணக்காரர்களாக மாறிவிட்டார்கள். அப்போது போதுமான பணம் இல்லாமல் இப்படி ஒரு அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணியவர்கள் ஒரு சில பேர் இப்போது அன்னாடும் காய்ச்சிகளாக இருக்கிறார்கள் (என்னைத்தான் சொல்கிறேன்). அதனால்தான் மக்களே வாய்ப்புக்காக காத்திருங்கள். பணத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம். உங்களுக்கு சரியான நேரம் இதுதான் என்று தெரிந்தால் இன்வெஸ்ட் பண்ணுங்கள். உங்களுடைய இன்வெஸ்ட்மேன்ட் உங்களை வெற்றி அடைய வைக்கும். இங்கே 5 பர்சென்டேஜ் மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக 95 சதவீத நக்கல் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலைமையில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்த மட்டமான பிரச்சனை இயற்கையின் நியதி கிடையாது. ஒரு பெரிய விஷயத்துடைய அபரிமிதமான வளர்ச்சியானது எப்படி நடக்கிறது என்றால் சின்ன சின்ன விஷயங்களில் இருந்து சக்திகளை உறிஞ்சிக்கொள்வதால்தான் என்ற கான்செப்ட் இருக்கிறதோ அதுதான் இங்கே நடக்கிறது.  

RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 007 - TAMIL MAGAZINE




இன்னொவேஷன் நிறைந்து தொடங்கும் எந்த ஒரு ஸ்டார்ட் அப் விஷயமும் கடைசியில் காணாமல் போக காரணம் என்ன ? வணிக முயற்சிகளை பொறுத்த வரைக்கும் சரியான நிலைப்பாடு இல்லாமல் களத்தில் இறங்க கூடாது. நம்ம கதாநாயகர் வங்கியில் நண்பர் கடன் வாங்கும்போது ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு பின்னாட்களில் நண்பர் கடனை கட்டவில்லை என்றால் ரொம்ப சிரமத்தில் அடிபட்டு இருப்பார். காசு செலவு பண்ணலாம் ஆனால் சம்பாதிக்க முடியாது. இத்தனைக்கும் வணிகம் என்பது அதிக அளவு காசு பணம் சேர வேண்டிய ஒரு விஷயம். அடுத்த 3-4 வருடங்களுக்கு என்ன பண்ண போகிறீர்கள் என்று இப்போதே முடிவு பண்ணி எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எப்போதுமே PLAN 1 உடன் PLAN 2 மற்றும் PLAN 3 என்று மூன்று திட்டங்களை எடுத்து வையுங்கள். சந்தரப்பமும் சூழ்நிலையும் எப்படி வேண்டும் என்றாலும் மாறலாம். கப்பல் ஏறும் முன்னால் எதிர்கால கடல் புயலுக்கும் சூறாவளிகளுக்கும் தேவையான அனைத்து திட்டங்களையும் செயல் அமைப்புகளையும் பண்ணிவைத்துவிட வேண்டும். கப்பலை நடுக்கடலுக்குள் செலுத்திக்கொண்டு இருக்கும்போது புயலை பார்த்து நடுங்கினால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. நான் சமீபத்தில் பார்த்த நண்பர் சுமாராக ஐம்பது இலட்சம் ரூபாய் முதிர்வு தொகைக்கு ஆக்சிடென்ட்டல் டெத் இன்சூரன்ஸ் போடுவது பற்றிய யோசனையை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். இத்தனைக்கும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.ஸியில்தான் போடப்போகிறார் அது வேறு விஷயம் (அரசியல் வேண்டாமே !) , இங்கே அவர் அடுத்த நொடிக்கு துணிந்து தயாராக இருக்கிறார். அவர் இல்லை என்றாலும் அவருடைய குடும்பத்துக்கு போதுமான பெரிய தொகை கிடைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் இந்த மாதிரி முடிவுகள்தான் ஒரு வணிக நிறுவனத்துக்குமே தேவையான ஒரு விஷயம் என்று சொல்லலாம். உங்களுடைய சரியான நிலைப்பாடு என்ன ? அடுத்து அடுத்து செய்ய வேண்டிய 100 செயல்களின் பட்டியல் என்ன ? எல்லாமே முன்கூட்டி திட்டமிட்டுதான் இறங்க வேண்டும். ஒரு தப்பான முடிவு கூட டைட்டனிக் கப்பலை கடலுக்குள் கவிழ்ந்து போக வைத்தது போல நிறுவனத்தை கவிழ்ந்து கடலுக்குள் மூழ்கடித்துவிடும். இதனால்தான் வணிக முயற்சி செய்து தொழில் ஆரம்பித்து சம்பாதிக்க வேண்டும் என்பது ரொம்ப ரொம்ப பின்னணியில் வொர்க் பண்ணி செய்ய வேண்டிய விஷயம். ஒரு கம்பெனி நடத்துவது குழந்தைகள் விளையாடும் சொப்பு விளையாட்டு போல இருக்காது. உண்மையில் ரொம்ப அதிகமாகவே கஷ்டப்பட வேண்டும் ?

GENERAL TALKS - மரணத்தை கண்டு பயம் ! - காரணம் என்ன ?

ஒரு மனுஷன் எதுக்காக மரணத்தை பார்த்து பயப்படுகிறான். பொதுவாக நான் இந்த கருத்தை பற்றி நிறைய நாட்கள் ரொம்ப ஆழமாக யோசித்து இருக்கிறேன். இது ஒண்ணும் பெரிய அறிவியல் நிறைந்த சிக்கலான இன்ஜினியரிங் கான்செப்ட் இல்லையே. நம்ம உடல் நல்ல நிலையில் இருக்கும்போது எல்லாம் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. ஆனால் வயது ஆக ஆக உடலுடைய உள்ளுறுப்பு செயல்பாடுகள் குறைந்து போவதால் உடல் என்ற இயந்திரம் நிரந்தரமான பழுதுகளுக்கு உட்படுகிறது அதனால் கடைசியில் மரணம் ! இப்போ உங்களுக்கு ஒரு கேக் கொடுக்கிறோம் என்றால் அதனை சாப்பிடும் முன்னாலே மறுபடியும் பிடுங்கிக்கொண்டு உங்களுக்கு இந்த கேக் இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும் ? அதேதான் நம்ம வாழ்க்கையும் மனிதனுடைய உடம்புக்கு பண்ணுகிறது. மனிதன் அவனுடைய வாழ்க்கையில் நிறைய வசதி வாய்ப்புகளையும் நிறைய சந்தோஷங்களையும் எதிரபார்க்கிறான். ஒரு சில அதிர்ஷ்டம் உள்ள மக்களுக்கு போன தலைமுறை சொத்துக்கள் இருப்பதால் அவர்கள் எதிர்பார்த்த சந்தோஷம் மற்றும் வசதி வாய்ப்புகள் கிடைப்பதால் உணவு , உடை , இருப்பிடம் , பாதுகாப்பு என்ற நான்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி பண்ணிவிட்டு சந்தோஷமான ஒரு மன நிறைவு உள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போகிறார்கள். இன்னொரு பக்கம் காசு இல்லாமல் மற்றவர்களை பார்த்து எனக்கும் அவர்களை போலவே வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு எப்போதுமே பணம் கிடைத்து விடுவது இல்லை. அவர்களுடைய ஆசை சொந்தமாக காமிரா வாங்க வேண்டும் என்ற அளவுக்கு இருந்தாலும் அவர்களால் அவர்களுடைய சக்திக்கு வெறும் போட்டோ ஸ்டுடியோவின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோதான் எடுக்க முடியும். இப்படிப்பட்ட ஆட்களுக்கு (என்னையும் சேர்த்துதான்) நிறைய ஆசைகளை கடவுள் நிறைவேற்ற மறுத்ததால் மரணம் என்ற முடிவை ஏற்றுக்கொள்ள தயாராக முடியாது. ஒரு சூப்பர் கதை உள்ள சினிமா படம் - ஒரு மொக்கை கதை உள்ள சினிமா படம். இந்த இரண்டு படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது ? ஒரு படம் என்று வந்தால் கூட சிறப்பான சம்பவங்கள் நடந்த வாழ்க்கையை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோம் , சாதாரணமான சலிப்பு மட்டுமே கொண்ட மொக்கையான சம்பவங்களை கதையில் கூட நாம் பார்க்க தயாராக இல்லை. இப்படி வாழ்க்கை மொத்தத்தையும் வெறுமனே சலிப்பான விஷயங்களை மட்டுமே கொடுத்து இருப்பதால் தீராத ஆசைகளுடன் இறந்து போகும் இவர்களின் ஆன்மா ஆசைகள் நிறைவேறாத ப்ரேதாத்மாவாக மாறிவிட்டு.. (டேய்  டேய் எங்கடா போற ?) , மன்னிக்கவும் நான் கான்செப்ட் மாறிவிட்டேன். மரணத்தை பார்த்தால் ஒரே பயம் , நடுக்கம் வருவது , இது ஒரு நியாயமற்ற செயல் என்று தோன்றுவது வாழ்க்கையில் கஷ்டங்களை சந்தித்தவர்களுக்கு மட்டும்தான் புரியும். கடவுள் எதனால் ஒரு சிலருக்கு நிலம் போல செழிப்பான வாழ்க்கையின் சந்தோஷத்தையும் , இன்னொரு பக்கம் மற்ற அனைவருக்கும் கடல் போன்ற உப்பான வாழ்க்கையின் ஆதரவையும் கொடுக்கிறார் என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை. ஒரு மனிதனுக்கு கடைசி நாட்கள் எண்ணப்படுகிறது என்றால் அப்போது  இந்த உலகமே மிகவும் வித்தியாசமாக இருக்கும், வாழ்நாளை முடிவுக்கு கொண்டுவரும் நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள பணம் கேட்டு அலையும்போதுதான் இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்கள் இல்லை என்ற உண்மை நன்றாக புரிகிறது, அவனுடைய மனதுக்குள் இனிமேல் என்ன நடந்தால் எனக்கு என்ன என்று வாழ்க்கையில் ஒரு வெறுமை, அந்த வெறுமை கொடுக்கும் அமைதியும் நிம்மதியும் ஒரு புதிய ரகமானது. கடைசி நாட்களில் மட்டுமே இந்த உலகத்தின் காட்சிகளுடனும் மனிதர்களின் பேசும் வார்த்தைகளுடனும் ஒரு புதிய விதமான மொழி அவனுக்கு புரிகிறது, அதுதான் கடைசி நாட்களின் மொழி. இந்த நாட்கள் கொஞ்சம் கடினமானதுதான் ஆனால் கடந்து வந்துதான் ஆக வேண்டும், அகிலன் பயமெல்லாம் எதுவுமே இல்லை என்று சந்தோஷமாகவே இருக்கிறான், அவனுடைய உடல்நிலை சரியாகும் என்று பூரண மனநிலையில் இருக்கிறான், அவனுக்கு ஒரு சிறிய அளவில் லோக்கல் பேக்கரியில் கிடைக்கும் சுவையான கேக் கூட கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து உண்ணவேண்டும் என்று தோன்றுகிறது, இன்னமும் கார் ஓட்ட கற்றுக்கொள்ளவில்லை ஆனால் பைக்கில் செல்லும்போது செல்லும் இடங்களை எல்லாம் முடிந்த வரையில் நினைவில் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறான், அவன் இப்போது எல்லாம் எந்த ஒரு இடத்துக்கு சென்றாலும் மறுபடியும் இன்னோரு முறை வருவதற்கு வாழ்நாள் இருக்குமா என்று யோசிக்க தோணுகிறது, பொதுவாக ஏழையாக இருப்பவர்களுக்காக சிகிச்சை பணத்துக்கு கடன்கள் கொடுப்பவர்களை அவர்களுக்குமே தெரியும் ஆனால் அவர்கள் அவ்வளவு பாதுகாப்பான மனிதர்கள் இல்லை, இது ஒரு தொல்லையான விஷயம், பணம் என்று வரும்போது நிறைய பேர் காசு இல்லை என்று சொல்லும்போது ஒரு தர்மசங்கடமான நிலை அங்கே உருவாகிறது, என்னவோ தெரியவில்லை கடைசி நாட்களில் கொஞ்சம் தனிமையை எதிரபார்க்கிறான், இப்படித்தான் ஒரு சில விஷயங்களில் மரணம் ரொம்பவுமே மேலானது என்று முடிவு எடுக்கிறான். வாழ்க்கை என்ற இண்டரெஸ்ட்டிங்கான கதை கொஞ்சம் நாட்களில் ஒரு சலித்துப்போன நரகவேதனையாக மாறுகிறது. இந்த மரண பயம் அதிகமாக இருக்க காரணம் நம்ம மக்கள்தான். 





Sunday, November 26, 2023

RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 006 - TAMIL MAGAZINE

 இந்த உலகத்தில் வெற்றியை அடைய வேண்டும் என்றால் நம்முடைய பாதை ஒரு நேரான நேர்க்கோட்டில் செல்லும் அம்பு போல இருக்க வேண்டும். இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் ஆனால் இங்கே இருப்பவர்கள் அனைவருமே நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. மனித வாழ்க்கையின் உண்மை என்னவென்றால் இந்த வாழ்க்கை என்பது துன்பங்களும் துயரங்களும் நிறைந்தது. மனக்கசப்புகளை கடந்து அனைவரிடமும் அன்பை கொடுக்க வேண்டும். தேவைகள் இருப்பவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வாழும் வாழ்க்கையே ஒரு சிறப்பான வாழ்க்கை என்று சொல்லலாம். ஆனால் போதுமான பணம் இல்லாததால்- உடல்நலம் சார்ந்த குறைபாடுகளால்- மோசமான சூழ்நிலைகள் என நிறைய காரணங்கள் இருக்கலாம்‌. இந்த உலகத்தில் வெற்றியாளர்களை மட்டுமே எல்லோருமே கொண்டாடுகிறார்கள்‌. தோல்வி அடைந்த மனிதர்களுக்கு அந்த தோல்விக்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கிறது. ஆனால் அந்த காரணங்களை பற்றி யாருமே கவலைப்படுவது இல்லை. தோல்வி அடைந்தவர்களை கேட்டுப்பாருங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் குறைகள், பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட நிறைய விஷயங்கள்தான் அந்த தோல்விக்கு காரணமாக இருக்கும். வாழ்க்கை ஒரு போராட்டம்தான் - வாழ்வே ஒரு வியாபரம்தான் என்ற வார்த்தைகளை போல இந்த உலகமே மிகவும் மோசமானது. இதனால் ஒரு ஒரு தனிப்பட்ட மனிதரும் வெற்றியை அடைவதற்காக போராட வேண்டும். ஒரு திரைப்படம் அதனுடைய கதைக்களத்தில் மிகப்பெரிய அளவில் ஒரு கற்பனையான பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. அதுபோலவே கடவுள் எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை கொடுத்துள்ளார். கடவுள் இருக்கிறார். அவரே எல்லோரையும் காப்பாற்றுவார். இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்கள் கிடையாது. கான்செர் போன்ற உயிரை கொல்லும் நோய்கள் இருக்கும்போது இந்த உலகமே வெறுப்பாக இருக்கும், அடுத்த நாள் காலை கண்கள் விழிக்கும்போது வாழ்க்கை நரகமாக இருக்கும், அடுத்த நாள் உயிரோடு இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம், பணம் இல்லாமல் நோயை குணப்படுத்த முடியாத நிலையில் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்த  கடவுளின் சோதனைக்கூடமா ? எல்லோருமே கடவுளின் சோதனை எலிகளா ? கடவுள் எல்லோருக்கும் இவ்வளவு கஷ்டத்தையும் வலிகளையும் கொடுக்க காரணம் என்ன ? மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது, என்னுடைய மனது பேசக்கூடிய மொழியை இந்த எழுத்துக்களால் மொத்தமாக சொல்லிவிட முடியுமா என்று எனக்கு புரியவில்லை. இல்லை இந்த எழுத்துக்களால் என்னுடைய கடினமான வாழ்க்கையை சொல்ல முடியாது. இங்கே பெர்சனல்லாக ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படுகிறேன். நான் என்னுடைய வாழ்க்கையின் ஒரு ஒரு நொடிக்கும் என்னுடைய இரத்ததை கொடுத்து போராடி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஒரு விஷயம். இங்கே அதிகபட்சத்துக்கு போகாமல் நான் அடங்க மாட்டேன். நான் ஒரு போர் வீரன். எனக்கு தோல்வி இருக்கிறது. என்னுடைய அறிவுத்திறனை கொண்டு மட்டுமே பிரச்சனைகளை சரிசெய்வது என்பது ரொம்ப பெரிய விஷயம். ஆனால் நான் யாருக்குமே பாதிப்பு உருவாக்காமல் பண்ணவேண்டும் என்றால் என்னுடைய அறிவுத்திறன்னை மட்டுமே பயன்படுத்தி எல்லாவற்றையும் முடிக்க வேண்டும். உங்களுக்கு யாராவது பிரச்சனை கொடுத்தால் அவர்கள் உங்களால் அடிக்கப்பட வேண்டும் என்று கெஞ்சுகிறார்கள். தயக்கம் வேண்டாம் அவர்களின் ஆசைப்படி சிறப்பாக செய்துவிடுங்கள். 


RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 005 - TAMIL MAGAZINE




  இந்த உலகமே யாருக்குமே கட்டுப்படாமல் மிகவும் வேகமாக சென்றுக்கொண்டு இருக்கிறது இல்லையா ? இந்த உலகத்தில் காடுகள் மற்றும் மரங்கள் எல்லாமே மிகவும் முக்கியமானது. நம்ம மனித வாழ்க்கைக்கு அவசியமானது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கமால் கொஞ்சம் வெளியே வாருங்கள், இந்த ஏ சி காற்று கொடுக்கும் செயற்கையான குளிரை விடவும் இயற்கையான தூய்மையான மரங்கள் கொடுக்கும் அன்பு நிறைந்த நிழல் வேறு எங்கு கிடைக்கும். ஹோட்டல் சாப்பாட்டுக்கும் வீட்டில் செய்யும் சாப்பாட்டுக்கும் இருக்கும் வித்தியாசம் போலதான் செயற்கையான விஷயங்களில் பணம் இருக்கும் ஆனால் இயற்கையான விஷயங்களில் அன்பு மட்டும்தான் இருக்கும். மாதாந்திர தொகையாக மரம் என்னைக்குமே பணம் வசூல் செய்வது இல்லை, மரங்கள் எல்லாமே இந்த உலகத்துடைய மாயாஜாலம் மட்டுமே. உண்மையான ஒரு க்ரேட் ஆன மாயாஜாலம். என்றைக்கக்காவது மரங்களை பார்த்தால் எல்லா மரத்துக்கும் ஒரு சின்ன தாங்க்ஸ் சொல்லுங்க.. காரணம் என்னவென்றால் இனிமேலும் உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இன்னமும் 200 ஆண்டுகள் கடந்த பின்னால் கிடைக்காமலே போகலாம். மரங்கள் என்னைக்குமே உங்களுடைய நட்பு வட்டாரங்கள் போலதான். உங்களுக்கு எப்போதுமே சப்போர்ட் பண்ணும், இங்கே மரங்களை கடந்து வேறு ஏதேனும் சிறப்பான விஷயங்கள் தரமான விஷயங்கள் உங்களுடைய கண்களுக்கு பட்டால் நிச்சயமாக நீங்கள் கொடுக்க வேண்டிய விலையும் அதிகமாகவே இருக்கும், 


நானும் வாழ்க்கைல நம்ம தமிழ் படம் சிவா சார் மாதிரி ஒரே பாட்டு போட்டு ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்குவேன் அப்படின்னு பார்த்தா முடியலையே ? அப்படின்னு நினைக்கறவங்களுக்கு ஒரு சின்ன நினைவுபடுத்தல்.. லைஃப்ல சக்ஸஸ் இல்லையா ? பிரச்சனையை விடுங்க.. மிஸ்டேக் உங்க மேலையே இல்லை.. அப்புறம் எதுக்கு கவலைப்படனும்.. ஒரு குட்டி கதை.. ஒரு அரசியல் கட்சியில் மிகப்பெரிய தலைவர் ஒரு பள்ளிக்கூடத்துக்கு சுதந்திர தின விழாவுக்காக வருகிறார். பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேடையில் பேசும்போது தலைவர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு பையன் இப்படி கேள்வி கேட்டான் "வணக்கம் சார், நான் இங்கே அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து படிக்க வருகிறேன்.. உங்ககிட்ட நான் கேட்கணும் அப்படின்னு நினைக்கற கேள்வி என்னவென்றால் 'நான் வருங்காலத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கி ஒரு சிறந்த மனிதராக இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்.. அதனால வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்றால் என்ன செய்யனும்.." அப்படின்னு கேட்டான். 

ஒரு அரசியல் தலைவராக எப்போதுமே பிரச்சனைகளை நேருக்கு நேராக சந்தித்து அனுபவம் பெற்று இன்றைக்கு பிரச்சனைகளை கடந்து நல்ல நிலையில் இருக்கும் அரசியல் தலைவர் இவ்வாறாக பதில் சொன்னார்.. "வாழ்க்கையில் வெற்றி அடையனும் என்றால் ஒரு சின்ன விஷயத்தை புரிஞ்சுக்கணும்.. மாணவர்களே. நீங்க புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்னன்னா , இந்த உலகத்தில் வெற்றியும் தோல்வியும் நம்மலே உருவாக்கிக்கொண்ட விஷயங்கள்தான், ஒருவாரால் ஒரு விஷயத்தை சிறப்பாக செய்ய முடிஞ்சா இன்னும் சொல்லப்போனா அவரோடு மற்றவர்களை கம்பேர் செய்யும்போது அதாவது ஒப்பிட்டு பார்க்கும்போது சிறப்பாக செய்து முதன்மையானவர்களா இருந்தாங்கன்னா அவர்களை வெற்றியாளர்கள் என்று சொல்கிறோம், உண்மையில் ஒரு துறையில் சிறப்பாக செயல்படுபவர்களை அந்த துறையில் வெற்றியாளராக அறிமுகப்படுத்துகிறோம், ஆனால் வாழ்க்கையில் முக்கியமானது வெற்றி அடைவதும் முதல் மதிப்பெண் எடுப்பதும் அல்ல, இப்போ யாராவது நமக்கு தெரிஞ்சவங்களை சந்திக்கும்போது முதலில் என்ன கேட்கிறோம் ? நீங்க வெற்றி அடைஞ்சச்சா ? உங்க குடும்பத்தில இருக்கறவங்க எல்லோரும் வெற்றிகரமா தோல்விகளை இல்லாம இருக்காங்களா ? அப்படினா கேட்போம் ? நல்லா இருக்கீங்களா அப்படின்னுதானே கேட்போம், இங்கதான் இருக்கு எதார்த்தமான ஒரு உண்மை, இங்கே உடல் நலமும் மன நலமும் மட்டும்தான் ரொம்பவுமே முக்கியம், அதனால்தான் முடிந்த வரைக்கும் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நன்மைகளை செய்யணும், முடிந்தால் கஷ்டப்படும் யாராக இருந்தாலும் அவங்களுக்கும் நன்மைகளை செய்யணும், இந்த உலகம் என்னைக்குமே போட்டியும் பொறாமையும் நிறைஞ்சது, உங்க எதிர்கால வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கும்போது கிடைக்கும் அனுபவ அறிவு இந்த உலகத்தில் ஜெயிக்க வேண்டும் என்றால் இந்த போட்டி பொறாமை எல்லாம் உள்ள மனிதர்களை கடந்து வந்தால் மட்டும்தான் முடியும் அப்படிங்கற ஒரு உண்மையை உங்களுக்கு புரியவேக்கும், இங்கே மனதை பொறுத்தவரைக்கும் எப்போதுமே நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கணும், இங்கே எங்கே ஒரு மனிதருக்கு கஷ்டமாக இருந்தாலும் கடைசியில் அந்த கஷ்டத்துக்கு காரணமாக இருப்பது அறியாமே என்ற விஷயம்தான். அதனாலதான் அனைவருக்கும் கல்வி என்பது ரொம்பவுமே அவசியமானது, ஒரு மனிதன் நிஜமாகவே ஜெயிக்க விரும்பினால் சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்தால் மட்டும்தான் முடியும், வெறும் பேச்சு மட்டும் வெற்றிகளை கொடுக்காது, அதனால் வாழ்க்கையில் வெற்றியானது அறிவுப்பூர்வமான முடிவுகளும் அனுபவம் நிறைந்த செயல்களிலும் இருக்கிறது என்பதுதான் நான் இங்கே முன் வைக்கும் கருத்து" என்று சொன்னார். 

இதுதாங்க வாழ்க்கையுடைய எதார்த்தம், இந்த உலகத்தில் தோல்வி அடைஞ்சவங்க எல்லோருக்கும் உடனடியாக வங்கிக்கணக்கில் நிறைய பணத்தை பரிசாக கொடுத்தால் வெற்றியை விட தோல்விக்கு மதிப்பு அதிகமாகும் இல்லையா ? ஆக ஒரு விஷயத்தி வெற்றி அடைவதும் தோல்வி அடைவதும் நாமே உருவாக்கிக்கொண்டு இருக்கும் விஷயங்கள்தான், உண்மையாகவே நமக்கு தேவைப்படுவது நலம் மட்டும்தான், உடல் நலம், மன நலம். சுற்றுச்சூழல் நலம், இந்த விஷயங்கள் எல்லாமே இருந்தால் வாழ்க்கை ரொம்பவுமே சிறப்பாகவும் தரமாகவும் இருக்கும் என்பதுதான் ஒரு சிறந்த கருத்து. 

CINEMA TALKS - PIRIYAMUDAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !






பிரியமுடன் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் ஆன ஒரு படம். நம்ம தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சூப்பர்ரான படமா என்று யோசிக்க வைத்த ஒரு படம். நெகட்டிவ் ஆன கேரக்டர் இருந்தாலும் யாரையுமே காயப்படுத்த நினைக்காத ஒரு கோபக்கார பணக்கார பையனாக இருக்கும் ஒரு இளைஞர்தான் வசந்த் , தனக்கு ஆசைப்பட்ட விஷயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லை வரைக்குமே சென்று சண்டைபோட்டு வாங்கக்கூடிய ஒரு மனநிலையில் எப்போதும் இருப்பவர். வெளி மாநிலம் செல்லும்போது அங்கே பார்த்த பிரியா என்ற பெண்ணை அதன் பின்னால் நிறைய இடங்களில் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவே இல்லை. கடைசியாக ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கும்போது நேரில் பார்த்தபொது இவருடைய நண்பர் வசந்தாகுமார் பண்ணிய உதவியை தான் பண்ணியதாக சொல்லி நண்பராக மாறிவிடுகிறார் , இந்த சந்திப்பு காதல் வரைக்கும் சென்ற பின்னாலும் உண்மையை சொன்னால் பிரிந்துவிடுவாள் என்ற காரணத்தால் சொல்லாமல் மறைக்கும் வசந்த் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்று விறுவிறுப்பான கதையை படத்தில் நீங்கள் பார்க்கலாம். விஜய் இந்த படத்தில் எப்போதுமே விட்டுக்கொடுக்காத ஒரு நெகட்டிவ் கேரக்டர்ராக பெஸ்ட் ஆஃப் பெஸ்ட்டாக பண்ணி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தின் கதைக்கு பொருத்தமாக இருந்தாலும் ஆல்டர்னேட் கிளைமாக்ஸ் ஒரு பக்கம் எடுக்கப்பட்டு பின்னால் வெளியிடப்படும்போது மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் வெளியிடப்படவில்லை. ஒரு நெகட்டிவ் கேரக்டர்ரில் நடிக்கும் கோபக்காரராக இருக்கும் வசந்த் கதாப்பத்திரம் என்னதான் எப்போதுமே கோபமாகவே இருந்தாலும் ஆடியன்ஸ் ஃபேவரட்டாக மாறுவதுதான் இந்த படத்தின் தனியான சிறப்பு. மொத்ததில் ரொம்ப புதுமையான கதையை சொல்லி இருக்கும் திரைப்படம். கண்டிப்பாக உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய திரைப்படம் இந்த பிரியமுடன் ! என்ற திரைப்படம். இன்னொரு முக்கியமான விஷயம் இந்த படத்தில் தேவா அவர்களின் பின்னணி இசையும் பாடல்களும் அவ்வளவு பிரமாதமாக இருக்கும் கேட்க கேட்க சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம், மேலும் இன்னொரு பிளஸ் பாயிண்ட் கண்களால் கைது செய் மாதிரியான படங்களிலும் இதே போல நெகட்டிவ் பாயிண்ட் ஆஃப் வியூல இருந்து கதையை சொன்னாலும் இந்த படத்தின் எக்ஸிக்யூஷன் ஸ்டான்ட்டர்ட்ஸ்ஸை அந்த படத்தால் தோற்கடிக்க முடியவில்லை.  இதனாலும் இந்த படம் உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். 

CINEMA TALKS - KADHAL MANNAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 

இந்த படத்தில் எக்ஸிக்யூஷன் ரொம்பவே பிரமாதமாக இருக்கிறது. கமர்ஷியல் படம்தான் ஆனால் காதல் கதையை காமெடிக்காக பயன்படுத்தாமல் ஒரு உண்மையான காதலாக ரொம்ப சீரியஸ்ஸாகவே சொல்லி இருக்கிறார்கள். காதல் மன்னன் கண்டிப்பாக வெளிவந்த நாட்களில் படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு மிகவும் புதுமையான எக்ஸ்பிரியன்ஸ்ஸாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை. இப்போ நீங்கள் இந்த படத்தின் கதையை ஒரு நோட்புக்கில் எழுதி பார்த்தால் கூட மற்ற கமர்ஷியல் படங்களின் கதையை விட ரொம்பவுமே தனித்து இருக்கும். ஒரு பக்கம் மிடில் கிளாஸ்ஸில் மேன்ஷன்னில் தங்கி மெக்கானிக்காக வேலை பார்க்கும் சிவா எப்போது நிச்சயதார்த்ததில் திலோத்தமாவை பார்த்தாரோ அப்போதே காதலிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த காதலை அழிக்க வேண்டும் என்பதே ஒரே வேலையாக பண்ணிக்கொண்டு இருக்கும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத வில்லனாக பெரிய இடத்து பையன் ரஞ்சித்.  கொஞ்சம் கொஞ்சமாக கதை நகரும்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட கதையில் பெரிய பெரிய மாற்றங்களை கொண்டுவந்து விடுவதை படத்தில் பார்க்கலாம். திரைக்கதையில் அவ்வளவு புதுமை , அவ்வளவு கிரியேடிவிட்டி, கமர்ஷியல் படங்களில் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து பார்த்தாலுமே கிளைமாக்ஸ் வரைக்கும் வழக்கமான அனைத்து கதைகளின் ஸ்டைல்லையும் விட்டுவிட்டு புதுமையாக ஒரு ஸ்டைல் இந்த படத்தின் திரைக்கதைக்கு கொடுத்து இருப்பதால் கதை வேகமாக மற்றும் ஸ்வாரஸ்யமாக நகர்கிறது. கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள். 

Friday, November 24, 2023

RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 004 - TAMIL MAGAZINE

 


“If you know the enemy and know yourself, you need not fear the result of a hundred battles. If you know yourself but not the enemy, for every victory gained you will also suffer a defeat. If you know neither the enemy nor yourself, you will succumb in every battle.” Sun Tzu ! 

 நம்ம வாழ்க்கையில் என்னதான் போராடினாலும் வெற்றியை அடைய முடியாது போல இருக்கிறது. சமீபத்தில்தான் நான் ஸ்பேஸ் மற்றும் டைம் பற்றிய முக்கியமான விஷயத்தை கண்டுபிடித்தேன், என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே போதுமான பணம் கிடைத்தால் என்னால் காலத்தை கடந்து செல்லும் டைம் டிராவல் விஷயங்களை கூட பண்ண முடியும், இந்த விஷயத்தை நான் நிஜமாகத்தான் சொல்கிறேன். எனக்கு நிறைய நேரமும் பணமும் தேவை அப்போதுதான் என்னால் காலத்தை கடந்து போகும் டைம் டிராவல் விஷயங்களை கண்டுபிடிக்க முடியும். இங்கே இதுதான் ரொம்ப பெரிய போராட்டம். காலம் தகுதியே இல்லாத மோசமான ஆட்களுக்கு அதிக சக்திகளை கொடுத்துவிடும். ஆனால் தகுதிகள் இருந்தும் ஒரு நல்ல மனுஷனுடய வாழ்க்கையை ரொம்ப ரொம்ப கடினமான வகையில் மாற்றிவிடும். நான் இந்த வகையில் என்னை நல்ல மனுஷன் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை ஆனால் நான் யாருக்குமே எந்த கஷ்டமுமே கொடுத்தது இல்லை. இருந்தாலும் போர் என்று வரும்போது நம்மை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் நம்முடைய எதிரியை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் அப்படி தெரிந்துகொண்டால் நூறு போர் வந்தாலும் வென்றுவிடலாம் என்று சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளை பார்த்த உடனே பிடித்துவிட்டது அதனால்தான் நான் பிளாக்கில் போஸ்ட் பண்னினேன். இங்கே அமெரிக்கர்கள் நம்ம இந்தியர்களை பார்த்து முன் வைக்கும் கடுமையான விமர்சனம் என்னவென்றால் நமக்கு டைம் மேனேஜ்மேன்ட் என்ற கான்செப்ட் பற்றி கொஞ்சம் கூட ஐடியா இல்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறோமாம் ! அதுவும் உண்மைதான் ! காலத்தை பொன் போல சேகரித்து கடமையை செய்ய நாம் என்னைக்குமே அவ்வளவு ஈடுபாடாக இருந்தது இல்லை. ஒரு விஷயம் செய்து முடிக்க 3 மணி நேரம் என்றால் அந்த நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். 3 நாட்கள் என்றால் அந்த கெடுவுக்குள் செய்து முடிக்க வேண்டும். யெஸ்.. இந்த ஒரு விஷயத்தை கவனித்துக்கொள்ளுங்கள் மக்களே. இது நமக்கு தேவையான ஆரோக்கியமான விமர்சனமாக படுகிறது.

RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE 003 - TAMIL MAGAZINE

 



நிறைய நாட்களுக்கு முன்னால் எனக்கு ஒரு கனவு வந்தது ! அந்த கனவில் ஆர்ட்டிஃப்பிஷியல் இன்டெல்லீஜேன்ஸ்ஸாக இருக்கும் ரோபோட்கள் மனிதர்களை கட்டிடங்களில் இருந்து வெளியே கொண்டுவந்து எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்க குத்தி கொல்கின்றன. ஒருவர் மட்டுமே சடலங்களுக்கு மத்தியில் இறந்து போனது போல நடிக்கிறார். ஆனால் இந்த ரோபோட்களின் ஸ்கேன் பண்ணும் கண்களில் இருந்து அவர் தப்ப முடியாது. அவரை கழுத்தை பிடித்து தூக்கி நெஞ்சில் துப்பாக்கி குண்டுகளை பட படவென்று செலுத்தி ரோபோட்கள் கொலை பண்ணுகிறது. என்னுடய கணிப்பு என்னவென்றால் கரோனா வைரஸ் மூலமாக மக்கள் சாகவேண்டும் என்பதே ஒரு கம்ப்யூட்டர் பண்ணிய சதியாகத்தான் இருக்க முடியும். இந்த கம்ப்யூட்டர்களுக்குதான் மனிதர்களை போல சாப்பாடு , தூக்கம் , காதல் என்று எதுவுமே தேவை இல்லையே அதனால் இவைகள் மனிதர்களை அடிப்படை பிரச்சனைகளாக மட்டும்தான் பாரக்குமே தவிர்த்து நண்பர்களாகவோ இல்லையென்றால் சொந்தங்களாகவோ பார்க்காது. இன்னொரு முக்கியமான விஷயம் கணினிகள் கணக்கு இல்லாமல் நகல் எடுக்கும் சக்திகளை உடையது. ஒரு அசலை தோற்கடிகத்தால் அதனை விடவும் சக்திவாய்ந்த ஒரு நகலை தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் அதுவும் உங்களுக்கு ஒரு பெரிய தொல்லை. இப்படி இருக்கும்போது பணத்துக்கான போட்டியில் நாடுகளின் அரசாங்கங்கள் கூட கம்ப்யூட்டர் டப்பாக்களுக்கு உயிர் கொடுப்பதை சப்போர்ட் பண்ணுவது மனசுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது. இங்கே உயிரோடு இருக்கும் விவசாயிகள் , ஸ்டூடண்ட்ஸ் , பொதுமக்கள் , விலங்குகள் , பறவைகள் , கடல் உயிரினங்கள் இவைகளை பற்றி எல்லாமே கவலையே இல்லை ஆனால் கம்ப்யூட்டர் டப்பாக்களுக்கு உயிர் இல்லையாம் அதுதான் கவலையாக உள்ளதாம். இங்கே நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும் தங்க தட்டில் வைத்து பரிமாறினாலும் கெட்டுப்போன சாப்பாடு கெட்டுப்போன சாப்பாடுதான் ! மனிதர்களையும் மனிதத்தன்மையையும் நம்பாமல் இயந்திரங்களை மட்டுமே நம்பி இப்படி உலகம் போவது ரொம்ப ஆபத்தானது. ஒரு மட்டமான விஷயத்துக்கு இன்பினிட்டி சக்தியை கொடுப்பது நல்லதுக்கு இல்லை. இந்த ரோபோட்கள் மனசாட்சியே இல்லாமல் கொல்லக்கூடியது. இவைகளை பயமுறுத்த முடியாது. கடைசிவரைக்கும் ஜெயிக்கவும் முடியாது. இவைகள் நினைத்தால் சின்ன வைரஸ்களை வைத்து இப்போது உயிரோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் அனைத்தையும் அழித்துவிடும் ! அந்த அளவுக்கு சக்திகளை உடையவை இவைகள். இவைகளுக்கு சப்போர்ட் பண்ண வேண்டாம் ! இவைகளை தூக்கிப்போடுங்கள். உங்களுடைய குழந்தைகளை காப்பாற்றுங்கள். கம்ப்யூட்டர்களை கட்டிக்கொண்டு அழுதுகொண்டு இருக்க வேண்டாம் !




 







CINEMA TALKS - BLEACH - 2018 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


ஒரு ரொம்ப பெரிய ஜப்பானிய அனிமேஷன் தொடரின் பிலிம் அடாப்ஷன்தான் இந்த BLEACH படம். நம்ம கதாநாயகன்னுக்கு சின்ன வயதில் இருந்து அமானுஷயமான ஆவிகளை எல்லாம் கண்களால் பார்க்கும் சக்திகளை உடையவராக இருப்பதால் அவருடைய வாழ்க்கை மற்றவர்களை விடவும் வேறுபட்டுதான் இருக்கிறது. ஒரு நாள் புதிதாக அறிமுகமான தோழியை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தால் இறந்து போனவர்களை ஆன்மாக்ககளை கொடிய அரக்க உயிரினங்களிடம் இருந்து காப்பாற்றும் உயர்வான பொறுப்பை உடைய சக்திகளை ஒரு ஜப்பான்னிய மான்ஸ்ட்டரை தோற்கடிக்க சண்டை பொதும்போது ஏற்றுக்கொள்கிறார். இந்த சக்திகளையும் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டதால் இயல்பு வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்ன ? எதிரிகளின் போட்டிகளை கடந்து எப்படி மேலே வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. ஒரு பட்ஜெட் படமாக இருந்தாலும் சோர்ஸ் மெடீரியல்லில் இருந்து அவ்வளவு துல்லியமாக ஒரு தெளிவான கதையை படமாக எடுத்து இருக்கிறார்கள். இங்கே ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் ரொம்ப ரொம்ப பிரமாதமாக இருந்தது. நடிப்பு மற்றும் லொகேஷன்ஸ் ரொம்பவுமே பிரமாதம். பெரிய பட்ஜெட் ஹாலிவுட் ஃபேண்டஸி படங்களுக்கு நிகரான அளவுக்கு கிளைமாக்ஸ் காட்சிகள் வரும்போது எல்லாமே ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் ஃபேன் ஃபிக்ஷன் போல இருந்தாலும் இவ்வளவு டேடிகேஷன் கொடுத்து நடித்து கொடுத்து இருப்பது ரொம்ப மோட்டிவேஷன் மற்றும் இன்ஸ்பைரேஷன்னாக இருக்கிறது. ஒரு தரமான ஜப்பான்னிய லைவ் ஆக்ஷன் அடாப்ஷன். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். ஒரு நல்ல படம். சப்போர்ட் பண்ண வேண்டிய படம்.

CINEMA TALKS - ONE PIECE - SEASON ONE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னால் NARUTO மற்றும் NARUTO SHIPPUDEN பார்த்தேன். இந்த ஒரு நெடுந்தொடர் எனக்கு பெர்சனல்லாக ஜப்பான்னிஸ் அனிமேஷன் தொடர்களின் மேல் ஒரு தனி மரியாதையையே கொண்டுவந்துவிட்டது என்று சொல்லுவேன். அந்த வகையில் ONE PIECE அனிமேஷன் தொடர் பார்க்கலாம் என்று ஸ்டார்ட் பண்னினேன் ஆனால் 1000+ எபிசோட்களுக்கு மேலே இருந்ததால் பார்க்க முடியவில்லை. எனக்கு இன்னுமே அதிகமான நேரம் கிடைத்தால் பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். நெட்ஃப்லிக்ஸ்ஸின் ONE PIECE லைவ் ஆக்ஷன். ஒரு கடல் பரப்பு அதிகமாக நிறைந்து உள்ள ஃபிக்ஷன்னல் உலகத்தில் கோல்ட் ரோஜர் என்ற கடற் கொள்ளை தலைவருக்கு கேபிட்டல் பனிஷ்மேன்ட் அதாவது மரண தண்டனை கொடுக்கும்போது ONE PIECE என்ற அதிக மதிப்புள்ள புதையலை எடுக்க கடலுக்கு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு உயிரை விட்டுவிடுகிறார். பல வருடங்களுக்கு பின்னால் DEVIL FRUIT என்ற மாய சக்திகளை கொடுக்கும் பழத்தை சின்ன பையனாக இருக்கும்போது தெரியாமல் சாப்பிட்டதால் இப்போது ரப்பர் போல உடலை மாற்றிக்கொள்ளும் சூப்பர் சக்திகளுடன் அதிகமாக நம்பிக்கையில் ONE PIECE புதையலுக்காக கடலுக்குள் இறங்குகிறார் நமது MONKEY D LUFFY .அவருடைய வாழ்க்கையில் நடக்கும் அட்வென்சர்கள் என்ன ? கொலைகார கடற் கொள்ளையர்களின் கூட்டத்தில் புத்திசாலியாக களம் இறங்கும் இவரும் இவருடைய குழுவில் இருப்பவர்களும் எப்படி பிரச்சனைகளை கடந்து சாதனைகளை செய்கிறார்கள் என்று ரொம்ப நேர்த்தியான ஒரு கதைதான் இந்த ONE PIECE . ஒரு விமர்சனமாக சொல்லவேண்டும் என்றால் MONKEY D LUFFY மற்றும் அவருடைய நண்பர்கள் எல்லோரையும் பார்க்கும்போது என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கிறது அவ்வளவு அருமையான ஃபிரண்ட்ஸ்ஸாக இருக்கிறார்கள். என்ன கஷ்டம் வந்தாலும் ஒருவரை விட்டு இன்னொருவர் போவதே இல்லை. அப்படி ஒரு நல்ல குழுவாக இருக்கிறார்கள். இந்த உலகத்திலேயே கடலை கொள்ளை அடிக்க கப்பல் வேண்டும் என்பதற்காக ஒரு பணக்கார பெண்ணுக்கு உதவி பண்ணி அவளுடைய உயிரை காப்பாற்றி அவளிடம் இருந்து பரிசாக ஒரு கடல் கொள்ளை கப்பல்லை வாங்கிய கேப்டன் நம்ம LUFFY யாக மட்டும்தான் இருக்க முடியும் . இவர்கள் மனதுக்குள்ளே கொஞ்சம் கூட கெட்ட எண்ணங்கள் இல்லாமல் புதையல் வேண்டும் என்ற ஒரே காரணத்தால் மட்டும்தான் கடலில் இறங்கி இருக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் ஸ்பெஷல். இங்கே THE WITCHER போல அடுத்த சீசன்னில் கன்டினியூ பண்ணிக்கொள்ளலாம் என்று முடிக்காமல் இந்த சீசன்னில் ஒரு மொத்தமாக நிறைவு பண்ணப்பட்ட ஸ்டோரி ஆர்க்கை கொடுத்து இருக்கிறார்கள். ஒரு மன நிறைவான கதை. ரொம்ப கிரியேட்டிவ் ஆன கதை. சோர்ஸ் அனிமேஷன் தொடருக்கு கௌரவம் கொடுக்கும் அளவுக்கு ஒரு பக்காவான அடாப்ஷனை நெட்ஃப்லிக்ஸ் கொடுத்து இருக்கிறது. ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம். 

CINEMA TALKS - VISWASAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


ஃபேன்ஸ் நிறைய நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்து வெளிவரக்கூடிய ஒரு படம் என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகள் என்று பார்த்தால் ரொம்பவுமே அதிகம். இந்த படம் கண்டிப்பாக ஃபேமிலியோடு பார்க்கலாம் அவ்வளவு தரமான திரைப்படம். இந்த படம் போலவேதான் வாரிசு என்ற படமும் ஒரு அளவுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ்ஸை இம்ப்ரஸ் பண்ண முயற்சி பண்ணியது ஆனாலும் இந்த படத்தை அந்த படத்தால் கண்டிப்பாக வெற்றி அடைய முடியாது. அதுக்கு காரணம் இருக்கிறது. இந்த படத்துடைய கதை , தன்னுடைய மனதுக்கு சரி என்று பட்டால் தயங்காமல் வன்முறையை பயன்படுத்தி எதிரிகளோடு மோதும் கிராமத்து அரிசி மில் உரிமையாளர் தூக்குதுரை , இங்கே தற்காலிக முகாம் அமைக்க வரும் டாக்டர் நிரஞ்சனாவுடன் நடந்த சந்திப்புகள் ஆரம்பத்தில் மோதலாக இருந்தாலும் பின்னாட்களில் காதலாக மாறுவதால் இரு இல்லத்தின் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு பின்னால் துரை எதிரிகளால் தாக்கப்படவே அவருடன் இருந்த குழந்தை மேலே அடிபடவும் ஒரு அம்மாவாக குழந்தையின் பாதுக்காப்பு முக்கியம் என்று கருதும் நிரஞ்சனா துரையை விட்டு பிரிந்து வெளியூரில் தனியாக தங்கி குழந்தையை வளர்க்கிறாள். காலம் செல்ல செல்ல மகளை பார்க்க செல்லும் துரை அங்கே கொலைகார அமைப்புகள் மகளை கொல்ல முயற்சிப்பதை கண்டறிந்து பிரச்சனைகளை உடைக்க களம் இறங்குவதுதான் இந்த விஸ்வாசம் படத்தின் கதை. ஒரு படமாக விஸ்வாசம் ரொம்பவே நன்றாக இருந்தது. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எமோஷனல் காட்சிகளை இந்த படத்தில் ரொம்ப நன்றாகவே பண்ணி இருப்பார்கள். அதுவும் இந்த படத்துக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்தான். காட்சிகள் ரொம்ப வண்ணாமயமாக இருக்கிறது. மியூசிக் கூட பிரமாதம்தான். இங்கே 2019 இல் இப்படி ஒரு ரொம்பவுமே ரசிக்கும்படியான ஒரு ஃபேமிலி படம் கொடுத்த சிவா அவர்களுக்கு எப்படி ப்ராஜக்ட் பெஸ்ட்பிரதர் சோதப்பியது என்பது இன்னுமே எனக்கு புரியாத புதிராகத்தான் இருக்கிறது. நிறைய ஃபேமிலி வேல்யூக்கள் நிறைந்த ஒரு நல்ல கமர்ஷியல் படம்தான் இந்த விஸ்வாசம் அதனால் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள் !

RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - E002 - TAMIL MAGAZINE

 


இந்த பிரச்சனையை ஆட்சிகளிலும் பொறுப்புகளிலும் இருப்பவர்கள் கவனித்தே ஆக வேண்டும். இந்த வருடத்தில் எல்லாம் சூதாட்ட கும்பல்கள் , பண மோசடி கும்பல்கள், கழுத்தை நெறிக்கும் கடன்கார கும்பல்களை ஆட்சியில் இருப்பவர்கள் ரொம்பவே சப்போர்ட் பண்ணுகிறார்கள். இன்னொரு பக்கம் நல்ல திறமையான இளைஞர்கள் போது நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் அரசாங்க அமைப்புகளிலும் வேலைக்கு போனால் பெரிய சாதியில் பிறந்தவர்கள் வேலைக்கே சேர்ப்பது இல்லை. பெரும்பாலான இடங்களில் தலைமை முட்டாள்தனமாக இருக்கிறது. புத்திசாலித்தனமான முடிவுகளை ஒரு அறிவு நிறைந்த இளைஞர் கொடுத்தால் அந்த இளைஞர் உயர்வான வகையில் பிறக்காதவர் என்றும் அவர் சொல்லி நான் கேட்க மாட்டேன் என்றும் தூக்கி எறிந்துவிட்டு அவர் சொன்ன விஷயங்களுக்கு ஆப்போஸிட்டாக பண்ணி தோற்றுப்போவோம் என்று தெரிந்தும் தோற்றுப்போகிறார்கள், சக்தியை குறைத்துக்கொள்கிறார்கள். இது உங்களுக்கு தேவையா ? ஒரு விஷயம் நஷ்டத்தில் செல்கிறது என்றால் இலாபம் கொடுக்கும் முடிவுகளை எடுத்தால் அந்த முடிவுகளைத்தான் நீங்கள் மனதுக்குள் போட்டுக்கொள்ள வேண்டுமே தவிர முடிவு எடுத்தவனின் பிறப்பு என்ன ? தகுதி என்ன ? தராதரம் என்ன ? என்று எல்லாம் யோசிக்க கூடாது !! யாருக்கு வேண்டும் இந்த பாவ புண்ணியங்கள் , நீங்கள் பல தலைமுறைகளாக படிப்பறிவு இல்லாதவர்களாக இவர்கள் இருக்க வேண்டும் என்று சதிகளை பண்ணி இருக்கிறீர்கள். நீங்கள் கட்டிய கம்பி வேலிக்குள் ஆடுகளை போல இருக்க வேண்டும் என்று போதுமான மனித உரிமைகளை கொடுக்காமல் நடத்திக்கொண்டு இருந்தீர்கள் ஆனால் ஸ்மார்ட்ஃபோன்கள் வந்ததும் எல்லோருக்கும் எல்லா விஷயமும் புரிந்துவிட்டது. இனிமேல் உங்கள் மேல் பிறப்பு இருப்பவர்கள் மட்டுமே சிங்கங்கள் , மற்ற இடங்களில் பிறந்தவர்கள் புழு பூச்சிகள் என்று நசுக்க முடியாது. மக்களே , நீங்கள் இந்த பிரச்சனைகளை பாருங்களேன் , நான் பார்த்த மனிதர்களில் எல்லா மேல் பிறப்பு மனிதர்களுமே கெட்டவர்கள் இல்லை. பெரும்பாலான பெரிய குடும்பத்தில் பிறந்தவர்கள நல்ல மனது உள்ள தங்கமான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு மரியாதை கொடுக்கலாம் ஆனால் அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் மேல் பிறப்பில் பிறந்தவர்கள் ரொம்ப ரொம்ப கவனமாக அடிமட்ட பிறப்பில் இருப்பவர்கள் மேலே வரவே கூடாது சம்பளம் பெறவே கூடாது என்றும் அவர்கள் குடும்பத்தில் யார் இருந்தாலும் அடுத்த தலைமுறையில் அவர்களுக்கு பிறக்கும் குழத்தைகள் கூட வறுமையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் நாசூக்கான வேலைகளை பார்க்கிறார்கள். இதனால் அதிகமான பேர்ஸன்டேஜ் இருந்தும் அவர்களுடைய தகுதிக்கு உண்டான வேலை உள்ளூரில் கிடைக்காமல் வெளியூரில் சென்று வேலை பார்க்கிறார்கள் , வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கிறார்கள், இது எல்லாம் என்னவென்று சொல்ல. இந்த மாதிரி விஷயம் எல்லாம் பாதிப்பை கொடுத்தவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்காதப்பா ? ஆனால் பாதிப்பு அடைந்து மனசு உடைந்து போனவர்களுக்கு வாழ்க்கையே கசப்பாக மாறிவிடுகிறது. அவர்களை ஜெயிக்கவே விடமாட்டார்கள் என்று மனது உடைந்து போகிறது ! இத்தனை வருடங்கள் போனாலும் சேர்ந்து ஒரே அன்பான குடும்பமாக வாழாமல் பிறப்பால் பிரிந்து இருக்க வேண்டும் என்று இருப்பது நன்றாக இல்லை. இப்போது அடிப்படை பிரச்சனைக்கு வருவோம். இந்த மாதிரி ஆப்ஸ் எல்லாம் ஃபோன்னில் இணைக்கப்பட்டு இருக்கும் வங்கிக்கணக்கில் ஒரு இணைப்பை உருவாக்கிக்கொண்டு பணத்தை இரத்தம் உறிஞ்சுவது போல உறிஞ்சுகிறது. கடன் கொடுக்கும் ஆப்ஸ்கள் ஒரு படி மேல் சென்று ஒரு வருடத்தில் 10 லட்சம் தொகை கடனாக பெற்றால் 120 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டிகளையும் அபாராதங்களையும் தலையில் கட்டிவிட்டு 22 லட்சம் கொடுக்க வேண்டும் என்று ரௌடிகளையும் கொலைக்காரர்களையும் வைத்து மிரட்டுகிறது. இன்னொரு பக்கம் வங்கியில் இருந்து பேரும் கடனிலும் ஆப்புகள் வைத்து அப்பாவி மக்களை கொத்தடிமைகளாக எழுதி வாங்க பார்க்கிறார்கள். இது எல்லாமே ரொம்ப தப்பான விஷயம், ஆட்சியில் இருப்பவர்கள் இரும்புக்கரம் கொண்டு இந்த பிரச்சனையை அடக்க வேண்டும். 

RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - E001 - TAMIL MAGAZINE

 


இந்த உலகத்தில் நிறைய பேர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்வதே இல்லை. இங்கே யாருமே யாருக்குமே ஃபேனாக இருக்க கூடாது. இதுக்கு காரணம் என்னவென்றால் இங்கே யாராக இருந்தாலும் பயோலஜி அடிப்படையில் மரணத்தை அடைந்துதான் ஆக வேண்டும். இங்கே எந்த ஒரு உடலும் புனிதமான சக்திகளை கொண்ட உடல் கிடையாது , காய்ச்சல் , சளி என்று வெளிப்புறத்தில் இருந்து தாக்கும் பாக்டீரியா , வைரஸ் , பூஞ்சைகள், இல்லைன்னா கேன்சர் , ட்யூமர்ஸ் , மற்றும் சேராமை (அல்லர்ஜி) வகையிலும் உடல் பாதிக்கப்படுகிறது. உடல்நலத்தை பாதுகாப்பது அவ்வளவு முக்கியமான விஷயம். நம்ம உடல் அவ்வளவு மென்மையானது ஆனால் அதே சமயத்தில் கொடுக்கப்படும் சாப்பாட்டை சக்தியாக மாற்றும் அளவுக்கு ரொம்பவுமே வலிமையான இயந்திரமும் நம்ம உடல்தான். இப்படி ஒரு மரணத்துக்கு நெருக்கமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு அடிப்படையில் பெரிய சாதனைகளை சாதிக்காமல் ஃபேன்ஸ் என்று இன்னொருவரின் சாதனையையே பாராட்டிக்கொண்டு இருந்தால் நாம் எப்படி சாதிக்க முடியும் ? இப்போ கொரிய இசை வெளியீட்டாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். வருடக்கணக்கில் கொரிய படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு இருந்தால் அந்த வருடத்துக்கான நம்ம சாதனை என்று என்னவாக இருக்கும் ? நாம் எதுவுமே சாதித்து இருக்க மாட்டோம் இல்லையா ? அடிப்படையில் ஒரு மனிதன் சாதனை பண்ணுகிறார் என்றால் ஒரு ஐந்து நிமிடம் நேரம் கொடுத்து பாராட்டிவிட்டு நம்ம வேலையை பார்க்க வேண்டும். பொழுதுபோக்கு துறையில் சாதனை பண்ணுவது பெரிய விஷயமே கிடையாது. ஒரு ஐமேக்ஸ் காமிரா , பக்காவான லொகேஷன்ஸ் , விஷுவல் எஃபக்ட்ஸ் , ஆடியோ இன்ஜினியரிங் , ஆர்ட் வொர்க்ஸ் , சிறப்பான எழுத்தாளர்கள் என்று ஒரு 50 பேர் கொண்ட குழு அமைத்தால் நிறைய பணம் செலவு பண்ணினால் யார் வேண்டும் என்றாலும் பொழுதுபோக்கு துறையில் சாதனையாளர்களாக மாறலாம். இங்கே மக்கள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்கள் ! பொழுது போக்கு துறையில் ஏழைகள் சாதித்து இருக்கிறார்களே அப்படி இருக்கும்போது நீங்கள் இப்படி ஒரு 'பொழுது போக்கு துறைகளை சாதிப்பது பெரிய விஷயம் இல்லை என்று ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் அது அவர்களுடைய உழைப்பை அவமானப்படுத்துவதாக இருக்கும் இல்லையா ? இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாமா ? " என்று நீங்களும் கேட்கலாம் , ஆனால் பொழுது போக்கு துறைகள் சம்மந்தப்பட்ட எந்த ஒரு ஏழை சாதனை பண்ணினாலும் அதுக்கு பணம் அப்போது தேவைப்பட்டு இருக்கும் அடுத்தவர் கொடுத்த பணம் , அடுத்தவர் கொடுத்த உழைப்பு , அடுத்தவர் கொடுக்கும் அறிவுத்திறன் இது எல்லாமேதான் தரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொடுக்கிறது ஆனால் உலகத்தில் நிறைய பிரச்சனைகள் சென்றுக்கொண்டு இருக்கும்போது பொழுதுபோக்கு விஷயங்களாக இருக்கும் தொலைக்காட்சி , தொடர்கள் , இசை வீடியோக்களை மாதக்கணக்கில் மற்றும் வருடக்கணக்கில் பார்த்துக்கொண்டு இருக்க கூடாது. அது உண்மையில் தவறான விஷயம் என்று சொல்ல முடியாது ஆனால் பணமே இல்லாத ஒரு நிலைமையில் பணம் சம்பாதிப்பதை விட்டு விட்டு பொழுதுபோக்கு உலகத்தின் மோகத்தில் இடம்பெற கூடாது. ஒரு ஒரு மனுஷனுக்குமே கடவுள் நல்ல அறிவுத்திறனை கொடுத்து இருப்பது நிறைய பேரிடம் பேசி பழகி வேலை பார்த்து அறிவை வளர்த்துக்கொள்வதற்காகவும் பின்னாட்களில் நிறைய செயல்களை நாமே எடுத்து செய்வதற்காகவும் மட்டும்தான் ஆனால் இந்த பொழுதுபோக்கு உண்மையில் உங்கள் நேரத்தை அதிகமாக எடுத்துக்கொண்டு உங்களுடைய தோல்வியைத்தான் அதிகப்படுத்துகிறது. கடந்த இருபது ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் முன்னேற்றத்துக்காக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறான். இந்த போட்டிகளின் அடிப்படையிலான சண்டையை இன்று ஆர்ட்டிஃபிஷியல் இன்டெல்லீஜென்ஸ் கைகளில் எடுத்துக்கொண்டு உள்ளது. இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் உயிரே இல்லாத ஒரு உருவம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெல்லீஜென்ஸ் புரோகிராம் மூலமாக மனிதர்களிடம் பேசி வீடியோ வீடியோவாக போட்டு 10000 டாலர்கள் (84,000 ரூபாய் பணம்) முதல் மாத சம்பளமாக பெற்று உள்ளது !! இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே வந்துகொண்டே இருந்தால் மனிதனுடைய அடிப்படை மனிததன்மையே போய்விடும். ஒருவரை ஒருவர் கொன்று சாப்பிடும் நிலைக்கு இந்த கம்ப்யூட்டர்கள் கொண்டுபோய்விடும் என்று நான் நினைக்கிறேன். என்னுடய கணிப்பு சரியாக இருக்கும் என்றால் இன்னும் கொஞ்சம் வருடங்களில் இந்த உலகம் அழிந்துவிடும். இந்த உலகத்தில் மனிதர்களை எல்லாம் மெஷின்கள் கொன்று போட்டுவிடும். இதுதான் என்னுடைய கணிப்பு. இந்த கணிப்பு நிறைவேற கூடாது என்று கடவுள்களை வேண்டிக்கொள்கிறேன். 

CINEMA TALKS - VARALARU MUKKIYAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


படங்களில் ஜீவா என்னைக்குமே ரொம்ப கியூட்டான ரொமான்டிக் ஹீரோவாக இருப்பதால் அவருடைய ஸ்டைல்லில் ஒரு ரொமான்டிக் காமெடி படம், இருந்தாலும் இங்கே படத்தில் ரொமான்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப அதிகமாக இருப்பதாலும் காமெடி வேற லெவல்லில் இருப்பதாலும் 'யூ - சேர்ட்டிஃப்பிக்கேட்டை' நம்பி ஃபேமிலியோடு படம் பார்க்க சென்றவர்களுக்கு ரொமான்ஸ்ஸால் மட்டுமே நிறைந்த ஃப்ளர்ட்டிங் காட்சிகளும் , வயதுக்கு மீறிய நகைச்சுவை கலகலப்புகளும் சுந்தர் C அவர்களின் படங்களுக்கு வந்தது போல நினைக்க வைத்துவிடும். லொகேஷன்ஸ் , ஸாங்க்ஸ் , கதையை நகர்த்தி இருக்கும் விதம் , கொஞ்சம் ஃபேமிலி வேல்யூஸ் மற்றும் நிறைய நிறைய அதிகமான நகைச்சுவை காட்சிகள் என்று நம்ம டிஜிட்டல் உலகத்தின் தொடக்கத்தில் எப்படி ஒரு ரசிக்கும்படியான ரொமான்டிக் காமெடி படம் இருக்குமோ அப்படி ஒரு படம் இந்த படம். பாடல்கள் படத்துக்கு நல்ல டோன் கொடுத்துள்ளது. பையா படத்தில் இடம்பெற்ற பாடல்களை போல அனைத்து பாடல்களும் ஹிட் என்ற இடத்தை அடையவேண்டும் என்பதால் இன்னும் கவனம் எடுத்து பாடல்கள் கொடுத்து இருக்கலாம்.  ஃபேமினிஸ்ட்டாக இருப்பவர்கள் இந்த படத்தை கண்டிப்பாக தவிர்த்துவிடவும் காரணம் என்னவென்றால் காதலை காமெடிக்காக ரொம்பவுமே தியாகம் பண்ணி இருப்பார்கள். ஜீவா , வி.டி.வி கணேஷ் , கே. எஸ். ரவிக்குமார் , காஷ்மிரா ,ப்ரக்யா , என்று ஒரு நட்சத்திர பட்டளமே சேர்ந்து நடித்து உள்ள படம் என்பதால் இதுக்கு முன்னதாக வெளிவந்த கவலை வேண்டாம் படத்துக்கு இந்த படம் விஷுவல்லாக ரொம்பவுமே பெட்டர்ராக எடிட்டிங் பண்ணப்பட்டு இருக்கிறது. நான் எப்பவுமே கமெர்ஷியல் படங்கள் எல்லாம் காலத்தை கடந்த காவியங்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே இல்லை. ஒரு கமேர்ஷியல் படத்தின் முக்கியமான நோக்கம் எண்டர்டெயின்மெண்ட் வேல்யூதான் அந்த வகையில் ரொம்ப அதிகமாக வேல்யூ மற்றும் ரேட்டிங் இந்த படத்துக்கு தேவை. ஃபேமிலியோடு இல்லாமல் ஃபிரண்ட்ஸ்ஸாக பார்த்தால் இந்த படம் உங்களுக்கு ஒரு கலகலப்பான அட்வென்சர்ராக இருக்கும். மற்றபடி லாஜீக் எல்லாமே பார்த்து காமெடியை குறை சொன்னால் உங்களுக்கு இந்த படம் ஸெட்டாகாது. இந்த படம் பைசா வசூல் என்டர்டைன்மெண்ட் படம் , இந்த விஷயத்தில் மாற்றுக்கருத்து இருந்தால் நீங்கள் விஜய் சேதுபதி அவர்களின் 96 போன்ற ரியல் லைப் வேல்யூக்கள் நிறைந்த காதல் கதைகளை பார்ப்பதுதான் நல்லது. 

Thursday, November 23, 2023

CINEMA TALKS - KATHI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



முன்னதாக துப்பாக்கி படம் ரொம்ப பெரிய அப்டேட் நம்ம தமிழ் சினிமாவுக்கு கொடுத்து இருக்கிறது என்பதால் நிறைய எதிர்பார்க்கப்பட்டு நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம்தான் கத்தி என்ற இந்த படம். இந்த படம் நான்தான் எடுத்தேன் என்று ரொம்ப கௌரவமாக சொல்லிக்கொள்ளலாம். அவ்வளவு அருமையான படம். கதிரேசன் சென்னையில் தேடப்படும் ஒரு நுணுக்கமான கொள்ளைக்காரர். பணம் மேல் நிறைய ஆசை வைத்து இருப்பதால் ஒரு பக்கம் கிராமத்தில் விவசாயம் சார்ந்த வாழ்க்கையை நடத்தும் மக்களுக்காக போராடிய ஜீவானந்தம் அவர்களுடைய இடத்தை எடுத்துககொள்கிறார். ஆனால் ஒரு பல கோடி ரூபாய் பிசினஸ் பண்ணும் ஒரு கார்ப்பரேட் கம்பனி எப்படி பல வருஷங்களாக அந்த கிராமத்து மக்களை அவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கிறது என்று புரிந்துகொள்ளும் கதிரேசன் கடைசி வரைக்குமே அந்த கிராமத்து மக்களுக்காக நின்று நேருக்கு நேராக அந்த கொலைகார படையை எதிர்த்து சண்டை போட்டு கடைசியில் ஜெயித்து காட்டுவதுதான் இந்த படத்தின் கதை. ஒரு சில படங்கள் மட்டும்தான் சமுதாயத்தில் நடக்கும் ரொம்ப பெரிய குற்றங்களையும் அந்த குற்றங்களை பண்ணுபவர்கள் தண்டனையே இல்லாமல் சந்தோஷமாக இருப்பதையும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரையும் மக்களுக்கு சொல்லும் படங்களாக இருக்கும். இந்த படத்தில் கமர்ஷியல் காரணங்களுக்காக சேர்க்கப்பட்ட காதல் மற்றும் சண்டை காட்சிகளை தவிர மொத்தமாக இந்த படம் விவசாயத்தை பண்ணுபவர்களை ஒரு தனியார் நிறுவனம் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துகிறது என்று சொல்லியுள்ளது. இந்த மாதிரி படம் எல்லாம் தமிழ் சினிமாவின் தங்கமான படங்கள். இன்னும் நிறைய வெற்றிப்படங்கள் மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளை கண்டிப்பாக சொல்லும் படங்களாக வருங்காலத்தில் வரவேண்டும் அப்போதுதான் பொழுது போக்கு மட்டுமே இல்லாமல் அடிப்படையான பிரச்சனைகளையும் சொல்லும் படங்கள் நிறைய பேரை சென்றடையும். கிளைமாக்ஸ் ரொம்பவே நன்றாக இருந்தது. இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள். 

CINEMA TALKS - GAME NIGHT - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


ஒரு அன்பான அமைதியான அமெரிக்க குடும்பம் , ஒரு ஒரு வார இறுதியிலும் ரிலாக்ஸ்ஸேஷன்க்காக கேம் நைட் என்ற ஒரு விளையாட்டு நேரத்தை ஒதுக்குகிறார்கள். இது எப்படி என்றால் பாட்டுக்கு பாட்டு , வார்த்தை விளையாட்டு , விடுகதை , போர்ட் கேம்ஸ் என்பது போலத்தான் ஆனால் அப்படி விளையாடிக்கொண்டு இருக்கும்போது ஒரு நாள் இரவில் இவர்கள் வாழ்க்கையே அப்ஸைட் டவுன் என்று மாறும் அளவுக்கு விளையாட்டு என்று நினைத்துக்கொண்டு ஒரு பணக்கார க்ரைம் நெட்வொர்க்கையே எதிர்த்து நிஜமான ஒரு பெரிய ஆபத்தில் சம்மந்தமே இல்லாமல் இந்த குடும்பமும் குடும்பத்தோடு விளையாடிய நண்பர்களும் மாட்டிக்கொண்டு உயிரை பணயம் வைத்து கார் , பைக் , என்று ஓடிக்கொண்டு இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் படத்தின் கதை. பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நீங்கள் இந்த படத்தை பார்த்தாலும் உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு மேலேயே இந்த படம் உங்களுக்கு கொடுத்துவிடும். காட்சிகளுடன் கூடிய திரைக்கதையின் வேகம் மற்றும் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும் திருப்பங்கள் இந்த விளையாட்டு நிறைந்த படத்தை ரொம்ப பரபரப்பாக நகர்த்துகிறது. ஒரு நல்ல கதையை எப்படி ஒரு இண்டரெஸ்ட்டிங்கான படமாக எடுக்கலாம் என்பதற்கு இந்த படம் ரொம்ப பெஸ்ட்டான எக்ஸாம்பில் அதனால் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள் !

CINEMA TALKS - SIX UNDERGROUND - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 


போன முறை தி மேக்னிஃப்பிஸன்ட் செவன் படத்தை பார்த்தோம் ஆனால் இந்த முறை அந்த படத்துக்கு அப்புடியே நேர் ஆப்போஸிட்டான ஒரு படம் பார்க்கலாமா என்றால் அதுதான் சிக்ஸ் அண்டர்க்ரவுன்ட் . பொதுவாக நெட்ஃப்லிக்ஸ் என்ன பண்ணுவார் என்றால் நம்ம இரும்புத்திரை அர்ஜூன் மாதிரி "என்னால முடியும் ! நான் அதனால பண்ணுவேன் !" என்றுதான் எப்போதுமே காட்டுவார். ஒரு நாட்டில் கெட்டவர்கள் , கொலைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள் அதிகமாக இருந்தால் அந்த நாட்டின் அரசாங்கம் காப்பாற்றும் என்று விட்டுவிடலாம் ஆனால் அரசாங்கமே தப்பாக இருந்தால் என்ன பண்ணுவது ? அதுதான் இந்த படத்தின் கதைக்களம் , பெயர்களை இல்லாத ஆறு தனிப்பட்ட திறமைமிக்க ஆட்கள் ஒரு பணக்கார ஹீரோவின் பணத்தை வைத்து மாடர்ன் டே சுதந்திர போராட்டம் நடத்தியாவது அந்த நாட்டுக்கு விடுதலை வாங்கி கொடுக்கிறார்கள். இந்த படம் மைக்கேல் பேயின் தயாரிப்பு என்பதால் அதிரடி சரவெடிக்கு பஞ்சமே இல்லாமல் நகர்கிறது. ஃபேமிலியுடன் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு சில காட்சிகள் உங்களை அடிவாங்க வைத்துவிடும் என்பதால் தனியாக பார்ப்பது உங்களுடைய ஹெல்த்க்கு நல்லது. சூப்பர்ஹீரோ படங்கள் ஒரு பக்கம் இருக்க சாதாரண மனிதர்கள் ரொம்ப அசாதாரணமான ஸ்டண்ட் ஆக்ஷன் பண்ணும் படங்கள் ரொம்ப குறைவுதான். துல்லியமான வி. எஃப். எக்ஸ் இருப்பதால் ஒரு ப்ரெசெண்ட்டேஷன் பாயிண்ட் ஆஃப் வியூல பார்க்கும்போது ஆடியன்ஸ்க்கு குறையே வைக்காமல் ஆக்ஷன் காட்சிகளை அள்ளி அள்ளி கொடுத்து இருக்கும் இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் !

Wednesday, November 22, 2023

CINEMA TALKS - THE MAGNIFICENT SEVEN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


இந்த உலகத்தில் யாராவது கஷ்டப்படும்போது அவங்களை காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி பண்ணுவாதே ரொம்ப அரிதான விஷயம். ஆனால் இந்த படத்தில் ஒரு கிராமத்தையே வெறும் 7 பேர் முன்னே பின்னே அதிகமான அறிமுகம் கூட ஆகாதவர்களாக இருந்தாலும் ஒன்றாக சேர்ந்து ரொம்ப பெரிய கொலைகார தலைவன்னிடம் இருந்து காப்பாற்றி இருப்பார்கள். இந்த படம் ரீமேக்தான். செவன் சாமுராய் என்ற ஒரு பழைய படத்தின் கான்செப்ட்ல எடுத்த படம். இயக்குனர் மிஷ்க்கின் அவருக்கு ரொம்பவுமே பிடிச்ச படம் என்று சொன்ன ஒரு படம் இந்த செவன் சாமுராய், ஒரு சில படங்களுக்கு ரீமேக் அவசியமே இல்லை என்று தோன்றும் ஆனால் இந்த படம் ஒரு ரீமேக் படமாக ஒரு அருமையான கதையை சொல்லியுள்ளது. எப்படி சாதாரணமான ஏழு பேர் ஒன்றாக சேர்ந்து அந்த கிராமத்தையே தனித்து போராடி ஜெயித்து அந்த கிராமத்து மக்களின் கடவுளாக மாறுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. பொதுவாக சினிமா என்பது நிறைய வில்லன்களால் மக்கள் பாதிக்கப்படும்போது ஒரு ஹீரோ களத்தில் இறங்கி நேருக்கு நேராக சண்டை போடுவது மட்டுமே கிடையாது என்றும் ஒரு நல்ல சினிமா ஒரு தனிநபர் அல்லது அமைப்பு மற்றவர்களுடைய நன்மைக்காக உயிரையும் உடலையும் இழந்தாலும் முழுமையாக நேருக்கு நேராக போராடி ஒரு கிராமத்து மக்களுடைய குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதாக கூட கதையில் இருக்கலாம் என்று சொல்லியிருக்கும் இந்த படம் கண்டிப்பாக நான் பார்த்த ஒரு சிறந்த திரைப்படம் ! நீங்களும் கண்டிப்பாக பாருங்கள். 

CINEMA TALKS - AARAMBAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


பில்லா படத்துக்கு அப்பறம் இந்த படம் வெளிவரப்போகிறது என்றபோது ரொம்ப நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. சொல்லப்போனால் அப்போது எல்லாம்  வெறும் 2 G ஃபோன்கள் மட்டுமேதான் இருக்கும் என்பதால் இந்த படத்தின் TRAILER - ஐ பார்க்கவே புளூடூத் மூலமாக ஒரு ஃபோன்னில் இருந்து இன்னொரு ஃபோனக்கு அனுப்பி வைத்த நாட்கள் எல்லாமே இருக்கிறது. பில்லா - 2 படம் அவ்வளவு  கொடுக்கவில்லை. ஆனால் ஆரம்பம் படம் ஆடியன்ஸ்க்கு என்ன வேண்டுமோ அப்படி ஒரு ஸ்டைல் நிறைந்த ரொம்ப கிராண்ட் ஆன ஒரு ப்ரொடக்ஷன் நிறைந்த ஸ்பை - ஆக்ஷன் படமாக இருந்தது. பொதுவான கதை அரசியல் கொள்ளை காரணமாக தரமற்ற பொருட்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டதால் வெடிகுண்டு செயலிழப்பு சம்பவத்தில் அஜீத் அவருக்கு நெருக்கமான நண்பரை இழக்கிறார் ஆனால் தரமற்ற பாதுகாப்பு கவசம் அங்கே கொடுக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து பிரச்சனையை மேலே கொண்டு செல்லும்போது அனைத்து தவறான அதிகாரிகளும் அவருக்கு எதிராக செயல்பட்டு அவரை கொல்ல செயல்பட்டதால் அப்போது உயிரோடு வெளிவந்து பின்னால் நிறைய வருடங்களுக்கு பிறகு அவர்களை பழிவாங்க நேருக்கு நேராக மோதுவதுதான் ஆரம்பம் என்ற இந்த படம்.  நயன்தாரா , ஆர்யா , டாப்ஸி பன்னு மற்றும் கிஷோர் என்று திறமையான சப்போர்டிங் ஆக்டர்ஸ் இருந்ததால் பில்லா படத்தில் இருந்த அதே அளவுக்கு இந்த படம் அவ்வளவு இண்டரெஸ்ட்டிங்காக இருந்தது. இந்த காலகட்டத்தில் ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரத்தில் தமிழ் படங்கள் இருப்பது ரொம்ப கஷ்டம்தான் ஆனால் ஆரம்பம் படம் அந்த அளவுக்கு இருந்தது. நேர்த்தியான கதையில் கமர்ஷியல்லாக நம்ம ஆடியன்ஸ் என்ன எதிர்பார்ப்பார்களோ அந்த எல்லா விஷயமும் இந்த படத்தில் இருக்கும். விஷ்ணுவர்தன் இன்னொரு பெரிய பிளாக்பஸ்டர் படத்தை ரொம்ப சரியான நேரத்தில் கொடுத்து இருந்தார். தமிழ் சினிமாவில் வெளிவந்த குறிப்பிடத்தக்க சிறந்த படங்களில் இதுவும் ஒரு படம் என்றால் கண்டிப்பாக மிகைப்படுத்தி சொன்னதாக இருக்காது.  

CINEMA TALKS - SEVEN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இந்த படம் உங்களை ரொம்பவே யோசிக்க வைத்துவிடும். படத்துடைய தொடக்கத்தில் ஒரு கொலை நடக்கிறது. எந்த ஒரு மோட்டிவ்வும் இல்லாமல் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன் பண்ணிய கொலை என்று பார்த்தாலே தெரிந்துவிடும். ஒரு சின்ன தடயம் கூட கிடைக்காத இந்த வழக்கில் மிக மிக அதிகமாக முயற்சி எடுத்து நிறைய விஷயங்களை வெளியே கொண்டு வந்து கொலைகாரனை நெருங்குகிறார்கள். இந்த இரண்டு பேர் யார் என்றால் வில்லியம் மற்றும் டேவிட். இங்கே வில்லியம் பணி நிறைவு அடையப்போகிறார். அவருக்கு பின்னால் பொறுப்பில் அமரப்போகும் ஆபீஸர்தான் இந்த டேவிட். இந்த கொலைகாரன் பைபிள் அடிப்படையில் சொல்லப்பட்ட 7 மன்னிக்க முடியாத பாவங்களான GLUTTONY , LUST , GREED , WRATH , SLOTH , GLORY , PRIDE என்ற பாவங்களை பண்ணுபவர்களை மட்டுமே வரிசையாக தீர்த்துக்கட்டிவிடுகிறான் என்று இன்வெஸ்டிகேஷன்னில் தெரிந்துக்கொண்ட பின்னால் இவனை பிடிப்பதில் உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் இந்த காவல்துறை அதிகாரிகளுக்கு அடுத்து என்ன நடக்கிறது என்று விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த படமாக வெளிவந்த இந்த படம் 1995 ல் வெளிவந்து உள்ளது. இன்னைக்கும் கூட க்ரைம் படங்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்க மதிப்பு இந்த செவன் படத்துக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது !

CINEMA TALKS - BOOKSMART - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


இந்த கதை அமெரிக்காவின் உயர்நிலை பள்ளிக்கூடத்தில் படிக்கும் இரண்டு தோழிகள் அவங்க வாழ்நாள் முழுக்க படிப்பிலும் புத்தகங்களிலும் மட்டுமே ஃபோகஸ் பண்ணியதாக பள்ளிக்கூடத்தின் கடைசி நாட்களில் யோசிப்பதில் இருந்து தொடங்குகிறது. அவர்கள் உடன் படித்தவர்கள் எல்லாம் நன்றாக படிக்கவில்லை என்றாலும் வாழ்க்கை மொத்தமும் பார்ட்டி பண்ணியே செலவு பண்ணினாலும் பெரிய காலேஜ் போவதற்கும் தொழில்களை தொடங்கவும் பெரிய கம்பெனிக்களில் வேலை செய்வதற்கும் என்னென்ன பண்ண வேண்டுமோ எல்லாவற்றையும் பண்ணிவிட்டார்கள். இதனால் ஒரு முறையாவது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது பார்ட்டிக்கு சென்று அட்டென்ட் பண்ண வேண்டும் என்று வீட்டை விட்டு கிளம்பும் இந்த நெருக்கமான தோழிகள் அந்த நாட்களில் எத்தனை கலகலப்பான விஷயங்களை சந்திக்கிறார்கள் என்று செம்ம காமெடியாக சொல்லும் ஒரு படம்தான் இந்த BOOKSMART - பொதுவான அமெரிக்க கலாச்சாரத்தில் இருக்கும் பள்ளிக்கூடங்களின் சிஸ்டம் ரொம்ப மோசமான முறையில் இருக்கிறது என்ற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த படம் குறைவான பட்ஜெட்ல எடுக்கப்பட்டு ரொம்ப பெஸ்ட்டாகவே கிளைமாக்ஸ் வரைக்குமே கொண்டுபோய் இருக்கிறார்கள் என்பதால் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள். மிஸ் பண்ண வேண்டாம் !

HEADSET போட்டு பாட்டு கேட்பது நல்ல விஷயமா ? - ஒரு கட்டுரை !!

 





ஹெட்செட்களைப் பயன்படுத்துவது ரொம்ப டேன்ஜர் ! இன்னைக்கு நான் 150/- க்கு ஒரு ஹெட்செட் வாங்கினேன் ஆனால் ஒரு வாரத்தில் வேலை செய்யவே இல்லை. கடைக்கு போனாலும் காசை திரும்ப கொடுக்க மாட்டார்கள் ! காசு வீணாக போகிறது ! 150/- என்பது தின கூலி இல்லையா ? அப்போதான் புரிந்துகொண்டேன் ஹெட்செட் ஒரு மட்டமான விஷயம் ! கொடுக்கும் காசுக்கு வோர்த் இல்லை. காரணம் என்னன்னு சொல்கிறேன் ! இங்கே ஹெட்ஃபோன் சவுண்ட் வெச்சு கேட்டால் ரொம்ப காலத்திற்கு ஹெட்ஃபோன்கள் கேட்டதால் நிரந்தரமா  காது கேட்காமல் போக வாய்ப்பு உள்ளது. காது நோய்த்தொற்றுகள்: நீண்ட காலத்திற்கு ஹெட்செட்களை அணிவது காதில் ஒரு சூடான மற்றும் ஈரமான சூழலை உருவாக்கிரும், பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று அபாயம் வேற இருக்கு ! காது ஓரத்தில் இருக்கும் தேவையற்ற தூசு துணுக்குகளை காதுக்கு உள்ளே கொண்டு போய்விடும் ! இந்த வயர்கள் ரொம்ப எளிமையாகவே டேமேஜ் பண்ணிவிடும் என்பதால் ஸ்பீக்கர் வாங்கினால் ஆவது காசு மிச்சம் என்று நினைத்துக்கொள்ளலாம்.  நீண்ட காலத்திற்கு ஹெட்செட்களை அணிவது காதுகள் மற்றும் தலையைச் சுற்றி பிரஷர் அல்லது வலியை ஏற்படுத்தும். ஹெட்செட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களான  பிளாஸ்டிக் சேராமல் போனால் அலர்ஜி நிறைய வரும் !. கவனச்சிதறல் மற்றும் குறைக்கப்பட்ட விழிப்புணர்வு: நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது வாகனம் ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது ஹெட்செட்களை அணிவது சூழ்நிலை இன்னும் மோசம் ! பைக் விபத்துக்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஹெட்செட்களின் அதிகப்படியான பயன்பாடு நம்ம நண்பர்களை பேச விடாமல் பண்ணிவிடும். மோசமான ஆடியோ தரம் இருக்கற ஹெட்ஃபோன்களை என்னவென்று சொல்ல ! இருக்கும் காசுக்கு 450/- ரூபாய் என்றாலும் வீட்டுக்கு ஒரு சேர் வாங்கலாம் !!  1000/- ரூபாய் இருந்தால் தோசைக்கல் வாங்கலாம் குறைந்த தரமான ஹெட்செட்டுகள் அதிகமா காசு போட்டு வாங்கினாலும் நன்றாக இருக்காது, இது இசை, திரைப்படங்கள் பார்க்கும் சந்தோஷத்தை குறைக்கிறது. இங்கேயும் சில ஹெட்செட்டுகள் எல்லா சாதனங்களுடனும் இணக்கமாக இருக்காது, இது இணைப்பு அல்லது செயல்பாட்டு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இப்படி ஒரு மட்டமான ப்ராடக்ட்டை பத்து முறைக்கு மேலே நான் கம்மி விலை என்பதற்காக வாங்கியுள்ளேன் என்பதே மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. இனிமேல் ஹெட்செட் வேண்டாம் ஆண்டவரே ! இல்லங்க நானும் நினைக்கிறேன் அன்னைக்கு ஹெட்செட் வாங்க நான் சேர்த்த காசு எல்லாமே எவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்த காசு !! வெறும் மூன்று நாட்களில் காலி ஆவதுக்கா நான் சேர்த்தேன் ! இருந்தாலும் இதுவுமே ஒரு நன்மைக்குதான் என்று நினைத்துக்கொள்வேன் ஒரு தரமான ப்ராடக்ட் வாங்குவது எவ்வளவு முக்கியமான விஷயம் என்று இந்த ஒரு விஷயத்தில்தான் நான் புரிந்துகொண்டேன் !

கால கணிப்பு மேல் நம்பிக்கை இருக்கிறதா ? - ஒரு கட்டுரை !

 காலத்தை கணிப்பது பிறந்த தேதியை கொண்டு உருவான ஜாதகத்தால் கணித்து சொல்ல முடியுமா ? ரொம்ப நாட்களாக என்னுடய மனதுக்குள் இருக்கும் கேள்வி !


இங்கே 12 ராசிகள் இருக்கிறது : 

1.மேஷம் – Aries

2.ரிஷபம் – Taurus

3.மிதுனம் – Gemini

4.கடகம் – Cancer

5.சிம்மம் – Leo

6. கன்னி – Virgo

7. துலாம் – Libra

8. விருச்சிகம் – Scorpio

9. தனுசு – Sagittarius

10. மகரம் – Capricorn

11. கும்பம் – Aquarius

12. மீனம் – Pisces


இங்கே 27 நட்சத்திரங்களின் பலன்களும் இருக்கிறது !


1. அஸ்வினி

2. பரணி

3. கிருத்திகை

4. ரோஹிணி

5. மிருகசீரிஷம்

6. திருவாதிரை 

7. புனர்பூசம் 

8. பூசம் 

9. ஆயில்யம்

10. மகம்

11. பூரம் 

12. உத்திரம் 

13. ஹஸ்தம் 

14. சித்திரை

15. ஸ்வாதி

16. விசாகம்

17. அனுஷம் 

18. கேட்டை 

19. மூலம்

20. பூராடம்

21. உத்திராடம்

22. திருவோணம் 

23. அவிட்டம் 

24. சதயம் 

25. பூரட்டாதி 

26. உத்திரட்டாதி 

27. ரேவதி

இங்கே தினசரி நாள் கணிப்பு , மாத நாள் கணிப்பு , ஆண்டு பலன் இந்த விஷயத்தில் எல்லாமே எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு சில விஷயங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டு நடந்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது ஆனால் நிறைய பேருடைய நம்பிக்கையை மறுத்து சொல்ல கூடாது என்ற காரணமும் எனக்கு இருக்கிறது. கால கணிப்பு நிஜமாகவே வேலை செய்யுமா ? உங்களுக்கு ஏதாவது பதில் தெரிந்தால் ஒரு கமெண்ட் கொடுக்கவும் !!

இது ஒரு பக்கம் இருக்கட்டும் , APR - 24 - 2005 ல அப்லோட் பண்ணுண முதல் யுட்யூப் வீடியோ உங்களுக்கு பார்க்கணுமா ? அதுதான் நான் மேலே கொடுத்து இருக்கிறேன் ! பாருங்கள் !

WHEN I ASK QUESTION OF WHY THIS ? - E2 - ONE TIME WATCHABLES ! - TAMIL REVIEW

ஒரு படத்துடைய முதல் காட்சி நன்றாக இருக்கிறதே என்று படத்தை பார்க்க ஆரம்பித்துவிடுவோம் ஆனால் படம் நாம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனும்போது ரொம்பவுமே டிஸப்பாய்ன்ட்மெண்ட்டாக இருக்கும். அந்த வகையில் ஒரு சில படங்களை இப்போது பார்க்கலாம்.  


இந்த படத்தின் பெயர் YEAR 2067 - இந்த படத்தின் பெயரை கண்டுபிடிக்கவே கூகிள்லில் இருக்கும் எல்லா வருடங்களையும் போட்டு சர்ச் பட்டன் கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. பின்னால் படத்தின் ஹீரோ பெயரை போட்டு படத்தின் ஹிஸ்டரி எடுத்து நான் இந்த கருத்தை பதிவு பண்ணுகிறேன். ஒரு சில படங்கள் எழுதும்போது ரொம்ப சாலிட்டாக இருக்கும் ஆனால் படமாக பார்த்தால் ரொம்பவுமே குழப்பமாக இருக்கும். அப்படிப்பட்ட படம்தான் இந்த YEAR 2067! கோடி ஸ்மித் மேக்பி இந்த படத்தில் ரொம்பவுமே பிரமாதமாக நடித்து கொடுத்து இருப்பார். இந்த படம் நினைவில் நிற்கும் அளவுக்கு படம் இல்லை காரணம் என்னவென்றால் கதை அவ்வளவு குழப்பமாக இருக்கும் ஆனால் ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.  


இந்த படத்துடைய பெயர் SECRETLY , GREATLY , ஒரு சில படங்கள் பார்க்க ரொம்ப இண்டரெஸ்ட்டாக இருக்கும் ஆனால் கிளைமாக்ஸ் வரும்போது மனதுக்கு ரொம்ப பாரமாக முடித்து இருப்பார்கள் , தன்னுடைய நாட்டுக்காக எதிரி நாட்டில் உளவு பார்க்கப்போன அதிகாரிகளுக்கு சொந்த நாடே தற்கொலை பண்ணிக்கொள்ளுங்கள் என்று மெசேஜ் அனுப்பிவிடுகிறது. இங்கே நம்ம ஹீரோ எந்த ஆர்டருமே கிடைக்காமல் மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவி முட்டாள் போல நடித்து ஊர் மக்களுக்கு சந்தேகமே வராமல் இருந்து இருப்பார். இன்னொரு நண்பர் பள்ளி மாணவராக , கடை உரிமையாளராக என்று வேறு வேறு வேஷத்தில் இருக்கிறார்கள் , ஆனால் மெசேஜ் கிடைத்ததும் உயிரை விட வேண்டும் என்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று யோசித்து பாருங்களேன் ! இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் நன்றாக இருக்கும். 



CINEMA TALKS - VALIMAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


கிட்டதட்ட மூன்று வருடத்துக்கு இடைவெளி கொடுத்து வெளிவந்த படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்புகளோடு வெளிவந்த படம் வலிமை. இந்த படம் ரொம்பவுமே டிஃபரெண்ட்டான படமா என்று கேட்டால் அதுதான் இல்லை. பொதுவான கமர்ஷியல் படங்களின் கதைதான் என்றாலும் சம்பவங்களை எக்ஸ்ஸிக்யூஷன் பண்ணியிருக்கும் விதம் இந்த படத்தில் ரொம்பவுமே அருமையாக இருக்கும். இமாஜின் பண்ணி பாருங்களேன் நம்ம தமிழ் சினிமாவில் ரொம்பவுமே புத்திசாலித்தனமான வில்லனாக ஒரு இளைஞர் பட்டாளத்தையே போதைக்கும் பணத்துக்கும் அடிமைப்படுத்தி நிறைய சம்பாதித்து வெளியே வந்தால் மரணம் என்று பயமுறுத்தி நெட்வொர்க் அமைத்து வைத்து இருக்கும் வில்லன். இங்கே அவனுடைய இந்த ஆபரேஷன்னை கண்டுபிடிக்கவே நிறைய கடினமான விஷயங்களை பண்ணி ஒரு துணிவான காவல்துறை அதிகாரியாக AK ஒரு பாதுகாப்பு அமைப்பை அமைத்து தடுத்து நிறுத்த முயற்சிக்கும்போதுதான் நிலைமையை இன்னும் சிக்கலாக மாற்றுவதற்காக அவருடைய சொந்த தம்பியுமே அந்த கொலைகார அமைப்பில் இருக்கிறார் என்று தெரியவருகிறது. நம்ம தமிழ் சினிமாவில் நிறைய பொடன்ஷியல் கொடுத்த ஸ்மார்ட்டான வில்லன்கள் என்றால் கொஞ்சம்தான். இந்த வகையில் நரேன்னை சேர்த்துக்கொள்ளலாம். நிறைய வருடங்கள் காத்திருந்ததால் தரமான பைக் ஸ்டண்ட் , ஃபைட் காட்சிகள் மற்றும் பைக் சேஸ்ஸிங் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. ஃபேமிலி சென்டிமெண்ட் படத்துக்கு ரொம்ப ரொம்ப LAG ! பையனுக்காக அம்மா உண்ணாவிரதம் இருப்பதும் குடும்பத்தை ஒன்றாக வைத்து இருக்க படும் பாடுகளும் படத்துக்கு படத்துடைய ஸ்டைல்லிஷ்ஷான க்ரைம் திரில்லிங் டோன்க்கு ரொம்பவுமே சம்மந்தமே இல்லாமல் இருந்தது. இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடக்கும் சில காட்சிகள் மெட்ரோ படத்தில் ஏற்கனவே பார்த்த காட்சிகள்தான். இந்த போஸ்ட் படிக்கும் நீங்களும் இந்த இரண்டு விஷயங்களை சரியானதாக புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக ஒரு கமர்ஷியல் படமான வலிமை ஆடியன்ஸ்க்கு ரொம்பவுமே தவிர்க்க முடியாத விழிப்புணர்வு கருத்தை கொடுத்து இருக்கிறது, இந்த படத்துக்கு அடுத்த படம் துணிவு படத்தில் இந்த படத்தில் இருந்த மிஸ்ஸான விஷயங்களை எல்லாமே கொடுத்து சிறப்பாக ஒரு பிரசன்டேஷன் கொடுத்து இருப்பார் இயக்குனர் ஹேச். வினோத். இந்த படத்துடைய கருத்துக்கள் ரொம்ப நேர்மையானது. ஃபேமிலியோடு பார்க்க வேண்டிய படம். பெஸ்ட் !

இன்னைக்கு நான் ஒரு முக்கியமான விஷயத்தை கண்டுபிடிச்சு இருக்கிறேன் !




இந்த வாழ்க்கை ரொம்பவுமே கஷ்டமான ஒரு கேம். இங்கே ஜெயிக்கறது நடக்காத காரியம் ! - வெயிட் ! ஜெய்க்கறது நடக்காத காரியமா ? இந்த வார்த்தையை உங்களுடைய மனசுக்குள்ள விதைத்தது யாரு ?  இங்கே நீங்கள் என்ன முயற்சி பண்ணினாலும் தோற்றுப்போவது போல ஒரு பின்னணி புரோகிராம் இயங்குவதாக உங்களுக்கு தோன்றுகிறதா ? இன்னைக்கு வரைக்கும் கிட்டதட்ட 240 நிமிஷம் இல்லைன்னா அதுக்குமே மேல நான் டைப் பண்ணி வைத்து இருந்த ஆவணங்கள் எப்படியோ டெலீட் ஆகிவிடுகிறது. இதுக்கு காரணமாக நான் கடவுளை சந்தேகப்படனுமா ? அடிப்படையில் இங்கே எங்கேயோ ஒரு தப்பான பேட்டர்ன் இருப்பதாக எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த ஒரு விஷயத்துல எனக்கு கோபம்தான் ! உண்மையை சொல்லப்போனால் வாழ்க்கையில் எல்லா விஷயத்திலும்மே எனக்கு கோபம்தான். இந்த வாழ்க்கை நிறைய பாரபட்சம் நிறைந்தது. இங்கே ஜெயிக்கவில்லை என்றால் கண்டிப்பா ரொம்பவுமே கீழ்த்தரமான முறையில் நடத்துவார்கள். ஆனால் நடந்த இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். அடிப்படையில் இது ஒரு மிஷன் ஃபால்ட். ரொம்ப மேலோட்டமான முறையில் பார்த்தால் இது ஒரு மிஷன் ஃபால்ட்டாக மட்டும்தான் இருக்கும் ஆனால் உண்மையில் கடவுள் பின்னணியில் வேலையை காட்டி என்னை வேண்டுமென்றே தோற்கடித்து அவமானப்படுத்தி இருக்கிறார். இந்த ஒரு நொடி என்னை இன்னமும் அதிகமாக பாதித்த ஒரு நொடி. நான் தனியாக இருக்கிறேன் என்பதற்காக கடவுள் இவ்வளவு கொடுமைகளை எனக்கு பண்ணுவதை என்னால் அனுமதிக்க முடியாது. இங்கே எல்லோருமே விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது என்னை மட்டுமே வெறும் தட்டை நக்கிக்கொண்டு போகவேண்டும் என்று கடவுள் இப்படி பண்ணுவது நியாயமே இல்லாதது. என்னுடைய வாழ்க்கையில் நானும் நிறைய விஷயங்களை பார்த்துவிட்டேன் ஆனால் எல்லா விஷயத்திலும் கடவுள் என்னை நேருக்கு நேராக அவமானப்படுத்தி இருக்கிறார். கடவுள் தன்னை மேல்மட்டத்தில் இருப்பவர் என்று சொல்லிக்கொண்டாலும் அடிமட்டத்தில் இருப்பவர்கள் யாரையுமே கடவுள் கொடுமைக்கு உள்ளாக்குவதை நான் அனுமதிக்க மாட்டேன். இந்த உலகம் எனக்கானது. வெறும் கையோடு நான் சாகமாட்டேன். வாழ்க்கையை கஷ்டமாக மாற்றுகின்ற விஷயங்களை கண்டுபிடித்து ஆராய்ச்சி பண்ணி கொன்றுவிட்டால் வாழ்க்கை ரொம்பவுமே சுலபமாக மாறிவிடும். வாழ்க்கை நன்றாக இருக்கும். நான் நிறைய கஷ்டங்களை பட்டுட்டேன். எனக்கு கஷ்டம் கொடுத்தவங்க எல்லோருமே நல்லா இருக்கிறார்கள் ஆனால் நான் இனிமேலும் கஷ்டப்பட வேண்டும் அதாவது வெறும் தட்டை நக்கவேண்டும் என்றால் அது நடக்காது. இந்த மாதிரியான அடக்குமுறையை என் மேலே செலுத்தி கடவுள் என்னை அடக்குவது எனக்கு பிடிக்கவில்லை. இங்கே ஆரம்பத்தில் இருந்து எனக்கு எதுவுமே கிடைக்க கூடாது என்று கடவுள் நுணுக்கமான திட்டங்களோடு சின்ன சின்ன செயல்களை பண்ணுவதோடு பெரிய செயல்களையும் பண்ணுகிறார். இங்கே நானும் நிறையவே இழந்துவிட்டேன். நான் கெஞ்சினாலும் என்னை கடவுள் மன்னிக்கப்போவது இல்லை என்றும் நான் தவறே செய்யாமல் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் என்றும் கடவுள் நியாயமற்ற காரணங்களை சொல்கிறார். இந்த டெலீட் ஆன பதிவுகளை போட்டு நான் பிளாக்கில் சம்பாத்தித்து இருந்தால் கிடைக்கும் 50 ரூபாய்யில் ஏதாவது பொருட்களையாவது வாங்கி இருப்பேன் ஆனால் கடவுள் 50 ரூபாய் மற்றும் 5 மணி நேரம் என்னுடைய வாழ்க்கையில் வீணாக போகவேண்டும் என்றே பண்ணிவைத்துவிட்டார். நான் ஒன்றும் பொழுது போகவில்லை என்று பிளாக் வைத்து நடத்தவில்லை. எனக்கு பணம் வேண்டும். நானும் நிறைய சம்பாதித்து கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் பிளாக்-களை நடத்திக்கொண்டு இருக்கிறேன். கடவுள் என்னை முட்டாள் என்று சொல்லி கடவுள் எனக்கு பண்ணுகிற வஞ்சகமான விஷமான நடவடிக்கைகளை மறைக்க கூடாது. நீங்கள் உயர்வாக இருக்க வேண்டும் என்றால் அடுத்தவர்களை தாழ்வாக நடத்த கூடாது. நான் யாராக இருக்கிறேன். நான் என்ன பண்னினேன். நான் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறேன். நான் என்ன பண்ணப்போகிறேன் எல்லாமே எனக்கு தெரியும். நான் முடிவு பண்ணிய வகையில் நடந்தால்தான் எல்லாருக்குமே நல்லது. இங்கே நீங்கள்தான் புத்திசாலி என்றால் எனக்கு தேவையான விஷயங்கள் கிடைக்காமல் நான் முட்டாளாகவே இருக்கவேண்டும் என்ற கேவலமான எண்ணத்தை விட்டுவிடுங்கள். நான் என்னுடைய வேலையை பார்க்கிறேன். எனக்கான சம்பளம் வருவதை தடுக்க வேண்டாம். இங்கே என்னுடைய கோபம் ரொம்பவுமே அதிகமான அளவுக்கு உள்ளது. நான் என்றால் நான் ஒருவன் மட்டுமே என்று கிடையாது எல்லோருமே கஷ்டப்படுகிறார்கள். எல்லோருமே வருத்தப்படுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையின் விதி சந்தோஷமாக இருப்பதே பின்னால் எதுக்காக அவர்கள் வருத்தப்பட வேண்டும் ! கடவுள் பின்னும் இந்த நரம்பு வலையில் நான் மாட்டிக்கொண்டு இருக்கலாம் ஆனால் என்னுடைய கோபம் இந்த நரம்பு வலையை எரித்துவிடும் என்று நான் நம்புகிறேன். இந்த விளையாட்டில் நான் வெற்றி அடைய வேண்டும் என்றால் என்னுடைய கோபம் அதனுடைய அதிகபட்சத்துக்கு போகவேண்டும். கடவுளுடைய அனைத்து செயல்களையும் அந்த கோபம் எரிக்க வேண்டும். இதைத்தான் நான் கண்டுபிடித்து இருக்கிறேன். கோபம்தான் பாதுகாப்பு. கோபம் இல்லை என்றால் அடித்து அவமானப்படுத்தப்படுவார்கள். கோபம் இருந்தால் கடவுளால் கூட எதுவுமே பண்ண முடியாது. 

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...