இந்த மாதிரி நிறைய படங்களை நாம் ஹாலிவுட்டில் அடிக்கடி பார்க்க முடியாது. ஸ்பை திரைப்படங்களின் ஜேனரை வேற ஒரு லெவல்லில் கொண்டுபோன படங்களின் பட்டியலில் இந்த படத்துக்கு ஒரு தனியான இடம் கொடுக்க வேண்டும். இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் ஒரு ஆர்ட்டிஃப்பிஷியல் இண்டெலிஜன்ஸ் உலகத்தின் அனைத்து கணினி தொழில்நுட்பங்களையும் கட்டுப்படுத்தி என்னவோ மோசமாக பண்ண நினைக்கிறது. நாடுகளுடைய தனித்தனி அரசாங்கங்கள் அந்த ஆர்ட்டிஃப்பிஷியல் இண்டெலிஜன்ஸ்ஸை கட்டுப்படுத்தவும் மூன்றாம் உலக போருக்காக பயன்படுத்தவும் அதனுடைய கட்டுபாட்டை அடைந்துவிட போராடுகிறார்கள். நடக்கக்கூடிய அசம்பாவிதத்தை தடுக்க ஈதன் பண்ணும் போராட்டத்தில் நெருக்கமான நண்பர்கள் கைகொடுக்க காதலிக்கும் எலிஸா ஈதனை காப்பாற்றும் போராட்டத்தில் உயிரை தியாகம் செய்கிறாள். இந்த இண்டெலிஜென்ஸை முடக்க ஒரே வழி என்பது பிரித்து வைக்கப்பட்ட இரண்டு சாவிகள்தான் என்பதால் உயிரை பணயம் வைத்து அந்த சாவிகளை மீட்பதுதான் இந்த படத்தின் கதை. இரு பாகங்கள் என்று வெளியிடப்படும் படங்களில் இதுதான் முதல் பாகம் என்பதால் இந்த படத்துடைய இரண்டாம் பாகத்துக்கு எல்லோருமே விறுவிறுப்பாக எதிர்பார்க்கும் அளவுக்கு திரைக்கதையில் அவ்வளவு வேகத்தை கூட்டி இருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரம் கண்டினியூவான ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்தின் ஃபேன்ஸ்களுக்கு ஒரு விஷுவல் மழைச்சாரல் என்றே சொல்லலாம். படத்துக்காக நிறைய பிரமாதமான ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் இருப்பது படத்துடைய திரைக்கதைக்கு பயங்கரமாக பலமாக இருக்கிறது. ஒரு இன்டர்நேஷனல் ரிலீஸ்க்கு கண்டிப்பாக வோர்த்தான படம் என்று இந்த படத்தை சொல்லலாம் இதுதான் இந்த வலைப்பூ விமர்சனம் ! இந்த வலைப்பூவில் சந்தாவால் இணைந்து இந்த வலைப்பூ நிறைய பணம் சம்பாதிக்க உதவுங்கள் என்று கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக