Friday, June 14, 2024

MUSIC TALKS - MANASELLAM MAZHAIYE NANAIGIREN UYIRE EN NENJIL VANDHU THANGI SAARAL ADITHAAL ENNAGUM UYIRE SONG - VERA LEVEL PAATU !

 


மனசெல்லாம் மழையே 
நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து 
தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே
என் கண்ணில் வந்து நின்று 
என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே


இரவில் வந்தது சந்திரனா 
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா

பகலில் இருப்பது சூரியனா 
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்
மழையே மனம் உன்னாலே பூ பூக்குதே


மனசெல்லாம் மழையே 
நனைகிறேன் உயிரே
வானில் போகும் பறவைகளாய் 
நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்


வேறு வேறு விண்வெளியில் 
மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்


காற்றாகி கைகோர்த்து போவோமே
முகிலாகி அங்கும் இங்கும் 
ஊஞ்சல் ஆடுவோம்


கனவில் வருவது சாத்தியமா 
என் எதிரே நடப்பது மந்திரமா
நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ

கனவில் வாழ்வது சாத்தியமே 
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே

மழையே மனம் உன்னாலே பூ பூக்குதே
மனசெல்லாம் மழையே 
நனைகிறேன் உயிரே


காதலாகி கரைந்துவிட்டால் 
காலம் நேரம் மறந்திடுமே
வானிலை மாறுமே
ஏழு வண்ண வானவிலில் 
நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே
வெயிலோடு மழை வந்து தூறுமே..
முகிலாகி அங்கும் இங்கும் 
ஊஞ்சல் ஆடுவோம்


தரையில் விண்மீன் வருவதில்லை வந்தாலும் 
கண் அதை பார்ப்பதில்லை பார்த்தாலும் 
கை அதை தொடுவதில்லை தொட்டாலோ 
என்ன ஆகும் என் மனம் 
தரையில் விண்மீன் வருவதுண்டு வந்தாலும் 
கண் அதை பார்ப்பதுண்டு பார்த்தாலும் 
கை அதை தொடுவதுண்டு தொட்டாலோ 
காதல் ஆகும் உன் மனம்


மனசெல்லாம் மழையே 
நனைகிறேன் உயிரே
மழையே மனம் உன்னாலே பூ பூக்குதே

1 comment:

  1. 𝐊𝐚𝐝𝐚𝐭𝐡𝐭𝐡𝐚𝐥 𝐌𝐚𝐧𝐧𝐚𝐧June 17, 2024 at 12:37 AM

    ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினை போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
    ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ
    ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ
    ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

    பின்னல் இட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் இட்டு
    மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
    பின்னல் இட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் இட்டு
    மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
    அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
    மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
    மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

    நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
    தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
    அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும்
    யாரவனைத் தூங்கவிட்டார் ? ஆராரோ
    யாரவனைத் தூங்கவிட்டார் ? ஆராரோ

    கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே
    தூங்கிவிடும் அன்னையரே துயில் எழுப்ப வாரீரோ ?
    அவன் பொன் அழகை பார்ப்பதற்க்கும் போதை முத்தம் பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ ? கன்னியரே கோபியரே வாரீரோ ?

    ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
    அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
    ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ
    ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ
    ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

    ReplyDelete

MUSIC TALKS - VIDALA PULLA NESATHTHUKKU SEVATHTHA PULLAI PAASATHTHUKKU AZHAGAR MALAI KAATHTHU VANDHU THOOTHU SOLLADHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ? விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழக...