திங்கள், 10 ஜூன், 2024

GENERAL TALKS - சக்திகள்தான் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு !



கொடியவர்கள் எண்ணிக்கையில் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றார்கள். எனக்கு மட்டும் சக்திகள் இருந்தால் இவர்களுடைய அதிகாரத்தின் அனைத்து துகள்களையும் உடைத்து இவர்களை என்னால் வெற்றியடைய முடியும். கடவுளுக்கு இந்த விஷயத்தை என்னால் செய்ய முடியும் என்று தெரிந்தும் எனக்கு எந்த விதமான சக்தியையும் அதிகாரத்தையும் கொடுக்காமல் இருப்பது முட்டாள்தனத்திலும் முட்டாள்தனம் மிகப்பெரிய முட்டாள்தனம். தொடர்ந்து இந்த முட்டாள்தனத்தை என்னால் அனுமதிக்க முடியாது இந்த உலகம் இன்னும் ஆபத்து நெருங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த அத்தனை விஷயங்களும் சுயநலம் என்று ஒவ்வொருவரும் நினைக்கின்றார்கள். ஆனால் இது எந்த வகையிலும் சுயநலம் சாராதது சுயநலத்தால் சேர்த்து வைத்த சொத்துக்களை எத்தனை ஆட்கள் தான் எத்தனை மாதங்கள் தான் எத்தனை ஆண்டுகள் தான் பயன்படுத்த போகிறோம். நான் இங்கே நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். சுயநலமோ பொதுநலமோ சுற்றுச்சூழல் நலமோ எல்லா வகையான நலமும் முக்கியம்தானே ! நான் என்ன தப்பான விஷயமா செய்கிறேன் ? தப்பான விஷயங்களை செய்பவர்களுக்கு எல்லாம் அதிகாரம் நன்றாக கிடைக்கிறது. சரியான விஷயங்களை செய்பவர்களுக்கு இருப்பவை எல்லாம் இழந்த ஒரு அடிமை வாழ்வுதான். இந்த உலகத்தில் யார்தான் அடிமைகளை நன்றாக வைத்துக்கொள்வார்கள் சொல்லுங்கள். காலத்துக்கு காலம் கொடுமைகள் அதிகார வர்க்கத்தால் நடந்துகொண்டே இருக்கிறது. இதனை தடுக்க சக்திகளை கொடுக்காமல் இருப்பது பெரிய முட்டாள்தனம். இந்த சக்திகளை எப்படியாவது எடுக்க வேண்டும். சக்திகள்தான் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ! #POWERISPERMANENTSOLUTION !

கருத்துகள் இல்லை:

TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !

  நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல...