Wednesday, January 31, 2024

CINEMA TALKS - MEESAYA MURUKKU - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


ஒரு பயோகிராப்பி படம்தான் என்றாலும் ஸேமி பயோகிராபியாக ஹிப் ஹாப் தமிழா குழுவின் ஆதி மற்றும் ஜீவா ஆகிய இருவரில் ஆதியின் கதையை சொல்லி இருக்கிறார்கள். அவருடைய வாழ்க்கையில் ஒரு இன்டிபெண்டன்ட் மியூசிக் க்ரியேட்டர்ராக கேரியரில் எஸ்டாப்லிஸ் ஆவதற்க்கு முன்னால் அவருடைய வாழ்க்கையில் என்னென்ன விஷயங்கள் நடந்தது என்று இந்த படம் நல்ல இண்டரெஸ்ட்டிங் மியூசிக்கல் காமெடியாக கொடுத்து உள்ளது. சினிமாட்டோகிராபி , மியூசிக் , ஸ்கிரீன் பிளே , எல்லாமே ஃபேன்டாஸ்டிக். படம் சூப்பர்ராக எடுக்கும் அளவுக்கு பெரிய ப்ரொடக்ஷன் வேல்யூ கிடைத்து இருப்பதும் விவேக் அவர்களின் கதாப்பத்திரமும் படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட். காலேஜ் லைஃப் காட்சிகள் நன்றாகவே எடுக்கப்பட்டு உள்ளது. சராசரி இளைஞர்களின் லவ் ஸ்டோரியாக இந்த படம் கமேர்ஷியல் படங்களின் ஸ்டைல்லில் வெளிவந்த ஒரு குறைகள் இல்லாத பயோகிராபி படமாக வெளிவந்து உள்ளது. பேசிக்காக டேபட் கொடுக்கும் படங்களில் இன்ஸ்டண்ட் சூப்பர் ஹிட் எடுக்க வேண்டும் என்றால் அதுக்கு படத்தில் தரமான கன்டன்ட் மற்றும் சிறப்பான வேல்யூக்கல் இருக்க வேண்டும். இந்த படம் பெஸ்ட் எஃப்பர்ட்ஸ் கொடுத்து இருப்பதால் இன்ஸ்டண்ட் ஹிட் என்று உருவாகி உள்ளது. இந்த படம் கண்டிப்பாக எல்லோருமே பார்க்க வேண்டிய ஒரு நைஸ் பயோகிராபி டிராமா. இதுதான் இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்து பகிர்வு. இந்த விமர்சனங்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் கண்டிப்பாக அனைத்து போஸ்ட்களையும் படித்து இந்த வலைப்பூவுக்கு சப்போர்ட் பண்ணுங்கள் !

CINEMA TALKS - LOGAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


மெயின்ஸ்ட்ரீம் எக்ஸ் மென் ஸிரியஸ்ஸில் இருந்து யாருமே எதிறப்பார்க்காத அளவுக்கு ஒரு கதைக்களம் இந்த படம். இந்த படத்தில் வோல்வேரின் அவருடைய சக்திகள் குறைந்துகொண்டு இருக்கிறது என்று தெரிந்தும் அவருடைய உயிரை பணயம் வைத்து அவருடைய மகளையும் அவளை போலவே சூப்பர் சக்திகள் நிறைந்த குழந்தைகளையும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் தனியார் நிறுவனத்திடம் இருந்து காப்பாற்ற போராடுகிறார். அவருக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும்போது உலகமே எதிர்ப்பது போல ஒரு ஒரு நாள் வாழ்க்கையிலும் கஷ்டத்தில் மட்டுமே சென்றாலும் எக்ஸ் மென் படங்களின் சீரியஸ் நிறைந்த டோன் இந்த படத்தில் நன்றாக மிக்கப்படுத்தி காட்டப்பட்டு உள்ளது. ஜேம்ஸ் மேன்கோல்ட் அமெரிக்கன் லைஃப்ஸ்டைல் பற்றிய ஒரு நேரடியான கமென்ட்டேரியை காமிக் புக்ஸ் கேரக்ட்டர்ஸ்க்கு அக்யூரேஸியாக படத்தில் கொடுத்து இருக்கிறார். கிளைமாக்ஸ் கொஞ்சம் டிஸ்ப்பாயிண்ட்மென்ட்தான். ஸ்டோரிக்கு அவசியம் இல்லாத கிளைமாக்ஸ். இது ஒரு அல்ட்டேர்னேட் டைம்லைன் என்பதால் வோல்வேரின் வாழ்க்கை மிகவுமே மாறுப்பட்டு இருக்கிறது.  வோல்வேரின் அவருடைய வாழ்க்கையில் எவ்வளவு வலிகளையும் வேதனைகளையும் சந்தித்த ஜேன்டில்மேன்னாக இருந்து இருக்கிறார் என்று இந்த சூப்பர் ஹீரோ படம் அந்த படத்தின் ஜெனெரேயே தியாகம் செய்து மொத்தமாக சயின்ஸ் பிக்ஷன் படம் லெவல்க்கு திரைக்கதையை நகர்த்தி இருக்கிறது. இதுதான் இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்து பகிர்வு. இந்த விமர்சனங்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் கண்டிப்பாக அனைத்து போஸ்ட்களையும் படித்து இந்த வலைப்பூவுக்கு சப்போர்ட் பண்ணுங்கள் !

MUSIC TALKS - AYYAYO NENJU ALAIYUDHADI AAGAYAM IPPO VALAIYUTHADI - VERA LEVEL PAATU !


அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி 
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி 
உன்னை பார்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சு நகரவே இல்ல 
தின்ன சோறும் செரிக்கவே இல்ல குழம்புறேன் நானே 
உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே 
என் சேவல் கூவுற சத்தம் உன் பேரா கேக்குறதே 
அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி 
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி 

 
உன்னை தொடும் அனல்காத்து கடக்கையிலே பூங்காத்து 
குழம்பி தவிக்குதடி என் மனசு 
திருவிழா கடைகளைப் போல திணறுறேன் நான்தானே 
எதிரில் நீ வரும்போது மிரளுறேன் ஏன் தானோ ?
கண்சிமிட்டும் தீயே என்ன எரிச்சிப்புட்ட நீயே !

அய்யயோ நெஞ்சு - அலையுதடி - ஆகாயம் இப்போ - வளையுதடி 
என் வீட்டில் மின்னல் - ஒளியுதடி - ஓ என்மேல நிலா - பொழியுதடி 
 
மழைச்சாரல் விழும்வேளை மண்வாசம் மணம் வீச 
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன் 
கோடையில அடிக்கிற மழையா நீ என்ன நனைச்சாயே 
ஈரத்தில அணைக்கிற சுகத்தை பார்வையிலே கொடுத்தாயே 
பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன 

ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரல நான் 
 
அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி 
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி 
உன்னை பார்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சு நகரவே இல்ல 
தின்ன சோறும் செரிக்கவே இல்ல குழம்புறேன் நானே 
உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே 
என் சேவல் கூவுற சத்தம் உன் பேரா கேக்குறதே 
அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி 
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி 

MUSIC TALKS - MINNALGAL KOOTHADUM MAZHAIKAALAM - VERA LEVEL PAATU !

 


மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம் 
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம் 
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம் 
என் விழி எங்கும் பூக்காலம் !
 
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடி 
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே ஹையோ பைத்தியமே பிடித்ததடி 
 
.. 
 
முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே 
தலையணை உறையில் ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே 
காலை தேனீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே 
கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே 
 
காதலி ஒரு வகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமே 
வெளவாலைப் போல் நாமும் உலகம் மாறி தலை கீழாக தொங்கிடுமே 
 
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடி 
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே ஹையோ பைத்தியமே பிடித்ததடி
 
என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே 
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே 
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே 
ஓ.. குட்டி பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே 
 
.. 
.. 
 
காதலும் ஒரு வகை போதை தானே உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போல 
ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனால் புன்னகை செய்து கொஞ்சும் 
தாய் போல !
 
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடி 
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே ஹையோ பைத்தியமே பிடித்ததடி 

CINEMA TALKS - MANAM KOTHI PARAVAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


கிராமத்தில் சாதாரண இளைஞராக இருக்கிறார் கண்ணன். அவருடைய சின்ன வயதில் இருந்து தோழியாக இருக்கும் ரேவதியை காதலித்தாலும் இந்த காதல் கதை தோல்வியில்தான் முடிகிறது. நட்பு இருக்க நண்பர்கள் இருக்க இந்த பிரச்சனையை அப்படியே விட்டுவிடாமல் காதலுக்கு மரியாதை போல சேர்த்து வைக்கிறார்கள். பின்னாட்களில் பெண் வீட்டாரின் கோபத்தில் இருந்து எப்படி சமாளித்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றியடைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஸாங்க்ஸ் எல்லாமே இமான் அவர்களுடைய இசையில் சூப்பர் ஹிட். படத்துக்காக இருக்கும் பேக்ரவுன்ட் ஸ்கோர் வேற லெவல். எழில் எப்போதும் போல ஒரு கலகலப்பான ரொமான்டிக் காமெடியை கொடுப்பதில் சூப்பர் சக்ஸஸ் அடைந்துவிட்டார். படத்தின் டைட்டில் போல நீங்கள் ஒரு முறை இந்த படத்தை பார்த்தாலும் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல இம்ப்ரஷன் கிடைக்கும். காமிரா வொர்க் என்பது பெஸ்ட் ஆஃப் பெஸ்ட், படத்துக்கு பட்ஜெட் இருப்பதாலும் லீட் கேரக்ட்டர்ஸ் எல்லோருமே ரேலேட்டிவ்லி ஃபிரெஷ் என்பதாலும் சூப்பர் ஸ்டாண்டர்ட் சினிமாடோகிராபி எக்ஸ்பெரியென்ஸ் கொடுத்து இருக்கிறார். எதிர்பார்ப்புகளை மொத்தமாக நிறைவேற்றும் ஒரு நல்ல ரொமான்டிக் காமெடி ஃப்யூச்சர் இந்த மனம் கொத்தி பறவை. இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த வலைப்பூவின் தகவல்கள் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக அனைத்து போஸ்ட்களையும் படித்து வலைப்பூவுக்கு பேராதரவு கொடுக்குமாறு கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். சிறந்த கமெண்ட் கொடுப்பவர்களுக்கு ஒரு சோப்பு டப்பா கூரியர்ரில் அனுப்பப்படும். இது ஒரு எக்ஸ்க்ளுஸிவ் ஈவேன்ட் ! கண்டிப்பாக மிஸ் பண்ணாதீர்கள் !

MUSIC TALKS - KANAVELLAM NEETHANE UYIRE UNAKKE UYIRANAN - VERA LEVEL PAATU !

 


கனவெல்லாம்  நீ தானே விழியே உனக்கே உயிரானேன் 
நினைவெல்லாம்  நீ தானே கலையாத யுகம் சுகம் தானே 
 
பார்வை உன்னை அழைக்கிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே 
அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே 
 
கனவெல்லாம்  நீ தானே விழியே உனக்கே உயிரானேன் 
நினைவெல்லாம்  நீ தானே கலையாத யுகம் சுகம் தானே 
 
 
சாரல் மழை துளியில் உன் ரகசியத்தை வெளி பார்த்தேன் 
நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக 
என்னை அறியாமல் மனம் பறித்தாய் உன்னை மறவேனடி 
நிஜம் புரியாத  நிலை அடைந்தேன் இது எது வரை சொல்லடி 
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் 
 
கனவெல்லாம்  நீ தானே விழியே உனக்கே உயிரானேன் 
நினைவெல்லாம்  நீ தானே கலையாத யுகம் சுகம் தானே 
 
தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி 
கானலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன் 
இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே 
தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன் 
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் 
 

கனவெல்லாம்  நீ தானே விழியே உனக்கே உயிரானேன் 
நினைவெல்லாம்  நீ தானே கலையாத யுகம் சுகம் தானே 
 
பார்வை உன்னை அழைக்கிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே 
அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே 

கனவெல்லாம்  நீ தானே விழியே உனக்கே உயிரானேன் 
நினைவெல்லாம்  நீ தானே கலையாத யுகம் சுகம் தானே 

GENERAL TALKS - ப்ரோமிஸ் பண்ணாதீங்க ! ப்ரோமிஸ் எப்பவுமே பண்ணாதீங்க !

 



வேலையை செய்ய விருப்பம் இல்லாமல் வாழ்க்கையில் நிறைய சலிப்பும் சோர்வும் இருக்கும்போதும் வாழ்க்கையே மிகவுமே மன கசப்பாக இருக்கும்போதும் எந்த ஒரு நொடியையும் அனுபவிக்க விருப்பமே இருக்காது. பொதுவான குழப்பங்களில் பெரிய குழப்பம் நான் எதுக்காக இந்த விஷயங்களை பிராமிஸ் பண்ணினேன் ? எதுக்காக இப்போது நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறேன் ? என்பதுதான் இது எல்லா நாளுமே நடக்கும் ஒரு விஷயம்தான். நாம் என்னமோ ஒரு குருட்டு தைரியத்தில் நம்பிக்கையாக எதிர்காலத்தில் இது நடக்கும், நடத்தி காட்டுவேன் என்ற வார்த்தைகளை கொடுத்துவிடுவோம் ஆனால் நம்முடைய சக்திகளை மொத்தமுமே பயன்படுத்தினாலும் கொடுத்த வார்த்தையை நம்மால் நிறைவேற்ற முடியாது. இப்படி கொடுத்த வார்த்தைகளை நிறைவேற்ற முடியாமல் போவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. இந்த வகையான காரணங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதல் வகை நம்முடைய மனதின் காரணங்கள். நம்முடைய வாழ்க்கையில் வெற்றியை அடைய வேண்டும் என்றால் எப்போதுமே நம்மை நம்ப வேண்டும். ஆனால் நம்பினால் மட்டுமே போதாது வெற்றியை அடைய செய்யும் விஷயங்களுக்காக தேவைப்படும் பலமும் சக்தியும் நமக்குள்ளே இருக்க வேண்டும். இரண்டாம் வகை வெளிப்புறத்தில் இருந்து வரும் தடுப்புகள் , நாம் ஒரு விஷயத்தை செய்து முன்னேற கூடாது என்று தடுப்பு வெளியில் இருந்து வந்தால் நாம் என்ன செய்தாலும் அவைகளை தடுக்கும் மனிதர்கள் வெளியே இருந்தால் நம்மால் அப்போதுமே எதுவுமே பண்ண முடியாது. நீங்கள் ஒரு சிறப்பான திட்டத்தை கொடுக்கின்றீர்கள். உங்களுடைய மேலதிகாரி உங்களை முட்டாளாக கருதி உங்கள் திட்டங்களை குப்பைகளுக்கு அனுப்புகின்றார். இப்போது உங்கள் மீது தவறு என்றா சொல்ல முடியும் ? கண்டிப்பாக மேல் அதிகாரி மேலேதான் தவறு என்று தெளிவாக உங்களுக்கு புரிகிறது அல்லவா ? ஆனால் வேலை யாருக்கு கேட்டுப்போகிறது ? ஆட்சியில் ஆளுமையில் முன்னேற்றத்தை விரும்பாத சுய நலமும் மற்றவர்களை இளக்காரமாக ஏளனமாக பாருக்கும் குணமும் இருப்பவர் இருக்கின்றார் என்றால் அவர் பெரிய பெரிய முன்னேற்றங்களை இழக்கிறார். இணைந்து செயல்படாமல் எதிரிகளை சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றார். இவ்வாறுதான் நீங்கள் கொடுத்த வார்த்தைகளை நீங்களே நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்ற சம்பவம் நடக்கிறது, 1. உங்களுக்கு சக்தி மிகவும் குறைவாக இருக்கிறது 2. உங்களின் முயற்சிகள் வெளிமனிதர்களால் தடுக்கப்படுகிறது. இந்த மாதிரியான விஷயங்களால்தான் நான் எப்போதுமே ஒருவருக்கு இந்த விஷயத்தை செய்வோம் என்று பரோமிஸ் பண்ணி கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க சொல்கிறேன். காலம் எப்போதுமே நம்முடைய சப்போர்ட்டில் இருக்காது. நடக்கக்கூடிய சம்பவங்கள் நம்முடைய கட்டுப்பட்டுக்குள்ளேயும் இருக்காது. நான் கொடுத்த வார்த்தைகளை காப்பாற்ற முயற்சி செய்தால் சுமக்க நினைக்கும் பாரத்தின் எடை தெரிந்துகொள்ளாமல் தூக்கிக்கொண்டு சென்றுவிடுவேன் என்ற கவனமற்ற வாக்குறுதியை கொடுப்பதாக மட்டும்தான் என்னுடைய வாழ்க்கை எனக்கு இருக்கின்றது. அதனால்தான் ஒரு விஷயத்தில் இன்னொருவருக்கு வார்த்தை கொடுப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பதை எப்போதுமே தெளிவாக நான் புரிந்துகொண்டு வேலை செய்துகொண்டு இருக்கின்றேன். இந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் நிறைய வாழ்க்கை அனுபவங்களால் நான் பட்ட கஷ்டத்தினால் மட்டும்தான் கற்றுக்கொண்டேன். இது நிச்சயமாக என்னுடைய பட்டறிவுதான். 

Tuesday, January 30, 2024

GENERAL TALKS - ஒரு சிறப்பான ஆன்ட்ராய்ட் கேம் !

 



இந்த வலைப்பூவை அப்ரிஷியேஷன் பண்ணுபவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும் , சமீப காலமாக ஃப்ரீ ஃபயர் மேக்ஸ் என்ற ஸ்மார்ட் ஃபோன் விளையாட்டு ஒரு பிசினஸ் மாடல் என்ற வகையில் நன்றாக என்னை கவர்ந்து இருக்கிறது. கண்டிப்பாக இன் ஆப் பெர்ச்செஸ்ஸில் அதிக தொகைக்கு பேக்கேஜ்களை விற்கின்றார்கள் என்பது குறைதான் இருந்தாலும் உலகம் முழுவதும் விளையாடும் விளையாட்டு என்பதால் நன்றாக ஆப்டிமைஸ் பண்ணி இருக்கிறார்கள். டேவலப்பர்களை கொண்டு குறைகள் இருந்தால் எளிதில் சரிபண்ணி விடுகிறார்கள். விளையாட்டு குறைவான கிராப்பிக்ஸ் செட்டிங்ஸ் வைக்கும் பட்சத்தில் நன்றாக விளையாட முடிகிறது. ஆனால் 1.1 GB க்கும் குறைவான ஃபைல் சைஸ் என்றாலும் விளையாட்டு முடிந்த வரையில் நன்றாகவே வண்ணமயமாக புது புது விஷயங்களுடன் வந்துகொண்டு இருக்கிறது. மாதம் மாதம் நிறைய அப்டேட்களை கொடுத்து  இந்த கணினி விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருக்கும் அளவுக்கு அமைத்து இருக்கின்றார்கள். நம்ம வாழ்க்கையில் நிறைய பேருடன் பேசும் பழகும் இன்ட்ராக்ஷன்கள் குறைந்துவிட்டது என்றால் ரேலாக்ஷேஷனுக்கு ஒரு கேம் வேண்டும் என்றால் இந்த விளையாட்டு ஒரு நல்ல படைப்பு. நம்ம ஊரிலும் இதுபோன்று ஒரு வீடியோ கேம் உருவாக்கினால் கண்டிப்பாக நன்றாக இருக்கும். ஆன்லைன் விளையாட்டு என்பதால் இந்த விளையாட்டில் நிஜமாகவே நிறைய பேருடன் விளையாடுகிறோம் என்பதால் வாய்ஸ் சாட்டிங் வசதிகளை குறைத்துக்கொள்வது நல்லது. மற்றபடி ஒரு தரமான விளையாட்டுக்கான எல்லா விஷயங்களும் இந்த விளையாட்டில் இருக்கிறது. ஒரு இண்டரெஸ்ட்டிங் ஆன வீடியோ கேம் சில வாரங்களுக்கு விளையாட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த விளையாட்டு நல்ல சாய்ஸ் என்று இருக்கலாம். பொதுவாக நான் விளையாட்டுக்களை அதிகமாக ரேக்கமேன்டேஷன் பண்ணுவது இல்லை. இதுவுமே நான் மிக மிக அதிகமாக வருத்ததில் இருந்தபோது விளையாட ஆரம்பித்த ஒரு ரேலாக்ஸேஷன் விஷயமாக எனக்கு பிடித்து இருந்த காரணத்தாலும் ஒரு கம்பெரிஸனுக்கு ஜி.டி.ஏ. அல்லது கால் ஆஃப் டியூட்டி போன்ற விளையாட்டுக்களை போல காட்சிகளின் அமைப்பு பிரமாதமாக இருக்கிறது என்பதாலும் நான் இந்த விளையாட்டை பற்றி ஒரு பதிவை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். குழந்தைகள் விளையாடும் பட்சத்தில் கிரேடிட் கார்டு அல்லது வங்கிக்கணக்கு மூலமாக அதிகமாக பணம் செலவு பண்ண வாய்ப்புகள் உள்ளது என்பதால் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஃபோன்களில் இந்த விளையாட்டை விளையாடுவதை தவிர்க்கவும். இது நான் ஒரு பொதுவான அட்வைஸ் என்று சொல்கிறேன். பிளே ஸ்டோர் மூலமாக டிஜிட்டல் விஷயங்களாக ஆப்ஸ் , காணொளிகள் , சினிமா , கணினி விளையாட்டு பெர்ச்செஸ்கள் என்பது போன்ற விஷயங்களுக்கு தேவைப்பட்டால் பிளே ஸ்டோர் பேலன்ஸ் பணத்தை ரீ-சார்ஜ் செய்து அந்த பணத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். நேரடியாக வங்கி கணக்கு அல்லது யூபிஐ ஆப்ஸ்களை இவைகளில் இணைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். டிஜிட்டல் வாங்கல் விற்றல் எப்போதுமே நிஜ வாழ்க்கை பொருட்களைப்போல உத்திரவாதங்கள் கொடுக்க முடியாத விஷயங்கள். மொத்தத்தில் ஃப்ரீ ஃபயர் மேக்ஸ் என்ற இந்த ஆன்ட்ராய்ட் விளையாட்டு நான் விளையாடிய கொஞ்சம் வாரங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்தது. இந்த விளையாட்டை போல நம்ம ஊரு ஆடியன்ஸ்க்கு பிடித்ததாக ஒரு விளையாட்டு உருவாக்கலாம் என்ற ப்ராஜேக்ட் ஐடியா கிடைத்து உள்ளது. கண்டிப்பாக பாருங்கள் ஒரு நாளில் நிறைய அட்வென்சர் நிறைந்த ஒரு நல்ல கணினி விளையாட்டை நான் பப்ளிஷ் பண்ணுவேன். இந்த வலைப்பூவை விஸிட் அடித்தமைக்கு நன்றிகள். மறக்காமல் எல்லா போஸ்ட்களையும் படிக்கவும். இந்த மொத்த வலைப்பூவும் ஒரே ஒரு மனிதனால் எழுதப்படுகிறது என்பதால் கண்டிப்பாக குறைகளை மன்னிக்கவும். 




































GENERAL TALKS - கடவுள் மேலே நம்பிக்கையும் அன்பும் !




கடவுள் மேல் எப்போதுமே நிறைய நம்பிக்கையும் அன்பும் வைத்து இருக்கின்றேன். நான் மிகவுமே கடினமான சூழ்நிலைகளை வாழ்க்கையில் சந்தித்து இருக்கின்றேன். என்னுடைய அளவுக்கு யாருமே கஷ்டப்பட்டு இருக்க முடியாது. வாழ்க்கை எந்த அளவுக்கு அதிகமான பிரச்சனைகளை கொடுத்தாலும் கூட முடிந்தவரைக்கும் என்னால் யோசித்து என்ன என்ன செயல்களை செய்ய வேண்டுமோ அந்த செயல்களை செய்து பிரச்சனைகளை சரிசெய்துவிடுகிறேன் , கடவுளிடம் வேண்டிக்கொள்ளுவது எனக்கான சக்தியை மட்டும்தான். எனக்காக இந்த செயலை முடித்துவிடுங்கள் என்றும் எனக்காக இந்த பொருளை வாங்கிக்கொடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டு இருப்பதை முடிந்த வரையில் குறைத்துககொள்கிறேன். இந்த உலகத்தில் எல்லோருக்குமே கடவுளாக மாறவேண்டும் என்று ஆசைகள் இருக்கும், பெரும்பாலுமே ஆசைப்பட்ட விஷயங்கள் நமக்கு கிடைக்கவில்லை என்றும் கடவுளுடைய சக்திகள் இருந்தால் எப்படியோ மாயாஜாலமாக ஆசைப்பட்ட விஷயங்கள் எல்லாமே கிடைத்துவிடும் என்றுமிதான் உங்களுடைய மனது சொல்கிறது அல்லவா ? இமாஜின் பண்ணி பாருங்களேன் நிலநடுக்கம் நடக்கும்போதும் வெள்ளத்தால் நகரங்கள் சேதமாக்கும்போதும் விபத்துக்கள் நடக்கும்போதும் நோய்களால் பாதிக்கப்படும்போதும் போர்கள் நடக்கும்போதும் என்று பெரிய பெரிய விஷயங்களில் நாம் பாதிக்கப்படும்போது நமக்கான சப்போர்ட்டாக கடவுள் மட்டும்தான் இருப்பார். கடவுள் பொறுப்பில் இருந்து காப்பாற்றுவது உங்களால் நினைத்து கூட பார்க்க முடியாத மிகப்பெரிய விஷயம், மருத்துவத்தால் சரிபண்ண முடியாத விஷயங்களை கூட கடவுளால் குணப்படுத்த முடியும், கதைகளை கட்டிவிட்டால் நம்பி கடவுளை குறைசொல்ல கூடாது. கடவுளுடைய பொறுப்புகள் எப்போதுமே அவரை நிறைய இடங்களில் வைத்து இருப்பதால் அவரால் எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் இருக்க முடிவது இல்லை. நீங்கள் ஒரு ஆபத்தில் இருந்தால் நீங்கள்தான் உங்களுடைய ஆபத்தை எதிர்த்து சண்டை போடவேண்டும். உங்களுடைய தோல்விகளுக்கும் உங்களுடைய வலிகளுக்கும் நீங்கள் கடவுளை குறை சொல்ல வேண்டாம். நாம் பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய சந்தோஷத்துக்காக இன்னொருவருடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். நாம் எப்போதுமே அதிகமாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் நமக்காக இன்னொருவர் நாம் விரும்பும் செயல்களை முடித்து இலாபம் ஈட்ட வேண்டும். விஷயங்கள் கஷ்டமாகத்தான் இருக்கிறது ஆனால் இப்படி இன்னொருவருடைய உழைப்பும் இன்னொருவருடைய கஷ்டமும் இல்லாமல் முன்னேறி செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும்  ஒரு செயல். இணனைக்கு நாம் மற்றவர்களை கஷ்டப்படுத்தி சந்தோஷமாக வாழ்ந்துவிடலாம் ஆனால் ஒரு கட்டத்தில் சந்தோஷங்கள் திகட்டிப்போவதால் வாழ்க்கை மேலே வெறுப்புதான் உண்டாகும். நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய சக்திகள் இருந்தாலும் நிறைய விஷயங்களை நம்மால் மாற்றவே முடியாது. பணம் , பொருள் , செல்வம் , ஆசைகள் , சந்தோஷங்கள் , கொண்டாட்டங்கள் என்று ஒரு வாழ்க்கை உங்களிடம் இருந்தால் இன்னொரு பக்கம் , பணம் , பாதுகாப்பு , சக்தி , வெற்றிகள் , மதிப்பு , மரியாதை என்று இன்னொரு வகை வாழ்க்கையுமே உங்களுடைய சாய்ஸ்ஸில் இருக்கிறது. காலத்தில் நடக்கும் சந்தோஷமும் துக்கமும் எப்போதுமே கடவுளுடைய கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. இன்னுமே கடவுளுடைய சக்திகள் மேல் அதிகமான ஆசைகள் இருக்கிறது என்றால் உங்களுக்கு ஒரு விஷயம், இந்த உலகத்துக்கு ஆக்ஸ்ஸிஜேன் கொடுக்கும் மரங்களையும் , கடல் பாசிகளையும் , தாவர உயிரினங்களையும் கொடுப்பது மட்டுமே இல்லாமல் சமநிலையில் விலங்குகள் , பறவைகள் , பூச்சிகள் மற்றும் நிறைய உயிர்களை பார்த்துக்கொள்வது மிகவுமே பெரிய பொறுப்பு ஆகும். கடவுளால் மட்டும்தான் இந்த விஷயத்தை செய்ய முடியும், நம்முடைய வாழ்க்கையில் நல்ல விஷயங்களை பண்ணுபவர்களை நேசிக்கின்றோம் , கெட்ட விஷயங்களை பண்ணுபவர்களை வெறுக்கின்றோம் இது போலவே கடவுளும் எப்போதுமே நல்லவர்களை நேசித்து கெட்டவர்களை வெறுத்தால் பாரபட்சம் பார்ப்பதாக அல்லவா மாறிவிடும். ஒருவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கும் , நல்ல விஷயங்களை செய்து புண்ணியங்களை மிக மிக அதிகமாக சேர்த்துக்கொண்டு இருப்பார்கள் , இன்னொருவருக்கு மொத்த கடந்த காலமுமே பணம் இல்லாமல் பணத்துக்காக கெட்ட விஷயங்கள் எல்லாமே செய்து நிறைய பேருடைய வாழ்க்கையில் கஷ்டத்தையும் இழப்புக்களையும் கொடுத்தால்தான் வாழ முடியும் என்றே வாழ்க்கை இருக்கும் , இந்த இருவருமே கடவுளை பொறுத்த வரையில் சமம்தான். அதுதான் கடவுளுடைய கணக்கு. இந்த விஷயங்களை எல்லாம் பக்கம் பக்கமாக சொல்லிக்கொண்டு போகலாம் ஆனால் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. எதுவுமே யோசிக்காமல் கடவுள் மேலே அன்பு செலுத்துங்கள. இதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. 


Sunday, January 28, 2024

CODE TALKS - சோதனை அடிப்படையில் ஒரு பதிவு !

 


MATHEMATICS TALKS - நம்பர்கள் பற்றிய ஒரு சோதனை அடைப்படையில் பதிவு !


SIMPLE TALKS - தமிழ் மாதங்களும் அவைகளில் இருக்கும் நாட்களும் !

 



நம்ம தமிழ் காலேன்டர் மாதங்கள் மற்றும் நாட்களை பற்றி பார்க்கலாம் !

1. சித்திரை (CHITHIRAI) - 31 DAYS

2. வைகாசி (VAIKASI) - 31 DAYS

3. ஆனி (AANI) - 32 DAYS

4. ஆடி (AADI) - 31 DAYS

5. ஆவணி (AAVANI) - 31 DAYS

6. புரட்டாசி (PURATTASI) - 30 DAYS

7. ஐப்பசி (AIPPASI) - 29 OR 30 DAYS (BASED ON THE YEAR)

8. கார்த்திகை (KARTHIGAI) - 29 OR 30 DAYS (BASED ON THE YEAR)

9. மார்கழி (MARGAZHI) - 29 OR 30 DAYS (BASED ON THE YEAR)

10. தை (THAI) - 29 OR 30 DAYS (BASED ON THE YEAR)

11. மாசி (MAASI) - 29 OR 30 DAYS (BASED ON THE YEAR)

12. பங்குனி (PANGUNI) - 29 OR 30 DAYS (BASED ON THE YEAR)

இந்த நாட்களின் எண்ணிக்கை வருடங்கள் மாறும்போது மாறிவிடும் !

OUR BLOG COMPASS - வலைப்பூவின் திசைகாட்டி போஸ்ட் - 3

 



https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-malare-mounama-mouname.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-jal-jalakku-jalakku-un.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-keeravaani-iravinil.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-hey-nilave-hey-nilave-vera.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-ennoda-raasi-nalla-raasi.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-poove-unnai-nesithen-pookal.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-pookal-pookum-tharunam.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-sathikkadha-kangalil.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-unnai-paartha-pinbu-naan.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-vennira-iravugal-kadhalin.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-malligai-mottu-manasai.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-oh-penne-penne-en-kanne.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-veesum-katrukku-poovai.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-sollavaa-sollavaa-oru.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-15.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep16.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-17.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-18.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep19.html
https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-tvp-tamil-review.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-20.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-21.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-22.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-23.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-24.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-27.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-26.html
https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_23.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-25.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-27_23.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-28.html
https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_67.html
https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_50.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-29.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-30.html
https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_25.html
https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_57.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep31.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-years.html
https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_87.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-32.html
https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_26.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-33.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-35.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-34.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-36.html
https://tamilnsa.blogspot.com/2024/01/our-blog-compass.html
https://tamilnsa.blogspot.com/2024/01/our-blog-compass-2.html
https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_38.html
https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-jigarthanda-2014-tamil.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-kuru-kuru-kannale-kadhalai.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-tajmahal-oviya-kadhal.html
https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_27.html
https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_36.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-37.html
https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-38.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-mellisaiye-en-idhayathin.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-thaalattum-poongatru-naan.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-vetri-vetri-endru-sollum.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-janauary-nilave-nalamthana.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-pesa-koodathu-verum-pechil.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-pottu-veitha-kaadhal.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-idho-idho-en-pallavi.html
https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-singam-3-tamil-review.html
https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-soodhu-kavvum-tamil-review.html
https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-moonraker-tamil-review.html
https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-10-p3-8-10.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-vassegara-en-nenjinikka-un.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-enakku-piditha-paadal-adhu.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-boomikku-velichamellam-nee.html
https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-pudhu-vellai-mazhai-ingu.html


Saturday, January 27, 2024

MUSIC TALKS - PUDHU VELLAI MAZHAI INGU POZHIKINDRATHU - VERA LEVEL PAATU !



புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது


நதியே நீயானால் கரை நானே சிறுபறவை நீயானால் உன் வானம் நானே


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது


பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்பதில்லை

பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை

உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது



நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்

நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்

இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ

மலா் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது



நதியே நீயானால் கரை நானே சிறுபறவை நீயானால் உன் வானம் நானே


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

MUSIC TALKS - BOOMIKKU VELICHAMELLAM NEE KAN THIRAPATHANAAL - VERA LEVEL PAATU !!



நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் 
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் 
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

நீ விழியால் விழியை பறித்தாய் உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய் ஓரு அதிசய உலகத்தில் அடைத்தாய்
நீ இதமாய் இதயம் கடித்தாய் என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய் 
நீ மதுவாய் எனையே குடித்தாய் இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காதல் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு 
வானம் ஒரு  பூமி இனி தேவையில்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால் 
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரமில்லை

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் 
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால் என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஹேய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால் என் உயிர் பனிக்கட்டியாக உறையும்
நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால் என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால் என் நெஞ்சுக்குள்ளே கப்பலொன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை சிம்ஃபொனி மின்னலின் தங்கை நீ புரிகிறதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பருகும் புத்தம் புது மிருகம் நீ  தெரிகிறதே

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் 
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

MUSIC TALKS - ENAKKU PIDITHA PAADAL ADHU UNAKKUM PIDIKKUME !




SHREYA GHOSAL VERSION :

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?

மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?

மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்

விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே

குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்

காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ

விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்

நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்

மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?

மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

VIJAY YESUDHAS VERSION :

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?

மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?

மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

பித்து பிடித்ததை போலே அடி பேச்சு குழறுதே !

வண்டு குடைவதே போலே விழி மனசை குடையுதே !

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே

குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்

காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ

விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்

நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்

மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?

மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே


MUSIC TALKS - VASSEGARA EN NENJINIKKA UN PONMADIYIL THOONGINAL PODHUM - VERA LEVEL PAATU !




வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்

அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்

அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே

ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் தானே நான்

அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் 

குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்

எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்

அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்


தினமும் நீ குளித்ததும் என்னை தேடி என் சேலை நுனியால் உந்தன் 
தலை துடைப்பாயே அது கவிதை

திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து என்னை 
நீ அணைப்பாயே அது கவிதை

யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலென்னும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்

அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே

ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் தானே நான்

CINEMA TALKS - பெர்சனல்லாக பிடித்த 10 திரைப்படங்கள் - P.3 - [8-10]

 1. SHERLOCK HOLMES : GAME OF SHADOWS

ஷெர்லாக் ஹோம்ஸ் படம் சூப்பர் ஹிட் ஆன பின்னால் ராபர்ட் டோனி ஜூனியர் மற்றும் ஜுட் லா அவர்களின் கேரக்ட்டர்களை ரேப்ரைஸ் பண்ணின ஒரு சூப்பர்ரான படம். இந்த படத்துடைய காலகட்டத்தில் க்ரைம் செயல்களை உள்ளங்கைக்குள் போட்டுக்கொண்டு மிகவும் புத்திசாலியாக கொடூரமான விஷயங்களை செய்யும் ப்ரோஃப்பஸ்ஸ்ர் மோரியரிட்டி அவருடைய செயல்களை ஷேர்லாக் கண்டுபிடித்து ஒரு பெரிய போரையே தடுக்க உயிரை கொடுத்து போராடுவதுதான் இந்த படத்தின் கதை, இந்த படம் காமிராவின் ஒரு ஒரு ஃபிரேம்மிலும் ஃபேன்டாஸ்டிக்காக இருக்கக்கூடிய ஒரு படம், கண்டிப்பாக நீங்கள் ஒரு முறை பார்க்க வேண்டிய படம். மிஸ் பண்ண வேண்டாம். நம்ம வலைப்பூவின் சிறப்பு பரிந்துரை இந்த படம் என்று நினைத்துக்கொள்ளுங்கள் !


2. THE SHAWSHANK REDEMPTION

நம்ம வாழ்க்கையில் ஒரு பிரச்சனை வந்தால் சரிபண்ணா வேண்டும் அதனை விட்டுவிட்டு ஒடுவதோ அல்லது வாழ்க்கையை வேஸ்ட் பண்ணுவதோ கண்டிப்பாக பண்ண கூடாது என்று சொல்லும் ஒரு சூப்பர்ரான ஒரு படம் இந்த படம். இந்த படத்தின் கதையை ஸ்பாய்லர் பண்ண விரும்பவில்லை. இந்த படத்தில் எம்எஸ் பாஸ்க்கர் அவர்கள் வாய்ஸ் கொடுத்து ஒரு நல்ல கதாப்பத்திரமும் இருக்கிறது. நம்ம வாழக்கை எவ்வளவு முக்கியமானது என்றும் வாழக்கை என்றால் என்ன என்றும் சொல்லும் படங்கள் கொஞ்சமாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த படம் காலத்தால் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு படம் என்றே சொல்லலாம். கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள். ஒரு சூப்பர்ரான திரைப்படம். இந்த வலைப்பூவின் பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக சந்தா பொத்தானை அழுத்துங்கள் (சந்தா பொத்தானா ?) - இல்லை , சந்தா பொத்தான் கிடையாது என்ற காரணத்தால் நிறைய போஸ்ட்களை படித்து வியூஸ்களை அதிகப்படுத்தி விடுங்கள். 

CINEMA TALKS - MOONRAKER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என்றாலே இன்டர்நேஷனல் ஆக்ஷன்னுக்கு பஞ்சம் இருக்காது. இந்த படத்தில் பக்காவான ஒரு ஃபேண்டஸி நிறைந்த சயின்ஸ் ஃபிக்ஷன் ஸ்டைல் ஆக்ஷன் யுனிவெர்ஸ்ஸையே கொடுத்து இருப்பதால் இந்த படம் சூப்பர் அட்வென்சர் படமாக வந்துள்ளது. இந்த படம் வெளிவந்த வருடங்களில் எல்லாம் எப்படி இவ்வளவு துல்லியமான ஸ்பேஸ் காட்சிகளை உருவாக்கி இருப்பார்கள் என்பதை யோசிக்கும்போது வியப்பாக இருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் ஆக்ஷன்க்கும் ரொமான்ஸ்க்கும் பஞ்சமே இல்லாதவகையில் ஸ்டோரி லைன் செல்கிறது என்றால் விஷுவல்லாக எஃபக்ட்ஸ்களும் வில்லனின் சாமர்த்தியம் நிறைந்த வலைப்பின்னல்களும் படத்தை வேறு ஒரு லெவல்லுக்கு எடுத்து சென்றுவிட்டது என்றால் கண்டிப்பாக மிகையாகாது. குறிப்பாக ரேக்கரிங் கெஸ்ட் கேரக்ட்டராக இருக்கும் ஜாஸ் கேரக்ட்டரின் ஸ்டோரி ஆர்க்கையும் நன்றாகவே முடித்து இருக்கிறார்கள். இந்த படம் உங்களுக்கு பொழுதுபோகவில்லை என்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம். முடிந்தால் தமிழில் பாருங்கள். டார்க்கான க்ரைம் காட்சிகள் இந்த படத்தில் இருப்பதால் அதுவுமே வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் அட்வென்சர்காளை விடவும் புதுமையாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு தரமான கிளாசிக். ஸ்டார் வார்ஸ் என்பது ஸ்பேஸ் படம் என்றால் இந்த படம் ஸ்பேஸ் வார்ஸ் என்று சொல்லலாம். 

CINEMA TALKS - SOODHU KAVVUM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் பொறுப்பற்ற இளைஞர்கள் ஒரு கட்டத்தில் பணத்துக்கு ஆசைப்பட்டு சின்ன சின்ன கடத்தல் வேளைகளில் ஈடுபடவே பின்னாட்களில்  ஒரு பெரிய பஞ்சாயத்தில் மாட்டிக்கொண்டு சிக்கித்தவித்து வெளியே வரும் கலகலப்பான கதையை கொண்ட ஒரு பொழுதுபோக்கு படைப்பு இந்த சூது கவ்வும். விஜய் சேதுபதி , பாபி ஸிம்மாஹ் , அசோக் செல்வன் , ரமேஷ் திலக் , எம் எஸ் பாஸ்கர் , சச்சதா ஷெட்டி , மற்றும் கருணாகரன் என்று  பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் ஸ்டார்கள் நடிப்பில் மிக்கவுமே பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். திரைக்கதையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு விறுவிறுப்பு படத்தில் இருக்கிறது. பொதுவாக படத்தை முந்தைய பாகம் பிந்தைய பாகம் என்று எல்லாம் பிரிக்காமல் படமாக மட்டும் பார்க்க வேண்டும். காமிரா வொர்க் , காஸ்ட்யூம் சாய்ஸ் , சப்போர்டிங் ஆக்டர்ஸ் என்று எல்லோருமே பிரமாதமாக பண்ணி இருக்கிறார்கள். ஒரு நம்பிக்கையான க்ரைம் டார்க் ஹியூமரை இந்த படத்தில் பார்க்கலாம். இந்த படம் போலவே இன்னொரு படம் என்றால் மூடர் கூடம் படத்தை சொல்லலாம். கான்ஸேப்ட் அடிப்படையில் இந்த படம் ஸ்மார்ட் மக்களின் கூடம் என்று சிறப்பு டைட்டில் கொடுத்து அன்போடு அழைக்கப்படுவாய் என்று பாராட்டும் அளவுக்கு அவ்வளவு அருமையாக கிரியேட் பண்ணப்பட்ட படைப்பு. நலன் குமாரசாமி எண்டர்டெயின்மெண்ட்க்கு சிறப்பான உத்திரவாதம் கொடுத்துள்ள ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மியூசிக் ஸ்கோர் பிரமாதம். படத்தின் காட்சிகளுக்கு நல்ல சப்போர்ட் மியூசிக் கொடுத்து இருக்கிறது. கேரக்ட்டர் டேவலப்மென்ட் வேற லெவல்லில் இந்த படத்தில் இருக்கிறது. கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள் !!

CINEMA TALKS - SINGAM 3 - TAMIL REVIEW - திரை விமர்சனம்


சிங்கம் 3 - சென்ற படங்களை போலவே விருவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதையால் ஸ்டேட் விட்டு ஸ்டேட் சென்று கொடியவர்களுடன் நேருக்கு நேராக மோதும் ஒரு சூப்பர் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு படமாக இந்த படம் இருக்கிறது. சூர்யா , ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா என்று அபிமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ஒரு ஸ்பெஷல் கமேர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் இந்த படம். ஒரு காவல்துறை அதிகாரியாக ஸ்டேட் மாற்றி வேலை பார்க்கும்போது அங்கே இருக்கும் மோசமான அதிகவர்க்க மனிதர்களை பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள கெட்டவராக நடிக்கவேண்டிய ஒரு மிஷன்னில் ACP துரை சிங்கம் இன்வெஸ்ட்டிகேஷன் பன்னும்போது ஒரு பெரிய பணக்கார கும்பல் அவர்களுடைய சுயநலத்துக்காக மிகப்பெரிய க்ரைம்களை செய்துள்ளதை கண்டறிகிறார். மேலும் அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும் என்ற காரணத்துக்காக எடுக்கும் முடிவுகளில் எனன்என்ன பிரச்சனைகளை சந்தித்து வெற்றி அடைகிறார் என்பதுதான் படத்தின் கதை. திரைக்கதைக்கும் சினிமாட்டோகிராபிக்கும் தனியான பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும். கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவ்வாக வொர்க் பண்ணியிருக்கலாம் ஆனால் படம் நன்றாக இருக்கிறது கட்டாயமாக ஒரு முறை பாருங்கள் ! இந்த வலைப்பூவில் இருக்கும் தகவல்கள் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக எல்லா போஸ்ட்களையும் படித்து பாருங்கள் !

MUSIC TALKS - IDHO IDHO EN PALLAVI EPPODHU GEETHAM AAGUMO ? - VERA LEVEL PAATU !!



இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ ?

இவள் உந்தன் சரணம் என்றால் அப்போது வேதம் ஆகுமோ ?

இதோ இதோ என் பல்லவி


என் வானம் எங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ ?
என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ ?
என் வாழ்கை என்னும் கோபத்தில் இது என்ன பாணமோ ?
பார்காமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ ?
பசி என்பதே ருசி அல்லவா அது என்று தீருமோ... ?

இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ ?

இவள் உந்தன் சரணம் என்றால் அப்போது வேதம் ஆகுமோ ?

இதோ இதோ என் பல்லவி


அந்த வானம் தீர்த்து போகலாம் நம் வாழ்கை தீருமா ?
பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ?
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாற கூடுமா ?
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா ?

இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ ?

இவள் உந்தன் சரணம் என்றால் அப்போது வேதம் ஆகுமோ ?

MUSIC TALKS - POTTU VEITHA KAADHAL THITTAM OKEY KANMANI ! - VERA LEVEL PAATU !



போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி 

ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி

இதுதான் காதல் எக்ஸ்பிரஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ் 

வேலன் வேலை சக்ஸஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி 

ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி

காவேரி அல்ல அணை போட்டு கொள்ள இந்த காதல் 

விலை வாசி போல விஷம் போல ஏறும் இந்த பாடல் 


கேட்காத லவ் சாங் ஒன்று கேட்கின்ற நேரம் இன்று நீ வா 

பார்க்காத ஹனிமூன் ஒன்று பார்க்கின்ற வேளை இன்று நீ வா

பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்


போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி 

ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி

இதுதான் காதல் எக்ஸ்பிரஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ் 

வேலன் வேலை சக்ஸஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி 

ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி


ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும் 

ரஷ்யாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்

நூலாடை சூடி கொள்ளும் கோலாரின் தங்க பாலம் நீதான்

மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் ஆளும் இன்று நான்தான் 


பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்

போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி 

ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி

இதுதான் காதல் எக்ஸ்பிரஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ் 

வேலன் வேலை சக்ஸஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி 

ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி


MUSIC TALKS - PESA KOODATHU VERUM PECHIL SUGAM EDHUMILLAI - VERA LEVEL PAATU !




பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் 
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே

ஆசைக் கூடாது !

பார்க்கும் பார்வை நீ 
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ 
பாடும் ராகம் நீ 
என் நாதம் நீ 
என் உயிரும் நீ


காலம் யாவும் நான் உன் சொந்தம் 
காக்கும் தெய்வம் நீ 
பாலிலாடும் மேனி எங்கும் 
கொஞ்சும் செல்வம் நீ

இடையோடு கனி ஆட 
தடை போட்டால் நியாயமா ?
உன்னாலே பசி தூக்கம் இல்லை 
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனி மேலும் ஏன் இந்த எல்லை ?

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்

சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே

பேசக் கூடாது !


காலைப் பனியும் நீ 
கண்மணியும் நீ 
என் கனவும் நீ 
மாலை மயக்கம் நீ 
பொன் மலரும் நீ 
என் நினைவும் நீ

ஊஞ்சல் ஆடும் பருவம் உண்டு 
உரிமை தர வேண்டும் 
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்

பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே 
வருகின்ற தை மாதம் சொந்தம் 
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே

பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் 
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே

MUSIC TALKS - JANAUARY NILAVE NALAMTHANA JANAGANIN MAGALE SUGAMTHANA ? - VERA LEVEL PAATU !






ஜனவரி நிலவே நலம் தானா ? ஜனகனின் மகளே சுகம் தானா ?
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் 
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்
பொய் சொல்லாதே பொய் சொல்லாதே.. பொய் சொல்லாதே !!!

உன்னை விட ரதியும் அழகில்லை ! பொய் சொல்லாதே !
உன்னை விட நதியும் அழகில்லை ! பொய் சொல்லாதே !
உன்னை விட மலரும் அழகில்லை ! பொய் சொல்லாதே !
உன்னை விட மயிலும் அழகில்லை ! பொய் சொல்லாதே !

ரதியும் அழகில்லை, நதியும் அழகில்லை
மலரும் அழகில்லை , மயிலும் அழகில்லை
பொய் சொல்லாதே !
விண்ணும் அழகில்லை , மண்ணும் அழகில்லை
மானும் அழகில்லை , நானும் அழகில்லை
பொய் சொல்லாதே !

ஜென்னல் ஓரம் மின்னல் வந்து சிரிக்கும்
கண்ணுக்குள்ளே காதல் மழை அடிக்கும்
மூச்சு நின்று போன பின்பும் எனக்கும்
நெஞ்சில் உந்தன் ஞாபகமே இருக்கும்

பொய் சொல்லாதே பொய் சொல்லாதே.. பொய் சொல்லாதே

நேற்று வரை நெஞ்சில் யாருமில்லை ! பொய் சொல்லாதே !
இன்று முதல் இதயம் துடிக்கவில்லை ! பொய் சொல்லாதே !
உன்னை காணும் வரை காதல் தெரியவில்லை! பொய் சொல்லாதே !
கண்ட பின்பு கண்ணில் தூக்கமில்லை! பொய் சொல்லாதே !

நிலவு நீ இன்றி இரவும் எனக்கில்லை
பாவை நீ இன்றி பகலும் எனக்கில்லை
பொய் சொல்லாதே !

இன்னும் ஒரு கோடி ஜென்மம் வரும்போதும்
வஞ்சி நீ இன்றி வாழ்கை எனக்கில்லை
பொய் சொல்லாதே !

உன் பாதம் பட்ட பூமி எங்கும் ஜொலிக்கும்
நீ சூடி கொண்ட காகிதப்பூ மணக்கும்
உன் புன்னகையில் என் மனது திறக்கும்
உன் கண்ணசைவில் காதல் கொடி பறக்கும்
பொய் சொல்லாதே பொய் சொல்லாதே.. பொய் சொல்லாதே !!!

ஜனவரி நிலவே நலம் தானா ? ஜனகனின் மகளே சுகம் தானா ?
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் 
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்
பொய் சொல்லாதே பொய் சொல்லாதே.. பொய் சொல்லாதே !!!

MUSIC TALKS - VETRI VETRI ENDRU SOLLUM KOVIL MANI - VERA LEVEL PAATU !




வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா

சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா

நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்

இது நெடுங்காலப் பயணம் பயணம் பயணம்

வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா

சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா


காதல் எனும் சங்கு கண்டெடுத்து வந்தேன் 

ஓம்கார ஓசையிலே மெய் மறந்தேன் நான்

ஆகாய கங்கை ஆடி வரக் கண்டேன்

ஆனந்த வேளையிலே நீந்த வந்தேன் நான்


பொற்காலமே என் மாடம் தேடி வந்ததே

நிற்காமலே என்னை பண் பாடி வந்ததே

மயில் தோகையே ஒரு மணி வீணையாய்

லயம் மாறாது நீ மீட்டு ராஜா !


வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா

சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா

நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்

இது நெடுங்காலப் பயணம் பயணம் பயணம்

வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா

சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா


வானரதம் ஏறி மண்ணுலகம் தாண்டி

வைபோக ஊர்வலமாய் போய் வரலாம் வா ,

சொர்க்கபுரி சேர்ந்து இந்திரனைப் பார்த்து

வாங்காத வரங்கள் எல்லாம் வாங்கிடலாம் வா ,


மைபூசிடும் கண் பார்வை வாடி நின்றதோ ?

மந்தாரப் பூ பொன்வண்டை தேடி நின்றதோ ?

சுக போதையில் இந்த சுப வேளையில்

நல்ல தேனாற்றில் நீராட்டவா வா !


வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா

சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா

நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்

இது நெடுங்காலப் பயணம் பயணம் பயணம்

வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா

சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா !

MUSIC TALKS - THAALATTUM POONGATRU NAAN ALLAVA - VERA LEVEL PAATU !




தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே 

தாலாட்டும் பூங்காற்று நானல்லவாநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா


நள்ளிரவில் நான் கண் விழிக்க
உன் நினைவில் என் மெய் சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர
ஆடுது பூந்தோரணம்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவாநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் 
ஆலயம் நீயல்லவா

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே 

தாலாட்டும் பூங்காற்று நானல்லவாநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

MUSIC TALKS - MELLISAIYE EN IDHAYATHIN MELLISAIYE - VERA LEVEL PAATU !!

 




மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே

என் உறவுக்கு இன்னிசையே 

என் உயிர் தொடும் நல்லிசையே

மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே

என் உறவுக்கு இன்னிசையே 

என் உயிர் தொடும் நல்லிசையே


கண்ணை கொஞ்சம் திறந்தேன் 

கண்களுக்குள் விழுந்தாய்

எனது விழிகளை மூடி கொண்டேன்

சின்னஞ்சிறு கண்களில் 

உன்னை சிறை எடுத்தேன்

கண்ணை கொஞ்சம் திறந்தேன் 

கண்களுக்குள் விழுந்தாய்

எனது விழிகளை மூடி கொண்டேன்

சின்னஞ்சிறு கணங்களில் 

உன்னை சிறை எடுத்தேன்


மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே

என் உறவுக்கு இன்னிசையே 

என் உயிர் தொடும் நல்லிசையே

மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே

என் உறவுக்கு இன்னிசையே 

என் உயிர் தொடும் நல்லிசையே


எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன்

உறங்காமல் தவித்திருந்தேன் 

விண்மீன்கள் எரித்திரிந்தேன்


எத்தனை நிலவை உனக்காக வெறுதிருந்தேன்

உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்

உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்


நீ ஒரு பாதி என்றும் நான் ஒரு பாதி காதல் ஜோதி

என்னவனே நிலம் கடல் ஆனாலும் 

அழியாது இந்த பந்தம்


கண்ணை கொஞ்சம் திறந்தேன் 

கண்களுக்குள் விழுந்தாய்

எனது விழிகளை மூடி கொண்டேன்

சின்னஞ்சிறு கணங்களில் 

உன்னை சிறை எடுத்தேன்


கண்ணை கொஞ்சம் திறந்தேன் 

கண்களுக்குள் விழுந்தாய்

எனது விழிகளை மூடி கொண்டேன்

சின்னஞ்சிறு கணங்களில் 

உன்னை சிறை எடுத்தேன்


மன்மத விதையை

மனதோடு விதைத்தது யார் ?

மழை ஊற்றி வளர்த்தது யார் ?

மலர்க்காடு பறித்து யார் ?


காதல் தீயை

நெய் கொண்டு வளர்த்தது யார் ?

கை கொண்டு மறைத்து யார் ?

அதை வந்து அணைப்பது யார் ?


ஆயிரம் காலம் வாழும் காதலும் வாழும் ஆயுள் நீளும்

பெண்ணழகே மண்ணும் விண்ணும் போனாலு ம்

மாறாது இந்த சொந்தம்


கண்ணை கொஞ்சம் திறந்தேன் 

கண்களுக்குள் விழுந்தாய்

எனது விழிகளை மூடி கொண்டேன்

சின்னஞ்சிறு கண்களில் 

உன்னை சிறை எடுத்தேன்

கண்ணை கொஞ்சம் திறந்தேன் 

கண்களுக்குள் விழுந்தாய்

எனது விழிகளை மூடி கொண்டேன்

சின்னஞ்சிறு கணங்களில் 

உன்னை சிறை எடுத்தேன்

TAMIL TALKS EP. 38 - ஒரு நிறுவனத்துக்கு வருடக்கணக்கான முயற்சிகள் !

 



எப்போதுமே தொடர்ந்து 3 வருஷத்துக்குள் நிறுவனத்தை இம்ப்ரூவ்மெண்ட் பண்ணினால் மட்டும்தான் நன்றாக இருக்கும். மூன்று வருடங்களுக்கு மேலே நஷ்டம் என்றால் மனதால் தாங்க முடியாது. மனது எப்படியாவது'சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு டிஸப்பாயிண்ட்மெண்ட்டாக மாறிவிடும். இதனால்தான் ஒரு நிறுவனத்துடைய டைம்லைன் என்பது முதல் 3 வருடங்களில் பெரிய சாதனையை செய்யும் அளவுக்கு இருக்க வேண்டும், ஒரு நிறுவனம் அதனுடைய லேகஸியை முதல் 3 வருடங்களுக்குள்ளே அமைக்காமல் போனால் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக அமைந்துவிடும். ஒரு நிறுவனத்தை பொறுத்த வரை சப்மேரேன் போல தன்னுடைய வேலைகளில் மட்டுமே கவனம் வைத்து பண்ணக்கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும். நம்பிக்கையாக நாம் செய்யும் விஷயங்கள் ஜெயிக்கத்தான் போகிறது என்ற மனநிலையில் வேலை செய்ய வேண்டும். ஒரு சில கட்டங்களில் நிறுவனத்தை விட்டுவிட்டு சம்பள வேலைகளுக்கு சென்றுவிடலாமா என்று கூட தோன்ற ஆரம்பித்துவிடும் ஆனால் வாழ்க்கை என்பது அப்படி வேலை பார்க்காது. வாழ்க்கையில் நிறுவனத்தை ஆரம்பிக்க முயற்சி பண்ணினால் உங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷங்களை விடவேண்டியது இருக்கும் நல்ல வாய்ப்புகளை விட்டுவிட வேண்டியது இருக்கும். ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் எல்லோருமே ஒரே ஒரு குடும்பம் போல சேர்ந்துதான் இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஒரு நாளுமே அந்த நிறுவனத்துக்கு இலாபகரமான ஒரு நல்ல நாளாக மட்டும்தான் அமையவேண்டியது இருக்கும். நிறுவனத்துக்கு எப்போதுமே அதிகமாக பணம் தேவைப்படுகிறது. பணம் நிறுவனத்தின் பலமாக கருதப்படுகிறது. மோதல்கள் மற்றும் போட்டிகள் இல்லாமல் நிறுவனங்கள் இல்லை. ஒரு சில நேரங்களில் நடக்கக்கூடிய விஷயங்களில் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுப்பதுதான் எப்போதுமே நிறுவனத்தை காப்பாற்ற நல்ல ஆப்ஷனாக இருக்கும். நம்முடைய வாழ்க்கையில் எப்போதுமே 10 வருடம் அனுபவத்தை வளர்த்துக்கொண்டு முன்னேற்றத்தை தொடங்குவது மிகவுமே நல்ல விஷயம். போதுமான அனுபவம் இல்லாமல் வேலைகளை செய்வது கொஞ்சம் ஆபத்தானது. ஒரு தொழில் துறையை தொடங்குவதுமே இப்படிப்பட்ட விஷயங்களில் ஒரு விஷயம்தான். புது புது விஷயங்களை சோதனை அடிப்படையில் செய்யாமல் மறுபடியும் மறுபடியும் திரும்ப திரும்ப நடக்கும் ஒரு அளவுக்கு பிரயோஜனம் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை மட்டும் செய்யும் உயிராக வாழவேண்டும் என்றால் மரமாகத்தான் வாழ முடியும், உண்மையில் எதார்த்த வாழ்க்கையை புரிந்துகொள்ளுங்கள் நீங்கள் தாஜ் மஹால் கட்டவேண்டும் என்றாலும் செங்கல்லில் இருந்துதான் உங்கள் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். வாழ்க்கை இப்படித்தான். 

TAMIL TALKS EP. 37 - இந்த உலகத்தில் மாற்ற வேண்டிய விஷயங்கள் !

 


இன்றைக்கு தேதிக்கு கவனிக்க வேண்டிய விஷயங்களாக நான் கருதுவது 3 விஷயங்கள். அவைகளைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். 1. மரங்களின் பயன்பாடு !! - இந்த விஷயத்தை நன்றாக வேலைபார்த்து சரிசெய்துவிட்டால் உலகம் முழுவதுமே மழைபொழிவு அதிகமாக மாறிவிடும். இந்த உலகத்தில் நிறைய நாடுகள் தொழில் போட்டி மற்றும் முன்னேற்றத்துக்காக மரங்களை வெட்டவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றன. பாதுகாப்புக்கு பயணம் தேவை , அப்படி பணம் வேண்டும் என்றால் நாட்டின் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும். தொழில் துறைகளை அதிகப்படுத்தவும் நிறுவனங்கள் மேலே வரவும் இட வசதி குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதிக்காக மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் கார்பன் டை ஆக்ஸைடு அதிகமாவதால் பசுமை இல்ல விளைவு உருவாவதால் க்ளோபல் வார்மிங் நடக்கிறது. இந்த விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். 2. கல்வித்தரம் மேம்பாடு !! - பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு படிக்க தெரியவில்லை என்றால் இப்போது எல்லாம் அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள் அதுவுமே கொரோனாவுக்கு பின்னால் நிலை இன்னுமே மோசமானதாக உள்ளது. மாணவர்கள் நிறைய பொழுதுபோக்கு விஷயங்களுக்கு அடிமைகளாக மாறிவிட்டார்கள்.  இந்த விஷயத்தை எல்லாம் சரிசெய்து தரமான கல்வியை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் சம்பளம் குறைவான வேலை , கெட்ட பழக்க வழக்கங்கள் , தவறான செயல்கள் என்று மாணவர்களின் எதிர்காலத்தில் நெகட்டிவ்வான மாற்றங்கள் உருவாகும் அபாயம் உள்ளது. 3. கார்ப்பரேட்களுக்கு கட்டுப்பாடு : எம் என். ஸி கம்பெனிகள் உலகத்துக்கே சோறு போடும் விவசாயத்தையும் உணவு உற்பத்தியையும் கைகளுக்குள் போட்டுக்கொண்டு நிறமூட்டி , மணமூட்டி , சுவையூட்டி , கெடாமல் பார்த்துக்கொள்ளும் கெமிக்கல்கள் என்று நிறைய விஷயங்களை அள்ளி அள்ளி கொட்டிய உணவுகளை சாப்பிட வைத்து நோய்களை உருவாக்கி மருந்துகளையும் விற்று சாப்பிடுகிறார்கள். இவர்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இல்லை என்றால் சராசரிக்கும் குறைவான மக்களின் வாழ்க்கை இவர்களால் மிக மிக அதிகமாக பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. கட்டுப்படுகளுக்குள் இருந்தால் மட்டுமேதான் வாழ்க்கை நன்றாக இருக்கும். இங்கே உணவு என்ற சின்ன விஷயத்தை கூட எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சில உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் நமக்குதான் பிரச்சனை. மானதுக்குள்ளே கட்டுப்பாடு இருந்தால்தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தை கொண்டு உணவை சரியாக சாப்பிட முயற்சி செய்வோம். ஆனால் இந்த மாதிரியான பெரிய நிறுவனங்கள் சிறந்த மூளைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து தவறான செயல்களை செய்துகொண்டு இருப்பது அடிப்படையில் கலக்கம் அளிக்கிறது. ஒரு பிஸினஸ் மாடலாக அப்லிக்கேஷன் ஃபார் லோக்கல் லாங்வேஜ் பேச்சுகள் என்று ஒரு டெக்ஸ்ட் பேஸட் இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்பதும் என்னுடைய யோசனையாக மட்டும்தான் இருந்தது. வருங்காலத்தில் என்னால் செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம். 

GENERAL TALKS - சராசரியான வாழக்கை போதாது போதாது !

 



இன்னைக்கு நாம் ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கோம் , நாளைக்குமே இதேப்போல ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ்ந்துவிடுவோம் , நாளை மறுநாளும் நாம் சராசரியான வாழ்க்கையை வாழ்வோம் என்று ஒரு மட்டமான முடிவை நீங்கள் எடுக்க கூடாது. இன்னைக்கு நீங்கள் வாழ்க்கையை அதிகமாக வாழ்ந்து உங்களுக்கான பொருட்களை சேர்த்துவைக்கவில்லை என்றால் வருங்காலம் அதிகமான செலவுகளை கொடுக்கும்போது உங்களால் அல்லது உங்களை சார்ந்தவர்களால் அத்தகைய பண வகையிலான செலவுகளை சமாளிக்க முடியாது. இந்த வலைப்பூவை பெர்ஸனல் வலைப்பூவாக பல வருடங்களாக பயன்படுத்திக்கொண்டு வருகிறேன், இந்த வலைப்பூ பதிவுகளை தொடர்ந்து ஃபாலோ பண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு நான் என்னுடைய சொந்த டெக்னாலஜி நிறுவனத்தை உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு தோற்றுப்போனேன் என்று நன்றாகவே படித்து தெரிந்து இருக்கலாம். இதுதான் வாழ்க்கை, டெக்னாலஜி ரேயின்ஃப்பால் என்ற இந்த நிறுவனத்தில் இருந்து வருங்காலத்தில் கம்ப்யூட்டர்கள் , ஃபோன்கள் , லேப்டாப்கள் என்று எல்லாமே நம்முடைய பிராண்ட் என்றே இருக்க வேண்டும். இது ஒரு கனவுதான், இதனை சாத்தியப்படுத்த நிறைய போராடிய காலங்கள் என்னுடைய வாழ்க்கையில் உண்டு, நான் இந்த உலகத்தின் தூய்மைக்காக சுகாதாரத்துக்காக என்னால் எவ்வளவு போராட முடியுமோ அவ்வளவு போராடிவிட்டேன். என்னுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டுமா ? நான் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் கிடைத்தால் மட்டும்தான் என்னால் இந்த உலகத்துக்கான நன்மையை செய்ய முடியும், பெரிய பெரிய நிறுவனங்கள் குப்பைகளை குறைக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை நீக்குகிறேன் என்று போனுக்கு கொடுக்கும் சார்ஜர்களை கட் பண்ணுகிறார்கள். எவ்வளவு பெரிய முட்டாள்தனம் இது தெரியுமா ? நிறைய பிளாஸ்டிக் குப்பைகள் குறித்த ஆவனப்படங்களை ரெஃபரென்ஸ் எடுத்து குப்பைகளை நீக்க என்னால் முடிந்த முயற்சிகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன், இருந்தாலுமே வாழ்க்கையுடைய கட்டாயத்தால் உருவாகும் தோல்விகள்தான் எல்லா பிரச்சனைகளுக்குமே காரணமாக உள்ளது. கட்டாயத்தால் உருவாகும் தோல்வி என்றால் நம்மால் ஜெயிக்க முடியும் ஆனால் வேண்டுமென்றே தோல்வி அடைய வேண்டிய கட்டாயம் நமக்கு உருவாகிறது. சாம்சங் , சோனி , ஆப்பிள் என்று டெக்னாலஜி கம்பெனிக்கள் நமக்கு போட்டியாக இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை ஜெயிக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய விஷயம் ஆனால் போதுமான ஆதரவு இல்லாமல் எல்லோராலும் ரெஜெக்ட் பண்ணப்படுகிறேன். இப்போது எழுதும் , வரையும் ஸ்டேஷன்னரி பொருட்கள் என்று பார்த்தால் கேம்லின் , ஃபேபர் காஸ்டேல் , கிளாஸ் மேட் , டாம்ஸ் என்று நிறைய பிராண்ட்கள் இருக்கிறது. எதனால் கம்மேர்ஷியல் கம்பெனிகள் இல்லை ? காரணம் என்னவென்றால் படித்த ஆடியன்ஸ் எப்போதுமே பிராண்ட்களை மட்டும்தான் விரும்புகிறார்கள். தரமான கம்பெனி ஐட்டம் என்றால்தான் ஒரு குவாலிட்டிக்கான உத்திரவாதத்தை நம்மால் கொடுக்க முடியும் என்றும் குடிசை தொழில் என்றால் குவாலிட்டி இல்லை பொருட்கள் என்றால் கண்டிப்பாக வேலைக்கு ஆகாது என்றும் எந்த உத்திரவாதத்தையும் கொடுக்க முடியாது என்றும்தான் தொழில் துறை இப்போது வேலை பார்க்கிறது. நான் பிராண்ட்டட் கம்பெனி  கிரியேட் பண்ண நினைக்கின்றேன். இந்த லட்சியத்துக்காக எல்லை வரைக்கும் சென்று போராடிக்கொண்டு இருக்கிறேன். பொருட்களை அபகரிப்பது சுலபமானது ஆனால் சம்பாதிப்பது கடினமானது. 

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...