நமது வாழ்க்கையை பொறுத்தவரை கடந்து சென்ற காலத்தையும், எறிந்த சொல்லையும் யாராலும் மீட்க முடியாது. எனவே, ஒரு செயலைச் செய்யும் முன்பும், ஒரு சொல்லை உதிர்க்கும் முன்பும் நிதானமாகச் சிந்திப்பது அவசியமானது.
தவறு செய்வது மானுடம், அதை ஒப்புக்கொள்வது தெய்வீகம். நம் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் நம் எதிரிகள் அல்ல, அவர்கள் நம்மை மேம்படுத்தும் நபர்கள், இன்னும் நிறைய விஷயங்கள் நமது வாழ்க்கையில் இருக்கிறது !
குறை சொன்னவராக இருந்தாலும் முகம் கொடுத்துப் பேசுவதும், ஒரு சிறிய புன்னகையைப் பரிமாறிக் கொள்வதும் பெரும் பொருட்செலவு இல்லாத மிகச்சிறந்த தர்மமாகும். இது உறவுகளுக்கு இடையே பாலமாக அமையும்
கல்வி கற்றவன் அடக்கம் பெறுகிறான், அனுபவம் மிக்கவன் பணிவு பெறுகிறான். நாம் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும், நம்மைச் செதுக்கிய வேர்களை மறக்காமல் இருப்பதே உண்மையான மனிதப்பண்பு.
உயரப்பறக்கும் பறவை கூட ஓய்வெடுக்க நிலத்திற்குத்தான் வரவேண்டும். அதுபோல, அதிகாரத்தில் இருக்கும்போது பிறருக்கு உதவுங்கள்; அது நீங்கள் கீழே வரும்போது உங்களுக்கு அரணாக இருக்கும்.
வெற்றி தாமதமாகும் போது பொறுமை தேவை, வெற்றி கிடைத்த பின் நிதானம் தேவை. இந்த இரண்டையும் கடைப்பிடிப்பவர் எக்காலத்திலும் வீழ்வதில்லை
உங்கள் உழைப்பு சத்தமில்லாமல் இருக்கட்டும், ஆனால் உங்கள் வெற்றி உலகமே அதிரும் வகையில் இருக்கட்டும். தற்பெருமை பேசுவதை விட, நம் செயல்கள் பேசட்டும்