TAMIL WEBSITE - இது ஒரு தமிழ் இணையதளம் (SIMPLE TALKS) FORMERLY : NICE TAMIL BLOG - NTB-TAMIL
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
ஞாயிறு, 17 மே, 2026
சனி, 16 மே, 2026
SPECIAL TALKS - BUTTON PHONE SMS காலத்து கதைகள் !
ப்ளூடூத்" அனுப்பும்போது அசையாமல் நிற்கும் காலங்கள் உங்களுக்கு தெரியுமா மக்களே , இன்று 'ShareIt' அல்லது 'Quick Share' போன்ற அதிவேக வசதிகள் இருக்கின்றன. அன்று ஒரு 3MB பாட்டைப் புளூடூத்தில் மாற்ற வேண்டும் என்றால்:இரண்டு போன்களையும் மிக அருகில், ஒன்றுக்கொன்று தொட்டுக்கொண்டிருப்பது போல வைக்க வேண்டும்.
அந்தப் பாட்டு 1%... 2% என மெல்ல நகரும். "டேய் போனை அசைக்காதடா, கட் ஆயிடும்!" என்று கைகளைக் கட்டிக்கொண்டு, மூச்சைக் கூட அடக்கிக்கொண்டு அந்தத் திரையையே பார்த்துக் கொண்டிருப்போம். 99%-ல் சிக்னல் கட் ஆகி 'Connection Failed' என்று வந்தால், நெஞ்சே வெடித்துவிடும் போல இருக்கும்
2011-ல் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டம் கொண்டு வந்தது - "ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மட்டும்தான் அனுப்ப முடியும்."
காதலர்களுக்கும், நண்பர்களுக்கும் இது ஒரு பெரிய இடியாக இருந்தது. கரெக்டாக 99-வது மெசேஜ் அனுப்பியதும், "உங்களது இன்றைய இலவச மெசேஜ் எல்லை முடிவடைந்தது" என்று வரும்.
அதற்குப் பிறகு, அடுத்த நாள் நள்ளிரவு 12 மணி எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருந்து, 12:01-க்கு மீண்டும் 'Good Morning' மெசேஜைத் தட்டத் தொடங்குவோம்!
கிரிக்கெட் பேட்டையும் பாலையும் ஒரு மூலையில் போட்டுவிட்டு, "டேய் மச்சான், அந்தப் புதுப் படத்தோட தீம் மியூசிக் உன்கிட்ட இருக்காடா? ப்ளூடூத்ல போடுடா" என்று கேட்டு வாங்கி, அதை நம் போனின் ரிங்டோனாக மாற்றிவிட்டு, நாமே நம் போனுக்கு இன்னொரு போனில் இருந்து கால் செய்து அந்த ரிங்டோனை ரசித்த அந்த வால்தனங்கள்... உண்மையிலேயே ஒரு கவிதை!
அன்று உங்களிடம் இருந்த அந்த போனில், நீங்கள் கஷ்டப்பட்டுச் சேர்த்த "பாடல்களின் எண்ணிக்கை" (Songs Count) எவ்வளவு என்று நினைவிருக்கிறதா ?
வெள்ளி, 15 மே, 2026
SPECIAL TALKS - ORU KAALATHTHIL BUTTON PHONE NINAIVUGAL !
புளூடூத் ஆன் செய்யும்போது நம் போனுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டும். அதில் தான் நம் பசங்களின் மொத்த கிரியேட்டிவிட்டியும் இருக்கும். 'Don', 'King of Hearts', 'Single Pasanga', 'உன் நெஞ்சில் தஞ்சமே' என விசித்திரமான பெயர்களை வைப்பார்கள்.
பக்கத்து வீட்டுப் பொண்ணு புளூடூத் ஆன் செய்திருக்கிறாளா என்று தேடிப் பார்த்து, அவளது போன் பெயரைப் பார்த்துவிட்டு மொட்டை மாடியில் நின்று சிரித்துக்கொள்ளும் அந்த வால்தனங்கள் இப்போதெல்லாம் சாத்தியமே இல்லை.
போர்வைக்குள் திருட்டுத்தனமான மெசேஜ்களும் இருந்த காலங்கள் மறக்க முடியாதது, வீட்டில் எல்லாரும் தூங்கிய பிறகு, போர்வையைத் தலைப்பு வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு நட்பு வட்டாரம் எல்லோருக்கும் மெசேஜ் அனுப்பும் அந்தத் த்ரில் இருக்கிறதே... அப்பாடா! நோக்கியா போன்களில் மெசேஜ் டைப் செய்யும்போது 'குக்-குக்' அல்லது 'டக்-டக்' என்று ஒரு சிறிய பிளாஸ்டிக் சத்தம் கேட்கும்.
வீட்டில் யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பட்டன்களை மிகவும் மென்மையாக, நகங்களால் அழுத்தாமல் விரல் நுனியால் அமுக்கி டைப் செய்த அந்த நொடிகள் நிஜமாகவே ஒரு பொக்கிஷமான காலகட்டம் என்றே சொல்லலாம் !
அப்போது ஒரிஜினல் சார்ஜர் ஒயர் கொஞ்ச நாளில் தேய்ந்து போய்விடும். போனில் சார்ஜ் போட வேண்டும் என்றால், பின்னை சொருகிவிட்டு சும்மா வைக்க முடியாது. ஒயரை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வளைத்து, அதன் மேல் ஒரு கனமான அகராதி புத்தகத்தையோ அல்லது ஒரு வாட்டர் பாட்டிலையோ தூக்கி வைக்க வேண்டும்.
அப்போதுதான் அந்தத் திரையில் 'Charging' என்று காட்டும். யாராவது தெரியாமல் அந்தப் பக்கமாகப் போய் காலை வைத்தால், சார்ஜ் கட் ஆகிவிடும். "டேய்! யாரும் அந்தப் பக்கம் போகாதீங்கடா, சார்ஜ் ஏறிட்டு இருக்கு" என்று போனுக்குக் காவல் காத்த நாட்கள் அவை
GENERAL TALKS - 042 - கொடுப்பதில் இருக்கும் ஆர்வ மிகுதிகள் !
மனிதப் பிறவியின் ஆகச்சிறந்த அழகே பிறருக்குக் கொடுத்து மகிழ்வதில்தான் இருக்கிறது. "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்ற வள்ளுவரின் வரிகள், நம்மிடம் இருக்கும் உணவையோ, செல்வத்தையோ, அறிவையோ மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வதே அறநெறிகளில் முதன்மையானது என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
தன்னிடம் அதிகமாக இருக்கும்போது கொடுப்பதை விட பற்றாக்குறையாக இருக்கும் சூழலிலும் பிறரின் தேவையறிந்து கொடுப்பதே உண்மையான ஈகை. பகிர்ந்துண்ணும் குணம் கொண்ட மனிதனின் இதயம் எப்போதும் வறண்டு போவதில்லை.
நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளும், ஏதோ ஒரு வடிவில் அன்பாகவும் நிம்மதியாகவும் நம்மிடமே திரும்ப வந்து சேருகிறது.தியாகம் என்பது ஏதோ ஒன்றை இழப்பது அல்ல, மாறாக ஒரு உன்னதமான நோக்கத்திற்காக நம்முடைய சுயநலத்தை விட்டுக்கொடுப்பதாகும்.
ஒரு தாய் தன் குழந்தையின் மகிழ்ச்சிக்காகத் தன் தூக்கத்தையும் சுகங்களையும் தியாகம் செய்கிறாள்; ஒரு தந்தை தன் குடும்பத்தின் எதிர்காலத்திற்காகத் தன் உழைப்பைத் தியாகம் செய்கிறார்.
இத்தகைய சிறிய தியாகங்கள்தான் நம் சமூகத்தின் அஸ்திவாரமாக விளங்குகின்றன. சுயநலம் மட்டுமே கொண்ட ஒரு மனிதன் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், அவனது மறைவிற்குப் பின் யாரும் அவனை நினைவில் கொள்வதில்லை.
ஆனால், பிறர் நலம் பேணத் தன் வாழ்வை அர்ப்பணித்த தியாகிகள், காலங்கள் கடந்தும் மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கொடுப்பதில் இருக்கும் இன்பத்தை ஒருமுறை அனுபவித்தவர், வாங்குவதில் இருக்கும் தற்காலிக மகிழ்ச்சியைத் தேடிப் போக மாட்டார். தியாகமும் ஈகையும் நம்மிடம் இருக்கும் "நான், எனது" என்ற அகந்தையைத் தகர்க்கும் வல்லமை கொண்டவை. உங்களால் பெரிய அளவில் உதவ முடியாவிட்டாலும், பசித்த ஒருவருக்கு ஒருவேளை உணவளிப்பது, வழியறியாது தவிப்பவருக்கு நல்வழிகாட்டுவது போன்ற சிறிய செயல்களின் மூலமே தியாகத்தின் பெருமையை உணர முடியும்.
பூமி தன்னுள் இருக்கும் நீரை மேகத்திற்குக் கொடுத்து மழையாகத் திரும்பப் பெறுவதைப் போல, நாம் சமூகத்திற்குத் தரும் நன்மைகள் நம் வாழ்வையே செழிப்பாக்கும்.
ஆனால் யாருக்கு கொடுக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது, நீங்கள் விஷயம் இல்லாத நபர்களை விஷ செடிகளை போல வளர்த்துக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் இல்லையென்றாலும் ஒருநாள் நீங்கள் கொடுத்த விஷயங்களுக்கு மதிப்பு அளிக்காமல் இருப்பார் !
LOVE TALKS - காதல் என்பதின் உண்மைத்தன்மை ! #2
நேசத்தைக் கொட்டுவது என்பது வார்த்தைகளில் கவிதைகள் பேசுவதோ, பரிசுகளை அள்ளித் தருவதோ அல்ல; "நான் உன்னோடு இருக்கிறேன்" என்ற அசைக்க முடியாத பாதுகாப்பை நம்மை நம்பியவர்களுக்குத் தருவதே ஆகும்.
ஒரு துன்பத்தில் உங்களோடு உடன் இருக்காத காதல் சந்தோஷம் என்று வரும்போது மட்டும் உங்களோடு இருக்கிறது என்றால் அது ஒரு போலி காதல் என்று சொல்லப்படுகிறது, தற்காலிகமாக உங்களோடு வலிமையாக இருந்தாலும் நிரந்தரமாக நிலைக்குமா என்றால் கேள்விக்குறிதானே ?
காதலின் உண்மையான பரிணாமம், 'காப்பாற்றுதல்' என்ற உன்னதப் பொறுப்பில் அடங்கியுள்ளது. இங்கு காப்பாற்றுதல் என்பது வெறும் உடல்ரீதியான பாதுகாப்பு மட்டுமல்ல; அவர்களின் சுயமரியாதை, கனவுகள், மகிழ்ச்சி மற்றும் மன அமைதி ஆகியவற்றை எந்தச் சூழலிலும் சிதையாமல் காப்பதாகும்.
வாழ்க்கை எப்போதும் சீராக இருப்பதில்லை; சோதனைகளும், சவால்களும், வீழ்ச்சிகளும் வரும்போது, "பிடிக்கவில்லை" என்று கைகளைக் உதறிவிட்டு ஓடாமல், கைகளைப் பிடித்துக் கொண்டு கரையேற்றுவதே உண்மையான துணைக்கு அழகு. இறுதி மூச்சு வரை அந்தப் பிடி தளராமல் இருப்பதே காதலின் உச்சகட்ட முதிர்ச்சி.
காதல் என்பது ஒரு வசதிக்கான ஏற்பாடு அல்ல; அது ஒரு வாழ்நாள் கடமை. உணர்ச்சிகளின் அலைகள் ஓய்ந்த பிறகும் எஞ்சி நிற்கும் பாசமும், 'நம்மை நம்பியவரை எக்காலத்திலும் கைவிடக் கூடாது' என்ற தார்மீகப் பொறுப்புமே காதலைப் புனிதமாக்குகிறது.
கண்மூடித்தனமான ஈர்ப்புகள் காலப்போக்கில் கரைந்துவிடும், ஆனால் நம்பிக்கையின் மீது கட்டப்படும் பேரன்பு காலத்தைக் கடந்து வாழும். நம்மை நம்பியவர்களின் வாழ்க்கையை இறுதிவரை அரணாக நின்று காப்பதே காதலின் உண்மையான இலக்கணம் மற்றும் மனித வாழ்வின் ஆகச்சிறந்த அர்த்தம் ஆகும்
GENERAL TALKS - 041 - குறைவான ஆசைகள் மனதுக்கு நிறைவானதா ?
மகிழ்ச்சி என்பது நாம் வாங்கும் பொருட்களிலோ அல்லது நம்மிடம் சேரும் சொத்துக்களிலோ இல்லை; அது நம்மிடம் இருக்கும் 'போதுமென்ற மனதில்தான்' இருக்கிறது. பேராசை என்பது ஓட்டைப் பானையில் நீர் நிரப்புவதைப் போன்றது;
எவ்வளவுதான் கிடைத்தாலும் மனம் நிறைவடையாது. "பயனும் இன்பமும் இல்லாதவற்றைத் தேடி ஓடுவதை விட, இருப்பதை வைத்து இன்புறக் கற்பதே அறிவு" என்பது சான்றோர் வாக்கு.
மானதுடைய திருப்தி என்பது முன்னேற்றத்தை வெறுப்பதல்ல, மாறாக நமக்குக் கிடைத்திருக்கும் நன்மைகளை உணர்ந்து, தேவையற்ற ஒப்பீடுகளில் இருந்து நம் மனதை விடுவிப்பதாகும்.
எப்போது நாம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவதை நிறுத்துகிறோமோ, அப்போதே நம் வாழ்வில் அமைதி குடியேறும்.
எளிய வாழ்வு என்பது வறுமையில் வாழ்வதல்ல, அது ஆடம்பரங்களையும் தேவையற்ற சுமைகளையும் தவிர்த்து வாழ்வதாகும். நம்முடைய தேவைகள் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு தூரம் நம்முடைய கவலைகளும் குறையும்.
இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில், விளம்பரங்களைப் பார்த்து நமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவித்து, அதற்காக நம் உழைப்பையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
எளிய வாழ்க்கை நம்மை இயற்கையோடு நெருங்கச் செய்கிறது. ஆடம்பர உடைகளோ, விலையுயர்ந்த வாகனங்களோ ஒரு மனிதனின் மதிப்பை உயர்த்திவிடாது; அவனது எளிய அணுகுமுறையும் நற்பண்புகளுமே அவனைச் சமுதாயத்தில் உயர்த்திக் காட்டும்.
இறுதியாக, திருப்தியான மனமும் எளிய வாழ்வும் கொண்ட ஒரு மனிதனே இந்த உலகின் மிகச்சிறந்த செல்வந்தன் ஆவான். அவனிடம் இழப்பதற்கு எதுவும் இருக்காது என்பதால், அவனுக்குப் பயமும் இருக்காது.
கையில் இருக்கும் எளிய உணவைக்கூடத் தன் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து உண்ணும் மகிழ்ச்சி, ஒரு அரசனின் விருந்தில் கூடக் கிடைக்காது.
நம்முடைய அக உலகம் தூய்மையாகவும் நிறைவாகவும் இருக்கும்போது, புற உலகத்தின் சலனங்கள் நம்மைப் பாதிப்பதில்லை. பேராசைகளைத் துறந்து, எளிமையைக் கையாண்டு, வாழ்வின் ஒவ்வொரு சிறிய கணத்தையும் ரசித்து வாழ்வதே ஒரு உன்னதமான வாழ்க்கையின் ரகசியம்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து ஒரு மனிதனின் வாழ்நாள் தேடலுக்கும் அக மகிழ்ச்சிக்கும் அடிப்படையாக விளங்கும் மனதுடைய திருப்தியும் எளிய வாழ்வும் குறைவாக பயன்படுத்தினால் கிடைத்துவிடுகிறது. அதிகமாக வேண்டும் என்று ஆசைப்பட்டால் கால தாமதம் ஆகிறது !
LOVE TALKS - காதல் என்பதின் உண்மைத்தன்மை ! #1
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
-
The 2012 film The Avengers begins with the asgardian god Loki striking a bargain with an alien force known as the Chitauri. In exchange for ...