பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம் காற்றில் பரவியது. அந்த சூழலில், விலையுயர்ந்த ஆடைகள் அணிந்தும், வைரங்கள், பொற்கொலுசுகள் அணிந்தும், ஒரு தம்பதியினர் உள்ளே வந்தனர். அவர்களின் தோற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் கணவன் அகங்காரத்துடன் நடந்தான். மனைவியிடம் மட்டுமே உரையாடி, மற்றவர்களைப் பொருட்படுத்தாமல், சத்தமாகச் சிரித்தான். அவனுக்கு அந்த ஹோட்டல் ஒரு பொதுவிடமாக இல்லை அவன் மேடையாக இருந்தது.
அவர்கள் இருக்கையில் அமர்ந்தபோது, மனைவியின் பார்வை ஹோட்டல் ஓரத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ஒருவரை நோக்கியது. அவள் மெதுவாகக் கணவனிடம் சொன்னாள்: “அந்த நபரை பாருங்கள்? சில வருடங்களுக்கு முன் அவர் எனக்கு தனது காதலை வெளிப்படுத்தினார். நான் மறுத்தபோது, அவர் மிகவும் வருத்தப்பட்டு அழுதார். இப்போது அவனைப் பாருங்கள். அவன் ஏழையாகவும், எந்த வேலையும் கிடைக்காதவனாகவும் தெரிகிறான். அவனது ஆடைகளைப் பார்த்தாலே, அவன் எவ்வளவு பரிதாபகரமான வாழ்க்கையை வாழ்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.”
அந்தக் காதலன் அந்தப் பெண்ணைப் பார்த்த உடனேயே, அவனுக்குப் பல நினைவுகள் வெள்ளமெனப் பெருகின. அவன் அருகில் சென்று, "எப்படி இருக்கிறாய்? இவர் உங்கள் கணவரா? நீங்களும் நலமாக இருக்கிறீர்களா? இன்று என்ன சாப்பிடுகிறீர்கள்? இந்த ஹோட்டலில் உங்களுக்காக நான் ஏதாவது விசேஷமாக வாங்குகிறேன். இங்குள்ள சிக்கன் சூப் - ரோஸ்ட் போன்றவைகள் பிரசித்தியான சுவையுடைய உணவு வகைகள் இங்கே மிகவும் நன்றாக இருக்கும். என்றான்.
காதலியை பார்த்து உங்கள் இருவருக்கும் அந்த சிக்கன் ரோஸ்ட்டை ஆர்டர் செய்யட்டுமா?" என்று கேட்டான். ஆனால், கணவனும் மனைவியும் அவனது எளிமையான உடையைக் கண்டு அவனைத் தவறாக மதிப்பிட்டனர். கணவன் மிகுந்த ஆணவத்துடன், "உங்களுடைய உடைகளை பார்த்தாலே உங்களால் எதையும் ஆர்டர் செய்ய முடியாது போலிருக்கிறது. நான் எனக்காக எனது மனைவிக்காக ஆர்டர் செய்துகொள்கிறேன்," என்றான்.
என்ன? இந்த ஹோட்டலில் என்னால் ஆர்டர் செய்ய முடியாதா? அவள் எவ்வளவு ஆர்டர் செய்தாலும், அதைவிட இரு மடங்கு அதிகமாகத் தன்னால் ஆர்டர் செய்து, அதைத் தங்கள் எனது மேஜைக்கே வரவழைக்க முடியும் என்று அந்த காதலன் சவால் விட்டான்.
ஹோட்டலின் உணவுப் பட்டியலைப் பார்த்து, அவள் தன் கணவனை உயர்தரமான, விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்ய வைத்தாள் எந்தத் தயக்கமும் இல்லாமல், அந்த காதலன் தன் மேசைக்கும் அதே அளவு உணவை ஆர்டர் செய்தான். மேசையில் முன்பிருந்ததை விட இரு மடங்கு உணவு இருந்தது. அந்த காதலன் மெதுவாகவும் நிதானமாகவும் சாப்பிடத் தொடங்கினான். காதலிக்கு பொறாமை , கணவருக்கு கோபம் வந்தது,
இந்த ஹோட்டலில் உள்ள அனைவருக்கும் இன்றைய உணவை நான் இலவசமாக வழங்கப் போகிறேன். முழு பில்லையும் என்னிடம் கொடுங்கள். மேலும், தற்போது இந்த ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இலவசமாக ஒரு உயர்தர விஸ்கியும் பரிசாக வழங்கப்படும்," என்று அறிவித்து ஒரே போடு போட்டு அந்த கணவன் தனது தாராள குணத்தை கோபத்தின் உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றான்.
ஒரு அமைதியான புன்னகையுடனும் மென்மையான குரலிலும், அந்த காதலன் மெதுவாகச் சிரித்துக்கொண்டே, "இப்போது, என் காதலியின் கணவர் ஆர்டர் செய்த அளவை விட இரு மடங்கு அதிகமாகத் தயாரித்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் இனிமேல் வரப்போகும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுங்கள்," என்று சொன்னான். கணவருக்கும் மனைவிக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது, எப்படி இவரால் இவ்வளவு செலவு செய்ய முடியும் என்று யோசித்துக்கொண்டே பில் தொகையை முடிந்தவரை உயர்த்தினார்கள்.
இறுதியாக, கணவனும் மனைவியும் ஹோட்டலின் கட்டண கவுண்டருக்குச் சென்று, சுமார் 100,000 ரூபாய் மதிப்புள்ள ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்தினர். பிறகு, அந்த காதலன் என்ன செய்கிறான் என்று பார்க்கச் சென்றனர். தான் ஏற்கனவே சாப்பிட்ட சில உணவுகளைத் தவிர, தான் ஆர்டர் செய்த மற்ற அனைத்தையும் ரத்து செய்யும்படி அந்தக் காதலன் சொல்லியிருந்தான். கணவனும் மனைவியும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்; இது எப்படி சாத்தியம்? அன்று அவர்கள் அந்த ஹோட்டலில் வேலை செய்திருந்த வேலையாட்களை கேட்டார்கள்!
அவர்கள் விசாரித்தபோது, அந்தக் காதலன்தான் அந்த ஹோட்டலின் உரிமையாளர் என்பதைத் தெரிந்துகொண்டனர். அவர்கள் கிண்டலாக, "அவர் விரும்பினால், தனது சொந்த ஆர்டரைக் கூட ரத்து செய்ய முடியாதா?" என்று கேட்டனர். கணவருக்கும் மனைவிக்கும் அவமானமாக போய்விட்டது. அந்தப் போட்டியில், இந்த கணவன் மனைவியர் ஆணவத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இறுதியில், நிஜ வாழ்க்கையில் அந்த காதலன்தான் அவர்கள் இருவரையும் உண்மையாகவே வென்றிருக்கிறான், அதுதானே உண்மை?
சிலர் தங்களுக்குக் கீழானவர்களை அவமதிப்பதை வழக்கமாகக் கொண்டு, அதே சமயம் மரியாதைக்குரியவர்களாக நினைத்துக்கொண்டு பகட்டாக நடிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் திருத்துவதோ அல்லது மாற்றுவதோ சாத்தியமற்றது. அவர்களைப் புறக்கணித்துவிட்டு முன்னேறிச் செல்வதே சிறந்த வழி. ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்திற்கு அப்பால் அவர்களால் ஒருபோதும் எதையும் சாதிக்க முடியாது.