புதன், 4 பிப்ரவரி, 2026

GENERAL TALKS - சூரியனும் நிலவும் என்று இரு மனங்கள் !

 



நம் கதாநாயகன் கடைக்குள் நுழைந்தவுடன், அவன் மனதில் ஓர் இசை ஒலிக்கிறது போல. நெய் வழியும் பருப்பு சாதம், மொறுமொறுப்பான மசாலா தோசை, பக்கத்தில் மீன் குழம்பு - ஒரு மனிதனுக்கு, தனக்குப் பிடித்த உணவைச் சாப்பிடும் நாள் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போன்றது. அது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் ஒரு விஷயம். ஒவ்வொரு கவ்விலும் அவன் வாழ்க்கையின் சின்ன சின்ன கவலைகள் கரைந்து போகின்றன. சாதத்தில் நெய் அதிகமா இருந்தால், அது அவனுக்கு “ஜாக்பாட்” கிடைத்தது போல. தோசையின் ஓரம் சற்று மொருமொருப்பாக சாம்பாரில் மிதமான நனைந்து இருந்தால், அது அவனுக்கு “போனஸ் லெவல்” அன்லாக் ஆனது போல இருக்கும் மக்களே (சோலோ லெவல்லிங் அனிமேஷன் தொடர் பாருங்கள்) ஆண்களின் மனநிலை இப்படித்தான் சாப்பாட்டில் கிடைக்கும் சின்ன சின்ன சுகமே அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சி. ஒரு நல்ல உணவு, ஒரு நல்ல தூக்கம், ஒரு நல்ல சினிமா—இதுவே அவர்களின் “அதிகபட்ச நெருப்பு பறக்கும் இலட்சியம்.” ஆனால் பெண்களின் மனநிலை வேறுபட்டது. அவர்களுக்கு சாப்பாடு மட்டும் போதாது; அதோடு சேர்ந்து “என்னை யாராவது கவனிக்கிறார்களா?” என்ற கேள்விக்கும் பதில் வேண்டும். அவர்கள் விரும்புவது பொருள் சார்ந்த விஷயங்களும் தான் புதிய உடை, அழகான ஆபரணம், சின்ன சின்ன பரிசுகள். ஆனால் அதற்கும் மேலாக, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் உண்மையான ஆசை. அதனால் தான், ஆண்கள் “சாப்பாடு கிடைத்தா, சொர்க்கத்துக்கு விசிட் அடிப்பதாக சந்தோஷ சாரல்” என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, பெண்கள் “சாப்பாடு நல்லா இருந்தாலும், யாராவது என்னை புரிந்துகொள்கிறார்களா?” என்று எதிர்பார்க்கிறார்கள். இது சண்டை அல்ல, இது இயல்பான வேறுபாடு. ஆண்களுக்கு நெய் நிறைந்த சாதம் என்றால் மகிழ்ச்சி, பெண்களுக்கு உணர்வுகளை மதிக்கும் ஒருவரின் அன்பு , ஆதரவு, தொடுதல், மற்றும் பாதுகாப்பு தான் அதிகபட்ச மகிழ்ச்சி. சாப்பாடு வயிற்றை நிரப்பும்; ஆனால் கவனமும் அன்பும் தான் மனதை நிரப்பும். பெண்களின் மனம் என்பது எல்லையற்ற ஆசைகளும் கனவுகளும் நிறைந்த ஒரு புத்தகம், மக்களே. ஒரு பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ளப் புறப்பட்ட அனைவரும், தாங்கள் வயதாகிவிட்டதாகக் கூறி, நரைத்த முடியுடன் திரும்பி வந்துள்ளனர்.

SPECIAL TALKS - உலகத்தின் கடைசி நாள் இன்றுதானா ?

இந்தக் காலகட்டத்தில், நாம் வாங்கக்கூடிய நிறுவனங்களின் பொருட்களின் மூலமாகவே நமது சுயமதிப்பை முதன்மையாகப் பெறுகிறோம். நாம் அதிக விலையில் உயர்தரப் பொருட்களை வாங்கினால், நமது சமூக அந்தஸ்து மற்றொரு நிலைக்கு உயர்த்தப்படுகிறது. மாறாக, நாம் போதுமான செல்வத்தைச் சேர்க்கத் தவறினால், எப்போதும் நிதி நெருக்கடியில் இருந்தால், வாழ்க்கையின் எந்த இன்பங்களையும் அனுபவிக்க முடியாத ஒரு பரிதாபகரமான சூழ்நிலையில் சிக்கிக்கொள்வோம். உலகம் இன்று வளங்களுக்காகச் சண்டையிடுகிறது என்பதற்குப் பின்னால் மிகப் பெரிய சமூக-அரசியல் உண்மை உள்ளது. நிலம், நீர், காற்று, கனிமங்கள் போன்ற இயற்கை வளங்கள் மனிதகுலத்தின் பொதுச் சொத்தாக இருக்க வேண்டியவை. ஆனால் தொழில்துறை புரட்சிக்குப் பிறகு, சட்டங்களும் பொருளாதார அமைப்புகளும் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக மாறின. இதனால், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வளங்களை நேரடியாகப் பயன்படுத்த முடியாமல், நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த மாற்றம் நுகர்வோர் கலாச்சாரத்தை உருவாக்கியது. இயற்கையாகக் கிடைக்க வேண்டிய அடிப்படை தேவைகள் கூட சந்தையில் விற்கப்படும் பொருட்களாக மாறின. உதாரணமாக, குடிநீர்  ஒருகாலத்தில் அனைவருக்கும் இலவசமாகக் கிடைத்தது இன்று பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதேபோல், உணவு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் கூட பெருநிறுவனங்களின் வணிகப் பொருட்களாக மாறி விட்டன. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் உரிமையை இழந்து, “வாங்குபவர்” என்ற அடையாளத்தில் மட்டுமே சுருங்கி விட்டனர் ஆனால் இந்த நுகர்வோர் கலாச்சாரம் தான் நம்மிடம் நல்ல விஷயம் மக்களே. இதுதான் ஒரு தனித்த மக்களாட்சியான ஒரு அமைப்பை ஏற்படுத்துகிறது. அதனை விட்டுவிட்டு யார் வேண்டுமென்றாலும் எந்த பொருளுக்கு வேண்டும் என்றாலும் சண்டை போடலாம் என்ற மாதிரியான பழைய ஆதிகாலத்து சிஸ்டத்தையெல்லாம் கொண்டுவந்து வைத்துவிட்டால் யாருக்கு பலம் அதிகமாக இருக்கிறதோ அவர்கள்தான் பஞ்சாயத்தில் உட்காருவார்கள் எல்லாவற்றிற்கும் உரிமை கோராமல், நம் வாழ்வில் பணமும் உடைமைகளும் மாறி மாறி வரும்போது, ​​நாம் வாழ்க்கையில் அர்த்தத்தைக் கண்டறிகிறோம், மேலும் நமது முயற்சிகளுக்கு அங்கீகாரமும் பெறுகிறோம். இது சாதாரண விஷயமல்ல, நண்பர்களே. இது ஒருவித மாயவலை. ஆனால், நீங்கள் இதில் சிக்கி, பின்னர் இந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியே வர வேண்டும். இந்த மேட்ரிக்ஸ்ஸிலிருந்து நீங்கள் வெளியே வந்தால் தான் இந்த உலகத்தோட சிஸ்டத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொள்வதால் உங்களுக்கு பிரயோஜனம் என்று எந்த விஷயமும் இருக்காது. ஆனால் நீங்கள் மற்றவர்களைவிட கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசிக்க இது உதவும்.

GENERAL TALKS - இவர்களுடைய கண்ணோட்டமே வேறானது !

 



சில மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ளாமல், மற்றவர்களின் முன்னேற்றத்தையும் தடுக்க முயல்கிறார்கள். அவர்களின் கண்களில் உலகமே ஒரு போட்டி அரங்கம் போலத் தெரிகிறது. யாராவது சிறிது முன்னேறினால், உடனே அவர்களைப் பொறாமைப்படுவார்கள்; யாராவது தவறினால், அதைப் பார்த்து கேலி செய்வார்கள். அவர்களுக்கு மற்றவர்களின் சாதனை ஒரு கசப்பான மருந்து, மற்றவர்களின் தோல்வி ஒரு இனிப்பான பண்டம்.

இவர்கள் வாழ்வின் நோக்கம் வளர்ச்சி அல்ல, மற்றவர்களின் வளர்ச்சியைத் தடுக்கவே. "நான் முன்னேற முடியவில்லை, நீயும் முன்னேறக் கூடாது" என்ற மனநிலை இவர்களின் அடிப்படை. தங்களால் எதுவும் சாதிக்க முடியாததால், மற்றவர்களின் சாதனையை குறைத்து மதிப்பிடுவார்கள். "அவன் வெற்றி பெற்றான், ஆனால் அதெல்லாம் அதிர்ஷ்டம் தான்" என்று சொல்லி, மற்றவர்களின் உழைப்பை கேலி செய்வார்கள்.

உண்மையில், இவர்களின் வாழ்க்கை ஒரு வெறுமையான மேடை. அங்கே சிரிப்பும், கேலியும், பொறாமையும் தான் நாடகம். தங்களின் திறமையின்மையை மறைக்க, மற்றவர்களின் திறமையை இழிவுபடுத்துவார்கள். உலகம் முழுவதையும் கிண்டல் செய்யும் இவர்களின் மனநிலை, அவர்களை ஒருபோதும் உயர்த்தாது. ஆனால், மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து எரிந்து கொண்டிருப்பதே இவர்களின் ஒரே "பொழுதுபோக்கு"

வாழ்க்கையில் நீங்கள் தவிர்க்க முடியாமல் இது போன்ற மனிதர்களைச் சந்திப்பீர்கள். அவர்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாம் அவர்களை சாதாரணமாகப் புறக்கணித்துவிட முடியாது. அவர்களும் நம்மைப் புறக்கணிக்க விட மாட்டார்கள். அவர்களுடன் போட்டியிடுவதை நமது விதியாக ஏற்றுக்கொண்டு, இந்தச் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று நமது வாழ்க்கையே நம்மிடம் கோரினால், அப்போது நினைத்துப் பாருங்கள்!

CINEMA TALKS - THE LEGEND OF TARZAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



The Legend of Tarzan கதை, ஆப்பிரிக்கக் காட்டில் வளர்ந்த டார்சன் (Alexander Skarsgård) தனது மனைவி ஜேன் (Margot Robbie) உடன் லண்டனில் அமைதியான வாழ்க்கை வாழும் நிலையில் தொடங்குகிறது. ஆனால், காங்கோவில் நடக்கும் சதிகள் காரணமாக அவர் மீண்டும் தனது பிறப்பிடமான காட்டிற்கு திரும்ப வேண்டிய சூழல் உருவாகிறது. அங்கு, கொடூரமான வணிகர் லியோன் ரோம் (Christoph Waltz) ஆப்பிரிக்க வளங்களை சுரண்டி, மக்களை அடிமைப்படுத்த முயல்கிறார். டார்சன், தனது விலங்கு நண்பர்கள் மற்றும் பழங்குடியினருடன் இணைந்து, ரோமின் திட்டங்களை முறியடிக்கிறார். ஜேன் கூட போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். இறுதியில், டார்சன் தனது வலிமை, அறிவு, மற்றும் காட்டின் ஆதரவால் எதிரிகளை வென்று, ஆப்பிரிக்க மக்களை விடுவிக்கிறார். இப்படம், டார்சனின் அடையாளம், காதல், மற்றும் இயற்கையுடன் கொண்ட உறவை வலியுறுத்தும் சாகசமாக அமைகிறது ஆப்பிரிக்கக் காட்டின் இயற்கை அழகை அழகாகப் பதிவு செய்திருப்பது இந்த கதைக்கு முக்கியமான பிளஸ் பாயிண்ட், டார்சனின் விலங்குகள் நிறைந்த காடுகளில் வாழ்ந்த வாழ்க்கையால் கிடைத்த பயிற்சிகள் மற்றும் அபார சக்தி மற்றும் போராட்ட காட்சிகள் பார்வையாளர்களை ஈர்க்கும். மேலும், டார்சன் ஜேன் காதல் மற்றும் உணர்ச்சி பூர்வமான தருணங்கள் கதைக்கு உயிரூட்டுகின்றன. சிறுவர்களுக்கான ஒரு அனிமேஷன் தொடரிலிருந்து எடுக்கப்பட்ட கதை இது. இதை இவ்வளவு நுட்பமான காதல் மற்றும் அதிரடி நிறைந்த கதையாக மாற்றினால், அது நிச்சயமாக முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஆனால், பாதகமாக, கதை சொல்லும் விதம் சில இடங்களில் மந்தமாகவும் கணிப்பிடக்கூடியதாகவும் தோன்றுகிறது; வில்லன் லியோன் ரோம் மிக வலிமையான எதிரியாக உருவாக்கப்படவில்லை என்பதால் சஸ்பென்ஸ் குறைகிறது. மொத்தத்தில், படம் காட்சிப்பூர்வமாக கவர்ச்சிகரமாக இருந்தாலும், கதை மற்றும் கதாபாத்திர வளர்ச்சியில் ஆழம் குறைவதால் கலவையான விமர்சனங்களை பெற்றது

GENERAL TALKS - சூரியனும் நிலவும் என்று இரு மனங்கள் !

  நம் கதாநாயகன் கடைக்குள் நுழைந்தவுடன், அவன் மனதில் ஓர் இசை ஒலிக்கிறது போல. நெய் வழியும் பருப்பு சாதம், மொறுமொறுப்பான மசாலா தோசை, பக்கத்தில்...