புதன், 13 மே, 2026

SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.4




--- 

---


SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.3




=== ===

 

Move mouse to interact

SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.2



--- 


---

 

SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.1



--- 

 

---


செவ்வாய், 12 மே, 2026

LIFE TALKS - நமது வாழ்க்கைக்கு தேவை ஒரு நிரந்தர மனமாற்றம் !


===

நம்ம வாழ்க்கையில் எந்த ஒரு கட்டத்திலும் நமக்கு ஒரு நிரந்தர மனமாற்றம் தேவை என்பதை உணரும் ஒரு தருணம் அமையும். வாழ்க்கை என்பது ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் பயணம் அல்ல; அது பல திருப்பங்களையும், ஏற்ற இறக்கங்களையும் கொண்டது. 

ஏதோ ஒரு கட்டத்தில், நாம் இன்றுவரை வாழ்ந்து வந்த முறை, நாம் கொண்டிருந்த நம்பிக்கைகள், மற்றும் நம் அன்றாடச் செயல்பாடுகள் எல்லாமே ஒரு சலிப்பைத் தரத் தொடங்கும். குறிப்பாக நமது பிரச்சனைகளை சரிசெய்ய முடியாத நிலை 

அப்படி ஒரு நிலையில் சலிப்பு நேர்ந்தால் நம்மை பிரச்சனைகளில் இருந்து நாம் வெளியே கொண்டுவரும் வரை அந்த சலிப்பு போகாது, மனம் மெல்ல கிசுகிசுக்கும்: "நமக்கு ஒரு நிரந்தர மனமாற்றம் தேவை."

பொதுவாக ஒரு சோர்வு ஏற்படும்போது நாம் ஒரு சுற்றுலா செல்கிறோம் அல்லது ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுகிறோம். ஆனால், இவை யாவும் தற்காலிகமான 'நிவாரணங்கள்' மட்டுமே. பிரச்சனைகளை சரிசெய்ய என்ன முடிவை எடுக்கிறோம் என்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது, 

முடிவு எடுப்பதோடு அதனை வருடக்கணக்கில் சேர்த்து வைத்து வெற்றியடைய வெப்பதும் கடினமான காரியமாக கருதாப்படுகிறது, ஒரு பாடல் வரியில் இடம்பெறுவது போல உலகத்தின் கடைசி நாள் இன்றுதான் என்பது போல ஒரு மன நிறைவு இல்லாத வாழ்க்கை, நம்ம எதிர்காலத்துக்காக ஒரு பாதுகாப்பு இல்லாத வாழ்க்கை என்பது அடிப்படையில் கடினமானது ! 

உண்மையான மாற்றம் என்பது வெளிப்புறச் சூழலை மாற்றுவது அல்ல; நம் மனதை கட்டுப்படுத்தி பார்ப்பது. எண்ணங்களின் போக்கை மாற்றுவதும், பழைய கசப்புகளைக் களைவதும், புதியதொரு புரிதலோடு உலகை அணுகுவதுமே அந்த "நிரந்தர மனமாற்றம் !

இந்த மானமாற்றத்தை செய்து முடித்தாலும் வாழ்க்கை கடினமானதாக சோகமாக இருந்தாலும் நம்மால் ஜெயிக்க முடியும் மக்களே ! அந்த வகையில் இது வாழ்க்கையின் அடிப்படை செயல்முறை ! 




 

TAKE CARE AND BE WELL!

THANKS FOR VISITING THIS TAMIL BLOG ! - இது ஒரு பேர்ஸனல் பிளாக் !




---

 

SYSTEM OVERRIDE

THANKS FOR VISITING THIS BLOG! 

TAMILNSA.BLOGSPOT.COM

---

வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் சந்திக்கும் சரியான விஷயங்களாகட்டும், அல்லது நம்மை நிலைகுலையச் செய்யும் தவறான முடிவுகளாகட்டும் அவற்றை எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பகிர்ந்துகொள்ள ஒரு களம் எனக்குத் தேவையாய் இருந்தது. 

அந்தத் தேடலின் விளைவுதான் இந்த வலைப்பூ. தொடக்கத்தில் வெறும் எழுத்துக்களின் தொகுப்பாகத் தோன்றிய இது, இன்று என் மனதுடைய  கண்ணாடியாக மாறியிருக்கிறது. 

பல நேரங்களில், இந்தத் தளம் வெறும் பொழுதுபோக்கிற்கான ஒரு இடமாக  மாற்றப்பட வேண்டும் என்ற அழுத்தங்களும், முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதுண்டு. 

ஆனால், ஒரு கட்டத்தில் இது வெறும் தரவுகளின் தொகுப்பு அல்ல; இது என் ஆன்மாவின் கருத்து பகிர்வு முயற்சியின் மிகவும் வகைப்படுத்தப்படாத ரேண்டம் ஆன விஷயங்களை போஸ்ட் பண்ணிய ஒரு பகுதி.


உண்மையைச் சொல்லப்போனால், இந்த வலைப்பூ என்பது நிறைய போஸ்ட்கள் நிறைந்த ஒரு உயிரற்ற டிஜிட்டல் திரையமைப்புதான். ஆனால், இதில் நான் காணும் தினசரி மகிழ்ச்சி என்பது அளவிட முடியாதது. 

இன்று நம் தமிழ் மொழியைச் சரியாகப் பேசுபவர்களும், வாசிப்பவர்களும் குறைந்து வரும் சூழலில், உலகெங்கிலும் இருந்து தினமும் இந்த வலைப்பூவிற்கு வந்து செல்லும் மக்கள் தங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியை இங்கே தேடுகிறார்கள் என்பதை உணரும்போது என் நெஞ்சம் ஆச்சரியத்தால் நிறைகிறது. 

தொழில்நுட்ப யுகத்தில் நமது தாய்மொழி மங்கிவிடுமோ என்ற அச்சத்திற்கு மத்தியில், நீங்கள் காட்டும் இந்த ஆர்வம் நம் மொழியின் அடையாளத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஒரு சிறு தூணாக எனக்குத் தெரிகிறது.

இந்த வலைப்பூவிற்கு வந்து செல்லும் ஒவ்வொரு வாசகரும் எனக்கு வெறும் சப்போர்ட்டர் மட்டுமே அல்ல நீங்கள் ஒவ்வொருவரும் தமிழ் எனும் பெருங்கடலின் அலைகள். நம்ம தமிழ் மொழி நான்தான் சப்போர்ட் பண்ண வேண்டும் ! 

பொழுதுபோக்கிற்காக எத்தனையோ தளங்கள் இருந்தும், அதனோடு சேர்த்து சிந்தனைக்கும் பகிர்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கும் இந்த இடத்தைத் தேடி நீங்கள் வருவதுதான் இந்த 'உயிரற்ற' வலைப்பூவிற்கு உயிர் கொடுக்கிறது. 

நம் மொழியை நேசிக்கும், வாசிக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் இந்த வலைப்பூவின் உண்மையான உரிமையாளர்கள். உங்கள் வருகையும், வாசிப்பும் தான் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. நம் அடையாளத்தைச் சுமந்து நிற்கும் இந்தச் சிறு பயணத்தில் என்னோடு கைகோர்த்து நடக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

விளம்பரங்களை பார்த்தால் தயவு செய்து கிளிக் பண்ணுங்கள் மக்களே ! நம்ம வலைப்பூ மூலமாகவும் ஒரு வருமானம் கிடைத்துக்கொண்டு இருப்பது நம்ம வலைப்பூவை வேறு லெவல்லில் டிஸைன் பண்ண உதவியாக இருக்கிறது !! 

GENERAL TALKS - கட்டாயத்தின் அடிப்படையில் செய்யும் விஷயங்கள் !




நம்ம வாழ்க்கையில் கட்டாயத்தின் அடிப்படையில் விஷயங்களை செய்ய கடமைப்பட்டவர்கள் , சுதந்திரமாக வாழ்க்கையை வாழ்பவர்கள் என்று இரண்டு கட்டமாக நம்முடைய வாழ்க்கை பிரிந்து இருக்கிறது. 

கட்டாயம் என்பது சாதாரணமான விஷயம் இல்லை மக்களே, கட்டாயம் கொடுக்கும் வலிகளும் காயங்களும் மிகவும் அதிகமானது, யாராலுமே பொறுக்க முடியாத அளவுக்கு வலிகளை கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் இந்த கட்டாயம். 

இந்த நிர்பந்தங்களுக்கு நாம் பொறுப்பு எடுக்கும்போது வாழ்க்கையின் சந்தோஷம், நிம்மதி, செல்வம் என்று எந்த விஷயமாக இருந்தாலும் அனைத்தையும் இழப்பதை பார்க்கின்றோம். 

நமது பலம் குறைந்துபோகிறது, மற்றவர்களுடைய அவமானங்களுக்கும் தாக்குதல்களுக்கும் நேரடியாக உள்ளாக்கப்படுகிறோம், நமக்கு இந்த விஷயங்களுடைய பின்னணி தெரிவது இல்லை மக்களே. 

நம்மை ஒரு கட்டுப்பாடான சூழலில் வாழ்க்கை நகர்த்திக்கொண்டு இருந்தால் உடனடியாக உயிரை கொடுத்தாவது வெளியே வாருங்கள், சுதந்திரம் என்ற விஷயம் நமது அடிப்படையான உரிமை, 

நம்முடைய சுதந்திரம் என்பதை இழந்துவிட்டால் விருப்பு வெறுப்பு இல்லாமல் அடிமை வேலை பார்க்க வைத்துவிடுகிறது இந்த கட்டாய வாழ்க்கை வாழும் பிரச்சனைகளின் ஈடுபாடு !


===

 

----

SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.4

---  ---