மோட்டிவேஷன் மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்க்கையில் குதித்துவிட்டால் நாளைல இருந்து விடியற்காலை 4 மணிக்கு எந்திரிக்கிறோம், ஓடுறோம், ஜிம்முக்கு போறோம், டயட் இருக்கோம், புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு உலகத்தையே ஜெயிக்கிறோம்!" என்று மூளைக்குள் ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் பிரசென்டேஷனே (PPT) ஓடத் தொடங்கும்.
பகலில் ஒரு சின்ன வரிக் கதை எழுதக்கூட யோசிக்கும் மூளை, அந்த நள்ளிரவு அமைதியில் ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கு பிரம்மாண்டமான கதைக் கருக்களையும், தத்துவங்களையும் அடுக்கிக் கொண்டே போகும். நாம்தான் அடுத்த பாரதியார், அடுத்த ஸ்பீல்பெர்க் நாம்தான் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றிவிடும். இந்த விஷயம் குழப்பமானது.
இந்த ஒட்டுமொத்தப் பிரம்மாண்டமான திட்டத்திற்கும் ஒரு மிகக் குறுகிய 'எக்ஸ்பைரி டேட்' (Expiry Date) இருக்கிறது. அதுதான் காலை 6 மணி அலார சத்தம்! நள்ளிரவில் பிரபஞ்சத்தையே கறார் விலைக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசின அதே மனது அடுத்து என்ன செய்யும் தெரியுமா ?
காலையில் அலாரம் அடிக்கும்போது, "உலகமாவது... உருப்படறதாவது... இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் தூங்குவோம்" என்று 'ஸ்னூஸ்' (Snooze) பட்டனை அமுக்கிவிட்டு, மொத்த மோட்டிவேஷனையும் மூட்டை கட்டி பரணில் போட்டுவிடும். நேற்று இரவு விழித்திருந்த அதே ஆளா இது என்று நமக்கே சந்தேகம் வந்துவிடும்
இப்படி மோட்டிவேஷன் என்பதையே நம்மால் மிகவும் சிக்கலில் வைத்து செய்துகொண்டு இருந்தால் எப்படி நம்மால் நம்மை மேலே கொண்டு வரமுடியும் என்றால் அதற்கு நம்முடைய லைப் ஸ்டைல் மொத்தமாக மாறவேண்டும் மக்களே ! விஷயம் அந்த அளவுக்கு சிக்கலானது !
நள்ளிரவில் நம்மால் உடனடியாக எந்தச் செயலிலும் இறங்க முடியாது. அந்த நேரத்தில் போய் ஜிம்முக்கு போகவோ, உடனே வேலையைத் தொடங்கவோ சாத்தியமில்லை. அதனால், உடனடியாகச் செய்ய வேண்டிய 'செயல்பாட்டு ரிஸ்க்' (Risk of execution) இல்லாததால், மனது தன் இஷ்டத்திற்குப் பகற்கனவு கண்டு மகிழ்கிறது. ஆன்லைன் ஷாப்பிங்கில் கார்ட்டில் (Cart) லட்சக் கணக்கான பொருட்களைச் சேர்த்துவிட்டு, 'பை' (Buy) பண்ணாமல் வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு தற்காலிக குஷிதான் இதுவும்