வெள்ளி, 8 மே, 2026

VAAZHUM KALAI - தெளிவான சிந்தனைகள் தேவைப்படுகிறது மக்களே !




நீங்கள் யார் மீதாவது வெறுப்பு வைத்திருந்தால் ஜெயிக்கவே முடியாது மக்களே , மன்னித்தல் என்பது பலவீனம் அல்ல; அது நம் மன அமைதிக்காக நாம் நமக்கே கொடுத்து நம்மை முன்னேற வைக்கும் ஒரு காஸ்ட்லியான பரிசு. ஒருவரை மன்னிப்பதன் மூலம் நீங்கள் அவரை விடுவிக்கவில்லை, உங்களைச் சிறைபிடித்திருந்த கோபத்திலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்கிறீர்கள், கவனமாக யோசித்து பாருங்களேன், நதி ஓடும்போது சத்தம் போடுகிறது, ஆனால் அது கடலில் சேரும்போது மௌனமாகிறது. அறிவும் அதுபோலத்தான்; முழுமை பெற்ற அறிவு எப்போதும் ஆர்ப்பரிப்பதில்லை, அது அமைதியான ஆழத்தைக் கொண்டிருக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களின் மனநிலை; நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதே உங்கள் வாழ்க்கை. உலகத்தின் கண்ணாடி உங்களை அழகாகக் காட்டலாம், ஆனால் உங்கள் மனசாட்சியின் கண்ணாடி மட்டுமே உங்களை உண்மையாகக் காட்டும்.அதுக்காக நம்முடைய வாழ்க்கையில் நாம் போலியாக இருக்க வேண்டிய கட்டாயம் நமக்குள்ளே இருந்தாலும் உண்மைகள்தான் ஒரு கட்டத்தில் நமக்கு சப்போர்ட் பண்ணுகிறது, நம்பிக்கையை விடவேண்டாம் மக்களே ! தோல்வி என்பது ஒரு முடிவல்ல, அது ஒரு திசை திருப்பம். ஒரு கதவு மூடப்படும்போது, நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டிருப்பதால், நமக்காகத் திறந்திருக்கும் மறுபுறத்து ஜன்னலை கவனிக்கத் தவறிவிடுகிறோம் , யாரும் பார்க்காத போதும் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதே உங்கள் உண்மையான குணம். உலகம் புகழுக்காகக் காத்திருக்கலாம், ஆனால் சமத்தான மக்கள் எப்போதும் வேல்யூவை அதிகரிக்க மட்டுமே காத்திருப்பார்கள் ! இங்கே பெயரும் புகழும் நிரந்தரம் இல்லாதது, நமது வேலைகளே சொத்துக்களே நமக்காக நிலைக்கக்கூடியது ! 

VAAZHUM KALAI - நமது வாழ்க்கை நமது முன்னேற்றம் !!


நமது சிறப்பான வாழ்க்கைக்காக கொஞ்சம் அட்வைஸ் மக்களே : எப்போதும் கோபத்தில் இருக்கும்போது முடிவெடுக்காதீர்கள், மகிழ்ச்சியில் இருக்கும்போது வாக்குறுதி அளிக்காதீர்கள். உணர்ச்சிகள் அடங்கிய பின் சிந்திப்பதே ஒரு முதிர்ச்சியான மனிதருக்கு சரியான அறிவுத்திறனாக இருக்கிறது, அதிகமாகப் பேசுவதை விட, ஆழமாகக் கவனிப்பதே ஒருவரைப் பேரறிஞனாக்கும். பிறர் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்பது, அவர்களுக்கு நாம் கொடுக்கும் மிக உயரிய மரியாதை, செல்வம் என்பது சேர்த்து வைப்பதில் இல்லை, தகுதியுள்ளவர்களுக்குக் கொடுத்து மற்றவர்களோடு சேர்ந்து இன்னும் அதிகமாக சம்பாதித்து மகிழ்வதிலேயே இருக்கிறது. நாம் பிறருக்குக் கொடுக்கும் ஆதரவே, நாளை நாளை நமக்குத் தேவையாகும்போது திரும்பி வரும், சமூக பொருளாதார கட்டமைப்பு வெறும் சுயநலத்தால் மட்டுமே உருவாகாது, இருளைத் திட்டுவதை விட, ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுவது சிறந்தது. அதுபோல, மற்றவர் குறைகளைப் பேசுவதை விட, அவர்களிடம் உள்ள ஒரு நற்பண்பைப் பாராட்டுவது சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்கும் ஆகவே மற்றவர் மீது குறைகூறும் முன், நம்மிடம் உள்ள சிறு தவறுகளையும் சரிசெய்ய முன்வருவோம். உலகைத் திருத்த முயல்வதை விட, நம்மை நாமே செதுக்கிக் கொள்வதே அறம் என்று சொல்லப்படுகிறது, ஒரு மரத்தின் கிளைகள் வானத்தைத் தொட வேண்டுமானால், அதன் வேர்கள் இருண்ட ஆழமான மண்ணைத் தழுவியிருக்க வேண்டும். நம் வாழ்வின் உயர்வும் அத்தகையதே; புகழை உலகம் காணட்டும், ஆனால் உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைதியான ஆழத்தில் இருக்கட்டும். நமது வேர்களை வெளிப்படுத்தாமல் இருக்கும் வகையில் நம்முடைய வாழ்க்கை பிரகசமானதாக இருக்கும் ! கடலில் தாகத்திற்காக அலைபவனை விட, ஒரு துளி மழையைச் சேகரிப்பவனே புத்திசாலி. வாய்ப்புகள் ஏராளமாக இருக்கலாம், ஆனால் எது உங்களுக்குத் தேவையோ அதை மட்டும் தேர்ந்தெடுப்பதே வாழ்வின் நிம்மதி, சரியான முடிவு என்ன என்பதை நாம்தான் கண்டறிந்து செயல்பட வேண்டும் மக்களே !! 

GENERAL TALKS - நமது வாழ்க்கையின் மோட்டிவேஷன்! - ஒரு பதிவு !


நமது வாழ்க்கையை பொறுத்தவரை கடந்து சென்ற காலத்தையும், எறிந்த சொல்லையும் யாராலும் மீட்க முடியாது. எனவே, ஒரு செயலைச் செய்யும் முன்பும், ஒரு சொல்லை உதிர்க்கும் முன்பும் நிதானமாகச் சிந்திப்பது அவசியமானது. 

தவறு செய்வது மானுடம், அதை ஒப்புக்கொள்வது தெய்வீகம். நம் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் நம் எதிரிகள் அல்ல, அவர்கள் நம்மை மேம்படுத்தும் நபர்கள், இன்னும் நிறைய விஷயங்கள் நமது வாழ்க்கையில் இருக்கிறது ! 

குறை சொன்னவராக இருந்தாலும் முகம் கொடுத்துப் பேசுவதும், ஒரு சிறிய புன்னகையைப் பரிமாறிக் கொள்வதும் பெரும் பொருட்செலவு இல்லாத மிகச்சிறந்த தர்மமாகும். இது உறவுகளுக்கு இடையே பாலமாக அமையும்

கல்வி கற்றவன் அடக்கம் பெறுகிறான், அனுபவம் மிக்கவன் பணிவு பெறுகிறான். நாம் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும், நம்மைச் செதுக்கிய வேர்களை மறக்காமல் இருப்பதே உண்மையான மனிதப்பண்பு.

உயரப்பறக்கும் பறவை கூட ஓய்வெடுக்க நிலத்திற்குத்தான் வரவேண்டும். அதுபோல, அதிகாரத்தில் இருக்கும்போது பிறருக்கு உதவுங்கள்; அது நீங்கள் கீழே வரும்போது உங்களுக்கு அரணாக இருக்கும்.

வெற்றி தாமதமாகும் போது பொறுமை தேவை, வெற்றி கிடைத்த பின் நிதானம் தேவை. இந்த இரண்டையும் கடைப்பிடிப்பவர் எக்காலத்திலும் வீழ்வதில்லை

உங்கள் உழைப்பு சத்தமில்லாமல் இருக்கட்டும், ஆனால் உங்கள் வெற்றி உலகமே அதிரும் வகையில் இருக்கட்டும். தற்பெருமை பேசுவதை விட, நம் செயல்கள் பேசட்டும் அதுதான் நமக்கு மரியாதை ! 

GENERAL TALKS - குறைகள் இல்லாத வாழ்க்கையே இல்லை !

 



"நாம் எப்போதுமே நம்மை ஒரு பெரிய மனிதராகவோ அல்லது குறையே இல்லாதவராகவோ கருதிவிடக் கூடாது. ஏனெனில், உலகில் குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை வாழ்வில் இரண்டு வகை மனிதர்கள் உண்டு: 

வெற்றியாளர்கள்: தன்னிடம் உள்ள குறைகளை உணர்ந்து, அவற்றைச் சரியாகத் திருத்திக் கொண்டு முன்னேறுபவர்கள். ஆனால் தோல்வியாளர்கள்: எப்போதும் தனது குறைகளைப் பற்றியே சிந்தித்து, வருத்தப்பட்டுக்கொண்டு காலத்தை வீணடிப்பவர்கள்." 

அடுத்தவன் வாழ்க்கையோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் நாம் செய்யும் முதல் தவறு. அவன் கையில் இருப்பது தங்கம் என்பதால் உன் கையில் இருக்கும் வெள்ளி மதிப்பு இல்லாமல் போய்விடாது. நம்மிடம் இருப்பதை நேசிக்கத் தொடங்கினால், மற்றவர்களின் வளர்ச்சி நம் கண்ணை உறுத்தாது. அதுதான் வாழ்க்கை!

ஜெயித்தவன் எல்லாரும் திறமைசாலி கிடையாது, தோற்றவன் எல்லாரும் முட்டாளும் கிடையாது. விழுந்த போதெல்லாம் எவன் ஒருவன் 'பரவாயில்லை பாத்துக்கலாம்' என்று மீண்டும் எழுந்தானோ, அவனே இன்று மேடையில் நிற்கிறான். மற்றவர்கள் வெறும் கைதட்டலோடு நின்றுவிடுகிறார்கள்

யாரோ ஒருவன் உங்களை கல்லால் எறிந்தால், அதைத் திருப்பி எறியாதீர்கள். அந்த கற்களைச் சேகரித்து ஒரு உயர்ந்த கட்டிடமாக மாற்றுங்கள். நீங்கள் உயரத்தில் நின்றால், கீழே இருப்பவன் எறியும் கல் உங்களை வந்து அடையாது; அது அவன் கையைத்தான் வலிக்கும்.

நமக்குச் சரி என்று தோன்றுவது மற்றவருக்குத் தவறாகத் தோன்றலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. மற்றவர் கருத்துக்கு மதிப்பு அளிப்பதன் மூலமே நாம் மேன்மையானவர்களாக மாறுகிறோம்.

செவ்வாய், 5 மே, 2026

GENERAL TALKS - இது ஒரு தேர்தல் காலத்து பதிவு !

 


"இந்த வலைப்பூவானது அரசியல் விவாதங்களுக்காகவோ அல்லது தேர்தல் களம் சார்ந்த கருத்துப் பரிமாற்றங்களுக்காகவோ உருவாக்கப்பட்டதல்ல. இதன் முதன்மையான நோக்கம் பொழுதுபோக்கு, ஆக்கப்பூர்வமான கருத்துப் பகிர்வு மற்றும் நம் வாழ்வியலை மேம்படுத்தும் உரையாடல்கள் மட்டுமே. மக்களாகிய நீங்களும் பின்னூட்டப் பெட்டியில் பல்வேறு அரசியல் கருத்துக்களையும், தேர்தல் கணிப்புகளையும் முன்வைத்தாலும், என் நிலைப்பாடு மிகவும் தெளிவானது: அரசியலைத் தள்ளி வைத்துவிட்டு, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.

நாளை நீங்கள் அடையப்போகும் ஒரு சிறு தனிப்பட்ட முன்னேற்றம் கூட, இந்த நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான ஒரு பெரும் பங்களிப்பாகவே இருக்கும். அரசியலைப் பேசி நேரத்தைச் செலவிடுவதை விட, நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்வதிலும், நம் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும் நாம் அக்கறை காட்டினால், இந்த நாடு தானாகவே வெற்றிப்பாதையில் நடைபோடும். எனவே, அரசியல் சார்ந்த கருத்து மோதல்களைத் தவிர்த்துவிட்டு, உங்கள் வாழ்க்கையையும் உங்கள் முன்னேற்றத்தையும் மட்டும் நோக்கமாகக் கொண்டு முன்னேறுங்கள். இங்கு நாம் பகிர்வோம், கற்போம், வளர்வோம்!"

"பொதுவாக, மன அழுத்தம் என்பது நம்முடைய அறிவாற்றல் விரிவடைந்து, ஆனால் அந்த அறிவிற்கு ஏற்றபடி செயல்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாதபோதுதான் உருவாகிறது. ஒரு காரியத்தில் உங்களுடைய பங்களிப்பு மிகச் சிறிய அளவிலும், அதன் மீதான அதிகாரம் அல்லது கட்டுப்பாடு மற்றவர்களின் கையிலும் இருக்கும்போது மன உளைச்சல் தவிர்க்க முடியாததாகிறது.

எப்பொழுது நீங்கள் செய்யும் செயல்களில் முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்கிறீர்களோ, அப்பொழுதே மன அழுத்தம் மறைந்து வெற்றி பிறக்கிறது. உங்கள் உழைப்பும், முடிவெடுக்கும் திறனும் உங்கள் கைவசப்படும்போது, உங்களால் எதையும் சாதிக்க முடியும். எனவே, உங்கள் ஆற்றலைச் சிதறவிடாமல், உங்கள் செயல்களின் மீது முழுக் கவனத்தையும் கட்டுப்பாட்டையும் செலுத்துங்கள்; சாதனை என்பது தானாகவே நிகழும். அறிவும் ஆற்றலும் அதிகமாக இருந்து, அதிகாரம் குறைவாக இருக்கும் இடத்தில்தான் மன அழுத்தம் குடிபுகுகிறது. உங்கள் செயல்களுக்கு நீங்களே எஜமானாக மாறும்போது, தோல்விகள் விலகிச் சாதனைகள் வசப்படும்"

LOVE TALKS - கொஞ்சமாக காதல் கவிதைகள் !! #18

 




"2014-ல் உன் கதவு இடுக்கில் 
செருகப்பட்ட அந்தப் பெயர் இல்லாத 
கவிதைக் கடிதம் யார் எழுதியது 
என்று நீ இன்னும் தேடிக்கொண்டிருக்கலாம்! 
பக்கத்து வீட்டுப் பையனின் 
கையெழுத்து போல வேண்டுமென்றே 
மாற்றி எழுதிய அந்த வலியில் 
என் பத்து வருடக் காதலும், 
பதினாராவது பிளாட் ரகசியமும் 
இன்றும் வாழ்கிறது!"


"காற்றாடி விடும் சாக்கில் 
மொட்டை மாடிக்கு வந்து நிற்கிறேன் 
என் பட்டத்தின் நூல் 
அறுந்து போனாலும் கவலையில்லை! 
உன் வீட்டு பால்கனிப் பக்கம் 
அது தள்ளாடி விழும் போது
அதை எடுக்க நீ வரும் அந்த 
ஒரு நொடிக்காக நூறு முறை 
என் இதயத்தையே வழங்கி கொள்ளத் தயார்!"


"உன் வீட்டு லேண்ட்லைன் 
எண்ணுக்கு போன் செய்துவிட்டு 
உன் அப்பா எடுத்ததும் 
பயத்தில் வைத்த அந்த நாட்கள்! 
'யாரது?' என்று அவர் கேட்கும் போது 
மறுமுனையில் மௌனமாக 
நான் தெரு டெலிஃபோன் பக்கம்  நின்றாலும் 
என் மூச்சுக்காற்றின் வேகமே 
உனக்குச் சொல்லியிருக்கும், 
அது உன் வீட்டு வாசலில் 
நிற்கும் என் இதயம் என்று!"


"அபார்ட்மெண்ட் லிஃப்ட் கண்ணாடியில் 
நான் என் தலைமுடியைச் சீவுவது 
உன்னைப் பார்க்க அல்ல! 
நீ உள்ளே நுழையும்போது
உன் பிம்பம் அந்தக் கண்ணாடியில் 
பட்டுத் தெறிப்பதை நேருக்கு நேராக 
பார்க்கத் துணிவில்லாமல் 
ரகசியமாக ரசிப்பதற்காக மட்டுமே!"


"உன் வீட்டு வாசலை
கடக்கும்போது வேண்டுமென்றே 
என் சைக்கிள் பெல் அடிக்கிறேன்! 
உன்னை வெளியே வர சொல்ல அல்ல 
என் இதயம் உன்னைப் பார்த்ததும் 
சத்தம் போட்டு அலறுகிறது 
என்பதை உனக்குத் தெரிவிப்பதற்காக!"

LOVE TALKS - கொஞ்சமாக காதல் கவிதைகள் !! #17

 








"மழை பெய்யும்போது வேண்டுமென்றே 
என் குடையை வீட்டில் மறந்து வைத்துவிடுவேன்.. 
உன் சிறிய குடைக்குள் எனக்கும் 
கொஞ்சம் இடம் கேட்பதற்காக அல்ல! 
அந்த மழையில் நனைந்து கொண்டே
உன் தோளோடு தோள் உரசி நடக்கும் 
அந்த ஒரு நொடி நெருக்கத்திற்காக மட்டும் தான்!"



"இந்த அபார்ட்மெண்டில் 
எத்தனையோ கதவுகள் இருக்கலாம்.. 
ஆனால் என் கண்கள் தேடுவது 
உன் வீட்டு கதவை மட்டும் தான்! 
நீ வெளியே வரும் அந்த ஒரு நொடி 
என் இருண்ட அறையில் ஆயிரம் 
டியூப்லைட்கள் ஒரே நேரத்தில் எரிந்து 
தீர்ப்பது போன்ற ஒரு பேரொளி!"



"ஒரே ஒரு ஹெட்ஃபோன் 
இடது காதில் உனக்கு, 
வலது காதில் எனக்கு! 
2014-ன் அந்த மெலடி பாடல்கள் 
நம் இருவருக்கும் நடுவே 
ஒரு கண்ணுக்குத் தெரியாத 
காதல் பாலத்தை அமைத்து 
கொண்டிருந்ததை அந்தப் பழைய 
எம்பி3 (MP3) பிளேயர் மட்டுமே அறியும்!"

VAAZHUM KALAI - தெளிவான சிந்தனைகள் தேவைப்படுகிறது மக்களே !

நீங்கள் யார் மீதாவது வெறுப்பு வைத்திருந்தால் ஜெயிக்கவே முடியாது மக்களே , மன்னித்தல் என்பது பலவீனம் அல்ல; அது நம் மன அமைதிக்காக நாம் நமக்கே க...