ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தாள்
ஹேய் துஷ்யந்தா நீ மறந்ததை உன் சகுந்தலா மீண்டும் தந்தாள்
கள்ள பெண்ணே என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய் என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே
பூங்காவில் மழை வந்ததும் புதர் ஒன்று குடை ஆனதும்
பூங்காவில் மழை வந்ததும் புதர் ஒன்று குடை ஆனதும்
மழை வந்து நனைக்காமலே மடி மட்டும் நனைந்ததை
மறந்தது என்ன கதை ?
ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தாள்
அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்
இருள் கூட அறியாத இன்பங்களின் முகத்தில்
ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தாள்
அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்
இருள் கூட அறியாத இன்பங்களின் முகத்தில்
இரு பேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில்
வருடித்தந்தாய் மனதை திருடிக்கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை
ஆளாலங்ககாட்டுக்குள் ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே
ஆளாலங்ககாட்டுக்குள் ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே
உன்னை போர்த்து கொண்டு படுத்தேன்
பாலாற்றில் நீராடும் போது துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்
அந்த நீல நதிக்கரை ஓரம் நீ நின்றிருந்தாய் நொடி நேரம்
பாலாற்றில் நீராடும் போது துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்
அந்த நீல நதிக்கரை ஓரம் நீ நின்றிருந்தாய் நொடி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகி வந்தோம் சில காலம்
ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தாள்
பார்த்த ஞாபகம் இல்லையோ ? பருவ நாடகம் தொல்லையோ ?
ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தாள்
பார்த்த ஞாபகம் இல்லையோ ? பருவ நாடகம் தொல்லையோ ?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ ? மறந்ததே இந்த நெஞ்சமோ ?
ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா
ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா
1 comment:
வெற்றி சிறகுகள் - இந்த புத்தகம் படிப்பதற்கு மிகவும் பிரமாதமாக இருந்தது. தன்னுடைய குடும்பத்தை பண கஷ்டத்திலிருந்தும் வறுமையில் இருந்தும் காப்பாற்றுவதற்காக நமது கதாநாயகர் ஆஸ்திரேலியா நாட்டுக்கு படிப்புக்காகவும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியில் சேரும் இலட்சியத்துடனும் செல்கிறார் அங்கே அவர் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன ? தொடர்ந்து அவருக்கு வெளிநாட்டில் உருவாகும் கஷ்டங்களை எவ்வாறு சமாளிக்கிறார் ? தோல்விகள், ஏமாற்றங்கள், பண நெருக்கடி போன்ற நிறைய விஷயங்களை நம்ம கதாநாயகர் எப்படி சரிசெய்கிறார் என்பதுதான் கதை! இருந்தாலுமே ஒரு ஒரு முறையும் "தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன்" என்பது போல தன்னுடைய லட்சியத்தை விட்டுக் கொடுக்காமல் துணிவோடு போராடக்கூடிய பார்த்தசாரதி சந்திக்கக்கூடிய அனுபவங்கள் என்னென்ன ? இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த புத்தகத்தை நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். கஷ்டப்படக்கூடிய குடும்ப சூழலில் இருந்து வெளிநாடுகளில் தங்கி படித்து வேலை பெற வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க போகிறார்கள் என்பதை இந்த புத்தகம் தெளிவாக அலசுகிறது. மொத்தத்தில் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள், ஃபேன்டஸியான ரொமான்ஸ் போர்ஷன்கள் என்ற கமெர்ஷியல் பில்ட் அப் இல்லாமல் இந்த கதை எதார்த்தமான ஒரு கல்லூரி இளைஞரின் கனவாக இருக்கும் வெளிநாட்டு படிப்பையும் அதனை தொடர்ந்து வெளிநாட்டிலேயே வேலை வாய்ப்பையும் பெற்றுக் கொள்வதற்காக தொடங்கிய அவருடைய சில வருடங்களுக்கான பயணத்தின் வெற்றிகள், தோல்விகள், அனுபவங்கள், காதல், இழப்பு, குடும்பம், விடாமுயற்சி என்று பலவகையான விஷயங்களை கலந்து நிஜவாழ்க்கை வாழ்வியலை சார்ந்து சொல்லியுள்ளது என்பதுதான் ப்ளஸ் பாய்ண்ட் ! பார்த்த சாரதியின் தனிமனித உழைப்பால் அவருடைய கனவுகளுக்கு கொடுத்த சிறகுகள் பறந்து சென்று அவருக்காக வெற்றிகளின் வானத்தை தொடுவதுதான் இந்த புத்தகத்தின் ரியல் அட்வென்ச்சர் இப்போதே இந்த புத்தகத்தை ORDER செய்ய இந்த இணைப்பை பயன்படுத்தவும் : https://thewritepublishing.co.in/product/vettri-siragugal/
Post a Comment