நம்ம வாழ்க்கையை பொறுத்தவரை மக்களே கடைசி காலத்தில் வாழும் வாழ்க்கை என்பது எப்போதுமே தவிர்க்க முடியாத ஒரு விஷயம். நம்ம வாழ்க்கையுடைய கடைசி கட்டத்தை பார்த்து பயப்பட கூடாது. அன்போடு கடைசி கட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்ம வாழ்க்கையில் கடைசி கட்டத்தை பார்த்து பயந்தால்தான் பின்னாட்களில் அதிகமான பிரச்சனைகளை அவைகள் கொண்டுவரும். நம்ம வாழ்க்கை அதுக்காக நம்முடைய முதுமை பருவம் வரும் வரைக்கும்தான் காத்திருக்கும் என்று அவசியம் இல்லை. எந்த நேரம் வேண்டுமென்றாலும் நம்ம உயிரை வாழ்க்கை எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தில்தான் இருக்கிறத. நம்ம வாழ்க்கையில் சரிபண்ண முடியாத பிரச்சனைகள் என்று எதுவுமே இல்லை. நம்ம வாழ்க்கையில் தற்காலிகமாக இருக்கும் சப்போர்ட்களை நம்பி எப்போதுமே முடிவு எடுக்கவே கூடாது. நம்ம வாழ்க்கையில் நம்முடைய கடைசி காலத்தில் கூட ஒரு வாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்கு நேராக முன்னின்று சந்திக்க கூடிய போர்க்குணம் கொண்ட போர் வாள் ! என்றுதான் இருக்க வேண்டும். வெட்டப்பட்ட மரத்துக்கு உயிர்கோடுக்கவும் முடியாது. நகர்த்தப்பட்ட நொடிமுள் பின்னாலும் செல்லாது. உங்களுடைய தேவை என்ன என்பதை கண்டிப்பாக ஒரு பட்டியல் போடுங்கள். உங்களிடம் ஒரு இன்பினிட்டி கிரெடிட் கார்ட் இருந்தால் என்ன பண்ணுவீர்களோ அது போல உங்களுடைய அடுத்த எதிர்கால வாழ்க்கைக்கான ஒரு துரிதமான நுணுக்கமான திட்டத்தை தீட்டுங்கள். உயிர் உடல் மற்றும் மூளையை பெஸ்ட் யூஸ் பண்ணுவதில்தான் நம்முடைய வாழ்க்கையே இருக்கிறது. ஒரு பணக்காரனின் அறிவுக்கும் ஒரு ஏழையின் அறிவுக்கும் இருக்கும் வித்தியாசம் வெறும் ஐந்து மில்லிக்கிராம் கேமிக்கல்கள்தான். மூளை சரியாக செயல்பட்டால் நீங்கள் என்ன நினைத்தாலும் சரி உங்களுக்கு சாதிக்க வெறும் 2 வாரங்கள் போதுமானது. மறுபடியும் கவனிக்கவும் வெறும் இரண்டு வாரங்கள் போதுமானது. நம்ம வாழ்க்கையில் எவனையும் மதிக்காமல் தனியாக நம்மால் வாழ முடியும் என்ற அகந்தையை உங்களுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டாம். நான் முன்னதாக குறிப்பிட்ட இந்த கடைசி காலம் வரும்போது முதலில் உடைவது அகந்தைதான். நீங்கள் உண்மையில் செய்ய வேண்டியது எவராலும் தாக்க முடியாத ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதுதான். இதுதான் கடினமாக இருக்கும் விஷயம். பணம் , பொருள் , அறிவு , இடம் , செயல் என்று இப்படி எவராலும் தாக்க முடியாத மிக மிக கடினத்தன்மை நிறைந்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவது அடிப்படையில் மிக கஷ்டமாக இருக்கும் விஷயம். இந்த உலகத்தில் எக்கனாமிக்ஸ் என்ற ஒரு வாரத்தைதான் மக்கள் எல்லோருக்குமே ஆதரவையும் எதிர்ப்பையுமே கொடுக்கும் வார்த்தை. இங்கே எக்கனாமிக்ஸ் நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். எக்கனாமிக்ஸ் சோதப்பிவிட்டால் வாழ்க்கையுமே சொதப்பல்லாக இருக்கும். எக்கனாமிக்ஸ்ஸின் கிராப் கூடிக்கொண்டே செல்லும் அல்லது குறைந்துகொண்டே செல்லும் ஆனால் எப்போதுமே இன்ஃப்பின்னிட்டி என்ற விஷயத்துக்கு வாராது. இதுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. உழைப்பவருக்கு அவர் உழைப்பில் கிடைத்த கொஞ்சமான அந்த பணம் சொந்தம் ஆனால் கொள்ளை அடித்து கே. ஜி. ஃஎப் படம் போல தங்கத்தையும் வைரத்தையுமே எடுத்துக்கொண்டு சந்தோஷமாக இருந்தால் உழைப்பவர்கள் உழைப்பின் மேல் நம்பிக்கையை விட்டுவிட்டு பணத்தை அல்லது பொருட்களை இருக்கும் இடத்தில் இருந்து எடுத்துக்கொள்ள முயற்சி பண்ணுவார்கள். இந்த எக்கனாமிக்ஸ்ஸில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் முன்னேற்றம் அடைந்துகொண்டே இருக்கலாம் ஆனால் ஒருவருடைய முன்னேற்றம் இன்னொருவருடைய பின்னடைவாக மட்டும்தான் இருக்கும். ஒருவர் ஒரு பொருளை அடையவேண்டும் என்றால் இன்னொருவர் இன்னொரு பொருளை இழந்துதான் ஆகவேண்டும். எக்கனாமிக்ஸ்ஸில் ஜெயிக்க வேண்டும் என்றால் கஷ்டப்பட வேண்டும் அல்லது அடுத்தவர்களின் கஷ்டத்தில் கிடைத்து அவர்கள் சேர்த்து வைத்த விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். நம்ம வாழ்க்கையில் முன்னேறவில்லை என்றால் அடுத்தவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களை பார்த்து கற்றுக்கொள்வது அல்லது நகல் எடுப்பது என்பது அவர்களை பாதிக்காத வரையில் தவறான விஷயம் என்றே சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் வெற்றி அடைய மிகவும் சுலபமான வழியாக கருதப்படுவது கடந்த காலத்தில் என்ன செய்தார்களோ அதையே மறுபடியும் நாம் செய்வதுதான். புதிதாக யோசிக்க நேரம் கண்டிப்பாக அதிகமாகத்தான் செலவாகிவிடுகிறது. இதுவே நம்ம வாழ்க்கையில் போர்க்கால அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இருக்கும்போது கண்டிப்பாக கடந்த காலத்தை அப்படியே இன்னொரு முறை நகல் எடுப்பது நல்ல யோசனைதான். கற்பனையை விற்பது வாங்குவதுதான் இங்கே அதிகமாக நடந்துகொண்டு இருக்கிறது. மக்கள் எப்போதுமே கண்ணுக்கு தெரியும் பொருட்களையும் கொஞ்சம் சேகரித்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். நகல் எடுக்காமல் வாழக்கை இல்லை. நீங்கள் உங்களுடைய சொந்த விஷயத்துக்காக ஒரு பாதையில் சென்றுகொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் அந்த பாதையில் 1000 பேர் சென்று இருந்திருக்கலாம் அதுக்காக அந்த ஆயிரம் பேரையும் நீங்கள் நகல் எடுத்துதான் நடந்துகொள்கிறீர்கள் என்றும் உங்களுக்கு சொந்த அறிவை பயன்படுத்தி புதுமை காட்ட தெரியவில்லை என்றும் எவனோ சொன்னான் என்றால் அவனை விட முட்டாள் யாருமே இல்லை. இந்த உலகத்தில் இன்னொவேஷன் என்ற வார்த்தையே தரமாக நகல் எடுத்து மேம்படுத்தத்தான் இருக்கிறது. நம்ம வாழ்க்கை ஒரு போராட்டம் எனும்போது அந்த போராட்டத்தை வெற்றி அடைய நமக்கு அளவுக்கு அதிகமான அறிவுத்திறனும் அதிகமான பொருட்களும் மேலும் நிறைய செயல்களுமே தேவைப்படுகிறது. நமக்கு வாழ்க்கையில் ஒரு பிரச்சனை வருகிறது என்றால் அந்த பிரச்சனையை சரிபண்ண வேண்டும் இல்லையென்றால் அந்த பிரச்சனையை முடிக்க வேண்டும். இந்த இரு விஷயங்களை சிறப்பாக முடிக்க நகல் எடுப்பது என்பதை தவிர சிறப்பான யோசனை என்று எதுவுமே இல்லை. தயவுசெய்து நகல் எடுங்கள் அல்லது நகலை எப்படி சிறப்பாக எடுப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய மூளையை கசக்கி சொந்தமான சுயமான அசலான ஒரு விஷயத்துக்காக காத்திருக்க வேண்டாம். ஒரு காலத்தில் நான் தேர்ந்தெடுத்த புத்தக துறையில் கட்டிங் எட்ஜ் வெற்றியை அடைய பணம் நிறைய தேவைப்பட்டது. ஆனால் அந்த காலத்தில் என்னுடைய துறையில் சாதித்தவர்களை ரேஃப்ரன்ஸ் எடுக்கும்போதுதான் துறை சார்ந்த அறிவை நன்றாக கற்றுக்கொள்ள முடிந்தது. நகலாக்கம் சரியானது. இந்த வார்த்தைகளை என்னுடைய கல்லறையில் கூட எழுதி வைத்துவிடுங்கள். நான் என்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்களை பார்த்துவிட்டேன். நகலாக்கத்தை தவிர்ப்பது மக்களுக்கு துன்பத்தை மட்டும்தான் இன்றுவரைக்கும் கொடுத்து இருக்கிறது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - புதிய விஷயங்களுக்கு சப்போர்ட் பண்ணலாமா ?
நம்ம வாழ்க்கையில் பழைய முறைகளால் தோற்று போகும்போது புது விஷயங்களை கொண்டுவந்தே ஆகவேண்டும் ! வரலாறு என்பது எப்போதும் மாற்றங்களுக்கு எதிரான ஒரு...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
-
101. "உன்னைப் போலவே நீ இரு, பிறரை நகலெடுக்காதே." 102. "உயரம் என்பது உன் உடலால் அளக்கப்படுவது அல்ல, உன் எண்ணங்களால் அளக்கப்படு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக