Tuesday, January 16, 2024

MUSIC TALKS - POOKAL POOKUM THARUNAM AARUYIRE - VERA LEVEL PAATU !!

 



பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே ?

உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே

நேற்றுவரை நேரம் போகவில்லையே உனதருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே ?

இது எதுவோ ? இரவும் விடியவில்லையே ? அது விடிந்தால் பகலும் முடியவில்லையே

பூந்தளிரே.. !!



வார்த்தை தேவை இல்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே

நேற்று தேவை இல்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே

வேரின்றி விதையின்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே

வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே


இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்

இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் ? அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

பூந்தளிரே..


OH WHERE WOULD I BE !!

WITHOUT THIS JOY INSIDE OF ME !!

IT MAKES ME WANT TO COME ALIVE

IT MAKES ME WANT TO FLY !!

INTO THE SKY !!


OH WHERE WOULD I BE !

IF i DIDN'T HAVE YOU NEXT TO ME !

OH WHERE WOULD I BE !!

OH WHERE !! OH WHERE !!



எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈரமழை தூவுதே

எந்த உறவு இது எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளுதே

யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே 

ஏன் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே


பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே

காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே 

இது எதுவோ ?



பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே ?

உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே

நேற்றுவரை நேரம் போகவில்லையே உனதருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே ?

இது எதுவோ ? இரவும் விடியவில்லையே ? அது விடிந்தால் பகலும் முடியவில்லையே

பூந்தளிரே.. !!


No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...