நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
"நான் விரைவாக நினைக்கிறேன், விரைவாக செய்கிறேன், அதே வேகத்தில் இயந்திரமும் இயங்க வேண்டும்" என்ற மனநிலையே நம்முள் உருவாகிறது.
ஆனால் உண்மையில், அந்த இயந்திரங்கள் எப்போதும் நம்முடைய வேகத்துக்கு சமமாக இயங்க முடியாது. அப்போது நம்முள் வருத்தம், கோபம், ஏமாற்றம் எல்லாம் தோன்றுகிறது.
இணையம் வேகமாக இருந்தாலும், "இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்று நாம் நினைக்கிறோம். தொலைபேசி விரைவாக செயல்பட்டாலும், "மற்றவருடையது இன்னும் வேகமாக இருக்கிறது" என்று ஒப்பிட்டு பார்க்கிறோம்.
இப்படி ஒப்பீடு செய்யும் பழக்கம், எவ்வளவு வேகம் கிடைத்தாலும் அது போதாது என்ற உணர்வை உருவாக்குகிறது.
உலகத்தின் ஓட்டத்தில் காம்பெரிஸன் பர்ஸ்பெக்டிவில் பார்த்தால் இன்றைய உலகம் முழுவதும் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. "வேகமாக செய், வேகமாக முடி, வேகமாக முன்னேறு" என்ற அழுத்தம் எங்கும் நிறைந்திருக்கிறது.
அதனால் நாமும் அந்த ஓட்டத்தில் பின்தங்காமல் இருக்க, எப்போதும் வேகத்தை அதிகரிக்க முயற்சிக்கிறோம். சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நமக்கு கிடைக்காமல் இருப்பது போல வருத்தமான ஒரு விஷயம் என்பதை இந்த உலகத்தில் கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக