Saturday, June 29, 2024

MUSIC TALKS - HEY BABY BABY MOONDRE MOONDRU VAARTHTHAI ORU VAATI SOLVAAYA HEY BABY BABY - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





ஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை ஒரு வாட்டி சொல்வாயா
முழு முழுசாக சொல்லக்கூட வேண்டாம் ஒரு பாதி சொல்
ஹேய் லவ்லி லவ்லி ஒரே ஒரு பார்வை ஒரு தடவை பார்ப்பாயா
ரொம்ப பெரிசாக பார்க்கக்கூட வேண்டாம் சின்ன சின்னதாய் பார்
கல்லூரிப் பாடம் சொல்லும் ஏஞ்சல்தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்
மல்லிகா ஐ லவ் யூ மல்லிகா ஐ லவ் யூ ஹோ ஹோ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ

ஏகாந்த மேகம் என்னை கேட்டதே 
அசைகின்ற மின்னலவள் எங்கே என்றுதான் 
நடைப்பாதை பூக்கள் என்னை கேட்டதே 
மலர்வாச தேசம் அவள் எங்கே என்றுதான்
மலையோரம் நானும் சென்றால்
அவள் எங்கே என்றே கேட்கும்
இவை யாவும் கேட்கும்போது
நான் கேட்க கூடாதா ?
மல்லிகா ஐ லவ் யூ ஹேய் மல்லிகா ஐ லவ் யூ ஹோ ஹோ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ.


உன்னை தொட்டுப் பார்த்த அந்த நேரமே 
பட்டாம்பூச்சி கூட்டம் பூக்களாக மாறுதே
உன்னைக் கண்ட காற்று வந்த மோகத்தில்
வெயில் கால நதியாய் வெப்பமாக மாறுதே
உனக்கான சாலை எல்லாம் 
பனி தேசம் போலே மாறும்
இவை யாவும் மாறும்போது
நான் மாற கூடாதா ?

கல்லூரிப் பாடம் சொல்லும் ஏஞ்சல்தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்
மல்லிகா ஐ லவ் யூ மல்லிகா ஐ லவ் யூ ஹோ ஹோ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ
மல்லிகா ஐ லவ் யூ மல்லிகா ஐ லவ் யூ ஹோ ஹோ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ

MUSIC TALKS - HEY DUSHYANDHAA HEY DUSHYANDHAA UN SAGUNTHALA THEDI VANDHAAL - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தாள் 
ஹேய் துஷ்யந்தா நீ மறந்ததை உன் சகுந்தலா மீண்டும் தந்தாள் 

கள்ள பெண்ணே என் கண்ணை கேட்கும் கண்ணே 
என் கற்பை திருடும் முன்னே நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய் என் நெஞ்சை கொத்தி தின்றாய் 
எனக்கு உன்னை நினைவில்லையே

பூங்காவில் மழை வந்ததும் புதர் ஒன்று குடை ஆனதும் 
மழை வந்து நனைக்காமலே மடி மட்டும் நனைந்ததை 
மறந்தது என்ன கதை ?

ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தாள்

அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்
இருள் கூட அறியாத இன்பங்களின் முகத்தில் 
இரு பேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில் 
வருடித்தந்தாய் மனதை திருடிக்கொண்டாய் வயதை 
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை

ஆளாலங்ககாட்டுக்குள் ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே 
உன்னை போர்த்து கொண்டு படுத்தேன்
பாலாற்றில் நீராடும் போது துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்

அந்த நீல நதிக்கரை ஓரம் நீ நின்றிருந்தாய் நொடி நேரம் 
நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகி வந்தோம் சில காலம்

ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தாள்

பார்த்த ஞாபகம் இல்லையோ ? பருவ நாடகம் தொல்லையோ ?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ ? மறந்ததே இந்த நெஞ்சமோ ?

ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா 


MUSIC TALKS - SAMIKKITTA SOLLIPPUTTEN UNNAI NENJIL VECHUKKITTEN - DASS - TAMIL MOVIE SONG - VERA LEVEL PAATU !




சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் உன்ன நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்
ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு மனசுக்குள்ள பேசிக்கிட்டோம் சுத்தமா நீ'நானும்பாா்த்துக்கவே முடியலன்னு கனவுக்குள்ளேபாா்த்துக்கிட்டோம்


ஒரு கோடி புள்ளி வைச்சு நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே அழிச்சிருச்சு காலம் காலம்
இன்னொரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காகக் காத்திருப்பேன் அப்பவும் சேராமல் இருவரும்
பிரியனும்னா பொறக்காமல் போயிடுவேன்

சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்

தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி கல் எறிஞ்சா கலையும் கலையும் 
நெஞ்சு குளத்தில் படிஞ்ச காதல் எந்த நெருப்பில் எரியும் எரியும் 
நீ போன பாதை மேல சருகாக கிடந்தேன் சுகமா
உன்னோட ஞாபகம் எல்லாம் மனசுக்குள்ள இருக்கும் ரனமா
கட்டுக் காவல் மீறி வர காதல் நெஞ்சு கெஞ்சுதே

சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் உன்ன நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்
ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு மனசுக்குள்ள பேசிக்கிட்டோம் சுத்தமா நீ'நானும்பாா்த்துக்கவே முடியலன்னு கனவுக்குள்ளேபாா்த்துக்கிட்டோம்

மனசுக்குள்ள பூட்டி மறைச்சே அப்போ எதுக்கு வெளியில சிரிச்சே ?
கனவுக்குள்ள ஓடி புடிச்ச  நிஜத்துல தான் தயங்கி நடிச்சே 
அடிப் போடி பயந்தாங்கோளி எதுக்காக ஊமை ஜாடை 
நீ இருந்த மனச அள்ளி எந்த தீயில் நானும் போட உன்னை என்னை
கேட்டுக்கிட்டா காதல் நெஞ்சை தட்டுச்சு !

சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் உன்ன நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்
ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு மனசுக்குள்ள பேசிக்கிட்டோம் சுத்தமா நீ'நானும்பாா்த்துக்கவே முடியலன்னு கனவுக்குள்ளேபாா்த்துக்கிட்டோம்

சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்

MUSIC TALKS - SAHAANA SAARAL THOOVUTHO SAHAARA POOKAL POOTHTHATHO - ORU AAYIRAM AANDUGAL SEMITHTHA KAADHAL IDHU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





சஹானா சாரல் தூவுதோ ? சஹாரா பூக்கள் பூத்ததோ ?
சஹாரா பூக்கள் பூத்ததோ ? சஹானா சாரல் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ ? அடடா 
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ ?
அது என்னுடன் தேநீர் கொண்டதோ ?

கனவோ ? நிஜமோ ? காதல் மந்திரமோ ?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது  
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது

சஹாரா பூக்கள் பூத்ததோ ? சஹானா சாரல் தூவுதோ ?

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு 
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூ உன்னை ஏந்தியே வானுக்குள் நடக்கட்டுமா ?

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது  
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது
ஓராயிரம் ஆண்டுகளாய் சேமித்த காதல் இது  
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது


சஹானா சாரல் தூவுதோ ? சஹாரா பூக்கள் பூத்ததோ ?

சஹானா சாரல் தூவுதோ ? சஹாரா பூக்கள் பூத்ததோ ?
சஹாரா பூக்கள் பூத்ததோ ? சஹானா சாரல் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ ? அடடா 
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ ?
அது என்னுடன் தேநீர் கொண்டதோ ?

கனவோ ? நிஜமோ ? காதல் மந்திரமோ ?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது  
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது

சஹாரா பூக்கள் பூத்ததோ ? சஹானா சாரல் தூவுதோ


MUSIC TALKS - MENA MINUKKI MENA MINUKKI VAAREN UNAKKU NERAM ODHUKKI SONG LYRICS - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி 
மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
பார்க்காம தீராது இந்த ஆசை நீ ஆற போடாம கொண்டா தோசை 
பார்க்காம தீராது இந்த ஆசை நீ ஆற போடாம கொண்டா தோசை

மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி 
மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

ஹே வாடி கொஞ்சம் என் இடுப்புல சுளுக்கு 
ஐயோடெக்ஸ்ஸோட வித்த உன் கையுல இருக்கு
(உன்ற கையால மொள்ளம்மா அமுக்கு)
கைதான் பிஸியா இருந்தா கால் கூட பரவால்லம்மா வாம்மா வாம்மா

உன்ன பார்த்தாலே சில்லுனு இருக்கு காத்து கருப்பெல்லாம் கம்முனு இருக்கு
(உன்ன பார்த்தாலே கும்முன்னு இருக்கு காத்து கருப்பெல்லாம் கம்முனு இருக்கு)
கொண்டை கலையாம சேர்ந்து முடிச்சிக்கவா ? மாமா மாமா
பொட்ட காடு வந்து கூரை போடு சூட்ட எல்லாம் கொஞ்சம் ஆற போடு
எங்க வீடு இது சூளை மேடு வந்தா போச்சு நீ சாயுங்காலம் ரெடியா இரு மாமா !

மேனா மினுக்கி மேனா மினுக்கி வாரேன் உனக்கு நேரம் ஒதுக்கி 
மேனா மினுக்கி மேனா மினுக்கி வாரேன் எனக்கு நேரம் ஒதுக்கி

அடியே எனக்கு ரொம்ப தாகமா இருக்கு , 
பானை வெச்சுருக்கேன் தண்ணியை இறக்கு 
குடிச்சு முடிச்சுட்டு தாகம் தனிச்சுக்கவா வாம்மா வாம்மா 
என்னை உடைச்சுட்டு மீசைய முறுக்கு 
உடம்பு நரம்பெல்லாம் ஒண்ணு ஒண்ணா நொறுக்கு 
வந்து இலை போட்டு BEND-டு கழட்டிடவா மாமா மாமா 

ஃபுல்லு லோடு மாமா ஃபுல்லு லோடு 
பாக்கு வெச்சு ஒரு பீடா போடு 
கண்ணை மூடு மயிலே கண்ணை மூடு 
ஹெய்யோ அம்மா , இது எங்க போயி முடியப்போகுதோ மாமா !

மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி 
மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
பார்க்காம தீராது இந்த ஆசை நீ ஆற போடாம கொண்டா தோசை 
பார்க்காம தீராது இந்த ஆசை நீ ஆற போடாம கொண்டா தோசை




MUSIC TALKS - ICE KATTI KURUVI URUGI URUGI PAARTHTHUTTU POGAYILA KAAL ILLA THARAIYILA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 



ஐஸு கட்டி குருவி உருகி உருகி பார்த்துட்டு போகயில்ல கால் இல்ல தரையில !
மின்மினி கண் அழகி சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில்ல என்னால முடியல
உன்ன பாக்கும் முன்னே 
சொதப்பலா திருன்சேன்  
உன்ன பார்த்த பின்னே 
கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் ஸ்மைல்லு 
விட்டமினை தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு
அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத

தேவதை சாப்பிடும் போது சிந்திற பருக்கை மீது
எறும்பாக ஆசை வானவில் ஆகுது மீசை
லேசா நீ பார்க்க அத நானும் ரசிக்க
டே ஆச்சு நைட்டு தூக்கம் கிலோ என்ன ரேட்டு ?

நீயும் நானும் கை கோர்த்து போனால் பாக்கும் சுவர் எல்லாம் பூக்கும்
நீயும் நானும் தோள் சாய்ந்து பேச வானம் ஒட்டு கேட்க வரம் கேட்கும்
ஹாய் சொல்லயில்ல இதயம் குதிக்குமே 
பாய் சொல்லயில்ல சிலையா நிக்குமே
என் பைக்கில் நீ ஏற ஃலைட் ஆகுமே

ஐஸு கட்டி குருவி உருகி உருகி பார்த்துட்டு போகயில்ல கால் இல்ல தரையில !
மின்மினி கண் அழகி சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில்ல என்னால முடியல
உன்ன பாக்கும் முன்னே 
சொதப்பலா திருன்சேன்  
உன்ன பார்த்த பின்னே 
கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் ஸ்மைல்லு 
விட்டமினை தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு
அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத

GENERAL TALKS - இனிமேல் என்ன பண்ணவேண்டும் என்று யோசிப்போம்


 இங்கே நிறைய பிரச்சனைகள் இருக்கு , நாம் முன்னேறனும் என்று ஒரு ஒரு எட்டாக எடுத்து வைக்கும்போதும் விஷம் தடவிய கத்தியை காலில் நறுக்கென்று குத்துகிறார், பாம்புகளையும் தேள்களையும் கொண்டு கடிக்க வைக்கிறார் , சிங்கங்களையும் புலிகளையும் கொண்டு நம்மை பயமுறுத்த வைக்கிறார். இது எல்லாமே இந்த பிரபஞ்சத்தின் சக்தியாளராக இருப்பவர் செய்யும்போது நாம் கடைசிவரைக்கும் கோபப்படாமல் ஒரு பாவமும் அறியாத பூச்சியாக வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்றுதான் சக்தியாளர் ஆசைப்படுகிறார். இது கண்டிப்பாக ஒரு போரை தொடுக்க வேண்டிய நேரம். சக்தியாளரிடம் இருந்து சக்திகளை பறித்துக்கொள்ள வேண்டிய நேரம் இதுதான். இப்படியே சென்றுக்கொண்டு இருந்தால் இந்த உலகத்தின் அனைத்து உயிர்களையும் சுடுகாடாக மாற்றி சடலங்களை சாப்பிடும் ஜீவராசியாக மாறிய இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட சக்தியாளர் நம்மை அனைவரையும் கொன்றுவிடுவார். நமக்கென்று சப்போர்ட்டாக யாருமே இருக்க மாட்டார்கள். நமக்கு சப்போர்ட் பண்ணினால் அவர்களுடைய உயிருக்கும் ஆபத்து என்பதால் நமக்கு ஆதரவு கொடுக்க முன்வந்தவர்களை காப்பாற்ற அவர்களை வெறுப்பது போல நடிக்க ஆரம்பித்துவிடுகின்றோம். இது எல்லாமே தவறானது. இனிமேல் பொறுமையாக இருந்து ஒரு மயிரை கூட அடைய முடியாது. சரிபண்ண முடியாத அளவுக்கு பிரச்சனைகள் செல்வதால் இனிமேல் நாம்தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த முடிவு இறுதியானதாகவும் இருக்க வேண்டும். 

GENERAL TALKS - கொஞ்சம் சஜ்ஜேஷன்ஸ் இருக்கிறது !



இந்த வாழ்க்கையில் நான் சஜ்ஜேஸ்ட் பண்ணும் அடிப்படை விஷயங்கள் ! 1, ஒரு விஷயத்தை எப்போதும் 100 சதவீதம் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். இல்லை மேலோட்டமாக தெரிந்துகொண்டால் மட்டுமே எனக்கு போதுமானது என்று நீங்கள் நினைப்பது கண்டிப்பாக தவறானது. மேலோட்டமான தெரிதல் அப்போதைக்கு சமாளிக்க போதுமானதாக இருந்தாலும் பின்னாட்களுக்கு பிரயோஜனம் இல்லாதது. 2. நீங்கள் அடைப்படையில் காலத்தை செலவு செய்துதான் வாங்குவதால் உணவு , இருப்பிடம் , பயணம் , பழக்க வழக்கங்கள்  போன்ற நிறைய விஷயங்கள் உங்களிடம் எவ்வளவு காலம் கொடுக்கப்படுகிறது என்பதை தீர்மானிக்கிறது என்பதால் ஒரு ஒரு நாளிலும் ஒரு நாளின் 24 மணி நேரத்தை வாங்க 499 ரூபாய பணத்தை நீங்கள் செலவு பண்ண வேண்டும் ! இப்படி காஸ்ட்லியாக கிடைக்கும் காலத்தை வேஸ்ட் பண்ணவேண்டாம். காலத்தை வேஸ்ட் பண்ணுவது காசை வேஸ்ட் பண்ணுவதற்கு சமம் என்பது உண்மையான கருத்து. உங்களுடைய காசு உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது. 3. உங்களுடைய வாழ்க்கையில் யாரையுமே நண்பராக வைத்து இருக்க வேண்டாம், எல்லோரையும் பிரித்தே வைத்துக்கொள்ளுங்கள். கடந்த 20000 ஆண்டுகளில் மனித பரிமாணம் உயிருக்கு உயிராக போட்டிப்போட்டு மோதும் ஒரு இனமாகத்தான் இருந்து வருகிறது ! உங்களுடைய உயிரை நீங்கள் காப்பற்றிக்கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய வாழ்க்கையின் ஒரு சின்ன துளியை கூட இன்னொருவருடைய கட்டுப்பட்டுக்கு கொடுக்க வேண்டாம். இங்கே நிறைய ஆதரவு கொடுத்து ஏமாந்து போகும் ஆட்களாக இருந்துவிடாதீர்கள். உங்களுடைய இழப்புகள் அதிகமாக இருக்க போகிறது ! 

 

GENERAL TALKS - சர்க்கரை ஒழிப்பு சங்கத்தில் சேர நீங்கள் தயாரா ?



"சர்க்கரை - இந்த உலகம் முழுவதும் இனிப்புக்காக அதிகமாக சேர்த்துக்கொள்ளப்படும் இந்த விஷயம் உடலுக்கு எந்த ஒரு நல்ல சத்துமானங்களையுமே கொடுப்பது கிடையாது. சர்க்கரையை அதிகமாக சாப்பிடுபவர்கள் பின்னாட்களில் பெரும்துயரம் என்னும் டேப்ரேஷனை அடைய அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது !  இது எல்லாமே காகித தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று நினைப்பவர்களுக்கு உண்மையாகவே சர்க்கரை சாப்பிடும் மக்கள் இதய நோய்களுக்கும் , செரிமான நோய்கள் , முறையற்ற உடல் அமைப்பு , எடை கூடுதல் , சோர்வு , தூக்கமின்மை என்று நோய்களில் பாதிக்கப்படுவதை நான் கண்களால் பார்த்து இருக்கின்றேன். இனிப்பு பதார்த்தங்களை அதிகமாக சேர்க்கும்போது சோர்வு மற்றும் தூக்கம் அதிகமாக வந்துவிடும். நம்ம வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக சர்க்கரையை எடுப்பதுமே ஒரு சாதனைதான். கட்டுப்பாடு இல்லாமல் சர்க்கரையை தாறுமாறாக சாப்பிடுபவர்கள் இண்டெலிஜன்ஸ் மற்றும் மெமரியில் மிகப்பெரிய குறைபாடுகளை கொண்டு வாழ்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த மாதிரியான நெகட்டிவ் எஃபக்ட்ஸ்  மட்டுமே சர்க்கரையில் இருந்தாலும் சர்க்கரை மேலே இருந்த மோகம் கண்டிப்பாக குறையவே இல்லை. பழங்கள் , பேரீச்சை , தேன் மற்றும் பனங்கற்கண்டு போன்ற விஷயங்களின் பயன்பாட்டால் உடம்புக்கு கொஞ்சம் ஆறுதல் கொடுத்துவிட்டு சர்க்கரை பயன்பாட்டை நிறுத்துவதை சிறப்பான செயல் என்று கம்பெனி கருதுவதால் இப்போதே சர்க்கரையை நிரந்தரமாக நிறுத்திவிடுங்கள். இன்னொரு முக்கியமான விஷயம் சர்க்கரை நிறுத்துவதால் குறைந்தபட்சாம் 300/- ரூபாய் அளவுக்கு உங்களுடைய பட்ஜெட்டில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம் ! இதுவுமே நல்ல விஷயம்தானே !

Friday, June 28, 2024

GENERAL TALKS -7

GENERAL TALKS - நடப்பு காலத்தை பற்றி என்னுடைய கருத்து !

 



மனிதர்களுடைய நல்ல ஆசைகளையும் கவனமான கனவுகளையும் உடைப்பதில் கடவுள் மிகவும் சிறப்பானவராக இருக்கிறார். இதுபோன்ற ஒரு மாற்றம் கடவுளுக்கும் தேவை இப்போது இந்த விஷயத்தை கடவுள் படித்துக் கொண்டிருக்கிறார் என்றால் எனக்கு போதுமான சக்திகளை விட உங்களால் அதிகபட்சம் எவ்வளவு சக்திகள் கொடுக்க முடியுமோ அத்தனை சக்திகளையும் கொடுத்துப்பாருங்கள் நானே இந்த உலகத்தை மாற்றி காட்டுகிறேன். சக்திகள் இருந்தும் காரணங்களை சொல்லிக் கொண்டு தப்பித்துக்கொண்டு இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இத்தனை வருடங்களாக மனிதர்களுடைய வாழ்க்கையில் எனக்கு இருக்கக்கூடிய இந்த பெர்ஸ்பெக்டிவ் மாறவே இல்லை. இதனை வருடங்களாக நான் கற்றுக் கொண்ட விஷயங்களில் முக்கியமான விஷயங்களை இங்கு நான் பதிவு பண்ண விரும்புகிறேன். ஒரு மனிதனுடைய சராசரி மனதை எடுத்துக் கொண்டால் மனிதன் எந்த ஒரு கட்டத்திலும் தற்காலிகமாக அவனுக்கான மாற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறானே தவிர நிரந்தரமான மாற்றத்தை உன்னுடைய மனதுக்குள் உருவாக்குவது கிடையாது. அடிப்படையில் இந்த ஆச்சரியமான மனதின் செயல்பாடுகளுக்கு கொடிய எண்ணங்கள் மட்டும்தான் காரணம் என்றால் அதுதான் இல்லை. நமக்கு கனவுகள் எதனால் வருகிறது ? எதனால் நம்முடைய கனவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை ? கடவுள்கள்தான் நம்முடைய மூளையின் பின்னணி செயல்பாடுகளாக இருக்கிறது. நம்முடைய மூளை காட்சிகளையும் கருத்துகளையும் எந்தவிதமான வரையறையும் மற்ற யோசித்து வைப்பதில் மிகவும் தெளிவானது இத்தகைய வரையறையற்ற யோசிக்கும் திறன் தான் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தி இருக்கிறது. என்னுடைய கணிப்பின்படி வரையறைக்குள்ளேயே யோசித்து கொண்டு இருந்தால் உலகம் தொடங்கின காலத்தில் இருந்த நிலையை விடவும் நாம் பரிமாணத்தில் ஒரு துளி அளவுக்கு கூட மேலே வந்திருக்க மாட்டோம். நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களும் கூட நம்முடைய மனதுக்குள் இருக்கிறது. கடவுளில் நாம் பார்க்கக்கூடிய காட்சிகள் எங்கேயோ இருந்து நிறைய காட்சிகளை கம்ப்லேஷன் செய்து கொடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்புகளாக இருக்கிறது. நாம் பார்த்த பொருட்கள் நாம் பார்த்த காட்சிகள் நாம் பார்த்த இடங்கள் இவைகள் மட்டும் தான் கனவுகளுடைய பின்னணியில் போதுமான காட்சிகளை நம்முடைய மூளை நமக்காக பதிவு பண்ண ரெஃபரன்ஸ் மெட்டீரியலாக வைத்துள்ளது. இத்தகைய கட்டுப்பாடற்ற யோசிக்கும் திறன் இந்த காலத்துடைய நடைமுறைகளை சேர்த்து பார்க்கும் போது தவறாக பயன்படுத்தப்பட்டால் மட்டும்தான் சிறப்பான பயன்பாடுகளை கொடுக்கிறது. இதனால்தான் மனிதர்களுடைய வாழ்க்கையில் மோசமான செயல்களை செய்வதும் அவைகளால் சந்தோஷத்தை பெறுவதும் தவிர்க்க முடியாத இயற்கையின் செயல்பாடு. மற்றவர்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் நம்முடைய வாழ்க்கையை உடைத்து நொறுக்கி அவற்றின் சிதறல்களை எடுத்து சந்தோஷமாக பயன்படுத்திக் கொள்வார்கள். நம்முடைய வாழ்க்கையை வாழும்போது நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுடைய அந்த முட்டாள்தனமான சுயநலத்தையும் நம்மை தாக்கும் கொடிய யோசனைகளையும் செயல்பாடுகளையும் நாம்தான் அனுமதிக்க கூடாது. இது போன்ற முட்டாள்களே நாம் பயன்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் இவர்களைக் காப்பாற்ற நாம் முடிவு எடுத்தால் வாழ்க்கை வீணாகத்தான் சென்று விடும்.

GENERAL TALKS - தடுக்க முடியாத விளைவுகள் நடக்கிறது !

 



இது எல்லாமே மிகவும் தவறாக இருக்கிறது. குறைந்தபட்ச புத்திசாலித்தனம் இருந்தால் கூட இதை போன்ற தவறான செயலை அனுமதிக்க மாட்டார்கள். இந்த உலகம் முழுவதுமே குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடவுள் இல்லை என்று சொல்லும் வாதங்களுக்கு பிரதிவாதம் பண்ண யாருமே இல்லை. சமீபத்தில் நான் படுத்த ஒரு சில புத்தகங்களில் மற்றும் நான் பார்த்த ஒரு சில இணைய காணொளி நிகழ்ச்சிகளில் கூட கடவுள் இல்லை என்ற வாதத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் இத்தகைய விஷயங்களில் கடவுள் நம்பிக்கை உருவாக்கி பணத்தை சம்பாதிப்பவர்களால் மட்டும் தான் கடவுள் மற்றும் கடவுளுடைய சக்திகள் என்ற கான்செப்ட் உருவாக்கப்பட்டது என்று நிறைய கருத்துக்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த கருத்துக்களை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். கடவுளுடைய பெயரை வைத்துக் கொண்டு ஏமாற்றங்களை செய்து கொண்டிருப்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் கடவுளுடைய பெயரை வைத்துக்கொண்டு பிரிவினையை பாராட்டி மற்றவர்களிடம் இருந்து சொத்துக்களை எடுத்துக் கொள்வதும் உயர்வான பிறப்பு என்றும் தாழ்வான பிறப்பு என்றும் பிரித்துப் பார்க்கும் மோசமான ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவருடைய மனதின் கருத்துக்கள் சிறிய குழந்தையாக வளரும்பொது மனதுக்குள் இவர்களுக்கு ஆழமாக பதிந்து விடுகிறது இப்போது இவர்களுடைய ஆட்சிகளும் அதிகாரமும் மிகவும் சிறப்பாக இருப்பதால் கடவுள் நிச்சயமாக இவர்களுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறாரா ? என்ற சந்தேகம் மட்டும் தான் எனக்கு இருக்கிறது தவிர கடவுள் என்ற ஒரு சக்தி இருக்கிறார் என்பதில் எனக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இது தனிப்பட்ட கருத்து. இப்போது கடவுள் எடுக்க வேண்டிய முடிவு சமூகத்தை மாற்ற வேண்டிய முயற்சி பண்ணி கொண்டு இருக்கும் அனைவருக்கும் போதுமான விஷயங்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும் இன்றைய நிலையில் போதைப் பொருட்களை விற்பவர்கள் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் உழைக்கும் மக்களுக்கு உதவும் வகையில் சிறிய அளவில் சிற்றுண்டி சாலை அமைப்பவர்கள் குறைவாக சம்பாதிக்கிறார்கள். இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ? மிகவும் அடிப்படையில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு சிறப்பாக யோசித்தால் போதுமானது. சிறப்பான யோசனைகள் சமூகத்தை நல்ல பாதையில் கொண்டு செல்லும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. மன்னிக்க முடியாத குற்றங்களை காலத்தை செய்ய அனுமதிக்க வைத்து பின்னாட்களில் மன்னிப்பு கேட்டால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.

GENERAL TALKS - குற்றங்களை தடுக்காமல் இருப்பது தவறு !

 



இப்போ கேள்வி இந்த உலகத்தில் நிஜமாகவே நாம் ஆசைப்படும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா ? என்பது அல்ல. நடப்பு உலகத்தில் நடக்கக்கூடிய விலைவாசி உயர்வும் மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் பொதுவாகவே உணவுப்பொருள் உட்பட அனைத்து பொருட்களுடைய தேவைகளையும் அவைகளுடைய விலைவாசியையும் அதிகமாக்கிக் கொண்டே வருகிறது. மேலும் மனிதர்களுக்குள்ளேயும் மனித தன்மை குறைந்து கொண்டே இருக்கிறது. இவற்றை எல்லாம் தடுக்க வேண்டும் என்றால் மிகப்பெரிய சக்தி தேவை. கடவுளால் மட்டும் தான் நான் மிகப்பெரிய சக்தியை கொடுக்க முடியும் என்றால் கடவுள் எதனால் இந்த செயலில் பின் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இது நிச்சயமாக கடவுள் மறுப்பு கொள்கை அல்ல கடவுள் மீது வைக்கப்படும் நேரடியான கோபம். இன்றைய நாட்களைப் பாருங்கள் மகளிர் எதிரான கொடுமைகள் இணையதளத்தின் கொடிய கிளாமர் ஆப்ஸ் என்ற மிகவும் எளிமையாக நடக்கிறது. அரசாங்கம் நேரடியாக இவர்களை தட்டி கேட்காமல் மௌனம் காப்பது ஏன் ? இந்த பிரச்சனையின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது புரியவில்லை என்றால் நான் இப்போது ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மோசமான காவல்துறை அதிகாரி ஒரு குழந்தையை கைது செய்து சிறையில் அடைக்கிறார். அந்த குழந்தை தாக்கப்படும் போது அந்த குழந்தையும் எதிர்த்து சண்டை போட முடியவில்லை. சண்டை போடும் அளவுக்கு வலிமை அந்த குழந்தைக்கு இருப்பதும் இல்லை. இப்போது காவல்துறை அதிகாரி மோசமான முறையில் அந்த குழந்தையை தாக்கவே அந்தக் குழந்தை கல்லறைக்கு சென்று விடுகிறது. இந்த உலகத்திலும் இதுதான் நடக்கிறது. காவல்துறை அதிகாரியாக இருப்பவர் இவரை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற தடைகளை கடந்து அவரை யாராவது தடுத்து அவரை அடித்தால் மட்டும்தான் பாதிக்கப்படக்கூடிய அந்த அப்பாவி குழந்தையை காப்பாற்ற முடியும். யாருக்கு என்ன ஆனால் என்ன ? என்று சம்பந்தப்பட்ட அதிகாரத்தை கொண்டு தப்பாக பயன்படுத்தும் இத்தகைய மோசமான அதிகார வர்க்கமான தவறான குற்றங்களை செய்யும் நிறுவனங்களை மட்டும்தான் இப்போது கடவுள் சப்போர்ட் செய்கிறார். இவை அனைத்தும் கண்களுக்கு முன்னால் நடக்கிறது. தடுக்க வேண்டிய பொறுப்பில் யாரும் இல்லை. இதுவே யாராவது ஒருவர் கோபத்தோடு சமூகத்தை பாதுகாக்க போராடினால் அவர்களுடைய குடும்பத்தையும் அவர்களுடைய வாழ்க்கையும் கடவுள் நேரடியாக அழித்து விடுகிறார். இந்த விஷயத்தில் பேச வேண்டிய கருத்துக்கள் இன்னும் நிறையவே உள்ளது.

GENERAL TALKS - சக்திகள் இருந்தால்தான் போராட முடியும் !

 




இது மிகவும் சமீபத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம். இது எனக்கு நிஜமாகவே நடந்த விஷயம். குறிப்பாக ஒரு வார காலம் ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான நிறைய வகையான சக்திகள் அவனுக்கு கிடைத்தால் எந்த அளவுக்கு அவனால் முன்னேற முடியும் என்று சொல்லுங்களேன் ? போதுமான பணம் போதுமான ஆதரவு போதுமான அனுபவங்கள் என்று குறிப்பிட்ட அந்த ஒரு வாரம் மட்டும் என்னுடைய வாழ்க்கையில் கனவில் கூட கற்பனை பண்ண முடியாத அளவுக்கு அதிகமான முன்னேற்றங்களை என்னால் பார்க்க முடிந்தது. இந்த முன்னேற்றத்துக்கு முக்கியமான காரணம் என்னவென்றால் இந்த ஒரு குறிப்பிட்ட ஒரு வாரத்துக்கு மட்டும் தான் என்னுடைய சக்திகள் மிகவும் அதிகமாக இருந்தது. இந்த சக்திகள் தற்காலிகமாக எனக்கு கிடைத்தாலும் இந்த சக்திகள் எனக்கு இருந்த காரணத்தால் என்னுடைய முன்னேற்றம் என்பது வேறு ஒரு லெவல்லில் இருந்தது. மறுபடியும் எனக்கு சோதனை அடிப்படையிலாவது வேண்டும் என்றும் சென்ற முறை நடந்தது போல மிகவும் கவனமாக யோசித்து அத்தகைய சக்திகள் எனக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் பிரபஞ்சத்தின் சக்தியாளரை கேட்டுக்கொள்கிறேன். இது என்ன பிரபஞ்சத்தின் சக்தியாளர் என்ற வார்த்தை என்று கேட்கிறீர்களா ? இந்த வார்த்தை எனக்கும் புதுமையானது தான். கடவுள் என்ற வார்த்தையை இனிமேல் நான் பயன்படுத்த போவது கிடையாது. இன்றைய தேதி முதல் இந்த வலைப்பூவில் கடவுள் என்ற பெயருக்கே பெயர் மாற்றம் பண்ணப்படுகிறது. என்னதான் சிறப்பாக விற்பனையாகும் செய்தித்தாளில் அறிக்கை விடவில்லை என்றாலும் இந்தப் பெயர் மாற்றத்துக்கு இந்த வலைப்பூ பதிவு போதுமானது. கடவுள் குற்றங்களை தடுக்காமலே இருக்கிறார் என்று நான் இந்த வலைப்பூவின் நிறைய பகுதிகளில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கடவுள் இப்படி தடுக்காமல் போவதால் தான் இன்னும் குற்றங்கள் பல மடங்கு பெருகி குற்றங்களை செய்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். கடவுள் எப்போதுமே சக்திகளை நேரடியாக பயன்படுத்தி சண்டை போட மாட்டேன் என்கிறார். அடிப்படையில் சக்திகளை கொடுக்கிறார் ஆனால் தவறான மனிதர்களுக்கு கொடுத்து விடுகிறார். இதனால் மிகவும் கவனமாக யோசித்தேன். பொதுவாக நமது சமுதாயத்தில் இருக்கும் வங்கிகளில் வங்கி கணக்காளர் என்ற பொறுப்பு இருக்கும் அல்லவா ? அதுபோல கடவுளும் சக்திகளின் கணக்காளராக இருக்கிறார் ? இப்போது பிரச்சினை என்னவென்றால் யாரெல்லாம் அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் விளையாடி அவர்களுடைய வாழ்க்கையை நாசம் பண்ணி அவர்களுடைய வாழ்க்கையை நெருப்பிட்டு எரித்து சாம்பலாக மாற்றி அந்த சாம்பலை சந்தோஷமாக சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு நிறைய சக்திகளை கொடுத்து கொண்டு இருப்பதால் பிரபஞ்ச சக்தியாளர் என்ற பெயர்தான் மிகவும் சரியாக இருக்கும். கடவுள் என்ற பெயருக்குள் நிறைய நம்பிக்கைகள் கலந்துள்ளது. இந்த நம்பிக்கைகளை இப்போதெல்லாம் நிறைவேற்றுவதே இல்லை இருந்தாலும் நம்பிக்கை இருப்பவர்கள் கதைகளை நம்பிக்கொண்டு பாட்டுகளை நம்பிக்கொண்டு பல வருஷங்களாக நம்பிக்கைகளை விடவே இல்லை. இவர்களுடைய கணிப்புப்படி இவர்கள் மனதுக்குள் இருக்கக்கூடிய கடவுள் என்ற வார்த்தைக்கும் நாம் நேரடியாக கடவுள் என்ற பெயரில் பேசிக் கொண்டிருக்கும் நபருக்கும் நிறைய மாறுபாடுகள் நிறைய கருத்து மாற்றங்கள் இருப்பதால் பிரபஞ்ச சக்தியாளர் என்ற பெயரே இந்த வலைப்பூவில் இனிவரும் பதிவுகளில் இருக்கும். இந்த வலைப்புக்கு நிறைய ஆதரவு கொடுத்து உலகத்தின் மிகவும் அதிகமாக சம்பாதிக்கக்கூடிய நிறுவனமாக இந்த வலைப்பூவை மாற்றுமாறு கம்பெனியின் சார்பாக பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE - DEAD RECKONING - PART ONE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

இந்த மாதிரி நிறைய படங்களை நாம் ஹாலிவுட்டில் அடிக்கடி பார்க்க முடியாது. ஸ்பை திரைப்படங்களின் ஜேனரை வேற ஒரு லெவல்லில் கொண்டுபோன படங்களின் பட்டியலில் இந்த படத்துக்கு ஒரு தனியான இடம் கொடுக்க வேண்டும். இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் ஒரு ஆர்ட்டிஃப்பிஷியல் இண்டெலிஜன்ஸ் உலகத்தின் அனைத்து கணினி தொழில்நுட்பங்களையும் கட்டுப்படுத்தி என்னவோ மோசமாக பண்ண நினைக்கிறது. நாடுகளுடைய தனித்தனி அரசாங்கங்கள் அந்த ஆர்ட்டிஃப்பிஷியல் இண்டெலிஜன்ஸ்ஸை கட்டுப்படுத்தவும் மூன்றாம் உலக போருக்காக பயன்படுத்தவும் அதனுடைய கட்டுபாட்டை அடைந்துவிட போராடுகிறார்கள். நடக்கக்கூடிய அசம்பாவிதத்தை தடுக்க ஈதன் பண்ணும் போராட்டத்தில் நெருக்கமான நண்பர்கள் கைகொடுக்க காதலிக்கும் எலிஸா ஈதனை காப்பாற்றும் போராட்டத்தில் உயிரை தியாகம் செய்கிறாள். இந்த இண்டெலிஜென்ஸை முடக்க ஒரே வழி என்பது பிரித்து வைக்கப்பட்ட இரண்டு சாவிகள்தான் என்பதால் உயிரை பணயம் வைத்து அந்த சாவிகளை மீட்பதுதான் இந்த படத்தின் கதை. இரு பாகங்கள் என்று வெளியிடப்படும் படங்களில் இதுதான் முதல் பாகம் என்பதால் இந்த படத்துடைய இரண்டாம் பாகத்துக்கு எல்லோருமே விறுவிறுப்பாக எதிர்பார்க்கும் அளவுக்கு திரைக்கதையில் அவ்வளவு வேகத்தை கூட்டி இருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரம் கண்டினியூவான ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்தின் ஃபேன்ஸ்களுக்கு ஒரு விஷுவல் மழைச்சாரல் என்றே சொல்லலாம். படத்துக்காக நிறைய பிரமாதமான ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் இருப்பது படத்துடைய திரைக்கதைக்கு பயங்கரமாக பலமாக இருக்கிறது. ஒரு இன்டர்நேஷனல் ரிலீஸ்க்கு கண்டிப்பாக வோர்த்தான படம் என்று இந்த படத்தை சொல்லலாம் இதுதான் இந்த வலைப்பூ விமர்சனம் ! இந்த வலைப்பூவில் சந்தாவால் இணைந்து இந்த வலைப்பூ நிறைய பணம் சம்பாதிக்க உதவுங்கள் என்று கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

GENERAL TALKS - பகலில் கொள்ளை அடிப்பது எப்படி ?




நான் என்னுடைய வாழ்க்கையில் எந்த அளவுக்கு ஒரு சிம் கார்டு நிறுவனத்தை நம்பினேன் என்றால் ரூபாய் 2345 செலவு செய்து 336 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்து இருப்பேன் ? இந்த நிறுவனத்தின் பெயர் 'லியோ' வைத்துக்கொள்ளுங்கள். நேரடியாக இந்த நிறுவனத்தின் பெயரை தாக்கி பேச கூடாது என்பதற்காக நான் இந்த பெயரை வைத்து இருக்கிறேன். நான் பல வருடங்களாக 'லியோ' நெட்வொர்க்கை வைத்து இருக்கின்றேன். கடைசி 2 மாதங்களில் நெட் பேக் - ஒரு நாள் 1.5 GB யும் பயன்படுத்த முடியவில்லை. பின்னணியில் நான் ரூபாய் 222/- ரீசார்ஜ் செய்து 50 GB பின்னணியில் வைத்து இருக்கிறேன். ஆனால் கடந்த 2 மாதங்களாக இணைய இணைப்பு வேகம் 0.01 Mbps - இது கொடுமையானது. நான் அபார்ட்மெண்டு விட்டு வெளியே வந்து நடு தெருவில் நிற்கின்றேன் ஆனால் வேகம் இல்லை. ஒரு யூட்யூப் வீடியோ பார்க்க முடியவில்லை. நான் என்ன பண்ண வேண்டும். 'லியோ' நம்பிய பாவத்துக்கு நாசம்தான் பண்ணிக்கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு மொக்கை வேகம் ஒரு மயிருக்கும் பிரயோஜனம் அல்ல. 9 மாதங்களாக போதுமான அளவுக்கு வேகம் இருந்த நெட்வொர்க் எதனால் இப்படி மொக்கை போட்டுக்கொண்டு இருக்கிறது. இது போதாது என்று விலைவாசியை அதிக்கப்படுத்தி இன்னும் அதிகமாக கொள்ளை அடிக்க பார்க்கின்றார்கள். 5G நன்றாக வேலை செய்கிறது என்று சொல்ல முடியாது. யாருமே பதிவிறக்கம் பண்ண முடியாத இணையங்களில் யூட்யூப்பில் நல்ல வேகம்தான். ஆனால் நிறைய இணையங்களில் 5G எப்போதும் 4G போல செயல்படுகிறது/ கூகுள் பேஜ் கூட இயங்கவில்லை/இப்போது வரைக்கும் கடந்த 2 மாதமாக வோடாபோன் ஐடியா நெட்வொர்க் கைகொடுத்து 1 Mbps வேகம் கொடுப்பதால்தான் வலைப்பூ பதிவுகளை என்னால் கொடுக்க முடிகிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இப்படி ஏமாற்றி சாப்பிடும் நிறுவனகள் இந்த நிறுவனத்தின் பணம் சம்பாதிக்கும் முதலைகள் இறந்து போக வேண்டும். அப்போதுதான் நாடு நன்றாக இருக்கும். இப்படிப்பட்ட அடுத்தவர்களுடைய காசை நன்றாக கரைக்கும் ஆட்கள் கண்டிப்பாக நசுக்கப்பட வேண்டிய கொசுக்கள். இவர்களுடைய இந்த ஏமாற்றி சம்பாதிக்கும் மோசமான நடத்தையால்தான் 'அல்லு' போன்ற தப்பான நிறுவனகளுக்கு அதிக பணம் கிடைக்கிறது. மக்களுக்கு கொடுப்பதாக சொல்லி பணத்தை பிடுங்கும் இந்த நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கண்டிப்பாக மன்னிக்கப்பட கூடாது. பாயிண்ட் என்னவென்றால் நிறைய இடங்களில் நெட்வொர்க் கவரேஜ் கிடைக்கவில்லை என்றாலும் வோடாபோன் நன்றாக இணைய வேகம் கொடுக்கிறது/ ஆனால் லியோ நம்மை வெறும் கையை நக்க வைத்துவிடுகிறது/ 

Thursday, June 27, 2024

MUSIC TALKS - NEE KATTUM SELAI MADIPPULA NAAN KASANGI PONENDI - UN ELUMICHA PALA NIRA IDUPPULA KIRANGI PONENDI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




நீ கட்டும் சேலை மடிப்புல நான் 
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல 
கிறங்கி போனேன்டி
நீ கட்டும் சேலை மடிப்புல நான் 
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல 
கிறங்கி போனேன்டி

அடியே சூடான மழையே 
உடம்பு நனைச்சுக்கலாமா ?
கொடியே வெத்தலை கொடியே 
சுண்ணாம்பு நான் தரலாமா ?
அழகே தாவணி பூவே 
தேனை எடுத்துக்கலாமா ?
கொலுசு போட்ட காலிலே 
தாளம் போட்டுக்கலாமா ?

நீ கட்டும் வேட்டி மடிப்புல 
நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே 
கிறங்கி போனேனே
நீ கட்டும் வேட்டி மடிப்புல 
நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே 
கிறங்கி போனேனே

வண்டு சாமந்தி பூவில் 
நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினால 
ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில் 
தேனை எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே 
தாளம் போட்டுக்க மாமா

நீ வெட்டி வெட்டி போடும் நெகத்தில் எல்லாம்
குட்டி குட்டி நிலவு தெரியுதடி
உன் இடுப்பழகில் உரசும் கூந்தலிலே
பத்திகிட்டு மனசு எரியுதடி
சிக்கி முக்கி கல்ல போல 
என்ன சிக்கலிலே மாட்டாதே
தாலி ஒன்னு போடும் வரை
என்ன வேறெதுவும் கேக்காதே
அந்த வானம் பூமி எல்லாம் 
இங்க ரொம்ப ரொம்ப பழசு
அடி நீயும் நானும் சேர்ந்திருக்கும் 
காதல் தாண்டி புதுசு

வண்டு சாமந்தி பூவில் 
நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினால 
ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில் 
தேனை எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே 
தாளம் போட்டுக்க மாமா

நீ கட்டும் சேலை மடிப்புல நான் 
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல 
கிறங்கி போனேன்டி

அடியே சூடான மழையே 
உடம்பு நனைச்சுக்கலாமா ?
கொடியே வெத்தலை கொடியே 
சுண்ணாம்பு நான் தரலாமா ?
அழகே தாவணி பூவே 
தேனை எடுத்துக்கலாமா ?
கொலுசு போட்ட காலிலே

மாமா நீங்க தூங்கும் மெத்தையில
என்னோட போர்வை சேர்வதெப்போ ?
மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே
என்னோட துடிப்பு கேட்பதெப்போ ?
என் ஆயுள் ரேகை எல்லாம்
உன் உள்ளங்கையில் ஓடுதடி
உன் உள்ளங்கை அழகினிலே
ஆசை உச்சி வரை கூடுதடி
நான் சூடும் பூவில் உங்க வாசம் 
சேர்ந்து வந்து வீசுது
என் கழுத்து கிட்ட முத்தம் தந்து 
மயில் இறகா கூசுது

அடியே சூடான மழையே 
உடம்பு நனைச்சுக்கலாமா ?
கொடியே வெத்தலை கொடியே 
சுண்ணாம்பு நான் தரலாமா ?
அழகே தாவணி பூவே 
தேனை எடுத்துக்கலாமா ?
கொலுசு போட்ட காலிலே 
தாளம் போட்டுக்கலாமா ?

நீ கட்டும் வேட்டி மடிப்புல 
நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே 
கிறங்கி போனேனே
நீ கட்டும் வேட்டி மடிப்புல 
நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே 
கிறங்கி போனேனே

அடியே சூடான மழையே 
உடம்பு நனைச்சுக்கலாமா ?
கொடியே வெத்தலை கொடியே 
சுண்ணாம்பு நான் தரலாமா ?
அழகே தாவணி பூவே 
தேனை எடுத்துக்கலாமா ?
கொலுசு போட்ட காலிலே 
தாளம் போட்டுக்கலாமா ?

MUSIC TALKS - IDHAL YENGUTHU NOGUTHU MUTHTHAM IDA VAADAA NEE (MUTTATHE ENNA MUTTATHE) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU



இதழ் ஏங்குது நோகுது முத்தமிட வாடா நீ
விரல் தேடுது மீறுது யுத்தமிட வாடா நீ
முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே

கண்ணோட கண்ணை கட்டி இழுக்காதே
நெஞ்சோட நெஞ்சை ஒட்டி உரசாதே
முன்னாடி நின்னு என்ன மயக்காதே முட்டாதே
என்னோடு திமிரை தட்டி அடக்காதே
உள்ளாற உசுர தெச்சு கிழிக்காதே
அம்மாடி நீயும் திட்டி முறைக்காதே முட்டாதே
முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே
முட்டாதே நீ முட்டாதே


கண் ஓரமாய் மின்னும் கள்ள பார்வை என்ன ?
காலோட கொலுசா மனசு மாட்டிட்டு துடிக்குதடி
உதட்டோரமா சிந்தும் ஒத்த சிரிப்பை பார்த்தா
ஊறாத காதல் தேனா ஊறி போகுதடி

ஹேய் கொஞ்சி கொஞ்சி உன்ன திட்டி தீக்க போறேன்
கொத்தி கொத்தி பேசி உன்ன காதல் செய்ய போறேன்

பதில் கேட்க்கும் உன் பார்வை
புதிர் தீர்க்கும் என் சேவை

சிரிக்கிறேன் மொறைக்குறேன் சிக்கி போய் சிதறினேனே
முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே

கண்ணோட கண்ணை கட்டி இழுக்காதே
நெஞ்சோட நெஞ்சை ஒட்டி உரசாதே
முன்னாடி நின்னு என்ன மயக்காதே முட்டாதே
என்னோடு திமிரை தட்டி அடக்காதே
உள்ளாற உசுர தெச்சு கிழிக்காதே
அம்மாடி நீயும் திட்டி முறைக்காதே முட்டாதே
முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே
முட்டாதே நீ முட்டாதே



Monday, June 24, 2024

MUSIC TALKS - AZHAGINA AZHAGI ASKAAVA , SILUMISHAM SEIYA VASTHAAVAA SONG - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU



அழகின் அழகி அஸ்காவா ? சில்மிஷம் செய்ய வஸ்தாவா ?
அழகின் அழகி அஸ்காவா ? சில்மிஷம் செய்ய வஸ்தாவா ? அழகே
அற்றை திங்களில் அன்றில் பறவையாய் ஓடி போக நீயும் வஸ்தாவா ?
பணம் வேண்டாம் நகை வேண்டாம் நீ  வந்தாலே அஸ்காவா ?
இனம் வேண்டாம் குலம் வேண்டாம் நீ  இப்படியே வஸ்தாவா ?


தோழி என்றொரு வார்த்தையில்தான் நாங்கள் உங்களை கூப்பிடுவோம்
கோழை பேச்சுகள் வேண்டாமே காதலி என்றே கூப்பிடுங்கள்
பாரதி கனவுகள் வாழ்க இதோ எங்கள் முன்னாலே
செந்தமிழ் சொற்கள் தீர்ந்துவிட்டால் பிரெஞ்சில் புகழ்ந்து கொட்டுங்களேன் !
செவ்வாய்வாசிகளே எங்கள் வாழ்க்கை நீங்கள் தான்!
அழகின் அழகி அஸ்காவா ? சில்மிஷம் செய்ய வஸ்தாவா ?

அச்சோ , எங்கள் ஆடை போல் உடனே நீங்கள் மாறுங்கள்
இன்னும் வேறெதும் வேண்டாமா? அன்பு கட்டளை போடுங்கள்
பக்தி பரவசம் பார்க்க மனம் மெச்சி போனோமே !
லேசாய் அருகில் உட்கார அனுமதி கேட்போம் தர வேண்டும்
காதல் வாசிகளே மேலே வந்து சாயுங்களேன் !


அழகின் அழகி அஸ்காவா ? சில்மிஷம் செய்ய வஸ்தாவா ?
அழகின் அழகி அஸ்காவா ? சில்மிஷம் செய்ய வஸ்தாவா ?
அற்றை திங்களில் அன்றில் பறவையாய் ஓடி போக நீயும் வஸ்தாவா ?
பணம் என்ன ? நகை என்ன ? வருவோமே அஸ்காவா
இனம் என்ன ? குலம் என்ன ?  இப்படியே வஸ்தாவா 
பணம் என்ன ? நகை என்ன ? வருவோமே அஸ்காவா
இனம் என்ன ? குலம் என்ன ?  இப்படியே வஸ்தாவா !

MUSIC TALKS - PESADHE PAARVAIGAL VEESADHE VERENNA MOZHI VENDUM MOUNAME PODHAATHAA ? NERUNGATHE NERUNGIYE VILAGATHE ? VERENNA INI VENDUM ? MOUNAME PODHATHA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா ?
நெருங்காதே நெருங்கியே விலகாதே வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா ?

என் நெஞ்சில் வந்தே என்னென்ன செய்தாய் மிதக்கிறேன் காற்றாக
உன் பேரை தானே என் நெஞ்சில் இன்று இசைக்கிறேன் பாட்டாக
பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா ?

கண்ணில் உன்னை அளந்தது கொஞ்சம்
கண்ணை மூடி ரசித்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே தெரியாமல்
நான் தவித்தேனே

உன்னால் என்னை இழந்தது கொஞ்சம்
உன்னால் என்னை அடைந்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே புரியாமல்
நான் துடித்தேனே 

காதல் என்று சொன்னால் நீண்ட மயக்கம் இன்று புரிகின்றதே
உன்னால் எந்தன் பெண்மை புதிய தயக்கம் இன்று அறிகின்றதே
நீ என்ன சொல்ல ? நான் என்ன சொல்ல ? வார்த்தைகள் தேவைதானா ?
நீ என்னை வெல்ல நான் உன்னை வெல்ல ஆனாலும் 
இந்த காதல் போரின் யுத்தம் அடங்காதே

எங்கே எங்கே தொலைந்தது நெஞ்சம் ?
பெண்ணே பெண்ணே சொல்லிவிடு கொஞ்சம்
உன்னை நம்பி விட்டு வந்தேன் நலம்தானா என் இதயம் ?
அங்கே அங்கே அங்கே என்னுடைய நெஞ்சம்
உன்னிடத்தில் வந்திருக்கும் தஞ்சம்
கண்ணில் வைத்து காவல் செய்வாய் என்றதடா உன் இதயம் இங்கே
தேகம் இரண்டு ஆனால் இதயம் ஒன்று இங்கு துடிக்கிறதே
தூரம் தள்ளி நின்றும் சுவாச காற்று நம்மை இணைக்கிறதே
நீ என்ன சொல்ல நான் என்ன சொல்ல வார்த்தைகள் தேவைதானா
நீ என்னை வெல்ல நான் உன்னை வெல்ல ஆனாலும் இந்த காதல்
புரியும் யுத்தம் அடங்காதே

பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா ?
நெருங்காதே நெருங்கியே விலகாதே வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா ?

என் நெஞ்சில் வந்தே என்னென்ன செய்தாய் மிதக்கிறேன் காற்றாக
உன் பேரை தானே என் நெஞ்சில் இன்று இசைக்கிறேன் பாட்டாக
பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா ?

MUSIC TALKS - ENGIRUNDHAAI NAAN MANNIL PIRANDHIDUMPODHU ? ENGIRUNDHAAI NAAN KONCHAM VALARNDHIDUMPODHU ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !






எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் ? என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?




நிலவின் பின்புறமாய் நீ தான் இருந்தாயா ?
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா ?
கடலின் அடியில் படிந்தா இருந்தாய் ?
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய் ?
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய் ?
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?
 



இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே அன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்





எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் ? என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?

GENERAL TALKS - விதியை எதிர்த்து விளையாடும் விளையாட்டு

 



விதியோடு விளையாடும் இந்த விளையாட்டுகளில் சந்தோஷம் சர்க்கரை ஆனால் கஷ்டங்கள்தான் சத்துணவு , சந்தோஷங்கள் இருக்கும்போது இந்த உலகமே நம்ம உள்ளங்கைக்குள்ளே அடங்கியது போல இருக்கும். ஆனால் எல்லாமே ஒரு வகையான போதையை போன்றதுதான். உண்மையில் கஷ்டங்கள் மட்டும்தான் நமக்கான வெற்றியை கொடுக்கும். மேலும் போனஸாக பின்னாட்களில் இன்னுமே வெற்றியை அடைய போதுமான அறிவு திறனையும் கொடுக்கும். இன்னைக்கு தேதிக்கு பணம் என்ற வகையில் என்னுடைய இழப்பு அதிகம். இதனை ஒரு வியாபார நஷ்டமாக எடுத்துக்கொள்ளலாம். இருந்தாலும் என்னுடைய தவறுகளுக்கு இந்த தண்டனை மிகவுமே பெரியது. இந்த பணம் எனக்கு கிடைத்துவிடும் என்று நான் நம்பிக்கை வைத்து இருந்தேன். நம்பிக்கை நாசமாக போய்விட்டது. மறுபடியும் வாழ்க்கை பூச்சியத்துக்கு குறைவாக மைனஸ்ஸில் சென்றுகொண்டு இருக்கிறது. இங்கே என் மேல் தவறு என்று என்னால் என்னை குறை சொல்ல முடியாது. விதி தன்னுடைய கேவலமாக சித்து விளையாட்டுக்களை விளையாட ஆரம்பித்துவிட்டது. இனிமேல் நான்தான் கவனமாக இருக்க வேண்டும். கற்பனையான விதியிடம் இருந்து நம்மால் எதுவுமே எடுத்துக்கொள்ள முடியாது ஆனால் உண்மையாக இருக்கும் நம்மிடம் இருந்து நாம் சம்பாதித்த அனைத்து விஷயங்களையும் விதி நன்றாகவே எடுத்துக்கொள்ளும். இன்றைக்கு தேதிக்கு நான் கற்றுக்கொண்ட கருத்து என்னவென்றால் ஒரு போராட்டம் என்றால் சரியென்றும் தவறென்றும் பார்க்காமல் எல்லாமே செய்து போராடவேண்டும். சரியான விஷயங்களை மட்டும் செய்வது கூட இனிமேல் வரப்போகும் நாட்களில் நாம் தோற்றுப்போக காரணமாக இருக்கலாம். எதுக்கு வெற்றியை அடைய வேண்டும் ? சந்தோஷத்துக்காகவா ? இல்லை. வெற்றியை அடைய போராடுவதற்கான காரணம் என்னவென்றால் எந்த ஒரு போராட்டத்திலும் இருப்பவர்கள் எல்லாவற்றையும் இல்லாதவர்களிடம் இருந்து பறித்துக்கொள்வார்கள். இல்லாதவர்களுடைய வாழ்க்கையில் இழப்புகள் அதிகமாக இருக்கும். இந்த இல்லாதப்பட்ட மக்கள் வெற்றி அடைய வேண்டும். அப்போதுதான் இந்த இழப்புகளை ஈடுகட்ட முடியும். இந்த நேரடியான புத்திசாலித்தனம் என்னை வியக்க வைக்கிறது. இதனை விடவும் சிறப்பாக யோசித்து என்னால் விதியை வென்றுவிட முடியுமா ? நான் ஆதரவு கொடுத்தவர்களை நான் தரையில் விட்டு செல்ல மாட்டேன். இந்த ஒரு விஷயத்துக்காக விதியை நான் வெற்றி அடைந்தே ஆகவேண்டும். 


Sunday, June 23, 2024

MUSIC TALKS - YEMATHI YEMAATHI IMAIYALE VIZHI SAATHI PAARTHAALE RASATHTHI ADI AATHI ADI AATHI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU




ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி ஓடி வரச்சொல்லும் உன் பார்வை
துரு துரு துருவென பார்த்தாளே தூண்டிலை மனசுக்குள் போட்டாளே
இதயத்தில் சுவர்களில் அழகாக அவளது ஓவியம் வரைந்தாளே

ஏமாத்தி ஏமாத்தி இமையால விழி சாத்தி
பார்த்தாலே ராசாத்தி அடி ஆத்தி அடி ஆத்தி 
ஒரு பார்வை நெய்யூத்தி உயிர் மேல விளக்கேத்தி
போறானே என்னை மாத்தி அடி ஆத்தி அடி ஆத்தி
பாதம் நடந்து வந்த பாதை முழுவதிலும் வாசமடிப்பதென்ன வானவில்லே
ஆசைகள் தான் கூத்தாடுது நெஞ்சமெல்லாம் பூத்தாடுது

ஏமாத்தி ஏமாத்தி இமையால விழி சாத்தி
பார்த்தாலே ராசாத்தி அடி ஆத்தி அடி ஆத்தி 

கதவிடுக்குல விரலாக அவள் விழியாலே உயிர் நசுங்கியதே
பகல் இரவென தெரியாமல் ஏதும் புரியாமல் தினம் நகர்கிறதே
நொடி முள்ளைப் போல் இமை துடிக்கிறதே
நொடிக்கொரு முறை உன்னை கேட்கிறதே
படித்துறை பாசியில் நடப்பது போல் 
கால்களும் காற்றினில் வழுக்கிடுதே
ஹோ .. ஏழேழு ஜென்மங்கள் பேராசை வேண்டாமே
உயிர் தேடும் பெண்ணின் மடியில்
ஒரு நொடி வாழ்ந்தால் அது போதும்
சொல்லாமலே நெஞ்சாடுது 
உன் மோகனம் கண் தேடுதே

ஏமாத்தி ஏமாத்தி இமையால விழி சாத்தி
பார்த்தாலே ராசாத்தி அடி ஆத்தி அடி ஆத்தி


இவ மனசுல எனக்காக உள்ள இடம் பார்க்க மனம் அலைபாயும்
தினம் பலமுறை குளிச்சாலும் உடல் நெருப்பாக இங்கு அனல் காயும்
ஒரு விதை விழுந்து வனமாகும் அதிசயம் நேரில் பார்த்தேனே
ஒரு துளி விழுந்து கடல் ஆகும் உற்சவம் நானும் கண்டேனே
வரவேற்பு வளையம் போல் புருவங்கள் அழைக்கிறதே
வரவேற்று எந்தன் நெஞ்சை வதைகள் தினமும் செய்கிறதே
கண்ணால் ஒரு காய்ச்சல் வரும் முச்சந்தியில் மோட்சம் வரும்

ஏமாத்தி ஏமாத்தி இமையால விழி சாத்தி
பார்த்தாலே ராசாத்தி அடி ஆத்தி அடி ஆத்தி 
ஒரு பார்வை நெய்யூத்தி உயிர் மேல விளக்கேத்தி
போறானே என்னை மாத்தி அடி ஆத்தி அடி ஆத்தி

MUSIC TALKS - AZGHAGIYA LAILAA AVAL IVALADHU STYLE AA SANDHANA MELA IVAL MANMADHA PUYALA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா 
அழகுக்கு இவள்தான் தாய் நாடா

அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா 
அழகுக்கு இவள்தான் தாய் நாடா


சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே 
சூரியன் நிலவாய் ஆனது அங்கே
என் மனம் இன்று போனது எங்கே 
மன்மதனே உன் ரதி எங்கே

கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும் 
வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும்
புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும்
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்
காலடி ஓசைகள் கம்பனை கேட்டது
பிக்காசோவின் ஓவியம் ஒன்று 
பிட்டோவனின் சிம்ஃப்போனி ஒன்று 
பெண்ணாய் மாறியதோ ?
அந்தப்புரத்து மகராணி அந்தப்புரத்து மகராணி

அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா 
அழகுக்கு இவள்தான் தாய் நாடா


உயிருக்குள் மின்னல்கள் அடித்து என்ன
தாகங்கள் என்னை குடித்தது என்ன 
அழகில் என்னை வளைத்தது என்ன  
இதயம் கொள்ளை போனதென்ன


ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன்
கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்
கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன்
தினம் தினம் இவளை யோசித்தேன்


வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது
பூக்கள் அவளை பார்த்து பார்த்து 
ஆட்டோகிராப்பை கேட்டு கேட்டு கைகள் நீட்டியதோ
அந்தப்புரத்து மகராணி அந்தப்புரத்து மகராணி


அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா 
அழகுக்கு இவள்தான் தாய் நாடா

MUSIC TALKS - AAGAAYA SOORIYANAI OTRAI JADAIYIL KATTIYAVAL NINDRADUM VINMEENAI NETRI CHUTTIYIL OTTIYAVAL - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU




ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்
என் எண்ணம் எதுவோ ?
கிளி நான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்
உன்னை கொஞ்சும் எண்ணமோ ?


ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ ?
சகியே , என்னை கொஞ்சம்  கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே 
என்னை கொல்லும் எண்ணமோ ?


காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கே தான்
காதல் பார்வையில் பூமி வேறு தான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கே தான்
உன் குளிருக்கு இதமாய் என்னை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகத்தை உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது


என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய் ?
டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கி நான் எங்கே செல்வது ?
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே
அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி ?
நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி
கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்
பாரம் குறைந்ததும் ஏதோ நிம்மதி !!

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ ?
சகியே , என்னை கொஞ்சம்  கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே 
என்னை கொஞ்சும் எண்ணமோ ?

MUSIC TALKS - UN PANI THULI PANI THULI PANI THULI ENAI SUDUVATHU SUDUVATHU YENO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



கரு கரு கரு கரு கண்ணு பட்டு வாடிவிடும் வாசமல்லி
சந்தனத்தை பூசி விடுங்கஅடுத்தது அடுத்தது எப்போவென்னு 
மாமியாரு கேட்கும் முன்னே அரை டஜன் பெத்து கொடுங்க
தக தக தக தக தங்க சிலை தவிக்குது
வெட்கத்துல போதும் அதை விட்டுவிடுங்க
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்குன்னு
தேவைப்படும் தாலாட்டுல ஒண்ணு ரெண்டு கத்துகொடுங்க


உன் பனித்துளி பனித்துளி பனித்துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ
இது நனவாய் தோன்றும் கனவு இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணைப் பறித்து வெளிச்சம் தரும் இரவு

காதலால் காதலால்  எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே..
உன் பனித்துளி பனித்துளி பனித்துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ



கரு கரு கரு கரு கண்ணு பட்டு வாடிவிடும் வாசமல்லி
சந்தனத்தை பூசி விடுங்கஅடுத்தது அடுத்தது எப்போவென்னு 


மாமியாரு கேட்கும் முன்னே அரை டஜன் பெத்து கொடுங்க
தக தக தக தக தங்க சிலை தவிக்குது
வெட்கத்துல போதும் அதை விட்டுவிடுங்க
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்குன்னு
தேவைப்படும் தாலாட்டுல ஒண்ணு ரெண்டு கத்துகொடுங்க

விரல்களும் நகங்களும் தொட்டு கொண்ட நேரங்கள்
எண்ணி அதை பார்த்ததில்லை என்ற போதும் நூறுகள்
ஏதோ ஒரு தென்றல் மோதி மெல்ல மெல்ல மாறினோம்
உன்னை நானும் என்னை நீயும் எங்கே என்று தேடினோம்
நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சுக்குளே பேசலானோம்
பேசும் போதே பேசும் போதே மௌனம் ஆனோம்


உன் பனித்துளி பனித்துளி பனித்துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ

முகத்திரைகுள்ளே நின்று கண்ணாம் பூச்சி ஆடினாய்
பொய்யால் ஒரு மாலை கட்டி பூசை செய்து சூடினாய்
நிழல்களின் உள்ளே உள்ள நிஜங்களை தேடினேன்
நீயாய் அதை சொல்வாய் என நித்தம் உன்னால் வாடினேன்
சொல்ல நினைத்தேன் ஆனால் வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை
சொந்தம் என்று யாரும் இனி தேவை இல்லை

உன் பனித்துளி பனித்துளி பனித்துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ
இது நனவாய் தோன்றும் கனவு இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணைப் பறித்து வெளிச்சம் தரும் இரவு


காதலால் காதலால்  எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே..
உன் பனித்துளி பனித்துளி பனித்துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ

MUSIC TALKS - VELLAI MAYIL VENNILAVIL KOOTHADA ORU KANNI PUYAL KANGALUKKUL KAATHTHADA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



வெள்ளை மயில் வெண்ணிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
உன்னை காதல் என்ற வார்த்தையாலே
சொல்லி சொல்லி நான் பாட

ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு

ஆசை நினைவடி இது ஆறாம் பிறையடி
உனை கண்டேன் ஒரு நோடி
அது காதல் முதற்படி

மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனித்துளி
இரு இதயம் சேரவே 
இனி இல்லை இடைவெளி

வெள்ளை மயில் வெண்ணிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
உன்னை காதல் என்ற வார்த்தையாலே
சொல்லி சொல்லி நான் பாட

பூங்காவனம் தூங்காது வானம்
ரீங்கரம் பாடும் வண்டு 
எந்தன் கையோடு வேண்டும்

ராக்கோழியாய் கூவுது முச்சு
கை ரேகை நூலின் மீது 
சேலை முந்தானையாச்சு

சதை நிலா உன்னை நெஞ்சிலே
விதையென மூடி வைக்கவா
மதம் பிடித்தாடும் யானையாய்
மனக்குளம் வெந்நீரான
பின்பும் கூட பூ பூக்குதே

மூன்றாம் பிறை முந்நூறு மேகம்
சூழ்ந்தாழும் இந்த திங்கள் 
உந்தன் கண்ணாடியாகும்
ஆனவரை ஆனந்த மோகம்
அன்னாந்து பார்த்தால் 
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்

மழைத்துளி வானில் தங்கினால்
மணல்வெளி ஈரமாகுமா 
சுவை சுவை என்று கூறினேன்
முதல் முதல் முத்தம் என்னும் 
பூவை கிள்ளி முத்தாடவாய் 

மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனித்துளி
இரு இதயம் சேர்ந்த பின்
இனி இல்லை இடைவெளி


MUSIC TALKS - KONJI PESIDA VENAAM UN KANNE PESUDHADI KONJAMAGA PAARTHA MALAICHAARAL VEESUDHADI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தா மழைச்சாரல் வீசுதடா
நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானா பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்

ஆசை வலை விடுதா நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே மீண்டும் விழுந்திடுதா
தனிமை உன்னை சுடுதா நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களிலெல்லாம் கூந்தல் மணம் வருதா
குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும் மேக மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி

கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடா
நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தா மழைச்சாரல் வீசுதடா



MUSIC TALKS - KALA KALAVENA POZHIYUM POZHIYUM MEGAM ENGU SELLUTHO ? OLI ILLAMAL MALARUM MALARAI ULAVU PAAKA SELLUTHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



அன்பே இது நிஜம்தானா 
என் வானில் புது விண்மீனா 
யாரைக் கேட்டது இதயம் 
உன்னைத் தொடர்ந்து போக 
என்ன துணிச்சல் அதற்கு 
என்னை மறந்து போக 
இருந்தும் அவை இனிய வலிகளே

கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ ?
ஒலியில்லாமல் மலரும் மலரை 
உளவு பார்க்க செல்லுதோ ?

கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ ?
ஒலியில்லாமல் மலரும் மலரை 
உளவு பார்க்க செல்லுதோ ?

விரல் தொடவில்லையே
நகம் படவில்லையே 
விரல் தொடவில்லையே 
நகம் படவில்லையே 
உடல் தடையில்லையே 
இது போல் ஒரு இணையில்லையே

கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ ?
ஒலியில்லாமல் மலரும் மலரை 
உளவு பார்க்க செல்லுதோ ?


விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே 
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே

கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ ?
ஒலியில்லாமல் மலரும் மலரை 
உளவு பார்க்க செல்லுதோ ?

அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்கு பெயரும் நிலவில்லை
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவை அழைக்கக் குரலில்லை
அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்கு பெயரும் நிலவில்லை
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவை அழைக்கக் குரலில்லை

யாரைக் கேட்டது இதயம்
யாரைக் கேட்டது இதயம் 
விழி தொடர்ந்தது விரல் தொடவில்லை

கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ ?
ஒலியில்லாமல் மலரும் மலரை 
உளவு பார்க்க செல்லுதோ ?



Friday, June 21, 2024

MUSIC TALKS - SINGLE PASANGA IPPO MINGLE AAGA VANDHIRUKKUM TAJ MAHAL KATTA READY SENGAL KODUNGA SONG - VERA LEVEL PAATU





சிங்கிள் பசங்க பொண்ணை பார்த்தா மண்ணை பார்ப்போம்
சிங்கிள் பசங்க கண்nணை பாத்தா ஸ்டன் ஆவாதே
சிங்கிள் பசங்க அவ அப்பன் வந்த அபீட்டாவோம் ஆனா
சிங்கிள் பசங்க அப்புறமா ரிப்பீட் ஆவோம்

சிங்கிள் பசங்க இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம் 
தாஜ் மஹால் கட்ட ரெடி செங்கல் கொடுங்க
நாங்க சிங்கிள் பசங்க இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம் கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த சிக்னல் கொடுங்க





சிங்கிள் பசங்க பொண்ணை பார்த்தா மண்ணை பார்ப்போம்
சிங்கிள் பசங்க கண்nணை பாத்தா ஸ்டன் ஆவாதே
சிங்கிள் பசங்க அவ அப்பன் வந்த அபீட்டாவோம் ஆனா
சிங்கிள் பசங்க அப்புறமா ரிப்பீட் ஆவோம்

உஷார் மேல தேகோமா 
நாங்க வாய்ச்சா மேல பாப்போம்மா 
உஷார் மேல தேகோமா 
நாங்க வாய்ச்சா மேல பாப்போம்மா 




அவ கலரு என்ன ? கலரு என்ன ? உஜ்ஜாலா வோய்ட்டு 
நான் அவளுக்குகாக போடுவேன்டா மஜாவா ஃபைட்டு
அவ ஊரு என்ன ? ஊரு என்ன ? பக்கத்து ஸ்டேட்டு
அப்போ ஏற்கனவே ஆளு இருக்கும் மச்சான் நீ லேட்டு
அவள நானும் லவ்வு பண்ணேன் இன்ச் பை இன்ச்சு
அவங்க அப்பன்காரன் குடுக்க போறான் மூக்குல பஞ்ச்சு
அவள நானும் கூட்டி போவேன் மெரினா பீச்சு
அங்க நீங்க சேர்ந்து போக தடா போட்டாச்சு




கேரளத்து காஞ்சனா 
நான் வருவேன்டி நீ சிரிச்செனா
என் மேல என்ன டென்ஷனா ?
நீ ஒகே சொன்ன தடுக்கினா ?
மாத்திக்குவேன் என்னை நானும் 
பக்காவான பெர்சன்னா 
நீ ஒத்துகிட்டு வர சொன்னா 
நான் வொர்க்கு பண்ணுவான் புருஷனா

சிங்கிள் பசங்க இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம் 
தாஜ் மஹால் கட்ட ரெடி செங்கல் கொடுங்க
நாங்க சிங்கிள் பசங்க இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம் கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த சிக்னல் கொடுங்க


சிங்கிள் பசங்க பொண்ணை பார்த்தா மண்ணை பார்ப்போம்
சிங்கிள் பசங்க கண்nணை பாத்தா ஸ்டன் ஆவாதே
சிங்கிள் பசங்க அவ அப்பன் வந்த அபீட்டாவோம் ஆனா
சிங்கிள் பசங்க அப்புறமா ரிப்பீட் ஆவோம்


ஜானி ஜானி இன்னா பா ?  தொரத்தின்னு வரான் அவங்க அப்பா
திரும்புற பக்கம் எல்லாம் நிக்கும் உன் ஃபேஸூ
விரும்புற பொண்ணு கிட்ட தில்லா நீயும் பேசு 
கெடைக்குற கேப்ல எல்லாம் பூந்து கலாசு
உங்க அப்பன் தாமாசு இனி நான்தான் டி மாஸூ 
மனசுல ட்ரன்டிங்குடி  உன்னோட ஸ்மைல்லு 
ரொம்ப நாளா பெண்டிங்குடி என்னோட ஃபைல்லு
கொஞ்சம் பாத்து முடுச்சு குடு
கிழிஞ்ச ஹார்ட்ட தச்சு குடு 
உன் பிரண்ட வெட்டிவுடு 
கடைசியா என்னை கட்டிக்குடு

அட ஏரோப்ளான்ன பாத்துகின்னு 
ஷேர் ஆட்டோல போவோம்டி
உன் பாராசூட் பார்வையால 
தூக்கிட்ட நீ மேலே டி
வாடி ஜிமிக்கி கம்மல் 
தாடி பச்சை சிக்னல் 
உன்னோட கரண்ட்டு கண்ணால் 
நுழைஞ்ஜே குழந்தை நெஞ்சில்

சிரிச்சா இளிப்போம் முறைச்சா தெறிப்போம்
சிரிச்சா இளிப்போம் முறைச்சா தெறிப்போம்
சிரிச்சா இளிப்போம் முறைச்சா தெறிப்போம்
சிரிச்சா இளிப்போம் முறைச்சா தெறிப்போம்

சிங்கிள் பசங்க நாங்க சிங்கிள் பசங்க 
சிங்கிள் பசங்க நாங்க சிங்கிள் பசங்க

MUSIC TALKS - AALAANA NAAL MUDHALAA YAARAIYUM NINAICHATHILLAI - UNNAI NAAN KATTIKKOLLA EPPAVUM NINAICHATHILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




ஆளான நாள் முதலா 
யாரையும் நினைச்சதில்ல 
மாமா நான் உங்களுக்கு 
வாக்கப்பட ஆச பட்டேன் 
வேணான்னு சொல்லுறீகளே 
சும்மா வெறும் வாய மெல்லுறீகளே 
ஆடியில கட்டிக்கிட்டா 
சித்திரைக்கு புள்ள வரும் 
ஆகாது ஆகாது மச்சானே 
இது தோதான தை மாசம் மச்சானே 
ஆகாது ஆகாது மச்சானே 
இது தோதான தை மாசம் மச்சானே
 
உன்னை நான் கட்டிக்கொள்ள 
எப்பவும்  நினைச்சதில்ல 
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள 
முங்குறவன் யாரும் இல்ல 
வேணான்டி விட்டு விடடி 
நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி 
தாலி கட்டி கூடிகிட்டா 
சாமி குத்தம் ஆகுமுன்னு 
மேலூரு குறிகாரன் சொன்னான்டி 
அடி கண்ணாலம் நமக்குள்ள வேணாம்டி 
மேலூரு குறிகாரன் சொன்னான்டி 
அடி கண்ணாலம் நமக்குள்ள வேணாம்டி

ஆளான நாள் முதலா 
யாரையும் நினைச்சதில்ல 
மாமா நான் உங்களுக்கு 
வாக்கப்பட ஆச பட்டேன் 

புல்லறுக்கப் போகையிலே 
புல் நுனி தண்ணியில 
ஒம் முகத்த பாத்துபுட்டேன் 
வூடு வந்து சேந்து புட்டேன் 
எம் பாசம் தெரியாது மாமா 
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
எம் பாசம் தெரியாது மாமா 
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா

கொல்லையிலே மாங்கா மரம் 
கொத்து கொத்து காச்சிருக்கு 
காவக்காரன் தூங்கையிலே 
கைய எட்டி மாம்பழத்த 
அறியாம பறிச்சாத்தான் இனிக்கும் அடி 
அணில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும் 
அறியாம பறிச்சாத்தான் இனிக்கும் அடி 
அணில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்
பூவெடுத்து மால கட்டி ராசா 
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா 
உன்ன நெனச்சே பொறந்தேன் 
வளந்தேன் ராசா என் ராசா

உன்னை நான் கட்டிக்கொள்ள 
எப்பவும்  நினைச்சதில்ல 
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள 
முங்குறவன் யாரும் இல்ல 

காளை கண்ணு வாங்கிக் கட்டி பால் கறக்க ஆச பட்டே
கோழிக் குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்துகிட்டே 
முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாதே என் வாழ்க்க தானே 
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாதே என் வாழ்க்க தானே
ஒத்தைக்கொத்த சண்டையின்னா 
ஓடிப் போற ஆம்பள நீ 
செத்துப் போன பாம்ப பாத்தே 
சத்தம் போட்ட வீரனும் நீ
நீ மட்டும் சரி தானா மாமா
என் நினைப்பத்தான் நீ பாரு மாமா
நீ மட்டும் சரி தானா மாமா 
என் நினைப்பத்தான் நீ பாரு மாமா

உன் வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாரேன் 
நான் ஆம்பளைதான் வீரத்த நீ பாரேன் 
நான் நெனச்சா மலைய வளைப்பேன் 
வாரேன் நான் வாரேன்

ஆளான நாள் முதலா 
யாரையும் நினைச்சதில்ல
உன்னை நான் கட்டிக்கொள்ள 
எப்பவும்  நினைச்சதில்ல 
வேணான்னு சொல்லுறீகளே
அடி வேணான்டி விட்டு விடடி 
தாலி கட்டி கூடிகிட்டா சாமி குத்தம் ஆகுமடி
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ள வேணாம்டி 
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ள வேணாம்டி 

MUSIC TALKS - THAMARAI POOVUKKUM THANNIKKUM ENNAIKKUM SANDAIYE VANDHATHILLA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

r />






தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் 
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்க 
மச்சினி யாரும் இல்ல !
கம்பங்கூழில் போட்ட உப்பு 
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி 
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள
நாக்குல மூக்கையே  தொட்டவன் நானடி
பார்வையால் உசிரையே தொட்டவ நீயடி
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் 
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்க 
மச்சினி யாரும் இல்ல !


ஐ ஆறு - எட்டு நெல்லை போல அவசரமா சமேஞ்சே 
ஐத்த மகன் பஞ்சதுக்கு ஆதாரமா அமைஞ்சே  
குட்டிபோட்ட பூனைப் போல காலச் சுத்தி குழைஞ்சே
பாவமுன்னு நீவி விட்டா பல்லுப் போட துணிஞ்சே 
சொந்தக்காரன் நான்தானே தொட்டுப் பாக்கக் கூடாதா ?
கன்னம்தொடும் கை ரெண்டும் கீழேக் கொஞ்சம் நீளாதா ?
இந்த நாட்டில் தீண்டமைதான் இன்னும் உள்ளதா ?
வயசுக்கு வந்தப் பூ ஆசையே பேசுமா ?
வண்டுக்கும் பூவுக்கும் சண்டையா சத்தமா ?



தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் 
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை அள்ளி நான் தாவணி போட்டுக்க 
மாலையும் சூடவில்லை



கம்மாக்குள்ள ஒத்த மரம் அங்கே போவோம் மாமா
கம்மாத்தண்ணி ஊத்தும்போது திரும்பிருவோம் மாமா
நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன் நீயும் கொஞ்சம் வாமா
அங்கே இங்கே கையி படும் சொல்லி புட்டேன் ஆமா
நிலா கறையை அழிச்சாலும் உன்னைத் திருத்த முடியாது
புரட்டி போட்டு அடிக்காம ஆமை ஓடு ஒடையாது
போக போக மாமனுக்கு புத்தி மாறுது
கிள்ளவா அள்ளவா சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா பட்டிமன்றம் வைக்கலாம்




தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் 
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்க 
மச்சினி யாரும் இல்ல !
கம்பங்கூழில் போட்ட உப்பு 
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி 
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள
மாமனே மாமனே உன்கிட்ட ஒட்டவா
பூமிக்கும் வேருக்கும் சண்டையா சத்தமா…


MUSIC TALKS - SENDHOORA SERNDHE SELVOM SENDHOORA SENGAANDHAL POO UN THERA MAARAN AMBU AINDHUM WAITHU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





நிதா நிதா நிதானமாக யோசித்தாலும் நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும்

நீ தான் மனம் தேடும் மாண்பாளன் பூவாய் எனையேந்தும் பூபாலன்

என் மடியின் மணவாளன் என தோன்றுதே !

செந்தூரா சோ்ந்தே செல்வோம் செந்தூரா செங்காந்தள் பூ

உன் தேரா மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா ?

செந்தூரா சோ்ந்தே செல்வோம் செந்தூரா செங்காந்தள் பூ

உன் தேரா மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா ?

நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும் விரல்களை பினைத்தவாறு பேச வேண்டும்

காலை எழும் போது நீ வேண்டும் தூக்கம் வரும் போது தோள் வேண்டும்

நீ பிாியா வரம் தந்தால் அதுவே போதும்

செந்தூரா சோ்ந்தே செல்வோம் செந்தூரா செங்காந்தள் பூ

உன் தேரா மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா ?


மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா ?

மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா ?

பாடல் கேட்போமா பாடி பாா்ப்போமா மூழ்கத்தான் வேண்டாமா ?

யாரும் காணாத இன்பம் எல்லாமே கையில் வந்துவிழுமா

நீயின்றி இனி என்னால் இருந்திட முடியுமா ?


செந்தூரா சோ்ந்தே செல்வோம் செந்தூரா செங்காந்தள் பூ

உன் தேரா மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா ?


அலைந்து நான் களைத்து போகும்போது அன்பே 

மெலிந்து நான் இளைத்து போவதாக சொல்வேன் 

வீட்டில் நளபாகம் செய்வாயா ? பொய்யாக சில நேரம் வைவாயா ?

நான் தொலைந்தால் உனை சேர வழி சொல்வாயா ?


செந்தூரா சோ்ந்தே செல்வோம் செந்தூரா செங்காந்தள் பூ

உன் தேரா மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா ?

எய்தாயா ? கண்கள் சொக்க செய்தாயா , கையில் சாய சொல்வாயா ?

ஏதோ ஆச்சு ! வெப்பம் மூச்சு ! வெட்கங்கள் போயே போச்சு !




MUSIC TALKS - EVERYTHING TAMIL BOYS WISHING FOR THIER WEDDING - KONCHAM CHUMMA IRUDAA !





 

"தாங்கும் மரக்கிளையா போற வழி நீ துணையா 
கூட வர என்ன குறை அது போதும்
ஆலமரத்து மேல கூவுற ஒரு குயிலா 
வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்
என்னோட நீ சிரிச்சா கண்ணீரை
நீ துடைச்சா வேறேதும் வேணாமே அது போதும்
வீடு திரும்பயிலே வாசல் தொறக்கையிலே 
மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்"


X



"நினைச்ச கனவு ஒண்ணு நெஜமா நடந்திருச்சு 
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு !
விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிருச்சு 
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு !
கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு 
என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு !
கண்டாங்கி சேலை கட்டி என் கைய நீ புடிச்சு 
நாம் சேரும் நாளும் இங்கு வந்தாச்சு"




MUSIC TALKS - ORU KILI URUGUTHU URIMAIYIL PALAGUTHU OH MAINAA OH MAINAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




ஒரு கிளி உருகுது 
உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா 
குறும்புகள் தொடருது 
அரும்புகள் மலருது 
ஒ மைனா மைனா
தளிர் இது மலர் இது தானா ?
இது ஒரு தொடர்கதை தானா ?
இரு மனம் இணையுது 
இரு கிளி தழுவுது
ஒ மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது 
உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா 
குறும்புகள் தொடருது 
அரும்புகள் மலருது 
ஒ மைனா மைனா

நிலவெரியும் இரவுகளில் 
ஒ மைனா ஒ மைனா 
மணல் வெளியில் சடுகுடுதான் 
ஒ மைனா ஒ மைனா 
கிளிஞ்சல்களே உலை அரிசி !
இவள் அல்லவா இளவரசி !
கிளிஞ்சல்களே உலை அரிசி !
இவள் அல்லவா இளவரசி !
தேனாடும் 
பூவெல்லாம் 
பாய் போடும் 
ஒரு கிளி மடியினில் 
ஒரு கிளி உறங்குது 
ஒ மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது 
உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா 
குறும்புகள் தொடருது 
அரும்புகள் மலருது 
ஒ மைனா மைனா
தளிர் இது மலர் இது தானா ?
இது ஒரு தொடர்கதை தானா ?
இரு மனம் இணையுது 
இரு கிளி தழுவுது
ஒ மைனா ஒ மைனா

இலைகளிலும் கிளைகளிலும் 
ஒ மைனா ஒ மைனா 
இரு குயில்கள் பேரெழுதும் 
ஒ மைனா ஒ மைனா 
வயல்வெளியில் பல கனவை 
விதைக்கிறதே சிறு பறவை
வயல்வெளியில் பல கனவை 
விதைக்கிறதே சிறு பறவை

நீரோடை எங்கெங்கும் பூவாடை 
மலர்களின் 
வெளிகளில் 
இரு பிறை வளருது 
ஒ மைனா ஒ மைனா 

ஒரு கிளி உருகுது 
உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா 
குறும்புகள் தொடருது 
அரும்புகள் மலருது 
ஒ மைனா மைனா
தளிர் இது மலர் இது தானா ?
இது ஒரு தொடர்கதை தானா ?
இரு மனம் இணையுது 
இரு கிளி தழுவுது
ஒ மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது 
உரிமையில் பழகுது
ஒ மைனா மைனா 
குறும்புகள் தொடருது 
அரும்புகள் மலருது 
ஒ மைனா மைனா

MUSIC TALKS - MAAYAM SEITHAAYO NENCHAI KAAYAM SEITHAAYO KOLLA VANDHAAYO PADHIL SOLLA VANDHAAYAO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ YOU GOT TO DO IT !
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ YOU GOT TO DO IT !
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை ? கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ YOU GOT TO DO IT !
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ YOU GOT TO DO IT !

நாணல் செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன் ..
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
மின் விசிறிக்கண் விசிறி வெகு தூரம் விழுந்தேன்
என் பெயரை நான் மறந்து கல் போல கிடந்தேன்

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ YOU GOT TO DO IT !
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ YOU GOT TO DO IT !

வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
மீசை முடி கரிய அருகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உன் அருகில் முள் செடியும் அழகாக தெரியும்
உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ YOU GOT TO DO IT !
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ YOU GOT TO DO IT !
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை ? கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ YOU GOT TO DO IT !
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ YOU GOT TO DO IT !

MUSIC TALKS - AZHAGIYA ASURA AZHAGIYA ASURA ATHU MEERA AASAI ILLAIYA KANAVIL VANDHU ENDHAN VIRALGAL KICHU KICHU MOOTAVILLAIYA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


அழகிய அசுரா அழகிய அசுரா 
அத்துமீற ஆசை  இல்லையா ?
கனவில் வந்து எந்தன் விரல்கள் 
கிச்சுகிச்சு மூட்டவில்லையா ?
அழகிய அசுரா அழகிய அசுரா 
அத்துமீற ஆசை  இல்லையா ?
கனவில் வந்து எந்தன் விரல்கள் 
கிச்சு கிச்சு மூட்டவில்லையா
வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி
குட்டி குட்டி மாலை ஆக்குவேன்
புரவி ஏறி நீயும்
என்னை அள்ளி கொண்டால்
மூச்சு முட்ட முட்ட சூட்டுவேன்
கூடுவிட்டு கூடு பாயும் வித்தை 
கற்று உன்னை அடைவேன்
அழகிய அசுரா அழகிய அசுரா 
அத்துமீற ஆசை  இல்லையா ?
கனவில் வந்து எந்தன் விரல்கள் 
கிச்சுகிச்சு மூட்டவில்லையா ?

கடல் நீலத்தில் கண்கள்
கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும்
கருங்கூந்தலின் பெண்கள்
தொட்ட காரியம் வெற்றி ஆகும்
உச்சந்தலையில் உள்ள
என் அர்ஜுன மச்சம் சொல்லும்
என்னை சேர்பவன் யாரும்
அவன் சகலமும் பெற்று வாழ்வான் என்று
அழகிய அசுரா அழகிய அசுரா 
அத்துமீற ஆசை  இல்லையா ?
கனவில் வந்து எந்தன் விரல்கள் 
கிச்சுகிச்சு மூட்டவில்லையா ?

கனா ஒன்றிலே நேற்று
ரெண்டு பாம்புகள் பின்ன கண்டேன்
நகம் பத்திலும் பூக்கள்
மாறி மாறியே பூக்க கண்டேன்
விழுகும் போதே வானில்
எரி நட்சத்திரத்தை கண்டேன்
நிகழும் யாவும் நன்றாய்
தினம் நிகழ்ந்திட தானே நானும் கண்டேன்

அழகிய அசுரா அழகிய அசுரா 
அத்துமீற ஆசை  இல்லையா ?
கனவில் வந்து எந்தன் விரல்கள் 
கிச்சுகிச்சு மூட்டவில்லையா ?
அழகிய அசுரா அழகிய அசுரா 
அத்துமீற ஆசை  இல்லையா ?
கனவில் வந்து எந்தன் விரல்கள் 
கிச்சுகிச்சு மூட்டவில்லையா ?

வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி
குட்டி குட்டி மாலை ஆக்குவேன்
புரவி ஏறி நீயும்
என்னை அள்ளி கொண்டால்
மூச்சு முட்ட முட்ட சூட்டுவேன்
கூடுவிட்டு கூடு பாயும் வித்தை 
கற்று உன்னை அடைவேன்
அழகிய அசுரா அழகிய அசுரா 
அத்துமீற ஆசை  இல்லையா ?
கனவில் வந்து எந்தன் விரல்கள் 

MUSIC TALKS - VIDALA PULLA NESATHTHUKKU SEVATHTHA PULLAI PAASATHTHUKKU AZHAGAR MALAI KAATHTHU VANDHU THOOTHU SOLLADHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ? விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழக...