ஒரு மன்னருக்குப் பறவைகள் மற்றும் மிருகங்கள் பேசும் மொழியும் புரியும். ஒருமுறை அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தார். இரு புறாக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஆண் புறா, பெண் புறாவிடம் கோபமாக, ”என்னை என்னவென்று நினைத்தாய்? நான் மனம் வைத்தால் இந்த மன்னரின் அரண்மனையையே இடித்து நிர்மூலமாக்கி விடுவேன்!“ என்று கூறியது. இதனைக் கேட்ட மன்னர், அந்த ஆண் புறாவைத் தன் அருகில் அழைத்தார். அருகில் வந்த புறாவிடம், “என்ன புறாவே. இந்த அரண்மனையை இடித்து விடுகிறேன் என்றாயே. எப்படி உன்னால் முடியும்?“ என்று கேட்டார். அதற்கு அந்த ஆண்புறா, ”மன்னரே. என்னால் எப்படி முடியும்? ஏதோ என் மனைவியைத் திருப்தி செய்ய கூறினேன். அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்“ என்று கூறிவிட்டு தன் மனைவியிடம் சென்றது. “மன்னர் கூப்பிட்டாரே. எதற்குக் கூப்பிட்டார்?“ என்று பெண்புறா கேட்டது. “நான் அரண்மனையைத் தகர்த்து விடுவேன் என்று உன்னிடம் சொன்னதை மன்னர் கேட்டு பயந்து விட்டார். எனவே தான் என்னைக் கூப்பிட்டு அப்படி யெல்லாம் செய்தவிடாதே என்று என்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்“என்றதாம் ஆண்புறா. புறாவுக்குக் கூட மனைவி என்றால் என்ன்ன்னா பயம் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
செவ்வாய், 22 ஜூலை, 2025
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - பணம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும்போது கவனம் !
நிறைய நேரங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக முடிவெடுப்பதை மறந்து விடுகிறோம். பணம் நம்மிடம் அதிகமாக இருக்கும் பொழுது நம்முடைய யோசனைகள் ம...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
1 கருத்து:
Power of Wifey 🔥
கருத்துரையிடுக