வெள்ளி, 25 ஜூலை, 2025

GENERAL TALKS - கஷ்டப்பட்டு தெரிந்துகொண்ட விஷயங்கள் !




1. நான் இந்த உலகத்தின் சந்தோஷமான மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் மனிதர்கள் எல்லாம் உங்களிடம் பொய் சொல்லியிருக்கிறார்கள். உண்மையை சொல்ல போனால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் பேரரசனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


2. நம்முடைய கருத்துக்களின் மூலமாக சேர்க்கப்பட கூடிய கூட்டம் வெகு நாட்களுக்கு நிலைக்காது. அதுவே நம்முடைய செயல்களின் மூலமாக தானாகவே நமக்கு உதவிகளாக அமைந்த கூட்டம். நமக்காக கடைசி வரையில் நம்மோடு இருக்கும் இந்த மாதிரியான பிரடிக்கல் ஆன விஷயத்தை தான்.நாம் எப்பொழுதுமே வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டும்.


3. போலியான மனிதர்கள் கடைசி வரைக்கும் ஜெயிக்கவே மாட்டார்கள். அவர்கள் ஜெயிக்காமலே இருப்பதை பார்த்து நீங்கள் அவர்களை போலியான மனிதர்களாக இருக்கிறார்கள் என்று கண்டறிந்து கொள்ளலாம். உண்மையான மனிதர்கள் கண்டிப்பாக கடினமான உழைப்பை ஒரு விஷயத்துக்காக கொடுப்பார்கள். அதனால் அவர்களுடைய வெற்றி சமீபத்தில்.தாமதமாக சென்றாலும் ஒரு கட்டத்தில் சரியாக அவர்களுக்கு கிடைத்துவிடும்.


4. நம்முடைய மனது எப்படி வேலை செய்யும் என்றால் நம்முடைய வாழ்க்கையில் ஒரே ஒரு சரியான விஷயத்தை கண்டுபிடித்துவிட்டாலும் கூட அந்த சரியான விஷயத்துக்கு சம்பந்தப்பட்ட அனைத்து சரியான விஷயங்களும் நம்முடைய மனது தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்ளும். அதேபோல நம்முடைய வாழ்க்கையில் ஒரே ஒரு தவறான விஷயத்தை நாம் கண்டுபிடித்து வைத்தாலும் கூட அந்த தவறான விஷயத்துக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தவறான விஷயங்களையும்.நம்முடைய மனது கண்டுபிடித்து தனக்காக தெரிந்துகொண்டு வைத்திருக்கும் மனது இதுபோன்று அதிகமான தகவல்களை தெரிந்து கொண்டு வைத்திருப்பது ஒரு பாதுகாப்புக்கான செயல்பாடு. இந்த செயல்பாடை தவறாக மனது பயன்படுத்துவதற்கு நீங்கள் அல்லோ செய்ய கூடாது.


5. எப்பொழுது மனிதர்கள் தங்களுக்குள்ள இருக்கக்கூடிய இவர்கள் பெரியவர்கள், இவர்கள் சின்னவர்கள் என்ற வேறுபாடுகள் எல்லாம் தூக்கியெறிந்து அனைத்து தப்பான பிரிவினைகளையும் விட்டுவிட்டு உண்மையாக ஒருவருக்கொருவர் மனிதத்தன்மையோடு மனிதனுக்கு மனிதனாக மதிப்பு கொடுத்து வாழ்கிறார்களோ அப்படித்தான் இந்த உலகத்தில்.சந்தோஷமான ஒரு எதிர்காலம் உருவாகும்.

இது நான் எதற்காக இப்பொழுது சொல்லுகிறேன் என்றால் இப்படியே நிலைமை சென்று கொண்டிருந்தால் நமக்குள் இருக்கும்.சகோதரத்துவத்தை நமக்குள் இருக்கும் சமத்துவத்தை நமக்குள் இருக்கும் உறுதியை நாம் இழந்து விடுவோம்.நமக்குள் இருக்கும் நம்பிக்கையும் சேர்த்து இழந்து விடுவோம். இந்த மாதிரியான விஷயங்கள் நமக்கு நடக்கக்கூடாது என்பதால்தான். இப்பொழுது இது போன்ற ஒரு கருத்தை நான் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


6. மனிதன் எப்பொழுதுமே தன்னுடைய வாழ்க்கையில் அடைய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெளிவாக புரிதலோடு தெரிந்துகொள்ள வேண்டியது இருக்கும். மேலும் அந்த புரிதலோடு தெரிந்துகொள்வதில் அந்த விஷயங்களுக்காக வருங்காலத்தில் என்னென்ன வகையான விலைகளை கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதையும் நன்றாக ஒரு மனிதன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


7. பெரும்பாலான நேரங்களில் ஒரு சில கதாபாத்திரங்கள் நான் தவறு செய்கிறேன். நான் இனி மேலும் தவறு செய்யத்தான் போகிறேன். அனைத்து தவறுகளையும் நான் தெரிந்தேதான் செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் என்னுடைய தவறுகளை காரணம் காட்டி குற்ற உணர்வை தூண்டி விட்டு அதன் மூலமாக தங்களுக்கான லாபத்தை சம்பாதித்துக் கொள்ள ஆசைப் படாதீர்கள்.என்று நமக்கு அட்வைஸ் பண்ணக்கூடிய கேரக்டர்யாக இருப்பார்கள். இப்படிப்பட்ட கேரக்டர்களை அவர்களாகவே சரியாக மாறிவிடுவார்கள் என்று விட்டுவிடுவதுதான் நல்லது.


கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...