செவ்வாய், 22 ஜூலை, 2025

ARC-G2-037


ஒரு மன்னருக்குப் பறவைகள் மற்றும் மிருகங்கள் பேசும் மொழியும் புரியும். ஒருமுறை அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தார். இரு புறாக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஆண் புறா, பெண் புறாவிடம் கோபமாக, ”என்னை என்னவென்று நினைத்தாய்? நான் மனம் வைத்தால் இந்த மன்னரின் அரண்மனையையே இடித்து நிர்மூலமாக்கி விடுவேன்!“ என்று கூறியது. இதனைக் கேட்ட மன்னர், அந்த ஆண் புறாவைத் தன் அருகில் அழைத்தார். அருகில் வந்த புறாவிடம், “என்ன புறாவே. இந்த அரண்மனையை இடித்து விடுகிறேன் என்றாயே. எப்படி உன்னால் முடியும்?“ என்று கேட்டார். அதற்கு அந்த ஆண்புறா, ”மன்னரே. என்னால் எப்படி முடியும்? ஏதோ என் மனைவியைத் திருப்தி செய்ய கூறினேன். அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்“ என்று கூறிவிட்டு தன் மனைவியிடம் சென்றது. “மன்னர் கூப்பிட்டாரே. எதற்குக் கூப்பிட்டார்?“ என்று பெண்புறா கேட்டது. “நான் அரண்மனையைத் தகர்த்து விடுவேன் என்று உன்னிடம் சொன்னதை மன்னர் கேட்டு பயந்து விட்டார். எனவே தான் என்னைக் கூப்பிட்டு அப்படி யெல்லாம் செய்தவிடாதே என்று என்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்“என்றதாம் ஆண்புறா. புறாவுக்குக் கூட மனைவி என்றால் என்ன்ன்னா பயம் !





 

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Power of Wifey 🔥

D-X சொன்னது…

ஆண்பாவம் பொல்லாதது பார்த்தேன். எனக்குப் படம் பிடித்தது. இப்போதைக்கு இதுவொரு தேவையான படமும் கூட. இதைப் பெண்ணியத்துக்கு எதிரான படம் என்று சில பெண்கள் இங்கே திரித்து எழுதி இருந்ததையும் பார்த்தேன். படம் பெண்ணியத்துக்கு எதிரானதல்ல. போலிப் பெண்ணியவாதத்துக்கு மட்டுமே எதிரானது

குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் குவிந்தவண்ணம் இருப்பதாக சொல்கிறார்கள். அதில் பெரும்பாலான வழக்குகளில் காரணங்கள் மிகவும் சப்பையாக இருக்கும். ஒரு கட்டத்தில் விவாகரத்து என்பது கணவனை மனைவியும், மனைவியை கணவனும் ஈகோவில் ஜெயித்துவிடவேண்டும் என்பதற்காக மட்டுமே நிறைவேற்றப் படுகின்றன.

திருமண பந்தத்துக்குள் நுழையும் எல்லோருக்குமே கல்யாணமாகி ஒரு வருடத்திற்குள் விவாகரத்து செய்யுமளவிற்கு சண்டைகள் போகும். அதற்கு இங்கே யாரும் விதிவிலக்கில்லை. 'நீ இவ்வளவு கேவலமானவளா..' 'நீ இந்த அளவுக்கு கேடு கெட்டவனா' என்று பாய்ஸ் படத்தில் முன்னா-ஹரினி போல பரஸ்பரம் திட்டிக்கொள்வார்கள்.

ஆனால் அந்த கண்டத்தை கொஞ்சம் பொறுமையாக பக்குவமாக சமாளித்துக் கடந்தவர்கள்தான் இங்கே ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இணை பிரியாமல் வாழ்ந்து பேரன் பேத்தி எடுத்திருக்கிறார்கள். நமக்கு வயதாகும்போதுதான் கல்யாணமான புதிதில் நாம் போட்ட சண்டைகள் எவ்வளவு அற்பமானவை என்பது புரிய வரும்.

அந்த விஷயத்தைத்தான் இந்தப்படம் அடிநாதமாகக் கொண்டிருக்கிறது. திருமண பந்தத்தில் ஆணும் பெண்ணும் 50-50 என்பது கிடையாது. 70-30 அல்லது 30-70 விகிதாச்சாரம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு, ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்து தீராக்காதலும் மாறாப்பற்றுமாக வாழ்க்கையைக் கழிப்பதுதான் திருமணமேயன்றி, பெண்ணியத்தையும் ஆண்தனத்தையும் மாறி மாறி நிரூபித்துக் கொண்டிருப்பதல்ல என்பதை சரியாகச் சொல்லி இருக்கிறது.

தான் எடுத்துக்கொண்ட கண்டன்டுக்கு முறையாக நீதி செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர். இறுதியில் ஆர்ஜே விக்னேஷ் பேசும் நீண்ட வசனம் முக்கியமானது. விவாகரத்தில் இருக்கும் சட்டப்பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை அலசி இருக்கிறார்கள். விவாகரத்து விஷயத்தில் சட்ட வரைவுகள் பெண்களுக்கே அதிகம் சாதகமாக இருக்கிறது என்கிறார்கள். அப்படி விவாகரத்து நிகழும் பட்சத்தில் ஜீவனாம்சம் என்கிற ஒன்றை ஒரு மிடில்கிளாஸ் ஆடவனால் afford செய்யமுடியாமல் போகலாம். அதனால் அவனுக்கு ஏற்படும் மன உளைச்சல், புறக்கணிப்பு, வாழ்நாள் வலியைப் பற்றி இங்கே யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஆண் பல கட்டங்களில் எமோஷனலாகவும் எகனாமிகலாகவும் பெண்களால் ப்ளாக்மெயிலுக்கு உள்ளாகிறான்.

நிறைய இயக்குநர்கள் இங்கே பெண்களுக்காக பேசி இருக்கிறார்கள். ஆண்களுக்காகவும் ஆண்களேதான் பேச வேண்டும். போலிப் பெண்ணியத்தில் இருக்கும் ஆபத்தையும் அதன் விபரீதத்தையும் கூட பேசித்தானே ஆகவேண்டும். அப்படி ஒரு படமாக இது இருந்துவிட்டுப் போகட்டும்

D-X சொன்னது…

ஒரு ஏழை குடும்பத்தில் இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் நடக்கிறது.

மூத்த பெண்ணிற்கு சீதனம் அதிகம் கொடுத்து திருமணம் நடந்து முடிந்தது.

இரண்டாவது பெண்ணிற்கு சீதனத்தில் குறை வருகிறது. "நீங்கள் கொடுக்கும் பணத்தை வைத்துத்தான் என் தங்கையின் திருமணம் இருக்கு” என்கிறான் அந்த மாப்பிள்ளை. இதனால் மண்டபத்தில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. திடீரென மண்டபத்தில் ஒரு இளைஞன் எழுந்து “இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்கிறேன்” என்கிறான்.

யாருக்கு யார் துணை என்பது ஆண்டவன் போட்டுவைத்த முடிச்சு என்பது போல இரண்டாவது பெண்ணுக்கும் அந்த இளைஞனுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

மூத்த பெண், கணவன் மனைவிக்குள் ஒரு சிறு சண்டைகள் எழுந்தாலும் கூட “நான் ஒன்றும் சும்மா வரவில்லை.. லட்ச லட்சமாக பணம் வாங்கிக்கொண்டு தானே திருமணம் செய்தீர்கள்” என்று சொல்லியே தன் கணவனை நோகடித்தாள்.

ஒருநாள் அவள் கணவன் ஆசையாக அவள் அருகில் வந்து “உனக்கு வேற ஏதும் ஆசைகள் உண்டா?" என்று கேட்க “ஆமாம் இருக்கிறது.. சீதனம் என்ற பெயரில் என்னை விலைக்கு வாங்கிய என் ஆசை புருசனுக்கு பெண் குழந்தையாகவே பெற்றுக்கொடுக்க ஆசை" என்று சொல்லி வாய்விட்டு அழுகிறாள்.

அப்போது தான் கணவன் அவள் தந்தை இடத்தில் யோசித்து தான் செய்த தவறை எண்ணி மனம் நொந்து அழுகிறான்.

இதேபோலவே இரண்டாவது சகோதரி வீட்டிலும் வேலைக்குச் சென்று வீட்டிற்கு வந்த தன் கணவனுக்கு உணவு எடுத்து வைக்கிறாள், அப்போது தன் கணவனிடம் கேட்கிறாள். “ஏனுங்க.. மண்டபத்தில் என் மீது இரக்கம் கொண்டு தானே திருமணம் செய்தீர்கள்.

அதை கேட்ட கணவன் ஒரு மென்மையான சிரிப்புடன் ஒரு பிடி சோறு எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டு சொல்கிறான்.

“அப்படி இல்லை தங்கமே.. என் வீட்டிலும் பெண்கள் இருக்கின்றனர்” என்று ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் கூறினான்.

D-X சொன்னது…

வெற்றி பெற்றால் 'புரட்சியாளர்', தோல்வி அடைந்தால் 'முயற்சியாளர்.. விஜய் ஆட்சியை பிடிப்பார்.. அல்லது படுதோல்வி அடைவார்.. முதல்வர் ஆவார்.. அல்லது எம்.எல்.ஏ கூட ஆகமாட்டார்.. வெற்றி பெற்றுவிட்டால் அவரை 15 வருடங்களுக்கு அசைக்க முடியாது.. தோல்வி அடைந்தால் 2031 வரை பொறுமை காக்க மாட்டார்.. மீண்டும் சினிமாவுக்கு சென்றுவிடுவார்.. அல்லது வெளிநாட்டில் செட்டிலாகிவிடுவார்.. .. சமூக வலைத்தளங்களில் பரவும் வேகமான தகவல்..!

தமிழக அரசியல் வரலாற்றில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொடக்கம் என்பது ஒரு மிகப்பெரிய சூதாட்டமாகவே பார்க்கப்படுகிறது. அவர் முதல்வர் நாற்காலியை பிடிப்பார் அல்லது ஒரு சட்டமன்ற உறுப்பினராக கூட ஆக முடியாமல் படுதோல்வி அடைவார் என இருவேறு துருவ கருத்துக்கள் சமூக வலைதளங்களில் புயலென பரவி வருகின்றன. விஜய்யை பொறுத்தவரை, இது வெறும் அரசியல் பிரவேசம் மட்டுமல்ல; தனது 30 ஆண்டுகாலத் திரை சாம்ராஜ்யத்தையும், ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானத்தையும் பணயம் வைத்து அவர் இறங்கியுள்ள ஒரு ‘செய் அல்லது செத்து மடி’ யுத்தமாகும்.

விஜய் 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிவிட்டால், அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு தமிழக அரசியலில் அவரை அசைக்கவே முடியாது என்ற ஒரு வாதம் வலுவாக உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவராக அவர் உருவெடுப்பார் என்றும், அவரது வருகை திராவிட கட்சிகளின் அரை நூற்றாண்டுகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர். ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டால், அவர் முன்மொழியும் ‘மதச்சார்பற்ற சமூக நீதி’ மற்றும் புதிய நிர்வாக முறைகள் தமிழகத்தின் முகவரியையே மாற்றியமைக்கும் என்பது அவர்களின் கனவாக உள்ளது.

மறுபுறம், ஒருவேளை 2026 தேர்தலில் விஜய் படுதோல்வியை சந்தித்தால் என்ன நடக்கும் என்ற விவாதமும் காரசாரமாக நடைபெற்று வருகிறது. அவர் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை என்றால், அல்லது அவரே ஒரு தொகுதியில் தோற்றுப்போகும் நிலை ஏற்பட்டால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். விஜயகாந்த் போன்ற ஆளுமைகளே ஒரு கட்டத்தில் சறுக்கலை சந்தித்த போது, சினிமாப் புகழை மட்டுமே நம்பி வரும் விஜய், அந்த தோல்வியை தாங்கிக்கொள்வாரா என்ற ஐயம் பலருக்கு உண்டு. தோல்விக்கு பிறகு ஒரு எதிர்க்கட்சி தலைவராகவோ அல்லது சாதாரண அரசியல்வாதியாகவோ நீண்ட காலம் அவரால் களத்தில் இருக்க முடியாது என்பதே விமர்சகர்களின் கணிப்பு.

சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், விஜய் தோல்வியைச் சந்தித்தால் 2031-ஆம் ஆண்டு தேர்தல் வரை அவர் பொறுமையாக காத்திருக்க மாட்டார் என்பதுதான். அரசியலில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், அவர் மீண்டும் தனது பழைய இடமான திரையுலகிற்கே சென்று விடுவார் என்று கூறப்படுகிறது. சினிமாவுக்காக அவர் கதவுகளை திறந்து வைத்திருப்பதும், ‘தளபதி 69’ படத்திற்கு பிறகும் அவர் நடிக்கக்கூடும் என்ற வதந்திகளும் இந்த வாதத்திற்கு வலு சேர்க்கின்றன. அரசியலில் தோல்வி அடைந்த ஒரு பிம்பத்தோடு மக்களிடையே இருக்க அவர் விரும்பமாட்டார் என்பதே பலரது எண்ணம்.

இன்னும் சில தீவிரமான வதந்திகள், தோல்வி ஏற்பட்டால் விஜய் ஒட்டுமொத்தமாக அரசியலை விட்டும், இந்தியாவை விட்டும் வெளியேறி வெளிநாடுகளில் செட்டிலாகிவிடுவார் என்று கூறுகின்றன. அவரது குடும்பத்தினர் மற்றும் முதலீடுகள் சில வெளிநாடுகளில் இருப்பதால், அங்கேயே அமைதியான வாழ்க்கையை தொடர அவர் முடிவெடுக்கக்கூடும் என்ற ஊகங்கள் உலவுகின்றன. ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்துவிட்டு, அரசியலில் அவமானத்தையோ அல்லது தொடர் தோல்விகளையோ சந்திக்க அவர் தயங்குவார் என்பதே இத்தகைய தகவல்களுக்கு பின்னணியாக உள்ளது.

எது எப்படியோ, 2026 சட்டமன்ற தேர்தல் என்பது விஜய்க்கு ஒரு ‘அக்னி பரீட்சை’. அவர் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக அரியாசனத்தில் அமருவாரா அல்லது தனது அரசியல் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு மீண்டும் கேமரா முன்னால் திரும்புவாரா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும். வெற்றி பெற்றால் அவர் ஒரு ‘புரட்சியாளர்’, தோல்வி அடைந்தால் அவர் ஒரு ‘முயற்சியாளர்’ மட்டுமே. தமிழக மக்களின் தீர்ப்பு விஜய்யின் வாழ்க்கைப் பாதையை மட்டுமல்ல, அவரது இருப்பிடத்தையே மாற்றியமைக்கக் கூடிய வல்லமை கொண்டது.

STORY TALKS - போட்டியும் பகட்டும் நிறைந்த மக்கள் !

  பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...