ஒரு பொய்யாவது
சொல் கண்ணே
உன் காதல்
நான் தான் என்று
அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில்
உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா
என் நெஞ்சம் ?
பெண்மையும்
மென்மையும்
பக்கம் பக்கம்தான்
ரொம்பப
பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும்
வேறுதான்
பாலுக்கும்
கள்ளுக்கும்
வண்ணம்
ஒன்றுதான்
பார்க்கும் கண்கள்
ஒன்றுதான்
உண்டால்
ரெண்டும் வேறுதான்
இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல்
செய்தாரோ ?
நிலவின் ஒளி திரட்டி
கண்கள் செய்தாரோ ?
விண்மீன் விண்மீன்
கொண்டு
விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள்
கொண்டு
கைரேகை செய்தானோ ?
வாடைக் காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டு தங்கம் தங்கம்
பூசித் தோள் செய்தானோ ?
ஆனால் பெண்ணே
உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ !
காதல் கண்ணே
உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ !
நிலவினை எனக்கு
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள்
சொன்னதும் நீதானே !
காற்று பூமி வானம்
காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் ? யார் ?
என் அன்பே நீதானே
கங்கை கங்கை
ஆற்றை
கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றை
கண்ணில்
கையில் தந்தவன் நீதானே
ஆனால் பெண்ணே
நெஞ்சை மட்டும்
மூடி வைத்தாயே
காதல் கண்ணே
நெஞ்சை மட்டும்
மூடி வைத்தாயே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக