வெள்ளி, 24 அக்டோபர், 2025

GENERAL TALKS - சரியான கட்டமைப்பு இருக்கும் இடத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும் !




நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கருத்து. நம்பிக்கை இல்லையென்றால், நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மீதோ, நாம் எடுக்கக்கூடிய செயல்கள் மீதோ, நாம் கட்டுப்படுத்தக்கூடிய இடம் மீதோ அல்லது விஷயங்கள் மீதோ நம்பிக்கை இருக்காது. தோல்வி நிச்சயமாக நம்மை முந்திவிடும். 

ஆனால் நாம் நமது நம்பிக்கையை சரியான இடத்தில் வைக்காமல், தவறான இடத்தில் வைத்தால் கூட தோல்விகள் உருவாகும். நாம் ஒரு இடத்தில் நம்பிக்கை வைக்கும்போது, ​​அந்த இடம் நம்பிக்கையின் அடிப்படையில் சரியானதா என்று மட்டும் சிந்திக்காமல், அறிவுபூர்வமாக சிந்தித்து, அறிவியலின் அடிப்படையில் இவை சரியாக இருக்குமா என்றும் யோசித்து எதிர்காலத்தைப் பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும். 

இது இப்படித்தான் நடக்கும். இன்று, ஒரு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே நீங்கள் அந்த இடத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்.உதாரணமாக, நமக்கு இருக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சாதி, மதம் போன்ற அனைத்துப் பிரிவுகளையும் நீங்கள் தூக்கி எறிந்தால், உங்களுக்குள் உண்மையிலேயே மனிதநேயப் பிணைப்பு உருவாகும். இந்தப் பிணைப்பு படிப்படியாக உங்களை ஒரு சரியான நிறுவனமாக மாற்றும். யாருக்குத் தெரியும்? எல்லா மக்களும் ஒன்று கூடி, தாங்கள் அனைவரும் ஒரே மனிதநேயத்தால் பிணைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தால், அது நடந்தாலும் கூட, அது நடக்கலாம்.

மக்களுடைய பிரச்சினைகள் கடைசி வரையில் சரி செய்யப்படாமல் பிரிவினையில் இருக்கக்கூடிய மக்களை கடைசி வரையிலும் பிரிவினையில் இருப்பவர்கள் ஆகவே வைத்துவிட்டு இவர்களின் இந்த அமைப்பின் மூலமாக பணம் சம்பாதிக்கக் கூடிய அரசியல் ஆட்களுக்கும், வியாபாரிகளுக்கும் எப்பொழுதுமே.இந்த விஷயங்கள் கொண்டாட்டங்களாகத்தான் இருந்திருக்கின்றன. 

சமீபத்தில் யூஐ என்ற இயக்குனர் உபேந்திர அவர்களுடைய கன்னட திரைப்படம் கூட இந்த விஷயத்தைப் பற்றி மிக சிறப்பான கருத்துக் கண்ணோட்டத்தை மக்களுக்கு கொடுத்து இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

CINEMA REVIEW TAMIL - PIRATES OF THE CARIBBEAN 3 - AT WORLDS END - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

POTC : DEAD MAN'S CHEST - பாகத்தின் இறுதியில் ஜாக் ஸ்பேரோ கிராகனால் விழுங்கப்பட்ட பிறகு, வில் டர்னர், எலிசபெத் ஸ்வான் மற்றும் மீண்டும் உ...