பிரஷர் குக்கர்ல அரிசியை போடாமல் வெறும் தண்ணீரை கொதிக்க வைத்துவிட்டு இந்த குக்கர் எனக்கு சோறு போட தகுதியற்றது என்று சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஒரு இடத்துக்கு தேவையான விஷயம் அது பணமாக இருக்கலாம் , பொருளாக இருக்கலாம் வேறு எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் அந்த இடத்துக்கு அந்த பெர்ஸனுக்கு அது தேவையான விஷயம் அது கிடைக்கவில்லை என்றால் அவன் கஷ்டப்படுவான் அல்லது அந்த இடம் முன்னேறாமல் இருக்கும் என்று தெரிந்தும் தொடர்ந்து அவனை கஷ்டப்படுத்துவது அல்லது அந்த இடத்தை மட்டமான இடமாகவே வைத்து இருப்பது பிரயோஜனமான மூடத்தனமான செயல். இந்த உலகத்திலேயே நம்ம ஆட்கள் மட்டும்தான் இந்த மாதிரி முடிவு எடுப்பதில் ரொம்ப கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இடது கையில் அடிபட்டால் மருந்து போடுங்கள் என்று சொல்ல கூடாது. அப்படி சொன்னால் நாம் சொல்லி செய்ய வேண்டுமே என்ற ஒரே காரணத்துக்காக வலது கைக்கு மருந்து போடுவார்கள். இங்கே அடுத்தவர்களை மாற்றவே முடியாது. தான் செய்யும் எல்லா விஷயங்களுமே சரியானது என்று எண்ணம் வைத்து இவர்கள் செயல்படுவார்கள். அந்த நேரத்துக்கு அது சரியானதாக இருந்தாலும் அடுத்த இருபது வருடம் போனாலும் போர்ஷன்களை அப்டேட் பண்ணாமல் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதைத்தான் பண்ணுவார்கள். பாம்புகளை பற்றி கவலைப்படாமல் எச்சரிக்கை கொடுத்தாலும் உதாசீனம் செய்து நம்மை தாழ்வாக பேசிவிட்டு (திட்டிவிட்டு) பின்னால் பாம்புகளின் வாய்க்குள் சந்தோஷமாக சமாதி அடைவார்களே தவிர்த்து காப்பாற்ற கொடுத்த கைகளை தேள் கொடுக்குகளாக கொத்திக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் ரொம்ப ஆபத்தான ஆட்கள். இவர்களை நம்ப முடியாது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16
நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
வாடா வாடா வெள்ளை பூவே கொண்டு போடா வெள்ளி தீவே ! தெரிக்கும் தேன்மலை சிரிக்கும் கண்களின் மீது தாக்குதே ஏதோ ஏதோ ஏதோ ஆனேன் வாடா வாடா செல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக