Friday, December 22, 2023

CINEMA TALKS - POWER PANDI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 


சென்னையில் அவருடைய குடும்பத்தோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார் ஓய்வு பெற்ற சினிமா சண்டைப்பயிற்சி நிபுணர் பவர் பாண்டியன்  , ஒரு கட்டத்தில் அவரை சுற்றி நடக்கும் அநியாயங்களை நேரடியாக தட்டிக்கேட்க சண்டைபோட்டபொது அது பெரிய தகராறு என்று மாறுகிறது. இந்த விஷயம் காவல்துறை வரைக்குமே செல்லவே அவருடைய மகன் அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசவில்லை. இந்த விஷயங்களை எல்லாம் யோசித்துக்கொண்டு இருந்த பாண்டியன் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து வெளியே சென்றுவிடுகிறார். அவருடைய இளம் வயதில் காதலித்த பூந்தென்றலின் நினைவு வரவே சோசியல் மீடியாக்களின் மூலமாக பூந்தென்றலை கண்டுபிடித்து அவரோடு பேசிக்கொண்டு நேரத்தை செலவு செய்துகொண்டு இருக்கிறார். இந்த படம் ஒரு கியூட்டான ஸ்லைஸ் ஆஃப் லைஃப் ரொமான்டிக் டிராமா ! ராஜ்கிரண் மற்றும் ரேவதி அவர்களுடைய கதாப்பத்திரங்களை மிகவும் சிறப்பாக செய்துகொடுத்து இருக்கிறார்கள். நம்ம தமிழ் சினிமாவுக்கே உரிய அந்த மிக்ஸ் ஆஃப் ஜேனர்ஸ் கான்ஸெப்ட் இந்த படத்தின் திரைக்கதைக்கு கண்டிப்பாக ஹெல்ப் பண்ணி இருக்கிறது என்றே சொல்லலாம் , சப்போர்டிங் ஆக்டர்ஸ் , இசை மற்றும் பாடல்கள் , கோரியோகிராபி என்று எல்லா விஷயங்களுமே எதார்த்தமான இந்த படத்தின் கதையை நன்றாகவே மேம்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். இந்த படம் ஃப்யூச்சர்ரில் வெளிவந்த தொண்ணூற்று ஆறு திரைப்படத்துக்கு இன்ஸ்பிரேஷன்னா என்று கேட்டால் அதுதான் இல்லை. இந்த படம் தனித்து ஒரு நல்ல ஃபேமிலியோடு பார்க்கும் படமாக வெற்றி அடைந்து இருக்கிறது. இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு கண்டிப்பாக உங்களுக்கு பெரிய தாங்க்ஸ் !

2 comments:

Anonymous said...

ஹீரோனு சொல்லி டம்மி பண்ணிட்டார்; இது கசப்பான அனுபவம்: டி.ஆர் பற்றி மனம் திறந்த சிவகுமார்!
டி.ஆர் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும், சில சமயம் அவரது முடிவுகள் மற்றவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருப்பதாக சிவகுமார் கூறுகிறார்.
ஒரு கலைஞர் தனது ஆரம்பகால வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கசப்பான அனுபவங்களும் கூட ஒரு வகையில் அவருக்கு பாடமாக அமைந்து, அவரை மெருகேற்றுகின்றன. அப்படி ஒரு அனுபவம் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் டி. ராஜேந்திரன் (டி.ஆர்) உடனான அனுபவத்தை நடிகர் சிவகுமார் பகிர்ந்துள்ளார்.
டி.ஆர் ஒரு பெரிய மேதை என்றும்கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்குப் பிறகு, ஒரு ஸ்கிரிப்ட் பேப்பர் கூட இல்லாமல் ஒரு முழு திரைப்படத்தையும் இயக்கும் திறமை டி.ஆரிடம் இருந்தது என்பதையும் அவர் கூறுகிறார். அவரது திறமையை குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும், சில சமயம் அவரது முடிவுகள் மற்றவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கின்றன.

Anonymous said...

டி.ஆரின் ஒரு படத்தில் நடிக்க சிவகுமார் ஒப்புக்கொண்டபோது, "நீங்கள்தான் ஹீரோ" என்று அவரிடம் உறுதிமொழி அளித்திருக்கிறார் டி.ஆர். ஆனால், படம் முடிவடையும் தருவாயில், டி.ஆரின் மகன் சிம்புவின் வளர்ச்சி காரணமாக, கதை மாற்றப்பட்டு, முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்கிரிப்ட் கையிலிருக்காததால், டி.ஆர் தனது மகனின் கதாபாத்திரத்தை மேம்படுத்தி, தனது கதாபாத்திரத்தை "டம்மி" ஆக்கிவிட்டார். மேலும், ஹீரோவாக நடித்தவர் இடைவேளைக்குப் பிறகுதான் வருவது போல கதை மாற்றப்பட்டிருக்கிறது. இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. "உங்களை ஹீரோன்னு சொல்லிப் போட்டு வேற ஒருவர் வராரு சார்" என்று ஒரு ரசிகர் அழுதிருக்கிறார்.

மேற்கண்ட கசப்பான அனுபவங்கள் இருந்தாலும், டி.ஆர் ஒரு பெரிய மேதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் கதை வசனம் எழுதுவார், டைரக்ட் பண்ணுவார், மியூசிக் போடுவார், நடிப்பார். இது அனைத்தும் தனிப்பட்ட முயற்சியில் நிகழ்த்தப்படும் திறமைகள்.

இந்த பன்முகத் திறமைகள் அவரை தனித்துவமான ஒரு கலைஞராக இன்றும் நிலைநிறுத்தி வருகின்றன. ஒரு கலைஞரின் பயணத்தில், இதுபோன்ற சவால்களும், மாற்றங்களும் தவிர்க்க முடியாதவை என்றும் சிவகுமார் கூறினார்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...