புதன், 13 டிசம்பர், 2023

CINEMA TALKS - SALIM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


விஜய் ஆண்டனி அவர்கள் நடித்து வெளிவந்த 2012 இன் "நான்" என்ற திரைப்படத்துக்கு அடுத்த பாகம் அல்லது இங்கே எப்போதுமே தவறுகள் நடக்கும்போது கேள்விகள் கேட்பதற்கும் நேரடியாக குற்றங்களை எதிர்த்து சண்டை போடுவதற்க்கும் வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும். இங்கே மனிதர்களுடைய கோபம் அதிகமாகும்போது சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ளும் கட்டாயம் உருவாகிறது என்பதுதான் சலீம் திரைப்படத்தின் கதைக்களம். ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்துக்கொண்டு இருக்கும் டாக்டர் சலீம் அங்கே நிர்வாகத்தால் பணம் வசதி இல்லாத நோயாளிகளுக்கு அதிகமான பண செலவை உருவாக்கி ஹாஸ்பிடல்லை முன்னேற்றவேண்டும் என்றும் இல்லை என்றால் வேலை போய்விடும் என்றும் கட்டாயப்படுத்தப்படுகிறார். இருந்தாலும் சலீம் நேரமையாக வேலை செய்து பணம் இல்லாதவர்களுக்கும் உதவிய காரணத்தால் அவருடைய வேலை போகிறது. அவருடைய திருமண நிச்சயதார்த்தமும் நின்றுபோகிறது வாழ்க்கையை வெறுத்த சலீம் அவரால் மருத்துவமனையில் அட்மிட் பண்ணப்பட்ட இளம்பெண் மற்றும் அவருடைய குடும்பம் அரசியல் பலம் உள்ள ஒரு குடும்பத்தின் பையங்களால் கொலைசெய்யப்பட்டுவிட்டனர் என்று தெரிந்ததும் அவருடைய உயிரை பணயம் வைத்தாவது அந்த கொலைகார இளைஞர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி களத்தில் இறங்குகிறார். அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் இந்த சலீம் படத்தின் கதை. இந்த படம் நமது சினிமாவில் வெளிவந்த ஒரு பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் ரிவேன்ஜ் டிராமா படம். ஒரு முறை கண்டிப்பாக பாருங்கள். 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நேரம் : காலை 10:56 மணி

காவலாளி : வா... இன்ஸ்பெக்டர் அய்யா கூப்புட்றாரு....
வாயா.... வா எந்திரி

பிச்சைக்காரன் : என்னையா....?
என்ன விஷயமா சார் ??

காவலாளி : சும்மா அய்யாவ பாக்கத்தான் வா....
அய்யா இவன் தான் யா அவன் .

இன்ஸ்பெக்டர் : வண்டில ஏத்து இவன .

பிச்சைக்காரன் : அய்யா அய்யா என்ன காரணம்..??

இன்ஸ்பெக்டர் : பிச்சக்காரனுக்கெல்லாம் காரணம் சொல்லணுமாடா ( பளார் என அறைகிறார் )

பிச்சைக்காரன் கீழே விழுகிறான்...
பிச்சை எடுத்த காசுகள் சிதறுகிறது .

நேரம் : 10:58 மணி

இன்ஸ்பெக்டர் : எழுந்திரு டா !!

பிச்சைக்காரன் : ஒரு நிமிஷம் சார்....
ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் !!!

(பிச்சைக்காரன் , மணி பார்க்க இன்ஸ்பெக்டர் கைய பிடிக்கிறான் )

இன்ஸ்பெக்டர் : பிச்சைக்காரன் நீ ,என்ன தொட்டு பேசுறியா டா !! (எட்டி மிதிக்கிறார் ) எழுந்திரு டா!!

பிச்சைக்காரன் : சார் சார் !! நான் பிச்சை எடுக்குற காசுல என் செலவு போக மிச்ச காச கோயில் உண்டியல போடணும் சார்,
அதுக்கு தான் சார்
டைம் பாக்க தான் சார் உங்க கைய புடிச்சேன்...
மன்னிச்சிடுங்க சார் !!
ப்ளீஸ் சார்.... காசு போடணும் சார் !!

இன்ஸ்பெக்டர், பிச்சைக்காரனை தர தரவென இழுத்து கோயில் வாசலில் தள்ளுகிறார்..
பிச்சைக்காரனும் காசுகளை உண்டியலில் போட துவங்குகிறான்.

தான் பிச்சை எடுத்த கடைசி ஒரு ரூபாய் நாணயத்தை உண்டியலில் போடுகிறான் ….

நேரம் சரியாக 11:00 மணி !!

உயர் ரக கார்கள் ஒவ்வொன்றாக அணிவகுக்கின்றது .

காரில் இருந்து ஆவேசமாக இறங்கியவர்,பிச்சைக்காரனை தர தரவென இழுத்து வரும் இன்ஸ்பெக்டரை பார்த்து ….

" கைய எடுங்க சார் !! Do You Know Who he is ?????

இன்ஸ்பெக்டர் : (பம்பிய குரலில் )சார் ,நீங்க ????

அடுத்து வரும் இரண்டு நிமிட காட்சி மெய்சிலிரிக்க வைக்கும் .கதாநாயகன் யார் ?? அவரின் பின்புலம் என்ன என்பது படத்தை பார்க்கும் நமக்கு தெரிந்தாலும்,காட்சியில் இடம் இருக்கும் கதாபாத்திரங்கள் அனைவருக்கும் ஆச்சர்யம் ,அதிர்ச்சியில் உறைந்திருப்பர் .குறிப்பாக அந்த இன்ஸ்பெக்டருக்கு வியர்த்து கொட்டும் .

பஞ்ச் வசனங்கள் இல்லை ,பத்து அடியாட்களை பறக்க விடும் சாகசம் இல்லை ,படத்தின் கதாநாயகனும் அஜித் ,விஜய்,ரஜினி போல் மாஸ் இமேஜ் இல்லாத சாதாரண நடிகர். ஆனாலும் இந்த காட்சியை பார்க்கும் பொழுது மெய்சிலிர்க்கும் ,அது தான் இயக்குனர் சசியின் வெற்றி .

காட்சியின் இறுதி :

இன்ஸ்பெக்டர் : சார் வெரி சாரி சார் நீங்க யாருனு தெரியாம (பிச்சைக்காரனாக நடித்த பணக்காரனின் கையை பிடித்து ) மன்னிச்சிடுங்க சார் !!

பணக்காரன் :நா இத்தன நாள் வரைக்கும் பிச்சைக்காரனா இருந்திருக்கேன் ,ஆனா அத பத்தி ஒரு நிமிஷம் கூட கேவலமா நெனச்சது இல்ல ,ஆனா ,இப்போ ,இந்த நிமிஷம் ஒரு பணக்காரனா இருக்கிறதுக்கு அருவெறுப்பா இருக்குது .

மிகவும் கருத்தாழமிக்க வசனம் .

பிச்சைக்காரன் !!b@MASS ENTRY QUEEN

LIFE TALKS - நமது பாரம்பரிய உணவுகளை விட்டுக்கொடுக்கிறோம் !

  இன்றைய அவசர உலகத்தில், மனிதர்கள் தங்களின் தனித்துவமான உணவுப் பாரம்பரியத்தை மிக எளிதாக மறந்து, மேற்கத்திய மற்றும் "நவீன" கலாச்சார...