ஞாயிறு, 3 நவம்பர், 2024

MUSIC TALKS - MALAI ORAM VEESUM KAATRU MANASODU PAADUM PAATU KEKKUDHAA KEKKUDHAA ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 




மலையோரம் வீசும் காத்து 
மனசோடு பாடும் பாட்டு 
கேட்குதா கேட்குதா
ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா
மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா

வான் பறந்த தேன்சிட்டு 
நான் புடிக்க வாராதா 
கள்ளிருக்கும் ரோசாப்பூ 
கைகலக்க கூடாதா 
ராப்பொழுது ஆனால் உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாதா ஆணா
உள் மூச்சு வாங்கினேனே
முள்மீது தூங்கினேனே 
இல்லாத பாரம் எல்லாம் 
நெஞ்சோடு தாங்கினேனே 
நிலாவை நாளும் தேடும் 
வானம் நான்

குத்தாலத்து தேனருவி 
சித்தாடைதான் கட்டாதா 
சித்தாடைய கட்டி எழ 
கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாண 
பூங்காத்தோடு ஆட 
ஆவாரம் பூவில் 
அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து 
என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம்
இந்த ஜீவன் தான்


கருத்துகள் இல்லை:

TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !

 நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல்...