ஞாயிறு, 3 நவம்பர், 2024

MUSIC TALKS - UN PAARVAIYIL ORE AAYIRAM KAVIDHAI NAAN ELUDHUVEN KAATRIL NAANE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



உன் பார்வையில் ஒர் ஆயிரம்
உன் பார்வையில் ஒர் ஆயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

அசைத்து இசைத்தது வளை கரம்தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து இருந்து பறந்து தினம் மகிழ
உன் பார்வையில் ஒர் ஆயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஒர் ஆயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அணைத்து நனைந்தது தலையணைதான் 
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான் 
இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் 
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அக சிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

உன் பார்வையில் ஒர் ஆயிரம்
உன் பார்வையில் ஒர் ஆயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஒர் ஆயிரம்
உன் பார்வையில் ஒர் ஆயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே


கருத்துகள் இல்லை:

TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !

 நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல்...