என் வாழ்க்கையில் பலருக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடாது. அது அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் பாதுகாப்பற்றதாக உணரும்போதுதான். இந்தப் பிரச்சனை குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் பிரச்சனையால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக இளம் வயதில், பெற்றோர்களும் ஆசிரியர்களும் இரு இடங்களிலும் அவர்களை வெறுக்கத் தொடங்கும் போது, அவர்களின் வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மை மற்றும் பதட்டம் படிப்படியாக அதிகரிக்கும். இது போன்ற வெறுப்புடன் வளரும் ஆண்கள், மிகவும் கோபமாகவும், சிந்திக்காமல் முடிவுகளை எடுக்கும் ஆளுமைகளாகவும் மாறுகிறார்கள்.
கல்லூரிக்குப் பிறகு, வேலைக்குச் சென்று, பணம் சம்பாதித்து, குடும்பம் நடத்தும்போது, ஒரு வாழ்க்கை என்றால் எப்போதுமே தவறுகளைச் செய்து அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆண்கள் தங்களின் வாழ்க்கையின் வழியாக மாற்றுகிறார்கள்.
ஆண்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டால் மட்டுமே தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும் என்ற யோசனை சூழ்நிலையை அனுபவிக்கிறார்கள். இதற்குக் காரணம், ஆண்கள் தங்கள் இளமைப் பருவத்தில் அதிகம் நேசிக்கப்படுவதில்லை. அதாவது, அவர்களின் வளர்ச்சி என்று பார்க்கும்பொது அன்பு மட்டும் அல்ல மரியாதையும் எப்போதும் ஆண்களுக்கு மிகவும் முக்கியம்.
நீங்கள் ஒரு இளம் பையனை எடுத்துக்கொள்ளலாம். அந்த பையனுக்கு அன்பு மட்டும் போதும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில், ஒரு ஆணாக அந்த பையனுக்கு மரியாதை எப்போதும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மரியாதை என்பது அந்த இளம் மனதிலிருந்து எதிர்பார்க்கப்படாத ஒன்று என்று நீங்கள் நினைக்கலாம் !. ஆனால் உண்மையில், ஆண்கள் தங்கள் இளமைப் பருவத்திலிருந்தே மரியாதையை எதிர்பார்க்கிறார்கள். சமூகத்தில் மதிக்கப்படுவது என்பது அவர்களின் மரபியலில் பதிந்துள்ள ஒரு கருத்தாகும்.
எனவே, நமது அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டிய விஷயங்கள்: பள்ளிக்கும் கல்லூரிக்கும் இடையிலான இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆண்களுக்கு எப்போது மரியாதை மற்றும் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்றும் ஆண்களை சிறப்பு கவனத்துடன் நடத்த வேண்டும் என்பதுதான் !
1 கருத்து:
பணக்காரன் பணக்காரனாகவும், ஏழை ஏழையாகவும் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? உங்களுக்கு மூன்று மாதத்திற்குள் தீர்க்க வேண்டிய ஒரு லட்சம் கடன் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்; அதே நேரத்தில் லாட்டரியில் அதிர்ஷ்டமாக பதினைந்து லட்சம் கிடைத்துவிட்டது எனக் கொள்ளலாம்.
மத்திய வர்க்கத்தவர் அந்த பதினைந்து லட்சத்தில் ஒரு லட்சத்தை உடனே எடுத்து கடனைத் தீர்த்துவிடுவார்;
பணக்கார வர்க்கத்தில் இருப்பவரோ கடன் கொடுத்தவரிடம் கெஞ்சி ஒரு வருட கால அவகாசம் வாங்கி, நம்பிக்கைக்காக பத்தாயிரம் மட்டும் கொடுத்து, கிடைத்த பதினைந்து லட்சத்தையும் ஒரு வருட பிக்ஸட் டெபாஸிட்டாக ஆக போடுவார்; வருடத்துக்கு பிறகு கிடைக்கும் வட்டியில் இருந்து தொண்ணூறாயிரம் எடுத்து கடனை முடித்துவிடுவான், அப்புறம் அவனிடம் முழு பதினைந்து லட்சமும் அப்படியே இருக்கும்.
பெரும் செல்வந்தராக இருந்தால் அந்த பதினைந்து லட்சத்தை நல்ல தொழிலில் முதலீடு செய்யும் நோக்கத்தில் காவல்துறையில் கடன் தொல்லை என்று புகார் கொடுத்து, முடிந்தால் கணிசமான தொகை கொடுத்து, அந்த ஒரு லட்ச பிரச்சனையைத் தலையிலிருந்து தள்ளி வைப்பார்.
ஏழை என்ன செய்வான்? அவன் பதினைந்து லட்சம் கிடைத்த அதிர்ச்சியிலேயே ஹார்ட் அட்டாக் வந்து செத்துப்போவான்; அதன் பிறகு பதினைந்து பேரு வந்து “நீங்க எனக்கு ஒரு லட்சம் தரணும்” என்று சொல்லி முழு பணத்தையும் ஆட்டய போட்டுவிடுவார்கள்.
இதிலிருந்து புரிகிறதா மக்களே பணக்காரர், ஏழை என்பவை வெறும் பொருளாதார நிலைமைகள் மட்டும் இல்லையே; அது ஒரு மனோபாவம் தான், அது எகனாமி ஸ்டேட் இல்லை, அது ஒரு அணுகுமுறை
இணையத்தில் படித்ததில் பிடித்தது !
கருத்துரையிடுக