‘அரண்மனை கிளி’ திரைப்படத்தின் தொடக்கக் காரணம் இளையராஜா. இளையராஜா ஏழு பாடல்களை இசையமைத்து கொடுக்க, அந்தப் பாடல்களை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் ராஜ்கிரண் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அதே வெற்றியைத் தொடர்ந்து அவர் நடித்து, இயக்கி, தயாரித்த படம் தான் ‘அரண்மனை கிளி’. இந்த படம் 1993-ல் வெளியானது. தமிழில் பெரும் வெற்றி பெற்றதால், பின்னர் கன்னடத்தில் ‘நீலகண்டா’ என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. அங்கு ராஜ்கிரண் நடித்த கதாபாத்திரத்தை நீலகண்டன் ஏற்றார். இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், இளையராஜா இந்த ஏழு பாடல்களையும் வெறும் இரண்டு மணி நேரத்தில் கம்போஸ் செய்து முடித்தாராம். இந்த படத்துக்கு அவர் இசையமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தவர்கள் இயக்குநர்கள் ராஜ்கிரண் மற்றும் மாரிமுத்து. இறுதியில் அவர்களின் விருப்பம் நிறைவேறியது. அடி பூங்குயிலே, அம்மன் கோயில், ராசாவே உன்னை விடமாட்டேன், ராத்திரியில் பாடும், வான்மதியே, என் தாயெனும் கோயிலே போன்ற பாடல்கள் அனைத்தும் அந்நாளில் சூப்பர் ஹிட் ஆனது. இளையராஜாவின் இசை படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இந்த படத்தில், குஷ்புவின் தோற்றத்தை ஒத்த அஹானா கதாநாயகியாக அறிமுகமானார். அன்றைய காலத்தில் குஷ்புவுக்கு பின்னணி குரல் கொடுத்த அனுராதா, அஹானாவுக்கும் குரல் கொடுத்தார். இதனால் சில பத்திரிகைகள் அவரை “சின்ன குஷ்பு” என்று அழைத்தன. மேலும், வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் சிரிப்பை உண்டாக்கும் வகையில் பிரபலமாக உள்ளன. - நன்றி : மதன் குமார் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?
நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...
-
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
-
ஒரு சிறிய கிராமத்தில், ஒரு மீனவர் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பான். அவன் எப்போதும் கடலை “என் வாழ்வாதாரம்” என்று மதித்தான். ஆனால் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக