சனி, 1 நவம்பர், 2025

GENERAL TALKS - வாழ்க்கை முன்னேற்ற கருத்துக்கள் #3




நிறைய நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் எமோஷனலாக முடிவு எடுப்பதை விடவும் பிராட்டிகளாக முடிவெடுப்பது சிறந்தது என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு சில நேரங்களில் பிராட்டிகலாக இருப்பதை விட எமோஷனலாக இருப்பதே நல்ல விஷயமாக கருதப்படுகிறது. 

நம் வாழ்வில் சிலரை நாம் மாற்ற முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் இறுதியில், அவர்களை மாற்ற முடியாது. சிலரின் மனம் அவர்கள் சேகரித்த தகவல்களால் மட்டுமே நிரம்பியிருக்கும்.

ஒரு கோப்பை தண்ணீர் போல முழுமையாக நிரம்பியதாகக் கூறப்படும் இந்த மக்களை எந்த வகையிலும் மாற்ற முடியாது. 

அவற்றை மாற்ற முயற்சிப்பது வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் மட்டுமே வழிவகுக்கும். வாழ்க்கையில் நாம் பலரைப் பார்க்கிறோம். பலருடன் பேசுகிறோம். இந்த வாழ்க்கை நமக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. 

ஆனால் வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுத்த விஷயங்களை நாம் அடிக்கடி திரும்பிப் பார்த்து, அவற்றை மீண்டும் பகுத்தறிவுடன் விவாதித்து, நம் மனதின் அறிவுத் திறனை அதிகரிக்க முயற்சி செய்திருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டால், இல்லை.

உணர்ச்சிபூர்வமான முடிவுகளை எடுக்கும்போது, ​​நாம் எப்போதும் நமது அறிவையும் உணர்ச்சிகளையும் முடிந்தவரை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நமது உணர்ச்சிகளைப் பயன்படுத்த வேண்டும். உணர்ச்சிகள் நம்மைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

ஒரு சிறப்பான பாடலில் சொல்வது போல மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால்தான் நன்மை. நமக்குள்ளே எவருக்கும் இடம் கொடுக்க முடியாது. இதுதான் உண்மை. 

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 13

  நிறைய நேரங்களில் நம்பிக்கை வைப்பார்கள். தான் வாழ்க்கையை மொத்தமாக உடைத்து வைத்திருக்கிறார்கள். நம்மால் எதுவுமே செய்ய முடிவதில்லை. வாழ்க்கைய...