ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு கோலம் போடும் பாட்டாலே
மயிலு இளமயிலு மாமன் கவிகுயிலு ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
உன்னை எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன் கன்னிப்
பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒத்தையிலே அத்த மகள் ஒன்ன நெனச்சு ரசிச்ச மகள்
கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே
மாமன் உதடுபட்டு நாதம் தரும் குழலு நானா மாறக் கூடாதா ?
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம் கூடும் காலம் வாராதா ?
மாமன் காதில் ஏறாதா ?
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் ! இந்த நேரம் தான் இந்த நேரம் தான்
உன்னை எண்ணி பொட்டு வச்சேன் ஓலப்பாயை போட்டுவச்சேன் இஷ்டப்பட்டா ஆசை மச்சான் என்னை மேலும் ஏங்க வச்சான் !
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக