வெள்ளி, 28 நவம்பர், 2025

THE LIFE BOOK - PAGE 11

 



நமது வாழ்க்கையில் எப்போதுமே நம்முடைய வெற்றி மட்டும்தான் பெரிய வெற்றி என்று கருதக்கூடாது. சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கக்கூடிய 1000 பேரை சொந்த செலவில் லண்டன் வரையில் சுற்றுலா அனுப்புவதைப் பற்றி முடிவு செய்து வைத்திருக்கிறது.

 காரணம் என்னவென்றால் எப்பொழுதுமே மற்றவருடைய உழைப்பு இல்லாமல் நம்முடைய முன்னேற்றம்.அடையாது நமக்காக நம்முடைய உழைப்பை கொடுக்க கூடிய ஒரு நல்ல மனிதர்கள் அமைப்பு நமக்காக வேலை பார்க்கும் சொந்தங்களாக கிடைத்தால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நல்ல விஷயங்களை நடத்த வேண்டும்.

இருந்தாலும் இத்தகைய நல்ல மனிதர்களை சந்திப்பது என்பது மிகவும் கடினமானது. நம்முடைய வாழ்க்கையில் நம்மிடத்தில் நடிக்க கூடியவர்கள் தான் கவனமாக நடிக்கிறார்கள். இதனால் தான் நாம் நிறைய நேரங்களில் ஏமாந்துவிடுகிறோம்

இந்த வகையில ஏமாற்றங்களை நாம் சந்திக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையே மிகவும் கடினமான பாதையாக மாறிவிடுகிறது. நாம் எப்போதுமே தோற்றுப் போன நமது இந்த பதிப்பை நம்முடைய அடையாளமாக நம கருதுகிறோம். அதுவே நமக்கு மிகப் பெரிய பாரமாகவே அமைந்து விடுகிறது.

ஆனால், நம் வாழ்வில் இதுபோன்ற கடினமான விஷயங்களை எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள முடியும். இதைப் பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்த கட்டங்களில் முன்னேறுவதற்குப் பதிலாக, இழந்ததைப் பற்றி வருத்தப்படுவது மிகவும் சங்கடமாக இருக்கிறது.

கடந்த காலம் கடந்த காலம்தான் என்பது வாழ்க்கை முடிவு பண்ண விஷயம் இது முடிந்து போன விஷயம் என்பதால் இனி வருங்காலம் குறித்து நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

எனவே நம்முடைய வாழ்க்கையில சந்தோஷத்தையும் பாசிட்டிவிட்டியையும் ஆப்டிமிஸத்தையும் உருவாக்கிக் கொள்வதுதான் மிகவும் சிறப்பான காரியம். நமக்காக நம் வாழ்க்கை வாழ்ந்து கொடுக்காது நம்முடைய வாழ்க்கைக்காக தான் நாம் மாற வேண்டும் என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது.

2 கருத்துகள்:

நல்லவனுக்கு நல்லவன் சொன்னது…

வாழ்க்கைன்னா சில பல அடிகள் விழத்தான் செய்யும் , நாமதான் சூதானமா பாத்துக்கனும்.

பெயரில்லா சொன்னது…

ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்! #DMK4TN

- பேரறிஞர் அண்ணா.

நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.

விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் பனையூர் பாபு அவர்கள்!

இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.

நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க !

LIFE TALKS - ஒரு இயற்கையான கட்டுப்படுத்தும் முறை ?

  அப்பள சோடா மற்றும் சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) ஆகிய இரண்டின் கலவையானது, எறும்புகளின் உடலமைப்பு மற்றும் ஈரப்பத ஒழுங்குமுறை அமைப்பைக் கு...