என் வாழ்க்கையில் பலருக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடாது. அது அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் பாதுகாப்பற்றதாக உணரும்போதுதான். இந்தப் பிரச்சனை குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் பிரச்சனையால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக இளம் வயதில், பெற்றோர்களும் ஆசிரியர்களும் இரு இடங்களிலும் அவர்களை வெறுக்கத் தொடங்கும் போது, அவர்களின் வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மை மற்றும் பதட்டம் படிப்படியாக அதிகரிக்கும். இது போன்ற வெறுப்புடன் வளரும் ஆண்கள், மிகவும் கோபமாகவும், சிந்திக்காமல் முடிவுகளை எடுக்கும் ஆளுமைகளாகவும் மாறுகிறார்கள்.
கல்லூரிக்குப் பிறகு, வேலைக்குச் சென்று, பணம் சம்பாதித்து, குடும்பம் நடத்தும்போது, ஒரு வாழ்க்கை என்றால் எப்போதுமே தவறுகளைச் செய்து அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆண்கள் தங்களின் வாழ்க்கையின் வழியாக மாற்றுகிறார்கள்.
ஆண்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டால் மட்டுமே தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும் என்ற யோசனை சூழ்நிலையை அனுபவிக்கிறார்கள். இதற்குக் காரணம், ஆண்கள் தங்கள் இளமைப் பருவத்தில் அதிகம் நேசிக்கப்படுவதில்லை. அதாவது, அவர்களின் வளர்ச்சி என்று பார்க்கும்பொது அன்பு மட்டும் அல்ல மரியாதையும் எப்போதும் ஆண்களுக்கு மிகவும் முக்கியம்.
நீங்கள் ஒரு இளம் பையனை எடுத்துக்கொள்ளலாம். அந்த பையனுக்கு அன்பு மட்டும் போதும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில், ஒரு ஆணாக அந்த பையனுக்கு மரியாதை எப்போதும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மரியாதை என்பது அந்த இளம் மனதிலிருந்து எதிர்பார்க்கப்படாத ஒன்று என்று நீங்கள் நினைக்கலாம் !. ஆனால் உண்மையில், ஆண்கள் தங்கள் இளமைப் பருவத்திலிருந்தே மரியாதையை எதிர்பார்க்கிறார்கள். சமூகத்தில் மதிக்கப்படுவது என்பது அவர்களின் மரபியலில் பதிந்துள்ள ஒரு கருத்தாகும்.
எனவே, நமது அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டிய விஷயங்கள்: பள்ளிக்கும் கல்லூரிக்கும் இடையிலான இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆண்களுக்கு எப்போது மரியாதை மற்றும் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்றும் ஆண்களை சிறப்பு கவனத்துடன் நடத்த வேண்டும் என்பதுதான் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக