ஈர நிலா
விழிகளை மூடி
தோள்களில் ஏங்குதே
மார்கழியில்
மலர்களில் வண்டு
போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும்
என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும்
சொந்தம் இன்பம் இன்பம்
ஈர நிலா
விழிகளை மூடி
தோள்களில் ஏங்குதே
நீருக்கு நிறம் ஏது
நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில்
அழுதாலும்
கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை
பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில்
சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ
இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே
போதும் இன்பம் போதும்
ஈர நிலா
விழிகளை மூடி
தோள்களில் ஏங்குதே
தாயான பூமாது
தோள் மீது சாய்ந்திடும் போது
என் நெஞ்சில்
பால் ஊறும்
அன்பு தவிப்பு
தலைமுறை கண்டாலும்
காணாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும்
உன் இன்ப அணைப்பு
சேரும் நதி ரெண்டுதான்
பாதை இனி ஒன்றுதான்
வெள்ளை மழை மண்ணிலே
கூடும் வண்ணம் சூடும்
ஈர நிலா
விழிகளை மூடி
தோள்களில் ஏங்குதே
1 கருத்து:
நல்ல பாட்டு இது , யுவன் சங்கர் பர்ஸ்ட் பாட்டுன்னு நெனக்கறன், மனுஷன் நல்லா கம்போஸ் பண்ணியிருப்பாரு.
கருத்துரையிடுக