திங்கள், 30 டிசம்பர், 2024

ARC-001 - இலக்கண கவிதை எழுதிய அழகே !




ஒரு மனைவி தன் கணவனின் புதிய மொபைலை எடுத்து சோதித்து பார்க்கிறாள்.

அப்பொழுது அதில் மூன்று வித்யாசமான பெயரை பார்க்கிறாள்.
1. கனிவானவள்
2. கண்ணியமானவள்
3. கனவுக்கன்னி.

இதை பார்த்தவுடன் கோபமாக. முதல் நம்பருக்கு போன் செய்கிறாள் அப்போது அந்த எண்ணின் மறுமுனையிலிருந்து அவளது கணவனின் தாயார் பேசுகிறார்.

இரண்டாவது நம்பருக்கு போன் செய்கிறாள். அப்போது அந்த எண்ணின் மறுமுனையிலிருந்து அவளது கணவனின் சகோதரி பேசுகிறாள்.

மூன்றாவது நம்பருக்கு போன் செய்கிறாள் அப்போது அவளது சொந்த போனே ரிங் ஆனது.

அவளுக்கு மிகவும் வருத்தமாகி, இவ்வளவு ஒரு நல்லவரை நாம சந்தேகபட்டு விட்டோமே என்று கண்கள் வீங்கும் அளவுக்கு அழுது தீர்க்கிறாள்.

பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாய் அந்த செயலுக்கு ஈடுகட்ட அவனது முழு சம்பளத்தையும் அவனுக்கே கொடுத்து, "இது என் சிறிய பரிசு உங்களுக்கு, என்ஜாய்" என்று கூறுகிறாள்.

உடனே அந்த கணவன் அந்த பணத்தில் ஒரு அழகான விலை மதிப்புள்ள பரிசை வாங்கி "மெக்கானிக் கடை" என்று மொபைலில் சேவ் செய்து வைத்துள்ள தோழிக்கு(?) பரிசாக கொடுத்தான் !



கருத்துகள் இல்லை:

TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !

 நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல்...