ஞாயிறு, 22 டிசம்பர், 2024

GENERAL TALKS - இங்கே வெற்றிக்கு சரியான கருவிகளும் முக்கியமானது.




இந்த உலகத்தில் வெற்றியடைய சரியான கருவிகள் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் வெட்டிவிட்டு இருந்தார் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார், மற்றொருவருக்கோ இதனை பார்த்து பயங்கரமான ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்! நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று... சிறிதும் ஓய்வு இல்லாமலா ? என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்! நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன் ! மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை , மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான், மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான். ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான். நம்முடைய பலத்தை விட நம்முடைய கருவிகளைதான் மேம்படுத்த வேண்டும். உடல் பலத்தை விட சரியான கருவிகள் இருந்ததால் முன்னேறிய மனிதர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பைக் - ஒரு கார் - ஒருவருக்கு சரியான நேரத்தில் கிடைத்ததால் இதனை சரியான வகையில் பயன்படுத்தி ஜெயித்த நிறைய பேரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள் இல்லையா ? கருவிகள் காஸ்ட்லியாக இருந்தாலும் சரியான மேயின்டனேன்ஸ் இருந்தால் இன்னும் எளிமையாகவே நம்மால் வெற்றி அடைய முடிகிறது. இது மிகவும் முக்கியமான ஒரு வாழ்க்கை பாடம், கஷ்டப்பட்ட யாருமே சொல்லாத ஒரு வாழ்க்கை பாடம். உங்களுடைய வெற்றி உங்களின் பலத்தை பொறுத்தது மட்டுமே அல்ல. உங்களின் கருவிகளையும் பொறுத்தது. 

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...