ஞாயிறு, 22 டிசம்பர், 2024

STORY TALKS - EP.057 - பணம் சம்பாதிப்பவர்களுடைய யோசனை எப்போதும் மாறக்கூடியது.




ஒரு பொருளாதார அடிப்படியான யோசனை என்னைக்குமே உணர்வுகளுக்கு இடம் கொடுத்து முடிவு பண்ணும் விஷயமாக இருக்காது. இந்த வகையில் நான் பார்த்த ஒரு சிறுகதை ! ஒரு அழகான இளம்பெண், “உலக பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது குறித்து இளம்பெண்கூறியதாவது, “என் வயது 25 நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண் மகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்றார். இந்த பதிவை பார்த்த ஒரு பணக்காரர் அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது, “உங்களை போல் பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால், இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே போகும் ஒன்று. மறுபுறம் பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்து கொண்டே போகும் ஒன்று. பொருளாதார பார்வையில் இதனைக் கண்டால், பணம் எனும் ஆண் அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்து கொள்ள மாட்டார். எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதையும் மறந்து விட்டு, நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்” என்றார். இது அடிப்படையில் முகத்துக்கு நேராக சொல்லும் கடினமாக கருத்தாக இருந்தாலும் பொருளாதாரம் இப்படித்தான் வேலை செய்யும். பாக்கெட்டில் பணத்தை சேர்ப்பது என்பது அவ்வளவு இலேசுபட்ட காரியமாக எப்போது இருந்துள்ளது ? இதனால் பணத்தை சம்பாதிக்கும் மக்களோடு பேசும்போது அடக்கமாக பேச வேண்டும். இவர்களுடைய உலகமே உங்களின் உலகத்தில் இருந்து வேறானதாக இருக்கலாம். இந்த விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள். இந்த வலைப்பூவுக்கு சப்போர்ட் பண்ணுங்கள். 

கருத்துகள் இல்லை:

TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !

 நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல்...