மலையில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண் ஞானி ஒரு ஓடையில் ஒரு விலையுயர்ந்த இரத்தின கல்லைக் கண்டாள். அடுத்த நாள் அவள் பசியுடன் இருந்த மற்றொரு பயணியைச் சந்தித்தாள், பெண் தனது ஞானி உணவைப் பகிர்ந்து கொள்ள தனது பையைத் திறந்தாள். பசியுடன் இருந்த பயணி அந்த விலையுயர்ந்த கல்லைப் பார்த்து, அந்தப் பெண்ணிடம் அதைத் தருமாறு கேட்டார். அவள் தயங்காமல் செய்தாள். பயணி தனது அதிர்ஷ்டத்தைக் கண்டு மகிழ்ந்து புறப்பட்டார். அந்த இரத்தின கல் தனக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பளிக்கும் அளவுக்கு மதிப்புடையது என்பதை அவர் அறிந்திருந்தார். அப்போதைய பண நெருக்கடிக்கு அந்த கல்லின் அடமான தொகையை பயன்படுத்தினாலும் இன்னொருவருக்கு சொந்தமான பொருளை இவ்வாறு சுய இலாபத்துக்கு பயன்படுத்துவது மனதுக்கு ஒரு குறையாக படவே அடமானம் வைத்த இரத்தினத்தை சம்பாதித்து மீட்டர். சில மாதங்களுக்குப் பிறகு அவர் அந்த ஞானியிடம் கல்லைத் திருப்பிக் கொடுக்க வந்தார். "இந்த கல் எவ்வளவு மதிப்புமிக்கது என்று எனக்குத் தெரியும், இந்த கல்லை எனக்கு கொடுத்ததுக்கு நன்றி . இருந்தாலும் இப்போது நீங்கள் எனக்கு இன்னும் விலையுயர்ந்த ஒன்றைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் நான் அதைத் திருப்பித் தருகிறேன். அது என்னவென்றால் இந்தக் கல்லை எனக்குக் கொடுக்க உனக்கு என்ன உதவியிருக்கிறதோ அதை எனக்குக் கொடு." என்றாள், இவருக்கு சரியான பதிலை கண்டறிய முடியாமல் யோசனையாக இருக்கவே பார்த்துவிட்டு அந்தப் பெண் சிரித்தாள், "கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி!" என்றாள். சில சமயங்களில் உங்களிடம் உள்ள "செல்வம்" மற்றவர்களுக்கு தேவையான விஷயம் அல்ல. ஆனால், இன்னொருவருக்கு கொடுக்கும் மனப்பான்மை உங்களுக்குள் இருப்பது மற்றவர்களுக்குத் தேவை. வாழ்க்கையில் நீங்கள் கொடுக்கும் பணத்தையோ நேரத்தையோ அல்லது உதவியையோ ஒருவருக்கு அதிகமாக தேவை இருந்தால் மட்டுமே கொடுங்கள். ஒரு பிரபல நடிகர் அவருடைய ஐந்து வருடமாக வேலை பார்க்கும் உதவி திரைத்துறை நண்பருக்கு இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற காரணத்துக்காக சொந்த பணத்தில் சுமார் 3 இலட்சம் ரூபாய் தொகையை கொடுத்து இருக்கிறார். இவரோ பணத்தை வாங்கி செலவு செய்துவிட்டு ஒரு வார்த்தை பேசவில்லை. இந்த நடிகரின் நண்பரிடம் இந்த நடிகர் இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கோள்ள வேண்டும் , வேலைக்கு செல்ல வேண்டும் என்று காரணங்களை சொல்லி போலியாக நடித்து நண்பருக்கு சொந்தமான பைக்கை தன்னகப்படுத்திக்கொள்ள நினைத்தார் இந்த ஆசாமி. பிரபல நடிகரே ஃபோன் செய்து கேட்கும்போது 'ஒரு புது பைக்' வாங்கி கொடுத்துவிட்டு உன்னுடைய நண்பரின் பைக்கை எடுத்துக்கொண்டு போ என்று திமிராக பதில் சொல்லவே நடிகருக்கு எதுக்காக இவருக்கு சப்போர்ட் பண்ணினோம் என்று கவலையாக போய்விட்டது. பின்னாட்களில் பேச வேண்டிய விதத்தில் பேசி இந்த ஆசாமியின் சூழ்ச்சியில் இருந்து பைக்கை மீட்டு உரிமையாளர் நண்பரிடம் கொடுத்து பிரச்சனையை முடித்தார்கள். இப்படி கொடுக்கும் மனம் இருப்பவர்களையும் தவறாக பயன்படுத்துவதால்தான் இப்போது எல்லாம் யாருக்கும் நல்லவராக இருக்க மனம் இருப்பதில்லை.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !
நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல்...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
-
டிஸ்னி நிறுவனம் தனது ஒட்டுமொத்தப் பூங்காக்கள் மற்றும் அனுபவங்கள் (Experiences) துறையிலிருந்து 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் $36 பில்ல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக