இங்கே யார் சரியான பாதையை சரியான கருத்துக்களை சொல்லும் மனிதர் என்பது முக்கியமே அல்ல , எண்ணிக்கையில் அதிகமாக உள்ள மெஜாரிட்டி மக்கள் யாரோ அவர்களுடைய சொல் பேச்சுதான் மேடை ஏறுகிறது. ஒரு கல்லூரி விடுதியில் தினமும் காலை நேரத்துக்கு வெறும் உப்புமா மட்டுமே போடப்பட்டது. பல நாட்கள் அதை உண்டு வெறுத்துப் போன மாணவர்கள் டிபன் மெனுவை மாற்றப் போராடினார்கள். எனவே விடுதிக் காப்பாளர் என்ன காலை உணவு கொடுக்கலாம் எனத் தெரிவு செய்ய வாக்கெடுப்டை நடத்தினார். உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என தனியாக ஒரு லிஸ்ட்டே கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார். தினமுமே உப்புமா சாப்பிட்டு உப்புமா வெறி பிடித்வர்கள் 20 பேர் அதற்கு வாக்களித்தனர். ஆனால் மாற்ற வேண்டும் என்பவர்கள் ஒன்றாகத் தீர்மானிக்காமல் தோசைக்கு 18 பேர், இட்லிக்கு 15 பேர், பூரிக்கு 17 பேர், பொங்கலுக்கு 14 பேர், என வாக்களித்தனர். எனவே உப்புமா வெற்றி பெற்று தினமும் உப்புமாவே உணவாக அளிக்கப்பட்டது. 20 பேருக்கு பிடித்ததை மற்ற எல்லோரும் சாப்பிட வேண்டிய துயரம் நடந்தது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு மிக பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. எனவே ஜெய் உப்புமா! சொல்லிவிட்டு உப்புமாவை சாப்பிட்டார்கள். ஒரு கான்சேப்ட்டுக்கு கண்ணை மூடிக்கொண்டு சப்போர்ட் பண்ணும் 1000 பேர் இருந்தார்கள் என்றால் இவர்களோடு சேர்ந்து பலமான அணியில் பிழைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு 100 பேர் சரியாக ஒரு பாதையை சரியாக ஒரு கருத்தை எடுத்தாலும் இந்த அணியில் சேர மறுக்கிறார்கள். ஒரு மொக்கையான பழமைவாத பிற்போக்கு கான்செப்ட் இப்படித்தான் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை , இயக்குனர் பெரிய ஆட்சி போன்ற இயக்குனர்களின் எல்லா படங்களையும் சொல்ல முடியாது ஒரு சில படங்களில் வில்லன்களின் அடியாட்களின் காட்சிகளில் பிற்போக்கு யோசனைகள் மட்டுமே நிறைந்த கதாப்பாத்திரங்களாக இருக்கும் காட்சிகள் நிறைய இருப்பதை பார்க்க முடிக்கிறது, அதாவது ஒன்றும் தெரியாத மனிதனாக மெஜாரிட்டி மக்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படியே மாற்றிக்கொண்டு வாழும் பச்சோந்தியாக வாழ்ந்து வாழ்க்கையில் இருக்கும் இடத்தை விட்டு தன்னையும் தன்னுடைய இடத்தையும் முன்னேற விடாமல் பிற்போக்கு கருத்துக்களை சப்போர்ட் பண்ணும் மெஜாரிட்டி ஆட்களையே வாழ்த்தி மொக்கையான விஷயத்தை எடுக்கும் பெரிய கூட்டத்தில் தங்களை சேர்க்கிறார்கள். சூப்பர்ராக இருக்கும் மனிதர்களின் சின்ன கூட்டத்தை சின்னதாக இருக்கிறது என்ற காரணத்துக்காக ஒதுக்குகிறார்கள். இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். போதை என்று சொல்லப்படும் இன்டாக்ஸிகேஷனை உலகத்தில் இருந்து நீக்கினாலே உலகத்தின் மொத்த 50 சதவீத பிரச்சனைகள் சரியாகிவிடும் என்பது இந்த வலைப்பூ குழுவினரின் கருத்து.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக