திங்கள், 30 டிசம்பர், 2024

GENERAL TALKS - மோசமான விளைவுகளை தடுக்க முடியாத நிலை !



ஒரு புதிய நாளில் புவியின் ஒரு பகுதியில் எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார். அடடா இந்தக் குருவிக்கு கேடு காலம்! வந்து விட்டதே என்பதை உணர்ந்த கருட பகவான் உடனடியாக அந்தக் குருவியை தூக்கிக்கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப் பொந்தில் பாதுகாப்பாக வைத்தது. அந்தப் பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் குருவியை விழுங்கி விட்டது. குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று வருந்தியது கருட பகவான். குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது. “நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்". அந்தக் குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது. அது எப்படி நிகழப் போகிறது என்பதை யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்குள் விதிப்படியே அது நடந்து விட்டது" என்று கூறினார். ஒருவருடைய  வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும். அதனால் அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், வாழ்க்கையை வாழுங்கள். ஒருவருடைய எதிர்காலத்தை இன்னொருவரால் நிறைய நேரங்களில் மாற்றவே முடியாது/ மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும் விளைவுகள் கூட பின்னடைவாகத்தான் இருக்கும். ஒரு அனுபவம் நிறைந்த மேலதிகாரி தனக்கு உதவியாக இருக்கும் அதிகாரிகளிடம் அட்வைஸ் பண்ணும்போதும் அல்லது ஒரு ஆசிரியர் தங்களுடைய மாணவர்களுக்கு உதவிகளை செய்ய நினைக்கும்போதும் இவை அனைத்துமே பயன் இல்லாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. போதை பழக்கத்தால் கொடியோர் சவாகாசத்தால் இன்றைக்கு தேதிக்கு கூட வாழ்க்கையை இழக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுடைய விதி இவர்களை ஆட்டி படைக்கிறதா ? என்பது நமக்கு புரிவது இல்லை. இருந்தாலும் இந்த அடிப்படையான மோசமான அதிர்ஷ்டம் ஒரு மனிதனை மிகவும் கஷ்டப்படுத்திக்கொண்டு இருக்கிறது. மோசமான அதிர்ஷ்டம் வரும் நாட்களில் எல்லாம் மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் நடக்கும் பிரச்சனைகளின் தாக்கத்தில் இருந்து மற்றவர்களை காப்பாற்ற முடியாமல் போவது எதனால் நடக்கிறது என்பது இன்னுமே ஒரு புரியாத புதிராக இருக்கும் யோசிக்க வேண்டிய விஷயம் !



கருத்துகள் இல்லை:

TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !

 நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல்...