ஒரு வெளிநாட்டு நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான். "நான் இங்கே அமரலாமா?" அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பின் உறக்கக் கேட்டாள் "இன்று இரவு உன்னோடு தங்குவதா? என்னை பற்றி என்ன நினைத்தாய்?" அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர். அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான். சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள். இவ்வாறு சொன்னாள் "நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி உங்கள் மன நிலையைப் பார்க்க எண்ணி அவ்வாறு செய்தேன்" இளைஞன் உரக்ககச் சொன்னான். என்னது? ஒர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா? இவ்வளவு தொகை மிக அதிகம்" இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர். அவள் குறுகிப் போனாள். அவன் சொன்னான் "நான் ஒரு வழக்கறிஞர் யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்! ஒருவரை நம்ம அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாம் அவமானப்பட வேண்டிய காலம் வரும். இந்த சம்பவத்தில் இருந்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் யாரையும் நம்முடைய சுய இலாபத்துக்காக அவமானப்படுத்த கூடாது. மோசமான ஆட்கள் சுய இலாபத்தை எப்போது வேண்டுமென்றாலும் பெரிதாக கருதலாம் இங்கே இன்னொருவரின் சுய மரியாதையை இறக்கி விட்டுதான் வெற்றியை அடையவேண்டும் என்ற தப்பான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள கூடாது. சமூக மதிப்பு மற்றும் சமுதாய மதிப்பு என்று ஒரு விஷயம் இருக்கிறது. மிக தாழ்மையான ஆட்கள்தான் இந்த சமுதாய மதிப்பை விளையாட்டாக கெடுத்து இன்னொருவருக்கு சமுதாய மதிப்பு எவ்வளவு முக்கியமானது என்று கூட யோசிக்காமல் மலிவான விஷயங்களில் ஈடுபடுவார்கள். ஒரு வியாபாரியை எடுத்துக்கொள்ளுங்கள் - இவருக்கு நிறைய வணிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் அவருடைய நாணயம் சிறப்பானதாக இருக்க வேண்டும். இந்த நல்ல பெயரை கெடுக்க வேண்டும் என்று இன்னொருவர் வேலை பார்த்தால் கடைசியில் கஷ்டப்படுவது பாதிக்கப்பட்டவர்கள்தானே. இதனை கோபமாக எடுத்துக்கொள்ள கூடாது கலகலப்பான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயமானது ?
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக