ஒரு முறை போரில் தோல்வி ஏற்பட்டு எதிரிகளிடம் சிக்கிக்கொண்டார என்பதால் போரில் தோல்வி அடைந்த மன்னனை கைது செய்யப்பட்டு தனிச்சிறையில் தனிமையில் அடைத்தனர். கடைசி வரையில் தன்னை யாருமே காப்பாற்ற முடியாமல் நாட்கள் போகிறதை நினைத்து நொந்துபோய் சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசிக்காலம் கழிந்தது.. இருந்தாலும் அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும் என்று கூறி அவரிடம் கொடுத்தார். இந்த சதுரங்க அட்டையை ஒரு பக்கம் வாங்கி வைத்தாலும் தன்னை சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த இந்த மன்னருக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் அந்த மன்னன் இறந்தும் போனார்... சில நாள் கழித்து சிறையில் இருந்த அவருடைய உடைமைகளை சுத்தம் செய்த போது அதில் இருந்த சதுரங்க அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. தனக்கான விடுதலை தனக்கு மிக அருகில் இருந்தும் தோல்வியால் உருவான அவரின் மன உளைச்சலும்... பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது... இங்கே எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் தோல்வி அடைவது சாதாரணமான ஒரு விஷயம் எலி சாதாரணமாக இருக்கும்போது உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தனது கூரான பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது. ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் இருபது நிமிடத்தில் மரத்தால் ஆன இந்த பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும். பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும். நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும். அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது. உங்களுடைய தோல்விகளை பற்றி யோசிக்காமல் கண்ணுக்கு முன்னால் இருக்கும் வெற்றிகளுக்கான குறிப்புகளை தேடுங்கள். உங்களுடைய கத்தியை தீட்டாமல் உங்களின் புத்தியை தீட்டுங்கள். உங்களின் சூழ்நிலையை ஆராய்ந்தால் உங்களால் வெற்றியை நுணுக்கமாக கைப்பற்ற முடியும் !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1
1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...
-
1. Vimeo: A popular video-sharing platform that focuses on creative professionals and businesses. 2. Dailymotion: A video-sharing platf...
-
1. Freelancing: Offer services like writing, graphic design, programming, and more on platforms like Upwork, Fiverr, and Freelancer. 2. O...
No comments:
Post a Comment