முன் ஒரு காலத்தில் ஒரு நாடு மக்கள் பிரிவால் பிளவுபட்டிருந்த போது அதன் தலைநகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது. ஒருநாள் கிழக்கு பகுதியை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பகுதி பக்கம் கொட்டினார்கள். (அவ்வளவு குரோதம்!) மேற்கு பகுதியை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பகுதி பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள். மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள்: "ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்" (“EACH GIVES WHAT HE HAS") எவ்வளவு நிதர்சனமான உண்மை…! உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும். உங்களுக்கு “உள்ளே” என்ன இருக்கிறது? அன்பா - பகையா? அமைதியா - வன்முறையா? வாழ்வா - சாவா? உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா? இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன? "ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்" - இப்போது நடப்பு பிரச்சனைக்கு வருவோம் , பக்கத்து ஸ்டேட்டில் இருந்து மருத்துவ குப்பைகள் கொட்டப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நாங்களும் குப்பைகளை கொட்டுவோம் என்று ஒரு கட்சி உறுப்பினர் சொல்கிறார் என்றால் எவ்வளவு யோசனை இல்லாத விஷயம் என்று பாருங்களேன் ! தனி மனிதன் வளர்ச்சி அடைய முடியாது. ஒரு மனிதன் வளர்ச்சி அடைய அவனுக்கு ஒரு சமூகம் தேவை, வெறுப்பு அரசியல் வெறுப்பை காட்டும்போது ஜிவ்வென்று போதையேற்றலாம் ஆனால் கடைசியில் உங்களை கேவலமான நோய்வாய்ப்பட்ட பேஷண்ட்டாக மாற்றிவிடும். மக்கள் எப்போதுமே சுய மரியாதையை காப்பாற்ற அறிவு கூர்மையை பயன்படுத்துங்கள். வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியல் எனும் சாக்கடையை பயன்படுத்த வேண்டாம்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இ...

-
அலையே அலையே காட்டுல மழையே அலைலே அல்ல ட்யூட் செதற பதற உடுவன் நான் உதற அல்லல்லே அல்லா நண்பா ஊரும் ரத்தம் 10000 AURA வை கொண்டு அச்சாது ந...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக