ஒரு வங்கி மேலாளரிம் அன்று ஒரு சராசரி மனிதர் லோன் கேட்டு வந்தார். இப்போது வங்கி மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார். “உங்களுக்கு எதுக்காக இவ்ளோ பணம் வேணும்?” அந்த சராசரி மனிதர் பதில் சொன்னார். “கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்!” “அடமானமாய் என்ன தருவீங்க?” ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன?”. “நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் நம்ம பேங்க் பணம் கொடுக்கும். அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்!” சராசரி மனிதர் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு ரெண்டு குதிரை இருக்கு எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம் !”. மேலாளர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாக தர ஏற்பாடு செய்தார். சில மாதங்கள் கழிந்தது. அந்த சராசரி மனிதர் மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார். பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார். மேலாளர் ஆச்சர்யத்துடன் கேட்டார். “கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. இலாபம் எதுவும் இல்லையா?” அந்த சராசரி மனிதர் உற்சாகமாய்ப் பதில் சொன்னார். “இலாபம் இல்லாமலா? அது கிடைச்சது நிறைய!”. மேலாளர் ஆர்வத்துடன் கேட்டார். “அதை எல்லாம் என்ன செய்தீர்கள்?”. “என்ன செய்யறது… பொட்டில போட்டு வச்சிருக்கேன்!”. மேலாளர் யோசித்தார். இந்த மாசத்தின் டார்கெட்க்கு சரியான ஆளாக ஒருத்தன் கிடைச்சுட்டான்!” என்று நினைத்தபடியே,” ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே?” என்றார். சராசரி மனிதர் கேட்டார். “டெபாசிட்னா என்ன?”. மேலாளர் விளக்கமாய்ப் பதில் சொன்னார். “நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு அதில உங்க பணத்தை போட்டு வச்சா உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்!”. கேட்டுக் கொண்டிருந்த அந்த சராசரி மனிதர் நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார். “அடமானமாய் என்ன தருவீங்க?”என்றார். ஒரு விஷயம் பணம் சார்ந்தது என்றால் அங்கே நல்லது என்றும் கேட்டது என்றும் எதுவுமே இல்லை. எல்லோருக்குமே இலாபம்தான் முக்கியம். இத்தகைய இலாப நோக்கம்தான் மக்களை இந்த விஷயங்களில் ஆட்டிப்படைக்கிறது. இந்த சமூகத்தில் நாம் இலாபம் அடைந்தால் மட்டும்தான் நம்மை மதிப்பார்கள். நம்முடைய படிப்பு , பண்பு, தொழில் என்று எதுவாக இருந்தாலும் பணம் சம்பாதிக்கும் வாழ்க்கை கொடுக்கும் மரியாதையை வேறு எதுவுமே கொடுக்க முடியாது. பணம்தான் பிறந்த குழந்தைக்கு கூட உலகத்தை சொல்லி கொடுக்கும் முதல் குருவாக உள்ளது. பணம் எல்லவற்றையும் விட மேலான ஒரு இடத்தில் இருக்கிறது. இந்த வலைப்பூவும் பணம் சம்பாதிக்க உருவாக்கப்பட்டது என்பதால் விளம்பரங்களை கிளிக் செய்து வலைப்பூ சந்ததாரராக மாறுங்கள்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1
1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...
-
1. Vimeo: A popular video-sharing platform that focuses on creative professionals and businesses. 2. Dailymotion: A video-sharing platf...
-
1. Freelancing: Offer services like writing, graphic design, programming, and more on platforms like Upwork, Fiverr, and Freelancer. 2. O...
No comments:
Post a Comment