ஞாயிறு, 1 டிசம்பர், 2024

MUSIC TALKS - PANJU MITTAI SELAI KATTI PATTU VANNA RAVIKKAI POTTU KANJI KONDU PORAVALE NENJUKULE NEE VAARIYA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




பஞ்சு மிட்டாய் சேலை கட்டி  
பட்டு வண்ண ரவிக்கை போட்டு 
கஞ்சி கொண்டு போறவளே நெஞ்சுக்குள்ள நீ வரியா
தும்பை பூவு மல்லு வேட்டி தொடை தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவறே  
வழி விடுங்க நேரமாச்சு

அப்புடி போடு !

ஏழை புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு 
உன் இடுப்பு கொசுவத்துல சூட்சமும் இருக்கு
நீ நெளிஞ்சு போகையிலே நெஞ்சுல சுளுக்கு

வாடை காத்தடிச்சு வாட்டுது மாமா 
என் கூட வந்து குச்சுக்குள்ள ஒட்டிக்க மாமா
உன் கூதலுக்கு சூடு கொஞ்சம்  ஏத்திக்க மாமா

உன் கண்ணு ரெண்டும் நவாபழம் 
காய்ச்சு இருக்கு கொய்யா பழம் 
மூடி வைக்காதே திங்காம வீணடிக்காதே
அட புல்லறுக்க போகையிலே புள்ளை வரம்
கேட்க வந்தேன் தள்ளி நிக்காத மனசை கிள்ளி வைக்காத

ஓரஞ்சாரம் பார்த்து ஒதுங்கனும் பதமா 
பின்ன ஓடை தண்ணிக்குள்ள முங்கி குளிக்கணும் சுகமா
மெல்ல லாவகமா உன் முதுகை தேய்க்கணும் இதமா

மாமா பம்முறீயே பொழுதுக்கு மேலே நீ
கம்மங்காட்டு மூலையிலே கல்லணை போலே
நான் ஒத்தையில தான் வருவேன் உன் நினைப்பாலே
அட மஞ்சள் காட்டு ஓரத்திலே மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா ? தினமும் காத்திருக்கட்டா ?
அட வெள்ளை சோள சோறு வச்சு  கார பூவை ஏழரைச்சு 
ஊட்டி விடட்டா ? உனக்கு ஊட்டி விடட்டா ?


கருத்துகள் இல்லை:

TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !

 நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல்...