இங்கே பேச்சு சாமர்த்தியம் பெரும் விளைவுகளை உருவாக்கும் வல்லமை கொண்டது. ஒரு குடும்பத்தில் நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அப்பா சொன்னார், பையன் சொன்னான். என்னால் முடியாது டேய் அது உலகத்துடைய நம்பர் ஒன் பணக்காரருடைய பொண்ணு என்று சொன்னார். உடனே பையன் யோசித்துவிட்டு டபுள் ஓகே அப்பா என்று சம்மதம் தெரிவித்தான். தன்னுடைய விலை உயர்ந்த காரை எடுத்துக்கொண்டு என் மகனுக்கு உங்க பெண்ணை திருமணம் செய்து வைக்கமுடியுமா? என்று கேட்டதும் அந்த பணக்காரர் முடியாது என்றார். என்னுடைய பையன் உலக வங்கியில் பெரிய போஸிஷனில் இருக்கிறான் என்று கௌரவமாக சொன்னதும். அப்படியென்றால் எனக்கு கண்டிப்பாக சம்மதம்தான் என்றார். உலக வங்கிக்கு சென்ற நமது அப்பா இப்போது என் மகனுக்கு உங்க பேங்கில் டேபுட்டி CEO போஸ்ட்டிங் தரமுடியுமா என்று கேட்டாராம் ? யாருயா உன் பையன் ? இங்கே யோசிக்காம நேரடியா வேலை கொடுக்கணுமா ? அதுவும் ஸ்ட்ரெய்டா டேபுட்டி CEO ? என்றதும் என்னுடைய பையன் உலக பணக்காரரின் மருமகன் என்று சொல்லலானார். கடைசியாக வங்கி ஜேனரல் சேர்மேன் நம்ம தம்பி எப்போ வேலைல ஜாயின் பன்னுவார்ன்னு கேட்டு சொல்லுங்க என்றாராம். இது ஒரு வகையான பேச்சு சாமர்த்தியம். இங்கே மனிதர்களை நன்றாக கணித்து வைக்க கற்றுக்கொள்ளும் எந்த ஒரு பணக்காரரும் இதுதான் பேச வேண்டும் இது பேச கூடாது என்று தெளிவான கணக்கு போட்டு பேசுகிறார்கள். இருந்தாலும் பணம் பார்க்க ஆசைப்படுபவர்கள் யோசிக்காமல் பேசி வாழ்க்கையில் சிக்கல்களில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது அல்லவா ? இதனை அடிப்படையில் இருந்து யோசிக்க வேண்டும். வெறுமனே பேச்சால் மட்டுமே எதுவுமே சாதிக்க முடியாது என்று சொல்கிறார்கள். இருந்தாலும் நம்முடைய அரசியலை எடுத்துக்கொள்ளுங்களேன். ஒருவர் தப்பு தப்பாக பேசுகிறார். இல்லாதது பொய்யான விஷயங்கள் எல்லாம் தன்னுடைய வாழ்க்கையில் பண்ணியதாக பேசுகிறார். இவரையும் நம்பி மக்கள் பெரிய ஆளாக மாற்றிவிடுகிறார்கள். கட்சி நிர்வாகி ஒரு நடிகரை வைத்து அரசியலை சிதறடிக்க பார்க்கிறார் என்றால் கண்டிப்பாக ஓட்டுகள் பிரிய வேண்டும் என்று எதிர்கட்சி ஆட்கள் ஒரு பெரிய தொகையை அவருக்கு கொடுத்துவிடுவார்கள் என்பதற்காகதான் என்பது அரசியலில் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நடிகர்கள் ஏதாவது மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு அரசியலில் இறங்குகிறார்கள். இவர்களை வைத்து இவர்களின் முகங்களை வைத்து கட்சி நிர்வாகம் சம்பாதித்து சந்தோஷமாக இருக்கிறதே ! இதற்கு என்ன சொல்ல முடியும் ? சில நேரங்களில் பேச்சு சாமர்த்தியமும் ஆபத்தானதே !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்
சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும். தரமான கல்வி, மக்கள் தன்னம...
-
இன்னைக்கு தேதிக்கும் நான் என்னுடைய பெஸ்ட் பிலிம் என்னான்னு கேட்டா நான் தி அவெஞ்சர்ஸ் என்றுதான் சொல்கிறேன், பொதுவாக ஒரு சூப்பர்ஹீரோ...
-
காலம் நம்ம வாழ்க்கையின் மேலே வைத்து இருக்கும் கட்டுப்பாடுகளை எடுப்பதுதான் நான் இந்த உலகத்தின் கடினமான விஷயமாக கருதுகிறேன். காலத்துக்கு எப்போ...
No comments:
Post a Comment