ஒரு டவுனில் மூன்று டேய்லர்கள் டேய்லரிங் கற்று முடித்து கடை வைத்து இருந்தார்கள். தொழிலில் நன்றாகத் தேர்ச்சியடைந்த பின் முன்னேற்றத்தைத் தேடி மூவரும் ஒரு பெரிய நகரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். மூவரும் நகரின் பிரதான சாலையில் தங்களுக்கு தகுந்த இடத்தை வாடகைக்குப் பிடித்து, தங்கள் தொழிலைத் தனித்தனியாகச் செய்யத் துவங்கினார்கள். அடுத்த நாள் காலை, முதலாமவன், தன் கடை வாசலில் கீழ்க்கண்டவாறு அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தான் “நகரின் மிகச்சிறந்த தையற்காரர் இங்கே இருக்கிறார். அதேபோல இரண்டாவது ஆசாமியும் தன் கடை வாசலில் இப்படி ஒரு அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தான். “உலகின் மிகச் சிறந்த தையற்காரர் இங்கே இருக்கிறார்” இரண்டையும் கண்ணுற்ற மூன்றாமவன், திகைத்துப்போனான். அதே போல தன் கடை வாயிலும் ஒரு அறிவிப்புப் பலகை ஒன்றை வைக்க விரும்பினான். அத்துடன் தன்னுடைய கடைப்பலகை அவை இரண்டையும் விட மேன்மை உடையதாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினான். பலமாக யோசனை செய்து, அடுத்த நாள் இப்படி ஒரு அறிவிப்புப் பலகையை வைத்தான். “இந்தத் தெருவின் மிகச் சிறந்த தையற்காரர் இங்கே கடை வைத்திருக்கிறார். ஒருமுறை தைத்துப் பாருங்கள்” மூன்றாவது ஆசாமியிடம் கூட்டம் சேர்ந்தது! உங்களுடைய நலம் ஒரு பக்கம் இருந்தாலும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் என்ன நல்ல விஷயம் செய்யப் போகிறீர்கள் என்பதுதான் அதி முக்கியமானது. அதுதான் அதிகமான வரவேற்பைப் பெறும். ஒரு சந்தைப்படுத்தும் செயல்முறை உங்களுடைய திறன்கள்ளின் அளவீட்டை மட்டும் சொல்லி பெருமைப்படுவது அல்ல உங்களின் பொருட்கள் மற்றும் சேவைகள் வெகு ஜனங்களை சென்றடைய வேண்டும் என்பதால் சந்தைப்படுத்தும்போது கவனமாக சந்தைப்படுத்த வேண்டும்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நீங்கள் சாடர்டே நைட் லைவ் பார்த்திருக்கிறீர்களா?
அமெரிக்காவில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நண்பர்களே, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை இ...
-
சுவாமி விவேகானந்தர் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக மத மாநாட்டில் ஆற்றிய புகழ்பெற்ற உரையின் தமிழாக்கம் (சுருக்கமாகவும் விரிவாகவும்) க...
-
வறுமையில் வாழ்வது ஒரு மனிதரின் மனதையும் உணர்வுகளையும் பெரிதும் பாதிக்கக்கூடும். உணவு, வீடு, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக