ஒரு மலை பிரதேசத்தில் செழிப்பான வேலி போடப்பட்ட ஒரு புல்வெளியில் ஒரு பெரிய மந்தையாக ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் அசந்து ஓய்வு எடுத்துகொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது. வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்? " என்று கேட்டது. ஓநாயும் "நண்பா, நண்பா. இங்கே பசுமையான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! பசுமையான இளம் புற்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை. ” என்று வருத்தத்துடன் கூறியது. "அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? " என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. "சேச்சே. அதெலாம் சுத்தப் பொய்! " என்றது ஓநாய். "அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்! " என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று. "உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது அந்த ஆட்டுக் குட்டிக்கு தானாகத் தெரியவில்லை. ஒரு வகையில் பெற்றோர்கள் ஒருவரை பற்றி தவறான விஷயத்தை சொல்லி இவரது சவகாசம் வேண்டாம் என்று சொன்னார்கள் என்றால் யோசிக்காமல் நாங்க புது ஜெனரேஷன் இப்படித்தான் கண்ணை மூடிக்கொண்டு பழகுவோம் என்று சொல்லி ஃபயர் விடாமல் எதுக்காக அப்படி சொல்கிறார்கள் என்று யோசித்து பழகுங்கள். தோழமை என்ற பெயரில் தவறான விஷயங்களில் கொண்டு சென்று பாதளத்தில் தள்ளிவிட்டு சுய இலாபம் பார்க்கும் ஆட்களும் இருக்கதான் செய்கிறார்கள். கவனமாக இருங்கள். விவரம் இல்லாமல் ஒருவரை கண்ணை மூடிக்கொண்டு நம்பி ஆபத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எச்சரிக்கை தேவை !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இ...

-
அலையே அலையே காட்டுல மழையே அலைலே அல்ல ட்யூட் செதற பதற உடுவன் நான் உதற அல்லல்லே அல்லா நண்பா ஊரும் ரத்தம் 10000 AURA வை கொண்டு அச்சாது ந...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக