திங்கள், 27 அக்டோபர், 2025

GENERAL TALKS - கொஞ்சம் வாழ்க்கை கொஞ்சம் கனவுகள் ! #2

 



ஒரு ரியாலிட்டி என்ற அடிப்படையில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய வருங்காலத்தின் வெற்றிகள் ஆனது வங்கி கணக்கின் அடிப்படையில் மட்டும் தான் உள்ளது.

இந்த உலகத்தில் நிறைய பணம் இருந்தால் சுதந்திரமாக வாழ முடியும். பணம் நமக்குள்ளே இல்லை என்றால் நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் நம்மால் மேலே வரமுடியாது. நாம் எதாவது ஒரு வேலையை கட்டாயத்தின் அடிப்படையில் செய்து கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

பணம் உள்ளவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பணம் இல்லாதவர்கள் வெற்றி என்றால் என்னவென்று தெரியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். 

சமீபத்திய கணினி விளையாட்டுகளில் ஒரு சொல் உள்ளது. பே - 2 - வின்  வெற்றி பெறுவதற்கான பணம் கட்ட வேண்டிய பந்தயம் என்றால் இந்த வகையில் வெளியிடப்பட்ட விளையாட்டுகள் நீங்கள் நிறைய பணம் செலுத்தினால் மட்டுமே அந்த விளையாட்டுக்கான வெற்றி கூப்பன்களை உங்களுக்கு வழங்கும். 

இல்லையென்றால், நீங்கள் விரும்பாவிட்டாலும் தோல்வியுற்றவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். உண்மையைச் சொல்லப் போனால், இன்றைய வாழ்க்கை அப்படித்தான் செல்கிறது. வாழ்க்கையில் பணம் இல்லையென்றால் எதுவும் இல்லை என்ற சூழ்நிலையை நீங்கள் காணலாம்.

பணமில்லாத வாழ்க்கை உங்களுடைய வாழ்க்கையை முழுவதையும் ஆபத்தான வாழ்க்கையாக மாற்றும். நீங்கள் வா சந்திக்கக்கூடிய அனைத்து மனிதர்களும் உங்களுக்கு ஆபத்தானவர்களாகத்தான் இருப்பார்கள்.

GENERAL TALKS - கொஞ்சம் வாழ்க்கை கொஞ்சம் கனவுகள் ! #1



வாழ்க்கையில் புயல் போல பிரச்சனைகள் நம்மை எப்போதும் தாக்கினால், நம் பலத்தை அதிகரிக்க கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில், துக்கங்கள் வருவது உறுதி, கடினமான பாதைகளை நாம் கடக்க வேண்டும். ஆனால், நம் பலம் நமக்கு ஆதரவாக இருக்கும். 

அதிர்ஷ்டசாலிகள், தங்கள் பலத்தாலும் பணத்தாலும், தங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்கிறார்கள். அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பதிப்பு அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் எப்படி தங்களுடைய வாழ்க்கையில் மேம்படலாம் என்பதைப் பொறுத்தது ஆகும். 

ஆகவே மக்களே நம்முடைய வாழ்க்கையின் எந்த கனவுகளாக இருந்தாலும் நாம் தான் அந்த கனவுகளுக்காக போராட வேண்டும். கனவுகளை நாம் விட்டுக் கொடுத்துவிட்டால் வாழ்க்கை நம்மை கட்டிப் போட்டுவிடும்.

நாம் நம்மை சந்தேகிப்பதை நிறுத்திவிட்டு, துணிச்சலை வளர்த்துக்கொண்டு, துணிச்சலுடன் செயல்படும்போதுதான் இவைகள் அனைத்துமே நடக்கும். நம் கனவுகள் சாத்தியமாகும் தருணங்களை நம் கண் முன்னே காணலாம்.

நம் வாழ்வில் மிகுந்த வலியை அனுபவிக்கும்போதுதான் நாம் மகத்தான வலிமையை உணர முடியும். வழிகளை அனுபவிக்காத சாதாரண மக்கள் இந்த வலிமையை ஒருபோதும் இறுதிவரை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட அளவுக்கு கடினமாக தோற்றுப் போனாலும் உங்களுடைய தோல்விகளை ஒப்புக் கொண்டு அடுத்த கட்டமாக மறுபடியும் மறுபடியும் போராடிக் கொண்டே இருங்கள். ஏனென்றால் எப்போதுமே நம்முடைய தோல்விதான் நாம் ஒரு மிகப்பெரிய வெற்றியாளர் என்பதற்கான அடையாளம்.


GENERAL TALKS - நல்லதொரு உலகம் செய்வோம் !

 



ஒருவர் எந்தத் துறையில் ஈடுபட்டாலும், கலையை விட அறிவியலுக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். காரணம், கலைத் துறையில் இருப்பவர்களுக்கு எப்போதும் அதிக வருமானம் கிடைப்பதில்லை. மேலும், அவர்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எப்போதும் அதிர்ஷ்டத்தை மட்டுமே சார்ந்திருக்கும். அதாவது, நாம் அறிவியல் அடிப்படையில் ஏதாவது ஒன்றை முயற்சிக்கும்போது, ​​நமது தோல்விக்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகவே இருக்கும்.

எப்பொழுதுமே வாழ்க்கை அறிவியலின் அடிப்படையில் பிரித்து வாழ்க்கையை கற்றுக்கொள்ள வேண்டும். உணர்ச்சிவசங்களின் வகையில் வாழ்க்கையின் கண்ணோட்டத்தைப் பார்ப்பது கலைத்துறையில் இருப்பவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. 

ஆனால் உணர்ச்சிவசப்பட்டால் இங்கே ஜெயிக்கவே முடியாது என்றும் பணத்தை சம்பாதிக்க முடியாது என்றும் சேர்த்து வைத்த பணம் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் வெளியில் செலவாகிவிடும் என்றும் நடப்பு விஷயங்களை எல்லாம் நன்றாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அறிவியல் சார்ந்த கண்ணோட்டத்தில் மட்டுமே இந்த உலகத்தை பார்க்க வேண்டும்.

நிச்சயமாக, அரசியலில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே நல்லவர்களாக மட்டுமே ஆட்சியில் இருக்க வேண்டும்,  நடப்பு ஆட்சியில் நல்ல அளவுக்கு பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இதை கவனிக்காமல் நடிகர்களும் அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்க சினிமா தரும் போதை மயக்கத்தில் ரசிகர்கள் விரும்புவது மிகவும் தவறு. \
இத்தனை வருடங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் நடிகர்களை கட்டுப்படுத்துகிறார்கள் இன்னும் கட்டுப்படுத்துவார்கள். முட்டாள் ரசிகர்கள் ஒரு நடிகரின் கால்களைத் தொட விரும்பினாலும் ஆச்சரியப்பட முடியவில்லை, மூளையை கழற்றி வைத்துவிட்டு அவரை வணங்குவார்கள். கலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? அல்லது அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? இதுதான் நாம் தேர்வு செய்யக் காரணம் !

GENERAL TALKS - கொஞ்சம் வாழ்க்கை கொஞ்சம் கனவுகள் ! #3

 



நம் வாழ்க்கை சில சமயங்களில் நம் மீது விதிக்கும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகளைப் பற்றி நாம் எப்போதும் அறிந்திருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் கெட்ட நேரம் வரும்பொழுது நண்பர்கள் அனைவருமே எதிரிகளாக மாறிவிடுவார்கள். அதுவே நல்ல நேரம் நடந்து கொண்டிருந்தால் எதிரிகள் கூட நண்பர்களாக மாறி விடுவார்கள். இந்த விரோதமும் நட்பும் மிகவும் தற்காலிகமானது. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் இருக்கிறது. மனிதகுலத்தைப் பற்றிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வாழ்க்கை என்பது ஒருபோதும் ஒரு புத்தகத்தில் விவரிக்கப்படக்கூடிய ஒரு கருத்து அல்ல. வாழ்க்கை என்பது ஒரு பெரிய கருத்து. அதை அனுபவத்தின் மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். புத்தக அறிவின் மூலம் அல்ல, ஆனால். வீடியோக்கள் மூலம் கற்றுக்கொள்வது கடினம். 

காலங்களும் மாறுகிறது. காட்சிகளும் மாறுகிறது. மனிதர்களுடைய வாழ்க்கை பின்னடைவை தான் சந்திக்கிறதே தவிர்த்து முன்னேற்றத்தை அடைந்த பாடில்லை.நிறைய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. ஆனால் அவை அனைத்துமே பணம் படைத்தவர்கள் மட்டுமே சாதகமாக.விளையாடிக் கொண்டிருக்கிறது. பணம் இல்லாதவர்கள் இன்னுமே கஷ்டப்படத்தான் செய்கிறார்கள். வெற்றி அனைத்துமே யோசித்துப் பார்த்தாலும் கடவுள் நிறைய நேரங்களில் மற்றவருடைய கஷ்டத்தை நீக்க முயற்சி செய்பவர்களுக்கு போதுமான சப்போர்ட்டை செய்வதில்லை என்பதுதான் மனக்குறையாக தோன்றுகிறது. இந்த விஷயங்கள் எல்லாம் எங்கே சென்று முடியப்போகிறதோ என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்.




GENERAL TALKS - கொஞ்சம் வாழ்க்கை கொஞ்சம் கனவுகள் ! #2

  ஒரு ரியாலிட்டி என்ற அடிப்படையில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய வருங்காலத்தின் வெற்றிகள் ஆனது வங்கி கணக்கின் அடிப்படையில்...