இந்த கவிதை சமீபத்தில் மிகவும் டிரெண்ட்டிங் ஆனது . இருபது நிமிடம் மொட்டை மாடியில் இதயத்தை உருக்கிப் பேசினேன். கீழே போய் பார்த்தால், 'பக்கத்து வீட்டு ஆன்ட்டி' என் கதையை மொத்தமாக ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார் துணி காயப்போடும் சாக்கில்! நம் ரகசியங்களை நாம் ரசித்துப் பேசும்போது, அதை சிசிடிவி (CCTV) போல நோட்டம் விட பக்கத்திலேயே ஒரு ஒரு கூட்டம் இருக்கும்! என்று சொல்லுகிறார்கள், நம்மை பற்றிய விஷயங்கள் ரகசியமாக எல்லாம் வைக்க முடியாது மக்களே , உலகத்தின் எதார்த்தம் என்னவென்று தெரிந்துகொண்டே ஆகவேண்டும் ,
"ஜன்னலோர சீட் காலியாக இருக்கிறதே என்று ஓடிப் போய் உட்கார்ந்தேன் அடுத்த ஸ்டாப்பில் ஏறிய பெரியவர், 'தம்பி எந்திரிக்க மாட்டியா?' என்பது போல முறைத்துப் பார்த்தே எழுப்பிவிட்டார்! காசு இல்லாத காலத்தில் நாம் ஆசைப்பட்டு உட்காரும் சில இடங்கள் நமக்குச் சொந்தமானவை அல்ல , அது பேருந்து சீட்டாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி! பிரச்சனையே தற்காலிகமாக நமது சந்தோஷங்கள் பணம் இல்லாத நாட்களில் கிடைக்கலாம் ஆனால் நிரந்தரமாக சந்தோஷம் வேண்டும் என்றால் இந்த காலத்தில் பணம் எல்லோருக்குமே தேவை !
ஒரு சில கடினமான நாட்களில் ஒரே ஒரு ரீல்ஸ்' என்றுதான் . மொபைலைத் திறந்தேன் கண்விழித்துப் பார்த்தபோது நள்ளிரவு இரண்டு மணி, பாதி சார்ஜ் காலி என் தூக்கமும் காலி! என்று நண்பர் புலம்பியபோது கஷ்டமாக இருக்கிறது 'கொஞ்ச நேரம்தானே' என்று நாம் சாதாரணமாக ஆரம்பிக்கும் சில பழக்கங்கள், நம் மொத்த நேரத்தையும் நிம்மதியையும் திருடிச் சென்றுவிடும்!" ஆனாலும் ஒரு இயந்திரத்தை நம்பி நம்முடைய சந்தோஷங்கள் இருக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து என்று சொல்லாம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக