சண்டைகளின் போது தம்பதியினர் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர்களின் சிறுவயது வளர்ப்பு மற்றும் கடந்தகாலப் பாதிப்புகள் தீர்மானிக்கின்றன.
இதில் மிகவும் ஆபத்தானது இந்த சுழற்சிதான், தாங்கள் சிறுவயதில் எந்த விஷயத்தில் அட்டாச்மென்ட் செய்து இருக்கிறார்களோ அதையே இவர்கள் விரும்புவார்கள் !
சண்டை என்று வந்துவிட்டால் இவர்களுக்குப் பயமும் பதற்றமும் வந்துவிடும். "இப்போதே பேசி தீர்க்க வேண்டும், ஏன் அமைதியாக இருக்கிறாய்?" என்று துரத்தித் துரத்திக் கேள்விகள் கேட்பார்கள். இதனை சமாளிப்பதே கடினமானது !
சண்டை வந்தவுடன் இவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகி, தனிமையை நோக்கி ஓடுவார்கள். பேசுவதை நிறுத்திவிட்டு (Stonewalling), அறையை விட்டு வெளியேறுவார்கள். இது இன்னொரு வகை பிரச்சனை.
ஒருவர் துரத்தத் துரத்த அடுத்தவர் ஓடிக்கொண்டே இருப்பார். இந்தச் சுழற்சியை உடைக்க வேண்டுமானால், துரத்துபவர் கொஞ்சம் அமைதி காக்க வேண்டும்; விலகுபவர் "எனக்குக் கொஞ்சம் நேரம் கொடு, நான் பிறகு வந்து பேசுகிறேன்" என்ற நம்பிக்கையைத் தர வேண்டும்
உறவுகள் ஒரு நாளில் அல்லது ஒரு பெரிய சண்டையால் முறிந்துவிடுவதில்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் காட்டும் அலட்சியமே அதற்குக் காரணம். உளவியலில் இதை "Bids for Connection" (குறைந்த அலைவரிசைகள்) என்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக