ஒரு உறவில் யார் அதிக அன்பு செலுத்துகிறார்களோ, அல்லது யார் அந்த உறவு பிரிந்துவிடுமோ என்று பயப்படுகிறார்களோ, அவர்களுக்கே தெரியாமல் அந்த உறவின் "அதிகாரம்" அடுத்த நபர் கைக்கு மாறிவிடுகிறது. ஒரு சில பேருக்கு உறவுகளில் அதிகாரம் வைத்திருப்பது என்பதையே திருமணத்துக்கு பின்னால்தான் கவனிப்பார்கள்
ஒரு நபர் எப்போதும் சமாதானம் செய்பவராகவும், தன் சுயமரியாதையை இழந்து தவறை ஒப்புக்கொள்பவராகவும் இருக்கும்போது, அடுத்த நபர் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்குவார்கள். அது குடும்பமாக இருந்தாலும் சரி அலுவலகம் என்று இருந்தாலும் சரி காதலாக இருந்தாலும் சரி எல்லா வகை உறவுக்கும் இந்த பிரச்சனை இருக்கும்
உண்மையான காதல் இருக்கும் இடத்தில் அதிகாரப் போட்டி இருக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் தங்கள் பலவீனங்களை வெளிப்படுத்த பயப்படாத சூழல் இருக்கும்போதுதான், அந்த உறவில் நிம்மதி இருக்கும். பயத்தின் அடிப்படையில் வரும் அனுசரணை அல்லது அன்பு ஒருபோதும் நீடிக்காது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக