வெள்ளி, 8 மே, 2026

VAAZHUM KALAI - தெளிவான சிந்தனைகள் தேவைப்படுகிறது மக்களே !




நீங்கள் யார் மீதாவது வெறுப்பு வைத்திருந்தால் ஜெயிக்கவே முடியாது மக்களே , மன்னித்தல் என்பது பலவீனம் அல்ல; அது நம் மன அமைதிக்காக நாம் நமக்கே கொடுத்து நம்மை முன்னேற வைக்கும் ஒரு காஸ்ட்லியான பரிசு. ஒருவரை மன்னிப்பதன் மூலம் நீங்கள் அவரை விடுவிக்கவில்லை, உங்களைச் சிறைபிடித்திருந்த கோபத்திலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்கிறீர்கள், கவனமாக யோசித்து பாருங்களேன், நதி ஓடும்போது சத்தம் போடுகிறது, ஆனால் அது கடலில் சேரும்போது மௌனமாகிறது. அறிவும் அதுபோலத்தான்; முழுமை பெற்ற அறிவு எப்போதும் ஆர்ப்பரிப்பதில்லை, அது அமைதியான ஆழத்தைக் கொண்டிருக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களின் மனநிலை; நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதே உங்கள் வாழ்க்கை. உலகத்தின் கண்ணாடி உங்களை அழகாகக் காட்டலாம், ஆனால் உங்கள் மனசாட்சியின் கண்ணாடி மட்டுமே உங்களை உண்மையாகக் காட்டும்.அதுக்காக நம்முடைய வாழ்க்கையில் நாம் போலியாக இருக்க வேண்டிய கட்டாயம் நமக்குள்ளே இருந்தாலும் உண்மைகள்தான் ஒரு கட்டத்தில் நமக்கு சப்போர்ட் பண்ணுகிறது, நம்பிக்கையை விடவேண்டாம் மக்களே ! தோல்வி என்பது ஒரு முடிவல்ல, அது ஒரு திசை திருப்பம். ஒரு கதவு மூடப்படும்போது, நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டிருப்பதால், நமக்காகத் திறந்திருக்கும் மறுபுறத்து ஜன்னலை கவனிக்கத் தவறிவிடுகிறோம் , யாரும் பார்க்காத போதும் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதே உங்கள் உண்மையான குணம். உலகம் புகழுக்காகக் காத்திருக்கலாம், ஆனால் சமத்தான மக்கள் எப்போதும் வேல்யூவை அதிகரிக்க மட்டுமே காத்திருப்பார்கள் ! இங்கே பெயரும் புகழும் நிரந்தரம் இல்லாதது, நமது வேலைகளே சொத்துக்களே நமக்காக நிலைக்கக்கூடியது ! 

கருத்துகள் இல்லை:

VAAZHUM KALAI - தெளிவான சிந்தனைகள் தேவைப்படுகிறது மக்களே !

நீங்கள் யார் மீதாவது வெறுப்பு வைத்திருந்தால் ஜெயிக்கவே முடியாது மக்களே , மன்னித்தல் என்பது பலவீனம் அல்ல; அது நம் மன அமைதிக்காக நாம் நமக்கே க...