ஞாயிறு, 31 மே, 2026

LOVE TALKS - காதல் கதைகள் பேசலாம் #2

 



பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்குச் சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்க வேண்டும், ஒரு பாதுகாப்பான வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், அவர்களால் கூட பிள்ளைகளின் மன உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. 

காதல் இயல்பாகவே மனித வளர்ச்சியில் இருக்கிறது, நமது முன்னோர்கள் இந்த சமூக கவுரவம்தான் முக்கியம் என்று நினைத்து காதலை விட்டுக்கொடுத்தால் இன்று நமது தலைமுறையே இருந்திருக்காது. 

சொந்தக்காரர்கள் பிரித்து வைக்க முயற்சித்தும் இரு மனங்கள் இணைந்த பின்னால் பிரிந்து விட கூடாது என்று எவ்வளவு சக்திகள் இருக்கிறதோ அனைத்தையும் திரட்டி காதலர்கள் போராடுவதை பார்க்கலாம் 

சமூகம் என்பது மனிதன் உருவாக்கிய விதிகளை அடிப்படையாகக் கொண்டது; ஆனால் காதல் என்பது இயற்கையின் விதி. சாதி, மதம், அந்தஸ்து போன்ற சமூகக் கட்டமைப்புகளை ஒரு உண்மையான அன்பு மிக எளிதாக உடைத்துவிடுகிறது.

சமூகத்திற்காக வாழ்ந்து, தனக்குப் பிடிக்காத ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதை விட, தன் மனதிற்குப் பிடித்த ஒருவரோடு வாழும்போதுதான் மனிதன் முழுமையடைகிறான். சமூகத்தின் "நல்ல பெயர்" தற்காலிகமானது, ஆனால் ஒரு உன்னதமான அன்பு தரும் நிம்மதி வாழ்நாள் முழுமைக்கும் நீடிப்பது.

இந்த விஷயங்களை பெற்றவர்கள் கொஞ்சம் அடிபட்டு புரிந்துகொண்டால் மட்டும்தான் மறக்காமல் இருக்கிறார்கள், இல்லையென்றால் மொத்தமாக மறந்துவிடுகிறார்கள் !

கருத்துகள் இல்லை:

LOVE TALKS - காதல் கதைகள் பேசலாம் #1

  பெற்றோர்களின் எதிர்ப்புகளையும், சமூகத்தின் கட்டுப்பாடுகளையும் கடந்து காதல் என்பது மனித வாழ்க்கையில் ஏன் இவ்வளவு தவிர்க்க முடியாத ஒரு சக்தி...